search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "DoT"

    50 கோடி மொபைல் இணைப்புகள் துண்டிக்கப்பட வாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியான நிலையில், தொலைத்தொடர்பு துறை மற்றும் ஆதார் ஆணையம் அதனை மறுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது. #Aadhar #AadhaarJudgment
    புதுடெல்லி:

    மொபைல் இணைப்புகள் பெறும்போது, கேஒய்சி எனப்படும் வாடிக்கையாளர் தொடர்பான விவரங்கள் பெறப்படுகின்றன. ஆதார் எண்ணைக் குறிப்பிட்டால், அதன் மூலம் தனிப்பட்ட விவரங்களை எடுத்துக்கொள்ளும் நடைமுறையில் சுமார் 50 கோடி மொபைல் இணைப்புகள் வழங்கப்பட்டுள்ளன.

    கடந்த 2016-ஆம் ஆண்டு செப்டம்பரில் சந்தையில் நுழைந்த ரிலையன்ஸ் ஜியோ, சுமார் 25 கோடி இணைப்புகளை இவ்வாறு வழங்கியுள்ளது. பாரதி ஏர்டெல், வோடஃபோன் - ஐடியா, பிஎஸ்என்எல் போன்றவையும் இவ்வாறு இணைப்புகளை வழங்கியுள்ளன.

    ஆதார் இணைப்பின் மூலம் ஆவணங்கள் டிஜிட்டல் மயமாகி விடுவதால், காகித ஆவணங்களை அழித்துவிடலாம் என கடந்த ஆண்டு மார்ச்சில் மத்திய அரசு அனுமதி வழங்கியது. எனவே, மொபைல் எண்ணுடன் ஆதாரை இணைத்த வாடிக்கையாளர்கள், அதற்கு முன்னர் விவரங்களை நிரப்பி வழங்கிய, கேஒய்சி ஆவணங்கள் தொலைத்தொடர்பு நிறுவனங்களால் அழிக்கப்பட்டிருக்கக்கூடும்.

    இந்த நிலையில்தான், தனிநபர்களின் தனித்துவ அடையாளத்தை (ஆதார்), சான்று ஆவணங்களுக்காக தனியார் நிறுவனங்கள் பயன்படுத்தக்கூடாது என சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. எனவே, ஆதார் மூலம் கேஒய்சி விவரங்கள் பெறப்பட்ட 50 கோடி மொபைல் இணைப்புகளுக்கு, புதிதாக வாடிக்கையாளர் விவரங்களை தொலைத்தொடர்பு நிறுவனங்கள் பெறும் நிலை உருவாகியுள்ளது.



    தொலைத்தொடர்பு செயலர் அருணா சுந்தரராஜன் மொபைல் நிறுவனங்களுடன் நேற்று ஆலோசனை நடத்திய நிலையில், விரைவில் இதுதொடர்பாக தொலைத்தொடர்புதுறை உத்தரவு பிறப்பிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இது தொடர்பாக தொலைத்தொடர்பு துறை மற்றும் ஆதார் ஆணையம் (UIDAI) கூட்டாக இணைந்து அறிக்கை வெளியிட்டு உள்ளன. அதில் 50 கோடி மொபைல் எண்கள் துண்டிக்கப்படும் ஆபத்தில் இருப்பதாக வெளியான செய்தியை மறுத்துள்ளன. ஆதார் சரிபார்ப்பு அடிப்படையில் சிம் கார்டுகள் வாங்கப்பட்டால், புதிய அடையாளம் கேட்கபடமாட்டாது என கூறி உள்ளது.

    ஆதார் eKYC மூலம் வழங்கப்பட்ட மொபைல் எண் துண்டிக்கப்பட வேண்டும் என்று அதன் ஆதார் தீர்ப்பில் சுப்ரீம் கோர்ட் எங்கும் சுட்டி காட்டவில்லை என்று கூட்டு அறிக்கை தெளிவுபடுத்துகிறது. #Aadhar #AadhaarJudgment

    மத்திய டெலிகாம் துறை வழங்கியிருக்கும் ஒற்றை அனுமதி பாரதி ஏர்டெல் நிறுவனத்திற்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.



