search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "agitation"

    • அடிப்படை வசதி இல்லாததால் ரேசன் அட்டைகளை சாலையில் வீசி போராட்டம் நடத்தினர்.
    • ரேசன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

    சாயல்குடி

    சாயல்குடி அருகே உள்ள காணிக்கூர் ஊராட்சி ஒச்சத்தேவன் கோட்டை கிராமத்தில் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விவசாய குடும்பங்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் ரேசன் பொருட்கள் மற்றும் அத்தியாவசிய பொருட்கள் வாங்குவதற்கு 3 கி.மீட்டர் தொலைவில் உள்ள காணிக் கூர் கிராமத்திற்கு இருசக்கர வாகனத்திலும், நடந்து சென்றும் வாங்கி வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களாக ரேசன் பொருட்களை கொடுக்கா மல் கைரேகையை மட்டும் வாங்கிச் சென்றுள்ளதாக கூறப்படுகிறது. கடந்த மாதம் போட வேண்டிய ரேசன் பொருட்கள் வழங்கப்படவில்லை.

    இது தொடர்பாக அதிகாரிகளிடம் பல முறை மனு கொடுத்தும் எந்தவித நடவடிக்கையும் இதுவரை எடுக்காததால் பொதுமக்கள் தங்கள் ரேசன் அட்டைகளை சாலை யில் வீசி போராட் டத்தில் ஈடுபட்டனர்.

    இதுகுறித்து ஒச்சத்தேவன் கோட்டை கிராம மக்கள் கூறுகையில், எங்களுக்கு நிறுத்தப்பட்ட ரேசன் பொருட்களை மீண்டும் விநியோகம் செய்ய வேண்டும். எங்களுக்கு ரேசன் பொருட்கள் வழங்கா மல் காலம் தாழ்த்திய அதிகாரிகள் மீது நட வடிக்கை எடுக்க வேண்டும். எங்களுக்கு அத்தியாவசிய பொருட்களை வழங்காத பட்சத்தில் ரேசன் அட்டைகளை கலெக்டரிடம் ஒப்படைக்க உள்ளோம் என்றனர்.

    • ஸ்ரீவில்லிபுத்தூரில் இந்திய கம்யூனிஸ்டு கட்சியினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.
    • உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    ஸ்ரீவில்லிபுத்தூர்

    ஸ்ரீவில்லிபுத்தூர் ராமகிருஷ்ணாபுரம் காமராஜர் சிலை அருகே ஒன்றிய செயலாளர் பலவேசம் தலைமையில் இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் தர்ணா போராட்டம் நடைபெற்றது. நகர செயலாளர் மூர்த்தி முன்னிலை வகித்தார். முன்னாள் எம்.பி அழகிரிசாமி, முன்னாள் எம்.எல்.ஏ பொன்னுபாண்டியன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டு கோரிக்கைகளை விளக்கி பேசினர்.

    விருதுநகர் மாவட்டத்தில் பல்வேறு நகராட்சிகள், பேரூராட்சிகள் ஊராட்சிகளுக்கு தாமிரபரணி கூட்டு குடிநீர் வழங்கப்படுகிறது. ஆனால் திட்டத்தை முறையாக செயல்படுத்தாததால் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. அதே போல் பொது சுகாதாரத்திற்கு முக்கியத்துவம் அளித்து, அனைத்து பகுதிகளிலும் ஆண்கள் பெண்களுக்கு தனி தனியாக சுகாதார வளாகங்கள் அமைத்து, கழிவுநீர் கால்வாய் வசதி ஏற்படுத்த உள்ளாட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்கக் வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டம் நடைபெற்றது.

    • சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
    • விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தஞ்சை கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

    தஞ்சாவூர்:

    தஞ்சை மாவட்டம் பாபநாசம் அருகே திருமண்டங்குடியில் உள்ள திருஆரூரான் சர்க்கரை ஆலை நிர்வாகம் விவசாயிகளுக்கு தர வேண்டிய கரும்புக்கான நிலுவைத் தொகையை வழங்க வேண்டும்.

