search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agitation"

    • சதீஷ் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கி, ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளனர்.
    • தொடர்ச்சியாக, மருத்து வமனை வளாகத்தில் சதீஷ்சை அந்த கும்பல் தாக்கியுள்ளனர்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் ரோஷணை பிள்ளையார் கோவில் தெருவை சேர்ந்தவர் சதீஷ். கார் ஓட்டுநரான இவர், திண்டிவனம் 5-வது வார்டு கிளை அ.தி.மு.க. பிரதிநிதியாக இருந்து வருகிறார். இவருக்கும், கெங்கையம்மன் கோவில் தெருவை சேர்ந்த சங்கர், அவரது சகோதரர் வேலவனுக்கும், கடந்த 10ஆண்டுகளாக முன் விரோதம் இருந்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு சதீஷ் தனது மனைவி மற்றும் குழந்தைகளுடன் வீட்டில் இருந்துள்ளார். அப்போது, சங்கர், வேலவன், அவரது கூட்டாளிகள் ஆன பிரபா, அஜித், வேலு மற்றும் அடையாளம் தெரியாத 2 நபர்கள், சதீஷ் வீட்டின் மீது கற்களை வீசி தாக்கி, ஜன்னல் கண்ணாடியை உடைத்துள்ளனர். வெளியே சென்ற சதீசை அந்த கும்பல், கான்கிரீட் கல் மற்றும் ஆயுதங்களால் தாக்கினர். இதில்அவருக்கு தலை மற்றும் வலது காலில் முறிவு ஏற்பட்டது. அவரை சதீஷின், உறவினர்கள் அவரை, மீட்டு, ஆட்டோவில், திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

    அங்கிருந்து, 108 ஆம்புலன்ஸ் திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு சென்றது. அதில், சதீஷ் ஏற்றி வருவதாக கருதிய, அந்த கும்பல், மருத்துவமனை வாசலில், ஆம்புலன்சை மடக்கி, கையில் வைத்திருந்த ஆயுதத்தால், முன்பக்க கண்ணாடியை உடைத்து, ஆம்புலன்ஸ் டிரைவர் விநாயகமுருகன் மற்றும் 108 ஆம்புலன்ஸ் ஊழியர் சரண்ராஜ் ஆகியோரை தாக்கியுள்ளனர். இதில் அவர்களுக்கு இடது கையில் காயம் ஏற்பட்டது. தொடர்ச்சியாக, மருத்து வமனை வளாகத்தில் சதீஷ்சை அந்த கும்பல் தாக்கியுள்ளனர். அதை தடுக்க சென்ற மகாலட்சுமி, என்பவரையும் தாக்கி விட்டு, அந்த கும்பல் தப்பிச்சென்றது. இதில், மகாலட்சுமிக்கும், தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டுள்ளது. காயமடைந்த சதீஷிக்கு, தலையில் 13 தையல், வலது கண் புருவத்தில்3 தையலும் போடப்பட்டது. அங்கிருந்து சதீஷ் மேல் சிகிச்சைக்காக முண்டி யம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்து வமனைக்கு அனுப்பி வைக்கப்ப ட்டுள்ளார். இந்த சம்பவத்தால் அப்பகு தியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    • நகைகளை திரும்பபெற சென்றபோது வங்கி செயலாளர் வங்கியில் உள்ள நகைகளை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • பலரது நகைகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்னும் 24 பேருக்கு நகைகள் வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது.

    தரங்கம்பாடி:

    தமிழக அரசு தேர்தல் வாக்குறுதியாக 5 பவுனுக்கு குறைவாக தொடக்க வேளாண்மை கூட்டுறவு வங்கிகளில் விவசாய கடன் பெற்றவர்களுக்கு நகை கடன் தள்ளுபடி செய்யப்படும் என்று அறிவித்தது. அதன்படி தள்ளுபடி செய்யப்பட்ட பயனாளிகளுக்கு நகைகள் வழங்கப்பட்டு வந்தது.

