search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kee"

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி - அனேகா சோதி நடிப்பில் வெளியாகி இருக்கும் `கீ' படத்தின் விமர்சனம். #Kee #KeeReview #Jiiva #NikkiGalrani
    கல்லூரி மாணவராக இருக்கும் ஜீவா ஒரு ஹேக்கர். கல்லூரிகளில் தனது நண்பர்களுக்காக சிறிய அளவில் ஹேக் செய்து வரும் இவர் ஒருநாள் கேளிக்கை விடுதி ஒன்றில் ஹேக்கிங் மூலமாக பெண்களை கவர முயற்சி செய்கிறார். அப்போது அனேகா சோதி இவரது வலையில் சிக்குகிறார்.

    பத்திரிகையாளரான இவர் நிறைய சாலை விபத்துகள் மர்மமான முறையில் ஏற்படுவதையும், அந்த விபத்துகளுக்கு ஹேக்கிங் ஒரு காரணமாக இருப்பதையும் கண்டுபிடிக்கிறார். இதையடுத்து ஜீவாவுடன் நெருக்கமாக பழகி அவர் மூலமாக அந்த விபத்துகளின் பின்னணி பற்றி தகவல்களை சேகரிக்க முடிவு செய்கிறார்.



    இப்படி இருக்க தன்னை ஹேக் செய்தவர்கள் பற்றி விவரங்களை கண்டுபிடித்து தரும்படி அனேகா, ஜீவாவிடம் கேட்க, அவரும் பரிசோதித்து பார்க்கையில், அனேகாவை ஹேக் செய்தவர்கள் சாதாரண ஹேக்கர் அல்ல என்பது தெரிய வருகிறது. 

    இருப்பினும் வரும் முட்டுக்கட்டைகள் அனைத்தையும் தாண்டி ஜீவா தனது திறமைகளை காட்ட அந்த ஹேக்கர்கள் யார் என்பது தெரிய வருகிறது. அவர்களுக்கும் ஜீவா தான் ஹேக் செய்தார் என்பது தெரிந்துவிடுகிறது. ஒருகட்டத்தில் ஜீவாவை கொலை செய்ய அந்த கும்பல் தேடி வருகிறது.

    இதற்கிடையே கல்லூரியில் ஒன்றாக படித்து வரும் ஜீவாவும், நிக்கி கல்ராணியும் காதலிக்கிறார்கள்.



    கடைசியில், ஜீவா இந்த பிரச்சனைகளை எப்படி சமாளித்தார்? விபத்துகளுக்கும் ஹேக்கர்களுக்கும் என்ன சம்பந்தம்? அதன் பின்னணியில் என்ன நடந்தது? என்பதே கீ படத்தின் மீதிக்கதை.

    ஜீவா ஒரு கல்லூரி மாணவராக, ஹேக்கராக துறுதுறுவென்று நடித்துவிட்டு சென்றிருக்கிறார். நிக்கி கல்ராணியிடம் மாட்டிக் கொள்ளும் காட்சிகளிலும், ஆக்‌ஷன் காட்சிகளிலும் பரபரக்கச் செய்கிறார். நிக்கி கல்ராணி இதுவரை நடிக்காத ஒரு வித்தியாசமான, அராத்து செய்யும் கதாபாத்திரத்தில் சிறப்பாக நடித்திருக்கிறார். ஆர்.ஜே.பாலாஜி ஆங்காங்கே காமெடியில் சிரிக்க வைக்கிறார். அனேகா சோதி முக்கிய வேடத்தில் வருகிறார்.

    கோவிந்த சூர்யா வில்லத்தனத்தில் மிரட்ட, கட்டே ராஜேந்திர பிரசாத், மீரா கிருஷ்ணன், சுஹாசினி, மனோபாலா அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.



