search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Aadhar"

    50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தொலைத்தொடர்பு துறை மற்றும் ஆதார் ஆணையம் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. #Aadhar #AadhaarJudgment
    புதுடெல்லி:

    மொபைல் இணைப்புகள் பெறும்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ, சுமார் 25 கோடி இணைப்புகளை இவ்வாறு வழங்கியுள்ளது. பாரதி ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா, பிஎஸ்என்எல் போன்றவையும் இவ்வாறு இணைப்புகளை வழங்கியுள்ளன.

    ஆதார் இணைப்பின் மூலம் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகி விடுவதால், காகித ஆவணங்களை அழித்துவிடலாம் என கடந்த ஆண்டு மார்ச்சில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்கள், அதற்கு முன்னர் விவரங்களை நிரப்பி வழங்கிய, கேஒய்சி ஆவணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அழிக்கப்பட்டிருக்கக்கூடும்.

    இந்த நிலையில்தான், தனிநபர்களின் தனித்துவ அடையாளத்தை (ஆதார்), சான்று ஆவணங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. எனவே, ஆதார் மூலம் கேஒய்சி விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகளுக்கு, புதிதாக வாடிக்கையாளர் விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் நிலை உருவாகியுள்ளது.



    தொலைத்தொடர்பு செயலர் அருணா சுந்தரராஜன் மொபைல் நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், விரைவில் இதுதொடர்பாக தொலைத்தொடர்புதுறை உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறை மற்றும் ஆதார் ஆணையம் (UIDAI) கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டு உள்ளன. அதில் 50 கோடி மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளன. ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டால், புதிய அடையாளம் கேட்கபடமாட்டாது என கூறி உள்ளது.

    ஆதார் eKYC மூலம் வழங்கப்பட்ட மொபைல் எண் துண்டிக்கப்பட வேண்டும் என்று அதன் ஆதார் தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் எங்கும் சுட்டி காட்டவில்லை என்று கூட்டு அறிக்கை தெளிவுபடுத்துகிறது. #Aadhar #AadhaarJudgment

    5 ஆண்டுகள் வரை ஆதார் தகவல்களை சேகரித்து வைக்க வகை செய்யும் சட்டப் பிரிவு 27(1)ஐ நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. #AadharCard
    புதுடெல்லி:

    ஆதார் சட்டத்தை எதிர்த்து சுப்ரீம்கோர்ட்டில் தொடரப்பட்ட வழக்கில், மக்களின் அடிப்படை உரிமைகளை மீறும் இச்சட்டத்தின் 18 பிரிவுகளை ரத்து செய்யவேண்டும் என்று மனுதாரர்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர்.இந்த வழக்கில் தீர்ப்பளித்த தலைமை நீதிபதி தீபக் மிஸ்ரா தலைமையிலான அரசியல் சாசன அமர்வு ஆதார் சட்டத்தில் சில பிரிவுகளை ரத்து செய்தது.

    மேலும் சிலவற்றில் திருத்தங்களை செய்யுமாறு மத்திய அரசுக்கு உத்தரவிட்டது. குறிப்பாக 5 ஆண்டுகள் வரை ஆதார் தகவல்களை சேகரித்து வைக்க வகை செய்யும் சட்டப் பிரிவு 27(1)ஐ நீதிபதிகள் அமர்வு ரத்து செய்தது. அதேநேரம் நாட்டின் பாதுகாப்பு கருதி ஆதார் கைரேகை மற்றும் தகவல்களை தேவைப்படும் அதிகாரிகளுக்கு தெரிவிக்கலாம் என்ற 33(2) பிரிவை நீதிபதிகள் மாற்றியமைக்கும்படி உத்தரவிட்டனர். இதுபோன்ற நிலைமை ஏற்பட்டால் இணைச் செயலாளர் அந்தஸ்துக்கு மேற்பட்ட அதிகாரிக்கு மட்டுமே இதற்கான அதிகாரத்தை வழங்கலாம் என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர்.

    இதேபோல் தனிப்பட்ட நபர் பற்றிய தகவல்கள் தேவைப்பட்டால் அதற்குரிய வாய்ப்பை வழங்கவேண்டும் என்ற பிரிவிலும் 33(1) திருத்தம் செய்யும்படி தெரிவித்தனர்.இதுபோல் மேலும் 3 சட்டப்பிரிவுகளை ரத்து அல்லது மாற்றம் செய்து நீதிபதிகள் உத்தரவு பிறப்பித்தனர். 
    இந்தியாவில் மொபைல் பயன்படுத்துவோரின் கான்டாக்ட்களில் தானாக ஆதார் சேவை மைய உதவி எண் தானாக சேமிக்கப்பட்டதற்கு கூகுள் பொறுப்பேற்றுக் கொண்டது. #UIDAIMystery #Google


    இந்தியா முழுக்க மொபைல் போன் பயன்படுத்துவோரின் கான்டாக்ட்களில் ஆதார் சேவை மையத்திற்கான (UIDAI) இலவச அழைப்பு எண் தானாக சேமிக்கப்பட்டு இருப்பதாக கடந்த சில நாட்களாக பலர் குற்றஞ்சாட்டி வந்தனர். மர்ம முறையில் ஆதார் சேவை உதவி எண் சேமிக்கப்பட்டதாக சர்ச்சை ஏற்பட்ட நிலையில், ஆதார் சேவை மையம் உடனடியாக பதில் அளித்திருந்தது. 

    அதில் மொபைல் போன் பயன்படுத்துவோர் கான்டாக்ட்-இல் தானாக சேமிக்கப்பட்டிருப்பதாக கூறப்படும் ‘18003001947’ பழைய எண், இந்த இலவச எண் செயலற்று கிடக்கிறது என தெரிவித்தது. மத்திய அரசின் ஆதார் மையம் இவ்வாறு செய்யவில்லை எனில், பயனற்ற நம்பரை யார் பதிவு செய்தார்கள் என்ற குழப்பத்திற்கு கூகுள் பதில் அளித்துள்ளது.

    இதுகுறித்து கூகுள் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் ஆதார் சேவை மைய இலவச அழைப்பு எண் மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கு வழங்கப்பட்ட ஆன்ட்ராய்டு செட்டப் விசார்டில் தவறுதலாக கோடிங் செயய்ப்பட்டு விட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் 2014-ம் ஆண்டு வழங்கப்பட்ட ஆன்ட்ராய்டு செட்டப் அன்று முதல் தளத்தில் இருந்ததோடு, புதிய சாதனங்களிலும் அப்டேட் ஆகியிருக்கிறது.

    சில ஐ.ஓ.எஸ். பயனர்களுக்கும் ஆதார் சேவை மைய இலவச அழைப்பு எண் தங்களது போன்புக்-இல் பதிவு செய்யப்பட்டு இருந்தது. இவர்கள் ஆன்ட்ராய்டில் இருந்து ஐபோனுக்கு மாறும் போது சின்க் செய்யப்பட்டு இருக்கலாம். இது ஆன்ட்ராய்டு சாதனங்களில் முறையற்ற பயன்பாடு கிடையாது என கூகுள் உறுதியாக தெரிவித்துள்ளது. 

    எனினும், இந்த பிழையை சரி செய்யும் பணிகளில் ஈடுபட்டு வருவதாகவும், விரைவில் மொபைல் போன் உற்பத்தியாளர்களுக்கு இதற்கான அப்டேட் வெளியிடப்படும் என கூகுள் தெரிவித்துள்ளது. #UIDAIMystery #Google
    ×