    விவசாயிகளின் பெயரில் வங்கிகளில் ஆலை நிர்வாகத்தால் வாங்கப்பட்ட கடன்களை தள்ளுபடி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தி சர்க்கரை ஆலை முன்பு விவசாயிகள் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்தநிலையில் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள விவசாயிகள், விவசாய சங்க பிரதிநிதிகளுடன் தஞ்சை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் 2 நாட்களுக்கு முன்பு கலந்தாலோசனை கூட்டம் நடந்தது.

    இதற்கு கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தலைமை தாங்கினார்.

    அரசு கொறடா கோவி.செழியன், எம்.எல்.ஏ.க்கள் அன்பழகன், துரை.சந்திரசேகரன், டி.கே.ஜி.நீலமேகம், ஜவாஹிருல்லா, நாகை மாலி, முன்னாள் எம்.எல்.ஏ. குத்தாலம் கல்யாணம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    இதில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்து கொண்டு விவசாயிகளின் கருத்துக்களை கேட்டறிந்தார்.

    அப்போது தொடர் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகள் வருகிற 8-ந்தேதி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேச ஏற்பாடு செய்யப்படும்.

    உங்களுடைய பிரச்சினைகள் அவரிடம் எடுத்துரைக்கப்படும்.

    முதல்-அமைச்சரை சந்தித்த பிறகு நல்ல முடிவு கிடைக்கும் என்றார்.

    இந்த கூட்டத்தில் விவசாயிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    • ராமநாதபுரம் வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்கள் ஜப்தி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
    • இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    ராமநாதபுரம்

    ராமநாதபுரம் பட்டணம்காத்தான் பகுதியை சேர்ந்தவர் செல்வம். இவரது மனைவி ராக்கம்மாள். இவர்களதுமகள் சொர்ணவள்ளிக்கு பட்டினம்காத்தான் பகுதியில் 1.37 ஏக்கர் சொந்த நிலம் இருந்தது. அதனை வீட்டு வசதி வாரியம் கடந்த 1997ம் ஆண்டு 1 செண்ட் ரூ.5 ஆயிரம் என்று விலை நிர்ணயம் செய்து கையகப்படுத்தியது.

    ஆனால் அதற்கு ரிய பணத்தை வழங்கவில்லை. இதனைத்தொடர்ந்து சொர்ணவள்ளி, வீட்டு வசதி வாரியத்துறை அதிகாரிகளிடம் சென்று தனக்கு தர வேண்டிய பணத்தை கேட்டுள்ளார். இருந்த போதிலும் பணத்தை கொடுக்கவில்லை.

    இதனால் பாதிக்கப்பட்ட சொர்ணவள்ளி ராமநாதபுரம் சப்-கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கின் விசாரணை முடிவில் சொர்ணவள்ளிக்கு தர வேண்டிய அசல் மற்றும் வட்டி ஆகியவை சேர்த்து ரூ.39 லட்சத்தை வீட்டு வசதி வாரியம் வழங்கிட வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதன் பின்னரும் அவருக்கு பணம் வழங்கப்படவில்லை. இதைத்தொடர்ந்து அவர் மீண்டும் நீதிமன்றத்தில் புகார் செய்தார். அதனை விசாரித்த ராமநாதபுரம் சப்-கோர்ட் நீதிபதி கதிரவன், ராமநாதபுரத்தில் உள்ள வீட்டு வசதி வாரிய அலுவலக பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்தில் ஒப்படைக்க உத்தரவிட்டார்.இதனையடுத்து ராமநாதபுரம் சப்-கோர்ட் ஆமினா ராமநாதபுரம் பெரிய கடை வீதியில் உள்ள தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய அலுவலகத்தில் உள்ள கணினி உள்ளிட்ட பொருட்களை ஜப்தி செய்து நீதிமன்றத்திற்கு எடுத்துச்சென்றார். இந்த சம்பவம் ராமநாதபுரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

    • தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கம் சார்பில் கருப்பு பேட்ஜ் அணிந்து போராட்டம் நடத்தினர்.
    • ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 850 பெண் ஆசிரியர்கள், 620 ஆண் ஆசியர்கள் என மொத்தம் 1470 ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்றோம்.