    சமூக வலைதளத்தில் நாம் தவறுதலாக செய்யும் சிலவற்றால், நமக்கு ஏற்படும் பிரச்சனைகளை சொல்ல முயற்சித்திருக்கிறார் இயக்குநர் காலீஸ். ஹேக்கிங் மூலம் ஏற்படும் பாதிப்பு, உயிரிழப்பு குறித்தும் சொல்லியிருக்கிறார். ஹேக்கிங்கை மையப்படுத்தி வரும் காட்சிகளில் விறுவிறுப்புக்கு பஞ்சமில்லை. சிறப்பான கதையை தயார் செய்திருந்தாலும், அது பயணிக்கும் வழியான திரைக்கதையில் இயக்குநர் இன்னும் கொஞ்சம் கவனம் செலுத்தியிருக்கலாம். படத்திற்கு தேவையானதை மட்டுமே கொடுத்திருந்தால் இன்னமும் சிறப்பாக இருந்திருக்கும். சென்டிமெண்ட், பாசம் என அனைத்தையுமே கொடுக்க வேண்டும் என்று வேண்டுமென்றே திணித்தது போல் இருக்கிறது. 

    விஷால் சந்திரசேகரின் இசையில் பாடல்கள் கேட்கும் ரகம் தான். பின்னணி இசையும், அபிநந்தன் ராமானுஜத்தின் ஒளிப்பதிவும் படத்திற்கு பலம்.

    மொத்தத்தில் `கீ' சாவி. #Kee #KeeReview #Jiiva #NikkiGalrani

    விஷால், ஜீவா, அதர்வா உள்ளிட்ட பெரிய நடிகர்களின் படங்களின் ரிலீசில் பிரச்சனை ஏற்பட்ட நிலையில், சிறிய பட்ஜெட் படத்தின் தயாரிப்பாளர் ஒருவர் தனது படத்தை பார்க்க வரும்படி ரசிகர்களுக்கு அழைப்பு விடுத்தார்.
    ஜெய் நடித்துள்ள நீயா 2 படம் மே 10-ந் தேதியான இன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டு பின்னர் மே 24-ந் தேதிக்கு தள்ளிப்போனது. அதனைத் தொடர்ந்து அதர்வா நடிப்பில் உருவாகி இருக்கும் 100 படத்திற்கும் பிரச்சனை வந்தது. நேற்று வெளியாக வேண்டிய அந்த படம் பிரச்சனை காரணமாக தள்ளிப்போனது. 

    அதனை சரிசெய்து ஒருநாள் தள்ளி இன்று ரிலீஸ் செய்ய படக்குழு முடிவு செய்திருந்த நிலையில், மீண்டும் படம் தள்ளிப்போயுள்ளது. அதேபோல் விஷாலின் அயோக்யா படத்தின் ரிலீசும் தள்ளிவைக்கப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஜீவா நடித்துள்ள கீ படம் மட்டும் பிரச்சனைகளை கடந்து இன்று சற்று தாமதமாக ரிலீசானது. மேலும் காதல் முன்னேற்றக் கழகம், உண்மையின் வெளிச்சம், வேதமானவள், எங்கு சென்றாய் என் உயிரே உள்ளிட்ட படங்களும் இன்று வெளியாகிறது.



    இந்த நிலையில், திரையரங்குக்கு வந்து ரசிகர்கள் ஏமாற்றத்துடன் திரும்பினர். இதனை பார்த்த எங்கு சென்றாய் என் உயிரே படத்தின் தயாரிப்பாளரும், இயக்குநருமான ஆர்.வி.பாண்டி தனது படத்தை பார்க்க வருமாறு ரசிகர்களை அழைத்துள்ளார். ஆனால் ரசிகர்கள் முன்வராத நிலையில், டிக்கெட் வாங்கி, அதனை குறைந்த விலைக்கு ரசிகர்களிடம் கொடுத்து படத்தை பார்க்க அனுப்பினார்.

    மேலும் படம் பார்த்தவர்களுக்கு படம் பிடிக்கவில்லை என்றால் டிக்கெட் காசுடன் 100 ரூபாய் தருவதாக கூறினார். உங்களை திருப்திபடுத்தும் வகையில் நகைச்சுவை, பாடல், கதை உங்களை கண்டிப்பாக கவரும். தயவுசெய்து என்னுடைய படத்தையும் பார்ப்பதற்கு திரையரங்குக்கு வாருங்கள். சிறிய படங்களையும் ஆதரியுங்கள் என்று ஆதங்கத்தோடு கூறினார். இதனை பார்த்து சிலர் அவரிடம் டிக்கெட் வாங்கி படம் பார்க்க சென்றனர்.

