search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ajith Kumar"

    `நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து எச்.வினோத் - அஜித் இணையும் தல 60 படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகுவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் எச்.வினோத் இயக்க, போனி கபூர் தயாரிக்கிறார்.

    அஜித்திடம், வினோத் அரசியல் கலந்த திரில்லர் கதை மற்றும் ஆக்‌ஷன் கதை ஒன்றையும் கூறினாராம். அரசியல் கதையில் விருப்பமில்லாத அஜித், ஆக்‌ஷன் கலந்த திரில்லர் கதைக்கு சம்மதம் தெரிவித்துள்ளாராம்.



    இந்த படம் சமூகத்தின் முக்கிய பிரச்சனையை மையப்படுத்தி உருவாகுவதாக தற்போது தகவல் வெளியாகி இருக்கிறது. இந்த படத்திற்காக ஜிம்மில் ஒர்கவுட் செய்து தனது உடல் எடையை குறைத்து வருகிறாராம். மேலும் அஜித் இந்த படத்தில் போலீசாக நடிப்பதாகவும், இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது.

    `நேர்கொண்ட பார்வை' படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இந்த படத்திற்கான டப்பிங் பணிகள் விரைவில் துவங்க இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்தில் பாலிவுட் பிரபலம் ஒருவர் இணைந்திருக்கிறார்.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்தின் 59-வது படமாக உருவாகி வருகிறது ‘நேர்கொண்ட பார்வை’. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

    இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர், டெல்லி கணேஷ் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். இந்த நிலையில், பிரபல பாலிவுட் நடிகர் கே கே மேனன் இந்த படத்தில் ஒரு முக்கிய வேடத்தில் நடித்துள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.



    இவர் இதற்கு முன்பாக உதயம் என்.எச்.4, காஸி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். பல்வேறு இந்தி படங்களிலும் நடித்து பாராட்டுக்களை பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்துள்ள இந்த படத்திற்கு நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். போனி கபூர் தயாரித்துள்ள இந்த படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    `நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் தல 60 படத்தின் இயக்குநர் யார் என்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கிறது.
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி இருக்கும் படம் `நேர்கொண்ட பார்வை'. ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் இந்த படத்தை தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படமான தல 60 படத்தையும் இவரே தயாரிக்க இருக்கிறார். அந்த படத்தையும் எச்.வினோத் இயக்க இருப்பதாக முதலில் கூறப்பட்டது.

    அஜித்துக்காக அரசியல் கலந்த திரில்லர் கதையை வினோத் உருவாக்கியதாகவும், ஆனால் அதில் அரசியல் கதையில் விருப்பம் இல்லாத அஜித் வேறு கதையை தயார் செய்யும்படியாகவும் கூறப்பட்டது.



    இதற்கிடையே எச்.வினோத்துக்கு பதிலாக வேறு ஒரு இயக்குநருடன் அஜித் இணையவிருப்பதாக தகவல் வெளியானது. இந்த நிலையில், அஜித்தின் அடுத்த படத்தை வினோத் இயக்குவது உறுதி செய்யப்பட்டுள்ளதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    `நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாக இருக்கும் அஜித்தின் 60-வது படத்தின் மூலம் இசையமைப்பாளர் ஜிப்ரான் முதல்முறையாக அஜித்துடன் இணையவிருப்பதாக கூறப்படுகிறது.
    பொங்கல் அன்று வெளியான அஜித்தின் விஸ்வாசம் படம் அவரது படங்களிலேயே அதிக வசூலை ஈட்டிய படமாக அமைந்துள்ளது. அதனைத் தொடர்ந்து அஜித் நடித்து வந்த `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

    அஜித், வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத் மற்றும் பலர் நடித்திருக்கும் இந்த படம் ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

    `நேர்கொண்ட பார்வை' படத்தை தொடர்ந்து அஜித்தின் அடுத்த படமான ‘தல 60’ படத்தையும் எச்.வினோத்தே இயக்குகிறார். இது வினோத் அஜித்துக்காக எழுதிய சொந்த கதையாகும். பெரிய பட்ஜெட்டில் ஆக்‌‌ஷன் படமாக இது உருவாகவுள்ளது.