    ராமநாதபுரம்

    தூத்துக்குடி மாவட்டம் கீழ்நம்பிபுரம் இந்து தொடக்கபள்ளியில் பணியாற்றி வரும் ஆசிரியரை மாணவரின் பெற்றோர் பள்ளியில் புகுந்து தாக்குதல் நடத்தினர். இந்த சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து தமிழ்நாடு ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தினர் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்றனர். இதுகுறித்து ஆசிரியர் முன்னேற்ற சங்கத்தின் மாவட்டத்தலைவரும், ஜாக்டோ-ஜியோ மாவட்ட ஒருங்கிணைப்பாளருமான முருகேசன் கூறியதாவது:-

    தூத்துக்குடி மாவட்டம் கீழ்நம்பிபுரத்திலுள்ள இந்து தொடக்கப்பள்ளியில் பணிபுரியும் ஆசிரியர் தவறு செய்த மாணவனை கண்டித்தார். இதையொட்டி அந்த மாணவனின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்குள் புகுந்து ஆசிரியரை தாக்கியுள்ளனர். இந்த பள்ளியின் தலைமையாசிரியரை பெண் என்றும் பாராமல் கடுமையாக தாக்கியுள்ளனர். இந்த செயல் பேரதிர்ச்சியை கொடுத்துள்ளது. ஆசிரியர் மீது தவறு இருந்தால் கூட அவருக்கு தண்டனை கொடுக்க பள்ளிக்கல்வித்துறை இருக்கிறது. அதைவிடுத்து புனிதமாக கருதும் பள்ளியில் புகுந்து ஆசிரியரை தாக்குவது அராஜக செயல் இப்படிப்பட்ட செயலுக்கு காவல்துறை தகுந்த தண்டனையை பெற்றுக்கொடுக்க வேண்டும்.

    பள்ளியில் புகுந்து ஆசிரியர் மீது தாக்குதல் நடத்தியவர்களை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைக்க வேண்டும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி மாநிலத்தலைவர் தியாகராஜன் வழிகாட்டுதலின்படி ராமநாதபுரம் மாவட்டம் முழுவதும் சுமார் 850 பெண் ஆசிரியர்கள், 620 ஆண் ஆசியர்கள் என மொத்தம் 1470 ஆசிரியர்கள் கருப்பு பேட்ஜ் அணிந்து பள்ளிக்கு சென்றோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகின்றது.
    • கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி பொதுமக்களுடன் நேரில் சென்று குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தை பார்வையிட்டார்