    இவ்வாறாக தமிழ் சினிமாவில் உருவாகும் சிறிய பட்ஜெட் படங்களுக்கு போதிய வரவேற்பு கிடைப்பதில்லை என்பது பட்ஜெட் படங்களை தயாரிக்கும் தயாரிப்பாளர்களின் குரலாக உள்ளது. எனவே சிறிய படங்களுக்கு டிக்கெட்டில் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட்டால் சிறிய படங்களுக்கும் வரவேற்பு பெறும்.

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி, அனைகா நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கீ’ படத்தின் முன்னோட்டம்.
    குளோபல் இன்போ டெய்ன்மெண்ட் நிறுவனம் சார்பில் செராபின் ராய் சேவியர் தயாரிப்பில் உருவாகி இருக்கும் படம் ‘கீ’. 

    ஜீவா நாயகனாகவும், நிக்கி கல்ராணி நாயகியாகவும் நடித்திருக்கிறார்கள். அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்மசூர்யா, ராஜேந்திர பிரசாத், சுஹாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    இசை - விஷால் சந்திரசேகர், ஒளிப்பதிவு - அனிஷ் தருண் குமார், படத்தொகுப்பு - நாகூரான், தயாரிப்பு - எஸ்.மைக்கேல் ராயப்பன், செராபின் ராய் சேவியர், கலை - அசோக், நடனம்- பாபா பாஸ்கர், எழுத்து, இயக்கம் -காலீஸ்.



    செல்வராகவனிடம் உதவி இயக்குனராக பணிபுரிந்த காலீஸ் இந்த படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார். படம் பற்றி காலீஸ் கூறும்போது,

    தற்போதைய தொழில்நுட்ப உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு செல்போனின் தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதுப்புது செல்போன்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.

    இவ்வாறாக செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக கீ உருவாகி இருக்கிறது. செல்போன் வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்பை படம் பேசுகிறது. ஒரு 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

    நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை பற்றி படத்தில் விவரித்திருப்பதாக காலீஸ் கூறினார்.

    படம் வருகிற ஏப்ரல் 12-ந் தேதி திரைக்கு வருகிறது. #KEE #Jiiva #NikkiGalrani

    கீ டிரைலர்:

    பிசியாக நடித்து வந்த நிக்கி கல்ராணியிடம், பட வாய்ப்புகள் குறைந்து விட்டதா என்ற கேள்விக்கு விளக்கம் அளித்துள்ளார். #Kee #NikkiGalrani
    டார்லிங் படத்தில் அறிமுகமான நிக்கி கல்ராணி வந்த வேகத்தில் 10 படங்களுக்கு மேல் நடித்தார். தற்போது அவர் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்திருக்கும் கீ படம் ரிலீசாக இருக்கிறது. அடுத்து சசிகுமார் ஜோடியாக ஒரு படத்தில் நடிக்கிறார்.

    அவரிடம் வாய்ப்புகள் குறைந்தது போல் தெரிகிறதே? என்று கேட்டோம். ’வாய்ப்புகள் குறைந்து விட்டதாக சொல்வதைவிட, நான் தேர்வு செய்து நடிக்க தொடங்கி விட்டேன் என்று சொல்லலாம்.