    ஆனால் மயிலாடுதுறை மாவட்டம் செம்பனார்கோவில் அருகே கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில் கடந்த 2016-ம் ஆண்டு முதல் 2018-ம் ஆண்டு வரை நகைக்கடன் பெற்றவர்கள் தங்கள் நகைகளை திரும்பபெற சென்றபோது வங்கி செயலாளர் பிரதீப் வங்கியில் உள்ள நகைகளை எடுத்து முறைகேட்டில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    இச்சம்பவம் தொடர்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு வங்கி செயலாளர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டார். அதன்பிறகு பலரது நகைகள் ஒப்படைக்கப்பட்ட நிலையில் இன்னும் 24 பேருக்கு நகைகள் வழங்கப்படாமல் இருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் ஆலவேலியை சேர்ந்த வசுமதி என்பர் கடந்த 2019-ம் ஆண்டு நகை அடகு வைத்தது தொடர்பாக கடன் தள்ளுபடி செய்யப்பட்ட பட்டியலில் பெயர் வந்தும் இதுநாள் வரையில் நகையை வழங்காமல் அலைக் கழித்துள்ளனர்.

    இதனால் வேதனையடைந்த வசுமதி மற்றும் அவரது உறவினர்கள் 20-க்கும் மேற்பட்டோர் கஞ்சாநகரம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் முன்பு தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இது குறித்து தகவல் அறிந்த செம்பனார்கோவில் போலீசார் போராட்டம் செய்தவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். விரைவில் நகைகள் வழங்கப்படும் என கூறியதன்பேரில் தர்ணா போராட்டத்தை அவர்கள் கைவிட்டனர்.

    • விவசாய தொழிலாளர் சங்கத்தில் சார்பில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.
    • வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை நிலம் ஒதுக்கி பத்து லட்ச ரூபாய் வீடு கட்டி கொடுக்க வேண்டும்.

    சேலம்:

    தேசிய ஊரக வேலைத்திட்டத்தில் ஆண்டுக்கு 200 நாள் வேலை நாள் ஒன்று கூலி ரூ 600 ஆக உயர்த்திட நகர்புறங்களில் இத்திட்டத்தை விரிவுப்படுத்திட கோரி விவசாய தொழிலாளர் சங்கத்தில் சார்பில் மாநில அளவிலான ஆர்ப்பாட்டம் சேலம் மாவட்ட கலெக்டர் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

    இதற்கு மாவட்ட தலைவர் தங்கவேல் தலைமை தாங்கினார். மாநில பொருளாளர் சங்கர் தொடக்க உரை ஆற்றினர். இதில்மாவட்டச் உதயகுமார், மாவட்ட செயலாளர் ராமமூர்த்தி, கணபதி உட்பட பலர் கண்டன உரையாற்றினார்.

    வீடு இல்லாத அனைவருக்கும் வீட்டுமனை நிலம் ஒதுக்கி பத்து லட்ச ரூபாய் வீடு கட்டி கொடுக்க வேண்டும்,விலைவாசி உயர்வு வேலையின்மை கருத்தில் கொண்டு ஊதிய குழு பரிந்துரை அடிப்படையில் விவசாய தொழிலாளர்களுக்கு கூலி உயர்த்தி வழங்க வேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கை வலியுறுத்தி இந்த தர்ணா போராட்டம் நடந்தது.

    • கடலூர் கலெக்டர் அலுவலகத்தை விவசாயி சங்க நிர்வாகிகள் முற்றுகையிட்டு தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர்.

    கடலூர்:

    கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலக வளாகத்தில் இன்று காலை விவசாயிகள் குறைதீர்ப்பு கூட்டம் நடைபெற்றது. இதனை தொடர்ந்து மாவட்டத்தில் இருந்து பல்வேறு விவசாயிகள் கூட்டத்தில் கலந்து கொண்டனர். இந்த நிலையில் தேசிய தென்னிந்திய நதிகள் இணைப்பு விவசாயிகள் சங்கம் சார்பில் மாநில தலைவர் அய்யா கண்ணு தலைமையில் விவசாய சங்க நிர்வாகிகள் கடலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு போராட்டத்தில் ஈடுபட திரண்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் மாநிலத் தலைவர் அய்யாகண்ணு மற்றும் விவசாயிகள் கலெக்டர் அலுவலகம் முன்பு தடுத்து நிறுத்தி ஆர்ப்பாட்டம் செய்ய அனுமதி கிடையாது எனக்கூறினர்.இந்த நிலையில் போலீசார் விவசாய சங்க நிர்வாகிகளிடம் தொடர்ந்து பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால் விவசாய சங்க நிர்வாகிகள் திட்டவட்டமாக தங்கள் போராட்டத்தை நடத்துவோம் என கூறினர்‌. பின்னர் திடீரென்று கடலூர் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு சாலையில் அமர்ந்து அய்யாகண்ணு தலைமையில் போராட்டம் நடைபெற்றது. அப்போது மாநிலத் தலைவர் அய்யா கண்ணு நிருபர்களிடம் கூறியதாவது:-