    கடலூர்

    நெல்லிக்குப்பம் நகராட்சிக்குட்பட்ட பகுதியில் தினந்தோறும் சேகரிக்கப்படும் குப்பைகளை நகராட்சி பகுதியில் கொட்டுவதற்கு இடம் இல்லாமல் இருந்து வருகின்றது.  இதன் காரணமாக நகராட்சி ஊழியர்கள் ஆறுகள் ஓரமாகவும் மற்றும் மக்கள் அதிகம் வசிக்காத பகுதிகளில் குப்பைகளை கொட்டி எரித்து வருவதாக தொடர்ந்து பொதுமக்கள் மத்தியில் புகார் இருந்து வந்தன. இந்த நிலையில் தற்போது வைடிப்பாக்கம், மோரை எவரட்புரம் பகுதியில் அகற்றப்படும் குப்பைகளை நகராட்சி ஊழியர்கள் கொட்டி வருகின்றனர். இதில் மக்கும் குப்பை மக்காத குப்பை என தரம் பிரித்து அதனை சரிப்படுத்தும் பணிகளிலும் ஈடுபட்டு வருகின்றனர்.   இந்த நிலையில் இன்று காலை சரவணபுரம் பகுதியில் மக்கும் குப்பை, மக்காத குப்பை என்பதனை தரம் பிரித்து பொதுமக்கள் வழங்குவது குறித்து நெல்லிக்குப்பம் நகராட்சி சார்பில் விழா ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.  இதற்காக நெல்லிக்குப்பம் கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி மற்றும் அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்தனர். அப்போது 25, 26, 27 ஆகிய வார்டுகளை சேர்ந்த பொதுமக்கள் திடீரென்று கமிஷனர் மகேஸ்வரி வாகனத்தை சூழ்ந்து முற்றுகையிட்டனர பின்னர் எந்தவித அனுமதியும் இல்லாமல் குப்பைகள் கொட்டி வருவதால் பொதுமக்கள் பெரிதும் அவதி அடைந்து வருகின்றோம். மேலும் குப்பைகளை எரித்து வருவதால் மூச்சு திணறல், வாந்தி போன்ற பாதிப்புகளும் ஏற்பட்டு வருவதால் நாங்கள் மிகுந்த அவதி அடைந்து வருகிறோம். இது தொடர்பாக நீங்கள் நேரில் இடத்தை பார்வையிட்டு ஆய்வு செய்து இதற்கு மாற்று நடவடிக்கை எடுக்க வேண்டும் என தெரிவித்தனர்.

    இதனை தொடர்ந்து கமிஷனர் (பொறுப்பு) மகேஸ்வரி பொதுமக்களுடன் நேரில் சென்று குப்பைகள் கொட்டி இருக்கும் இடத்தை பார்வையிட்டார். பின்னர் இதற்கு மாற்று நடவடிக்கை எடுப்பதாக பொதுமக்களிடம் உறுதி அளித்தார் . இதனைத் தொடர்ந்து பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பாக காணப்பட்டது 

    • மாநகராட்சிக்கு எதிராக போராட்டம் நடத்துவேன் என்று துணை மேயர் கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டது.
    • மேயர்-துணை மேயர் இடையேயான தொடர் மோதல், தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

    மதுரை

    மதுரை மாநகராட்சி மேயராக இந்திராணி பதவி வகித்து வருகிறார். இவர் தி.மு.க. கட்சியை சேர்ந்தவர். மாநகராட்சி துணை மேய ராக நாகராஜன் உள்ளார். இவர் கம்யூனிஸ்டு கட்சியை சேர்ந்தவர்.

    மதுரை மாநகராட்சியில் பதவிக்கு வந்த புதிதில் மேயரும், துணை மேயரும் இணக்கமாகவே செயல் பட்டு வந்தனர். மாநகராட்சி நிகழ்ச்சிகளில் 2 பேரையும் பல நிகழ்வுகளில் ஒன்றாக பார்க்க முடிந்தது.

    ஆனால் சமீப காலமாக இருவருக்கும் இடையே உரசல் ஏற்பட்டு உள்ளது. எனவே மாநகராட்சி மேய ரின் நிகழ்ச்சிகளில், பெரும் பாலும் துணை மேயரை பார்க்க முடியவில்லை. இதற்கிடையே துணை மேயர் நாகராஜன் சமீபத்தில் நடந்த மாநகராட்சி கூட்டத் தொடரில் பேசும் போது, என்னை மேயர் தரப்பினர் மாநகராட்சி விழாக்கள் முதல் நிர்வாக பணிகள் வரை திட்டமிட்டே புறக்கணித்து வருகின்றனர் என்று பகிரங்க குற்றம் சாட்டினார்.