    ஒரு கதையைக் கேட்கும்போது இந்த படத்தில் நான் நடித்தால் எப்படி இருக்கும் என்று ஒரு ரசிகராக யோசிப்பேன். எனக்கு பல்வேறு வித்தியாசமான வேடங்களில் நடிக்கவேண்டும் என்று ஆசை. அதனால் தேர்வு செய்து நடிக்கிறேன்’. இவ்வாறு அவர் கூறினார்.
    ஜீவா நடிப்பில் கீ படம் வருகிற வாரத்தில் ரிலீசாக இருக்கும் நிலையில், அவர் அளித்த பேட்டியில், அஜித்துடன் இணைந்து நடிக்க ஆசைப்படுவதாக தெரிவித்தார். #Jiiva #AjithKumar
    ஜீவா நடிப்பில் கீ, கொரில்லா, ஜிப்சி என 3 படங்கள் ரிலீசுக்கு தயாராகி இருக்கின்றன. அடுத்து 3 படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். ஜிப்சி படம் பற்றி அளித்துள்ள ஒரு பேட்டியில் ’இயக்குனர் ராஜூமுருகன் சொன்ன கதையைக் கேட்டு மிரண்டு போனேன். ஜிப்சி எனக்கு மிகப்பெரிய பெயரைப் பெற்றுக் கொடுக்கும் என்பதில் உறுதியாக இருக்கிறேன்.

    விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்களுடன் நடித்திருக்கிறேன். தல அஜித்துடன் நடிக்கவேண்டும் என்பதே என் ஆசை. அப்படியொரு கதை அமைய வேண்டும் என்று காத்திருக்கிறேன்’.

    இவ்வாறு ஜீவா தெரிவித்தார். #Jiiva #AjithKumar

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ள கீ விரைவில் ரிலீசாக இருக்கும் நிலையில், எந்த அளவுக்கு நன்மை உண்டோ அந்த அளவுக்கு தீமை உண்டு என்பதே கீ என்பதன் பொருள் என்று ஜீவா கூறினார். #KEE
    ஜீவா, நிக்கி கல்ராணி, ஆர்ஜே.பாலாஜி நடிப்பில் கீ படம் வரும் 12-ந் தேதி வெளியாக இருக்கிறது. காலீஸ் இயக்கிய இந்த படத்தை செராபின் ராயப்பன் தயாரித்துள்ளார். இந்த பட வெளியீட்டை முன்னிட்டு நடிகர் ஜீவா அளித்த பேட்டி:

    பெயரை பார்த்தால் ஆங்கில படம் போல் தெரிகிறதே?

    கீ என்பது தமிழ் வார்த்தை தான். தொல்காப்பியத்தில் கீ என்பதற்கு எந்த அளவுக்கு நன்மை உண்டோ அந்த அளவுக்கு தீமை உண்டு என்று அர்த்தம் சொல்லப்பட்டு இருக்கிறது. இது முழுக்க முழுக்க தொழில்நுட்பம் பற்றிய கதை. தகவல் தொழில்நுட்பம் நமக்கு பல நன்மைகள் கொடுத்தாலும் அதனால் ஏற்படும் தீமைகளையும் விளக்கும் படமாக இருக்கும். இன்று ஸ்மார்ட்போன் பயன்பாடு அதிகரித்துவிட்டது. செல்போன் பயன்படுத்தும் அனைவருக்குமான படம் இது. எனக்கு ஜோடியாக நிக்கி கல்ராணியும், அனைகா ஒரு முக்கிய வேடத்திலும் நடித்து இருக்கிறார்கள். ஆர்ஜே பாலாஜி எனக்கு நண்பராக வருகிறார்.

    கல்லூரி மாணவர் வேடமா?

    எனக்கும் ஆச்சர்யமாக தான் இருந்தது. ஆனால் நன்றாக வந்துள்ளது. சில ஆண்டுகளுக்கு முன்புவரை கல்லூரி மாணவராக நடிப்பது எளிதாக இருந்தது. இப்போது அப்படி இல்லை. பள்ளி மாணவர்களுக்கு அவ்வளவு வி‌ஷயங்கள் தெரிகிறது. எனவே இனி கல்லூரி மாணவராக நடிப்பது சிரமம். இந்த படத்தில் ஜாலியான ஹேக்கராக வருகிறேன். கல்லூரி மாணவருக்கே உரிய அனைத்து வி‌ஷயங்களும் என் கதாபாத்திரத்தில் இருக்கும்.