    தனியார் சர்க்கரை ஆலைக்கு டன் கணக்கில் கரும்புகளை விவசாயிகள் வழங்கினர். மத்திய மற்றும் மாநில அரசு ஒரு டன்னுக்கு 2,700 வழங்குவதற்கு உத்தரவிட்டனர். ஆனால் சர்க்கரை ஆலை திவாலாகி மூடப்பட்டதால் தனியார் நிறுவனம் சர்க்கரை ஆலை கையகப்படுத்தி உள்ளதால், தற்போது ஒரு டன்னுக்கு 300 ரூபாய் தருவதாக கூறுகின்றனர். இதன் மூலம் விவசாயம் குடும்பம் முழுவதும் கடும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். மேலும் சர்க்கரை ஆலை நிர்வாகம் கரும்பு வெட்டுவதற்கு விவசாயிகளிடம் இருந்து கையெழுத்து பெற்று வங்கிகளில் 40 கோடி ரூபாய் கடன் பெற்றனர். அந்த பணத்தையும் வழங்காமல் உள்ளதால் தற்போது விவசாயிகள் நிலத்தை ஜப்தி செய்வதோடு அவர்களின் பொருட்களையும் ஜப்தி செய்ய நடவடிக்கை மேற்கொண்டு வருகின்றனர். இதன் காரணமாக இந்த பிரச்சனைக்கு தீர்வு காண விவசாய சங்க நிர்வாகிகள் கடந்த ஆறு மாதமாக மாவட்ட நிர்வாகத்தை நேரில் சந்தித்து மனு அளித்து வந்தனர். ஆனால் இதுவரை இதற்கு நிரந்தர தீர்வு இல்லை.

    ஆகையால் இன்று மறியல் போராட்டம் அறிவித்து தற்போது மறியல் போராட்டம் நடைபெற்று வருகின்றது. ஆனால் இதற்கு நிரந்தர தீர்வு கிடைக்கவில்லை என்றால் தேசிய நெடுஞ்சாலையில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட விவசாயிகளை ஆடு, மாடுகளை திரட்டி மிகப்பெரிய அளவில் போராட்டம் விரைவில் நடத்தப்பட உள்ளோம். மேலும் தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நெல் டன் ஒன்றுக்கு 2500 ரூபாயும், கரும்புக்கு 4000 ரூபாயும் வழங்கப்படுவதாக உறுதி அளித்தார். அவர் வழங்குவார் என நம்பிக்கை வைத்துள்ளோம். மேலும் கூட்டுறவு கடன் சங்கத்தில் ஒரு ஏக்கர் நெல் பயிரிடுவதற்கு 32,000 கடன் வழங்க வேண்டும். ஆனால் பத்தாயிரம் ரூபாய் மட்டுமே வழங்குகிறார்கள். மேலும் நேரடி கொள்முதல் நிலையத்தில் லஞ்சம் தலைவிரித்து ஆடுவதால் விவசாயிகள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகி உள்ளனர். ஆகையால் இதற்கெல்லாம் தீர்வு காண இந்த போராட்டம் நடைபெற்று உள்ளது இவ்வாறு கூறினார். இதனை தொடர்ந்து போலீசார் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் தொடர்ந்து பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள் கலெக்டரை சந்தித்து எங்கள் கோரிக்கைகள் தொடர்பாக பேச வேண்டும் என திட்டவட்டமாக தெரிவித்தனர். இதனை தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் கலெக்டரை சந்தித்து மனு அளிக்க போலீசார் அனுப்பி வைத்தனர். இதனை தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கு இருந்து வருவதால் பரபரப்பாக காணப்பட்டு வருகிறது.

    • வெளி வியாபாரிகளுக்கு கடைகள் ஒதுக்கியதால் சூரமங்கலம் உழவர் சந்தை வியாபாரிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • இந்த போராட்டம் காரணமாக இன்று காலை காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் காய்கறி கடைகள் இல்லாததால் ஏமாற்றுத்துடன் சென்றனர்.