    இதற்கு மேயர் தரப்பு பதில் அளிக்கையில், மாநகராட்சி நிர்வாக பணிகளில் தலையிட துணை மேயருக்கு அதிகாரம் இல்லை என்று பதிலடி கொடுத்தனர். இந்த நிலையில் துணை மேயர் நாகராஜன் நேற்று மாநகராட்சி கமிஷனருக்கு கடிதம் ஒன்றை எழுதி அனுப்பி வைத்துள்ளார். அந்த கடித த்தில் கூறப்ப ட்டு இருப்ப தாவது:-

    கடந்த 2022-ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் மதுரை மாநகராட்சி 5-வது மண்ட ல அலுவல கத்தில் சுதந்திர தின விழா நடந்தது. அப்போது வைக்கப்பட்ட கல்வெட்டில் எனது பெயர் விடுபட்டது. இது தொட ர்பாக நான் உங்களுக்கு கடிதம் எழுதி னேன். பல தடவைகள் நேரிலும், சம்பந்தப்பட்ட அதிகாரிக ளிடமும் நினை வு படுத்தினே ன். ஆனாலும் புதிய கல்வெ ட்டை வைக்க விடாமல் சிலர் தடுத்து வரு கின்றனர்.

    இந்த நிலையில் மாநக ராட்சி 29-வது வார்டில் அங்கன்வாடி மையம் திறப்பு விழா நடந்தது. இதற்காக வைக்கப்பட்டு உள்ள கல்வெட்டிலும், எனது பெயர் இடம் பெற வில்லை. அதே நேரத்தில் மேயர், கமிஷனர், மண்டல தலைவர், கவுன்சிலர் ஆகி யோரின் பெயர்கள் இடம் பெற்று உள்ளது.

    எனவே மாநகராட்சி நிர்வாகம் ஏதோ திட்டமிட்டு எனது பெயரை வைக்காமல் உள்ளதாக தெரிகிறது. ஆகவே மேற்கண்ட 2 பகுதிகளிலும் என் பெயர் சேர்க்கப்பட்ட கல்வெட்டை உடனடியாக வைக்க வேண்டும். இல்லையெனில் வருகிற 21-ந் தேதி மாநக ராட்சி 5-வது மண்டலத்தில் நடக்க உள்ள மக்கள் குறை தீர்ப்பு கூட்டத்தில், பத்திரிக்கையாளர்கள் முன்னிலையில் நான் போராட்டத்தில் ஈடுபடு வேன் என்று கூறப்பட்டு உள்ளது.

    மதுரை மாநகராட்சியில் மேயர்-துணை மேயர் இடையேயான தொடர் மோதல், தி.மு.க. கூட்டணிக்குள் சலசலப்பை ஏற்படுத்தி வருகிறது.

    • திண்டிவனத்தில் வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும்.

    விழுப்புரம்:

    திண்டிவனம் தாசில்தார் அலுவலகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் 50-க்கும் மேற்பட்ட அலுவலர்கள் மற்றும் ஊழியர்கள் தங்களது பணி நேரத்தில் இருந்து ஒரு மணி நேரத்துக்கு முன்பாக அலுவலகத்தில் இருந்து வெளிநடப்பு செய்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    தொடர்ந்து 4 ஆண்டுகளாக வெளியிடப்படாமல் உள்ள துணை ஆட்சியர் பட்டியலை உடனே வெளியிட்டு பதவி உயர்வு வழங்கிட வேண்டும், அலுவலக உதவியாளர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். அரசு மட்டத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முன்வைக்கப்பட்ட அனைத்து கோரிக்கைகளின் மீதும் உரிய ஆணைகள் வழங்கிட வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்கள் எழுப்பினர்.

    • பட்டாம்பாக்கத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவர் சிறையில் மரணமடைந்தார் அவர்களை பணி இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும்
    • பேரணியாக சென்றவர்கள் செல்லாத வகையில் அதிரடியாக தடுத்து நிறுத்தினர்.