    உங்கள் சமூகவலைதள கணக்குகள் ஹேக் ஆகி இருக்கிறதா?

    நிறைய முறை ஆகி இருக்கிறது. எந்த பாஸ்வேர்டு வைத்தாலும் கண்டுபிடித்து விடுகிறார்கள். இன்று இணைய திருடர்கள் அதிகரித்து விட்டார்கள். இனி இதில் இருந்து யாரும் தப்பிக்க முடியாது.

    இரும்புத்திரை படமும் இதே போன்றது தானே?

    இல்லை. நாங்கள் படப்பிடிப்பையே முடித்த பின்னர்தான் அவர்கள் பூஜை போட்டார்கள். அந்த கதை முழுக்க பணம், வங்கி, ஏடிஎம் கார்டு பற்றியது. ஆனால் இது முழுக்க சமூகவலை தளங்களில் நீங்கள் இடும் லைக்குகள், கமெண்டுகள் பற்றியது.

    ரிலீஸ் நேரத்தில் சிக்கல், பட வெளியீடு தாமதம் என்று ஹீரோக்களுக்கு நிறைய பிரச்சினைகள் வருகிறதே?

    ஆமாம். கீ படமே பெரிய தாமதத்துக்கு பின் தான் ரிலீஸ் ஆகிறது. இங்கே ஹீரோவாக இருப்பது சிரமமாக தான் இருக்கிறது. காமெடி, குணச்சித்திர நடிகராக இருப்பது எளிது. ஹீரோவாக இருப்பதால் மற்றவர்களின் கால்ஷீட்டுக்கு காத்திருக்க வேண்டியுள்ளது. சினிமா என்பது டீம் வொர்க். யாராவது ஒருவர் ஏமாற்றலாம் என்று நினைத்தால் அது எல்லோரையும் பாதிக்கும்.

    ஒரு படத்தில் கமிட் ஆனால் அதை முடித்துவிட்டு அடுத்த படத்துக்கு செல்லுங்கள். படங்களுக்கு முன் தயாரிப்பு பணிகளில் திட்டமிடல் மிகவும் அவசியம். #KEE #Jiiva #NikkiGalrani

    காலீஸ் இயக்கத்தில் ஜீவா - நிக்கி கல்ராணி நடிப்பில் உருவாகி இருக்கும் ‘கீ’ படத்தை குழந்தைகள் முதல் முதியவர் வரை செல்போன் வைத்திருக்கும் அனைவரும் பார்க்க வேண்டும் என்று இயக்குநர் கூறியுள்ளார். #KEE #Jiiva
    நாடோடிகள், ஈட்டி, மிருதன், போன்ற வெற்றி படங்களை தயாரித்த குளோபல் இன்போடெய்ன்மென்ட் நிறுவனம் சார்பில் செராபின் ராயப்பன் தயாரித்துள்ள படம் ‘கீ’.

    இந்த நிறுவனத்தின் 10-வது தயாரிப்பாக உருவாகி இருக்கும் இந்த படத்தை செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிய காலீஸ் இயக்கியிருக்கிறார். ஜீவா, நிக்கி கல்ராணி இணைந்து நடித்துள்ளனர். அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோபாலா, மீரா கிருஷ்ணன் உள்ளிட்ட பலரும் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

    தற்போதைய தொழில்நுட்ப உலகில் செல்போன்கள் இல்லாதவர்களே கிடையாது என்னும் அளவுக்கு செல்போனின் தேவையும், பயன்பாடும் அதிகரித்துக் கொண்டே செல்கிறது. வாடிக்கையாளர்களின் தேவைக்கு ஏற்ப புதுப்புது செல்போன்களும் வந்த வண்ணமாகவே இருக்கின்றன.



    இவ்வாறாக செல்போன் வைத்திருப்பவர்கள் அனைவரும் பார்க்க வேண்டிய படமாக கீ உருவாகி இருக்கிறது. செல்போன் வைத்திருப்பதால் ஏற்படும் பாதிப்பை படம் பேசுகிறது. ஒரு 4 வயது குழந்தை முதல் 70 வயது முதியவர் வரை ஸ்மார்ட்போன் வைத்திருக்கும் அனைவரும் இந்த படத்தை பார்க்க வேண்டும்.