    சேலம்:

    சேலம் ஜங்ஷன் சூரமங்கலம் உழவர் சந்தையில் 300 கடைகள் உள்ளது. இங்கு சுழற்சி முறையில் கடைகள் வைத்து வந்தனர்.

    இந்த நிலையில் இன்று வெளி வியாபாரிகள் 4 பேருக்கு கடை வைக்க அட்டை வழங்கப்பட்டுள்ளது. இதனை கண்டித்து இன்று காலை உழவர் சந்தையில் கடைகள் வைக்காமல் புறக்கணித்து விவசாயிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இது குறித்து தகவல் அறிந்து சூரமங்கலம் போலீசார் அங்கு சென்று அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். இந்த சமாதான பேச்சுவார்த்தையில் உடன்பாடு ஏற்பட்டது. பின்னர் அவர்கள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.

    இந்த போராட்டம் காரணமாக இன்று காலை காய்கறி வாங்க வந்த பொதுமக்கள் காய்கறி கடைகள் இல்லாததால் ஏமாற்றுத்துடன் சென்றனர்.

    இதுகுறித்து வியாபாரிகள் கூறும் போது:- இங்கு நாங்கள் கடந்த 20 ஆண்டு களாக காய்கறிகள் விற்பனை செய்து வருகிறோம். நாங்கள் கடைகளுக்கு அடையாள அட்டை பதிவு செய்தால் ஒரு வருடம் காத்திருக்க வேண்டியுள்ளது. ஆனால் ஒரே நாளில் வெளி வியாபாரிகளுக்கு கடைகளை ஒதுக்கி உடனடியாக அட்டை வழங்கப்பட்டுள்ளது. அவர்கள் கடைகள் வைத்துவிட்டு எங்களுக்கு சுழற்சி முறையில் கடைகள் ஒதுக்க மாமூல் கேட்டு மிரட்டுகின்றனர். எனவே அவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வேண்டும். இவ்வாறு வியாபாரிகள் கூறினர்.

    இந்த போராட்டத்தால் அங்கு சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்து அருள் எம். எல்.ஏ அங்கு சென்று வியாபாரிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.

    • கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு 2 மகன்களுடன் தாய் திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுப்பட்டார்.
    • போலீசாருக்கு பணம் தரவேண்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தார்.

    கடலூர்:

    கடலூர் கலெக்டர் அலுவலகம் நுழைவாயிலில் பெண் தனது இரண்டு மகன்களுடன் திடீர் என்று தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்‌. அப்போது இரண்டு மகன்கள் கையில் வைத்திருந்த அட்டையில் போலீசாருக்கு கொடுக்க காசு இல்லை எனக்கு நீதியும் இல்லை என எழுதி இருந்தனர் மேலும் அந்தப் பெண் துண்டைத் தரையில் வைத்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டார்.

    அப்போது அங்கிருந்த போலீசார் பெண்ணிடம் விசாரணை நடத்தினர். இதில் பண்ருட்டி பண்டரக்கோட்டை சேர்ந்தவர் வசந்தி. எனது கணவர் பாரதிராஜா. எங்களுக்கு இரண்டு பிள்ளைகள் உள்ளனர். இந்த நிலையில் எனது கணவர் வேறு ஒரு பெண்ணை திருமணம் செய்ததாக கூறப்படுகிறது. மேலும் இது தொடர்பாக ஏற்கனவே பண்ருட்டி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்ததின் பேரில் என்னுடன் சேர்ந்து வாழ்வதாக எனது கணவர் தெரிவித்து இருந்தார்.

    தற்போது வேறு ஒரு பெண்ணுடன் இருப்பதாக தெரிய வருகிறது. இது தொடர்பாக பண்ருட்டி அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் என்னிடம் பணம் கேட்டனர். என்னிடம் பணம் இல்லாததால் புகார் குறித்து விசாரணை நடத்த வில்லை. ஆகையால் போலீசாருக்கு பணம் தரவேண்டி இந்த போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும், எனக்கு நீதி கிடைக்க வேண்டும் என தெரிவித்தார். இதனை தொடர்ந்து போலீசார் தொடர்ந்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகின்றனர். கடலூர் கலெக்டர் அலுவலகம் முன்பு தனது மகன்களுடன் தாய் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

    ×