    இந்த நிலையில், இப்படத்திற்கு இசையமைக்க ஜிப்ரான் ஒப்பந்தமாகியுள்ளார் என்ற செய்தி தற்போது வெளியாகியுள்ளது. நேர்கொண்ட பார்வை படப்பிடிப்பில் அஜித்தை சந்தித்த ஜிப்ரானிடம் ‘இணைந்து பணியாற்றலாம்’ என்று அஜித் கூறியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் புகைப்படத்துடன் வெளியிட்டிருந்தார் ஜிப்ரான்.

    தற்போது வெளியான செய்தி அதனை உறுதிப்படுத்தும் வகையில் உள்ளது. ஜிப்ரான் ஏற்கனவே வினோத்தின் தீரன் அதிகாரம் ஒன்று படத்திற்கு இசையமைத்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

    விஷால் ஜோடியாக ராஷி கண்ணா நடித்துள்ள அயோக்யா படம் விரைவில் திரைக்கு வரவிருக்கும் நிலையில், அஜித் தான் தனது முதல் காதலர் என்றும், அவர் சிரிப்பு அசத்தலாக இருக்கும் என்றும் கூறியுள்ளார். #RaashiKhanna
    நயன்தாராவின் இமைக்கா நொடிகள் படம் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் ராஷி கண்ணா. ஜெயம் ரவியுடன் அடங்கமறு, விஷாலுடன் அயோக்யா படத்தில் நடித்துள்ளார். இளம் கதாநாயகர்கள் விரும்பும் நடிகையாக மாறி வருகிறார்.

    தமிழ் தவிர தெலுங்கு திரையுலகிலும் அவரின் மார்க்கெட் நன்றாக உள்ளது. எனவே இரு மொழிகளில் தயராகும் படங்கள் அவருக்கு குவிகின்றன. இவர் தன்னுடைய முதல் காதல் பற்றி கூறியுள்ளார். ‘எனக்கு சிறு வயதில் ஏற்பட்ட முதல் கிரஷ் என்றால் அது பாலிவுட் நடிகர் ஷாருக்கான் தான்.



    கோலிவுட்டில் எனது முதல் கிரஷ் அஜித் சார். அவரின் சிரிப்பு அசத்தலாக இருக்கும். அவரின் படம் பார்க்கும்போது அவர் எப்படா சிரிப்பார் என்று காத்திருப்பேன். அஜித் சார் நடித்த விஸ்வாசம் படம் பார்த்திருக்கிறேன்’ என்று கூறியுள்ளார். #RaashiKhanna #AjithKumar

    அஜித்தை வைத்து மங்காத்தா படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அஜித்துடன் மீண்டும் இணைவது குறித்த தகவலை வெளியிட்டுள்ளார். #Mankatha2 #AjithKumar #VenkatPrabhu
    அஜித் ரசிகர்கள் கொண்டாடும் படங்களில் மங்காத்தாவுக்கு முக்கிய இடம் உண்டு. வில்லத்தனமான சாயலில் உருவாக்கப்பட்ட அஜித்தின் கதாபாத்திரம் நல்ல வரவேற்பு பெற்றது. அந்தப் படத்தை இயக்கிய வெங்கட் பிரபு அதன்பின் எங்கு சென்றாலும் அஜித்துடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்வியை எதிர்கொண்டு வருகிறார். அதற்கான பதிலை தற்போது அளித்துள்ளார்.

    அஜித்துடன் அடுத்த படம் எப்போது என்ற கேள்விக்கு, “தற்போது பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது முடிந்ததும் உறுதியாகிவிடும்” என்று கூறியுள்ளார். இந்த படம் மங்காத்தா 2 ஆக இருக்கும் என்கிறார்கள்.