    நாம் செய்யும் லைக்குகள், நாம் செய்யும் ஷேர்கள் இவற்றால் நடக்கும் பின்னணி என்ன? என்பதை பற்றி படத்தில் விவரித்திருப்பதாக இயக்குநர் காலீஸ் கூறினார். 

    விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன் ஒளிப்பதிவு செய்துள்ளார். ஏப்ரல் 12-ஆம் தேதி படம் திரைக்கு வருகிறது. #KEE #Jiiva #NikkiGalrani

    அவரை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என்ற எண்ணம் வந்திருக்கிறது என்று நடிகர் ஜீவா, கீ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில் பேசியிருக்கிறார். #Kee #Jiiva
    நாடோடிகள், ஈட்டி, மிருதன், போன்ற வெற்றி படங்களை தயாரித்த தயாரிப்பு நிறுவனம் குளோபல் இன்போடெய்ன்மென்ட். இந்நிறுவனம் தற்போது ‘கீ’ படத்தை தயாரித்துள்ளது. இது இந்நிறுவனத்தின் 10வது தயாரிப்பாகும். இப்படத்தில் கதாநாயகனாக ஜீவா, நாயகியாக நிக்கி கல்ராணி மேலும் இவர்களுடன் அனைகா, ஆர்.ஜே.பாலாஜி, பத்ம சூர்யா, ராஜேந்திர பிரசாத், சுகாசினி, மனோ பாலா, மீரா கிருஷ்ணன் ஆகியோர் நடித்துள்ளனர். கதை திரைக்கதை எழுதி இப்படத்தை இயக்கவுள்ளார் காலீஸ். இவர் இயக்குநர் செல்வராகவனிடம் உதவி இயக்குநராக பணியாற்றிவர். விஷால் சந்திரசேகர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். அபிநந்தன்  ஒளிப்பதிவு செய்துள்ளார்.

    இப்படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பு நடைபெற்றது. இதில் ஜீவா பேசும்போது, ‘வருடத்திற்கு ஒரு படம் நடித்துக் கொண்டிருந்தேன். ஆனால் நிக்கி கல்ராணியை பார்த்து தான் பல படங்கள் பண்ண வேண்டும் என எண்ணம் மனதில் தோன்றியது. நிக்கி கல்ராணியுடன் நடித்தது எனக்கு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. படத்தில் வில்லன் கதாப்பாத்திரத்தில் மலையாள நடிகர் கோவிந்த் பத்மசூரியா மிகவும் சிறப்பாக நடித்துள்ளார். 



    தற்போதைய டெக்னாலஜியில் வளர்ந்து வரும் பிரச்சனையை கூறும் படமாக அமைந்துள்ளது. சரியான தருணத்தில் கூப்பிட்ட நேரத்தில் வந்து ஒளிப்பதிவினை மேற்கொண்ட அபிநந்தன் அவர்களுக்கு என் நன்றிகள். காலீஸ் சிறந்த இயக்குனர். இதுபோன்ற நிறைய இளைய புதுமுக இயக்குனர்கள் நம் தமிழ் சினிமாவிற்கு தேவை. 

    இளைய இயக்குனர்கள் வந்தால்தான் புதிய எண்ணங்கள் தோன்றும். புதிய எண்ணங்கள் இருந்ததால் தான் பல பரிமாணங்களில் திரைப்படங்களை தர முடியும். இந்த படத்தில் நடித்த ஆர்ஜே பாலாஜி, அனைகா அருமையாக நடித்துள்ளனர். படத்தின் காட்சிகள் மிக பிரமாண்டமாக வந்துள்ளது. இறுதியாக இந்த படம் ஏப்ரல் 12ம் தேதி ரிலீஸ் ஆகிறது. உங்கள் அன்பாலும் ஆதரவாலும்  படம் வெற்றி பெறும் என நம்புகிறேன்’ என்றார்.
    ×