    கடலூர்:

    நெய்வேலி போலீஸ் நிலையத்தில் கடந்த 2015-ம் ஆண்டு பட்டாம்பாக்கத்தை சேர்ந்த சுப்ரமணி என்பவர் சிறையில் மரணமடைந்தார். இது தொடர்பாக இன்ஸ்பெக்டர் ராஜா, சப்-இன்ஸ்பெக்டர் செந்தில்வேல், போலீசார் சவுமியன் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் அவர்களை பணி இடைநீக்கம் செய்து கைது செய்ய வேண்டும், வன்கொடுமை சட்டத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், அதற்கான நிவாரணத்தை உடனடியாக வழங்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு கட்சி சார்பில் இன்று காலை போராட்டம் நடைபெறுவதாக அறிவிக்கப்ட்டிருந்தது.  அதன்படி கடலூர் தலைமை தபால் நிலையம் அருகே மாவட்ட செயலாளர் மாதவன் தலைமையில் மாநகர செயலாளர் அமர்நாத், நிர்வாகிகள் பஞ்சாட்சரம், சிவானந்தம், பாலமுருகன், ஜெய பாண்டியன் ஆகியோர் முன்னிலையில், மத்திய குழு உறுப்பினர் வாசுகி, மாநில குழு உறுப்பினர்கள் ரமேஷ்பாபு, செயற்குழு உறுப்பினர் ஆறுமுகம், சிறுபான்மை குழு மாநில துணைத்தலைவர் மூசா உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் திரண்டனர் .இவர்கள் கடலூர் டவுன் ஹாலில் இருந்து பேரணியாக கடலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்திற்கு பழைய கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக கோஷங்கள் எழுப்பிக்கொண்டு சென்றனர். அப்போது கடலூர் அண்ணா விளையாட்டு மைதானம் அருகே ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் குவிக்கப்பட்டு இருந்தனர்.   மேலும், சாலையின் குறுக்கே இரும்பு தடுப்பு கட்டை அமைக்கப்பட்டு பேரணியாக சென்றவர்கள் செல்லாத வகையில் அதிரடியாக தடுத்து நிறுத்தினர். இதனைத் தொடர்ந்து பேரணியாக வந்தவர்கள் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது தங்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பினார்கள். மேலும் ஆர்ப்பாட்டம் தொடர்ந்து நடைபெற்று வருகின்றது. இதன் காரணமாக கடலூர் கலெக்டர் அலுவலகம் சாலை வழியாக பொதுமக்கள் செல்ல முடியாமல் கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது.

    • அப்பா அடித்ததால்,மனமுடைந்த இவர் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார்.
    • தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்,

    கடலூர்:

    கடலூர் மாவட்டம் திட்டக்குடி அருகே பெருமுளை கிராமம் வடக்கு தெரு, காலனியை சேர்ந்தவர் நாராயணசாமி. இவரது 2-வது மகன் கபில் தேவ் (வயது20).சம்பவத்தன்று குடிபோ தையில் தந்தை- மகனுக்கும் வாக்குவாதம் ஏற்பட்டது. அப்போது நாராயணசாமி, கபில்தே வை அடித்தார்.

    இதனால் மனமுடைந்த கபில்தேவ் இரவு 12.30 மணி அளவில் அருகிலுள்ள உயர் மின்னழுத்த கோபுரத்தின் மீது ஏறி கீழே குதிதுவிடுவேன் என்று தற்கொலை மிர ட்டல் விடுத்துள்ளார். இதை அறிந்த அப்பகுதி இளைஞர்கள் திட்டக்குடி தீயணைப்பு துறை மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தனர். இளைஞர்கள் உயர் மின்னழுத்த கோபுரத்தின் மேலே ஏறி திட்டக்குடி தீயணைப்புத் துறையினர், மற்றும் ஊர் பொதுமக்கள் உதவியுடன் கீழே இறக்கி அவரது தாய் சிவஞானம் என்பவருடன்அனுப்பி வைக்கப்பட்டார்இரவு 1 மணி அளவில் நடந்த இந்த சம்பவத்தால் இரவு அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டது.

    • தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி னார்.
    • தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சியில் தமிழ்நாடு கிராம மேல்நிலைத் தொட்டி இயக்குபவர்கள் தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் சார்பில் முற்றுகை போராட்டம் நடைபெற்றது  கள்ளக்குறிச்சி மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை அலுவலகம் எதிரே நடைபெற்ற முற்றுகை போராட்டத்திற்கு தமிழ்நாடு கிராம மேல்நிலை தொட்டி இயக்குபவர்கள், தூய்மை பணியாளர்கள் மற்றும் தூய்மை காவலர்கள் சங்கம் மாவட்ட தலைவர் ஜெய்சங்கர் தலைமை தாங்கி னார். மாவட்ட இணை செய லாளர் அண்ணாமலை, மாவட்ட துணை செய லாளர் பழனிசாமி, மாவட்டத் துணைத் தலைவர் ராஜேந்திரன், மாவட்ட அமைப்பாளர் பிரகாஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாவட்ட செயலாளர் ராதாகிருஷ்ணன் வர வேற்றார். இதில் சிறப்பு அழைப்பாளராக மாநிலத் தலைவர் கிருஷ்ண சாமி, மாநில செயலாளர் கனி, தமிழ்நாடு ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு, மாவட்ட செயலாளர் சந்திரசேகர் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்புரை ஆற்றினார்.

    இதில் மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு பவர்கள் மற்றும் தூய்மை காவலர்களுக்கு மருத்துவ காப்பீடு அட்டை வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். நிலுவை ஊதியம் மற்றும் அகவிலைப்படி வழங்க வேண்டும். பொங்கல் கருணைத்தொகை வழங்க வேண்டும், ஒவ்வொரு மாதமும் 10- ந் தேதிக்குள் சம்பளம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன உரை ஆற்றினர். அப்போது கள்ளக்குறிச்சி, சின்னசேலம், சங்கராபுரம், தியாகதுருகம், ரிஷிவந்தியம் உள்ளிட்ட 9 ஊராட்சி ஒன்றியங்களைச் சேர்ந்த ஒன்றிய நிர்வாகி கள், மேல்நிலை நீர்த்தேக்க தொட்டி இயக்கு பவர்கள், தூய்மை பணியா ளர்கள், தூய்மை காவலர்கள் பலரும் கலந்து கொண்டனர். 

    • உளுந்தூர்பேட்டை சுங்கச்சாவடி ஊழியர்கள் ஆதார் அட்டை நகலை எரித்து போராட்டத்தில் ஈடுப்பட்டனர்.
    • 15 ஆண்டுகளாக பணி செய்து வந்த 28 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர்.

    கள்ளக்குறிச்சி: 

    கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை செங்குறிச்சி சுங்கச்சாவடியில் 15 ஆண்டுகளாக பணி செய்து வந்த 28 பணியாளர்களை திடீரென பணி நீக்கம் செய்யப்பட்டனர். இதனை கண்டித்து 100-க்கும் மேற்பட்ட ஊழியர்கள் கடந்த 35 நாட்களாக பல்வேறு போராட்டங்கள் நடத்தி வந்த நிலையிலும் மாவட்ட நிர்வாகமும் தமிழக அரசும் கண்டுகொள்ளவில்லை.

    ஆகையால் ஆதார் அட்டை நகலை எரித்து எங்களுக்கு குடியுரிமை தேவையில்லை கோஷம் எழுப்பி போராட்டத்தில் ஈடுபட்டனர். எங்களுக்கு மீண்டும் பணி வழங்க வேண்டும் நிறுத்தி வைக்கப்பட்ட பிடிப்பு தொகை வழங்க வேண்டும் என கோஷத்தில் மத்திய மாநில அரசுக்கு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டனர். 

    ×