    முன்னதாக அஜித்துடன் சந்ததித்த போது எடுத்துக் கொண்ட புகைப்படத்தை வெங்கட் பிரபு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. #Mankatha2 #AjithKumar #VenkatPrabhu

    `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு முடிந்துவிட்ட நிலையில், அஜித்துக்காக 3 ஆக்‌ஷன் கதைகளை தேர்வு செய்து வைத்திருப்பதாக தயாரிப்பாளர் போனி கபூர் தெரிவித்துள்ளார். #NerkondaPaarvai #AjithKumar
    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிப்பில் `நேர்கொண்ட பார்வை' படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் சமீபத்தில் முடிந்தது. இந்தியில் அமிதாப்பச்சன் நடித்த பிங்க் படத்தின் தமிழ் ரீமேக்காக இந்த படம் உருவாகி இருக்கிறது.

    இதில் அஜித் ஜோடியாக வித்யா பாலன், முக்கிய வேடங்களில் ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். போனி கபூர் தயாரித்துள்ளார். அஜித்தின் அடுத்த படத்தையும் போனி கபூரே தயாரிக்கிறார். இந்த நிலையில், நேர்கொண்ட பார்வை படத்தின் சில முக்கிய காட்சிகளை பார்த்த போனி கபூர் அவரது ட்விட்டர் பக்கத்தில் தெரிவித்துள்ளதாவது,


    அஜித்தின் நடிப்பை பார்த்து மிரண்டு போனேன், அவர் விரைவில் இந்தி படமொன்றில் நடிப்பார் என்று நம்புகிறேன். அவருக்காக 3 ஆக்ஷன் கதைகளை கேட்டு வைத்திருக்கிறேன். அதில் ஒன்றுக்காவது அவர் சம்மதம் தெரிவிப்பார் என்று நம்புகிறேன். இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். 

    அஜித்தின் நேர்கொண்ட பார்வை ஆகஸ்ட் 10-ந் தேதி திரைக்கு வரும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan #BoneyKapoor

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித்குமார் - வித்யா பாலன் - ஷ்ரத்தா ஸ்ரீநாத் நடிப்பில் உருவாகி வரும் நேர்கொண்ட பார்வை படத்தின் மூலம் பாலிவுட்டில் பிரபலமான கல்கி கோச்லின் தமிழில் அறிமுகமாகிறார். #NerkondaPaarvai #AjithKumar
    அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்துள்ளார். இந்த படத்தில் பாலிவுட் பிரபலம் கல்கி கோச்லின் ஒரு பாடலுக்கு நடனமாடுவதன் மூலம் தமிழில் அறிமுகமாவதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

    அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் இந்தியில் வெளியான `பிங்க்’ படத்தின் ரீமேக்காக உருவாகும் இந்த படத்தின் தமிழ் பதிப்புக்கு ஏற்றவாறு வினோத் சில மாற்றங்களை கொண்டு வந்திருக்கிறார். அந்த வகையில் வித்யா பாலனின் கதாபாத்திரமும் உருவாக்கப்பட்டுள்ளது. வித்யா பாலன் அஜித்தின் மனைவியாக நடிக்கிறார்.



    ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். 

    யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். படப்பிடிப்பு முடிந்து பின்னணி வேலைகள் விறுவிறுப்பாக நடந்து வருகிறது. படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan #KalkiKoechlin

    ஜீவா நடிப்பில் கீ படம் வருகிற வாரத்தில் ரிலீசாக இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். #Jiiva #AjithKumar
    ஜீவா நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்சி என 3 படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. அடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஜிப்சி படம் பற்றி அளித்துள்ள ஒரு பேட்டியில் ’இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போனேன். ஜிப்சி எனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படியொரு கதை அமைய வேண்டும் என்று காத்திருக்கிறேன்’.

    இவ்வாறு ஜீவா தெரிவித்தார். #Jiiva #AjithKumar

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் - வித்யாபாலன் நடிப்பில் உருவாகி வரும் `நேர்கொண்ட பார்வை’ படத்தின் புதிய ரிலீஸ் தேதியை படக்குழு வெளியிட்டுள்ளது. #NerkondaPaarvai #AjithKumar
    அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

    இது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன், அர்ஜூன் சிதம்பரம், அபிராமி வெங்கடாசலம், ஆண்ட்ரியா தரியங், அஸ்வின் ராவ், சுஜித் சங்கர் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார்.


    படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடந்து வரும் நிலையில், படம் வருகிற ஆகஸ்ட் 10-ந் தேதி ரிலீசாக இருப்பதாக படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. முன்னதாக படம் மே 1-ந் தேதி ரிலீசாகும் என்று அறிவித்திருந்தார்கள். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan

    ‘நேர்கொண்ட பார்வை’ படத்தை தொடர்ந்து அஜித் நடிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் உருவாகும் புதிய படத்தில் அரசியல் சம்பந்தப்பட்ட கதையில் நடிக்க இருக்கிறார். #AjithKumar #HVinoth
    அஜித் எச்.வினோத் இயக்கி வரும் ‘நேர்கொண்ட பார்வை’ படத்துக்குப் பிறகு, சிவா இயக்கும் திரைப்படத்தில் நடிக்கவுள்ளார். அதற்கு பிறகு சத்யஜோதி பிலிம்ஸ் தயாரிப்பில் மீண்டும் எச்.வினோத் இயக்க இருக்கும் அதிரடி அரசியல் திரைப்படம் ஒன்றில் அரசியல்வாதியாக அவதாரம் எடுக்கிறார்.

    ‘விஸ்வாசம்’ படத்தில் வெற்றி பெற்ற தயாரிப்பாளர் - நடிகர் கூட்டணி என்பதால் வினோத் திரைக்கதையைக் கூர்தீட்டி கொண்டிருக்கிறார். அஜித் இதுவரை அரசியல் படங்கள் எதிலும் நடித்ததில்லை. 



    விஜய், கத்தி, மெர்சல், சர்கார் படங்களில் அரசியல் வசனம் பேசினார். சூர்யா அடுத்து நடித்து வரும் என்.ஜி.கே படம் அரசியல் படம்தான். இந்த வரிசையில் தற்போது அஜித்தும் சேர்ந்து இருக்கிறார். #AjithKumar #Thala60 #Thala61 #HVinoth

    எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடிப்பில் உருவாகி வரும் `நேர்கொண்ட பார்வை’ படத்தில் அஜித் - வித்யா பாலனுக்கு ஒரு காதல் பாடல் ஒன்று இருக்கிறதாம். #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan
    அஜித் நடித்து வெளியான ‘விஸ்வாசம்’ படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதைத் தொடர்ந்து, போனிகபூர் தயாரிப்பில் எச்.வினோத் இயக்கத்தில் `நேர்கொண்ட பார்வை’ என்ற படத்தில் அஜித் நடித்து வருகிறார்.

    இது இந்தியில் அமிதாப் பச்சன், டாப்ஸி நடிப்பில் வெளியான `பிங்க்’ படத்தின் தமிழ் ரீமேக் என்பது குறிப்பிடத்தக்கது. வித்யா பாலன், ஷ்ரத்தா ஸ்ரீநாத், ஆதிக் ரவிச்சந்திரன் ஆகியோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். யுவன் ‌ஷங்கர் ராஜா இசையமைக்க, நிரவ் ஷா ஒளிப்பதிவு செய்கிறார். 



    இந்தப் படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத் ராமோஜி பிலிம் சிட்டியில் நடைபெற்று வருகிறது. `பிங்க்’ படத்தில் இல்லாத ஒரு கதாபாத்திரத்தை இந்த படத்தில் வடிவமைத்துள்ளார் வினோத். அந்த கேரக்டரில் தான் வித்யா பாலன் நடிக்கிறார். இதில் அஜித்-வித்யா பாலனுக்காக ஒரு காதல் பாடலை எழுதியிருக்கிறார் பா.விஜய். 

    பி.எஸ்.மித்ரன் - சிவகார்த்திகேயன் படத்தின் இசைக்காக துபாய் சென்றுள்ள யுவன், சென்னை திரும்பியதும் இந்தப் பாடலுக்கான பணியை தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. #NerkondaPaarvai #AjithKumar #VidyaBalan

    ×