search icon
என் மலர்tooltip icon

    ஆன்மிக களஞ்சியம்

    வெளி உலகிற்கு தெரியாமல் இருநந்த திருமாலைபதி பாதை
    X

    வெளி உலகிற்கு தெரியாமல் இருநந்த திருமாலைபதி பாதை

    • திருமாலைபதி எனும் தெய்வீக அலங்கார பாதை, கோவிலின் மூன்றாவது பிரகாரமாகும்.
    • இப்புனித பாதையில் காண்போர் கருத்தைக் கவரும் 900 அடி கலைக்கூடம் இருந்தது.

    திருமாலைபதி எனும் தெய்வீக அலங்கார பாதை, அருள்மிகு அருணாச்சலேசுவரர் கோவிலின் மூன்றாவது பிரகாரமாகும்.

    அருள்பாலிக்கும் ஆண்டவனுக்கு முன்னொரு காலத்தில் வண்ணமலர் மாலைகளும், ரத்தின ஆபரணங்களும்

    கவின்மிகு ஆடைகளும் சந்தன அலங்காரத் தயாரிப்புகளும் அணிவிக்கப்பட்டன.

    மேலும் வேதவிற்பன்னர்களின் வேத முழக்கங்களும் ரீங்காரமிடும் இடமாக இருந்தது.

    இப்புனித பாதையில் காண்போர் கருத்தைக் கவரும் 900 அடி கலைக்கூடம் பல ஆண்டுகளாக மூடப்பட்டு,

    வெளி உலகின் வெளிச்சத்திற்கு வராமல் மங்கிக் கிடந்தது.

    இதன் அருமை பெருமைகளை தீர்க்க தரிசனத்தோடு கண்டறிந்து உலகிற்கு வெளிச்சம் போட்டுக் காட்டியவர்கள்

    துணை ஆணையர் ஜெயராமனும் மற்றும் திருக்கோவில் அறங்காவலர்களும்தான்.

    Next Story
    ×