    வோடபோன் இந்தியா மற்றும் ஐடியா செல்லுலார் நிறுவனங்கள் இணைய மத்திய டெலிகாம் துறை அனுமதி அளித்திருக்கிறது. டெலிகாம் துறையில் மிகப்பெரிய ஒப்பந்தமாக பார்க்கப்படும் நிலையில், பாரதி ஏர்டெல் நிறுவனம் முதலிடத்தை இழக்க இருக்கிறது.

    கடந்த 15 ஆண்டுகளாக டெலிகாம் சந்தையில் முதலிடத்தில் இருக்கும் பாரதி ஏர்டெல், வோடபோன் மற்றும் ஐடியா இணையும் பட்சத்தில் முதலிடத்தை இழக்கலாம் என கூறப்படுகிறது. மார்ச் 2017-ம் ஆண்டு இரண்டு நிறுவனங்களிடையேயான ஒப்பந்தம் அறிவிக்கப்பட்ட நிலையில் டெலிகாம் துறை விதிமுறைகளுடன் இதற்கான ஒப்புதலை வழங்கி இருக்கிறது.

    இருநிறுவனங்களின் ஒப்பந்தத்திற்கான அனுமதியளிக்க ரூ.7268 கோடி செலுத்த வேண்டும் என தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அதன்படி ஐடியா நிறுவனத்தின் ஒருமுறை ஸ்பெக்டரம் கட்டண தொகை வங்கி உத்தரவாதமாக ரூ.3342 கோடியும், ஏலம் விடப்படாத வோடபோன் நிறுவன சந்தை கட்டணம் ரூ.3,926 கோடி நிர்ணயம் செய்யப்பட்டு இருப்பதாக கூறப்படுகிறது.

    வங்கி உத்தரவாத தொகையை ஐடியா செல்லுலார் எதிர்க்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. முன்னதாக டெலினார் ஐடியா நிறுவனத்தை பாரதி ஏர்டெல் கைப்பற்றும் போதும் இதேபோன்ற சூழல் ஏற்பட்டது. ஐடியா மற்றும் வோடபோன் சார்பில் இந்த விவகாரம் குறித்து எவ்வித தகவலும் வழங்கப்படவில்லை. சட்ட ரீதியிலான நகர்வுகள் மற்றும் மத்திய டெலிகாம் துறை நடவடிக்கைகளின் காரணமாக இருநிறுவன இணைப்பு மேலும் தாமதம் ஆகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.


    கோப்பு படம்

    இரண்டு நிறுவனங்களும் தங்களுக்கு நிர்ணயிக்கப்பட்ட தொகையை செலுத்தும் பட்சத்தில் மத்திய டெலிகாம் துறை வோடபோன் இந்தியா உரிமம் மற்றும் வோடபோன் மொபைல் சர்வீசஸ் லிமிட்டெட் உரிமங்களை ஐடியா செல்லுலாருக்கு மாற்றும் பணிகளை துவங்கும். இவ்வாறு நடைபெறும் பட்சத்தில் இருநிறுவனங்களின் இணைப்பு நிறைவுறும் என மூத்த அதிகாரி ஒருவர் தெரிவித்து இருக்கிறார். 

    மற்ற விதிமுறைகளை பொருத்த வரை டெலிகாம் துறை வைத்திருக்கும் வோடபோனின் வங்கி உத்தரவாத தொகையான ரூ.6452 கோடியை ஐடியா தன்வசம் மாற்ற வேண்டும். தற்சமயம் டெலிகாம் துறையால் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் இறுதி முடிவு எட்டப்படும் பட்சத்தில், இருநிறுவனங்கள் இணைப்புக்கு பின் உரிமம் வைத்திருப்பவர் என்ற முறையில் ஐடியா நிறுவனம் வோடபோனின் ஒருமுறை ஸ்பெக்ட்ரம் கட்டணத்தை செலுத்த ஒப்புக் கொள்வதாக உறுதியளிக்க வேண்டும். 

    இருநிறுவனங்கள் இணைப்பு மூலம் வோடபோன் ஐடியா லிமிட்டெட் என்ற புதிய நிறுவனம் உருவாகும், இந்நிறுவனம் ரிலையன்ஸ் ஜியோ மற்றும் பாரதி ஏர்டெல் நிறுவனங்களால் ஏற்பட்டு இருக்கும் போட்டியை எதிர்கொள்ள முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது. தனித்தனியே ஐடியா மற்றும் வோடபோன் நிறுவனங்கள் இணைந்து ஜியோ மற்றும் ஏர்டெல் ஏற்படுத்தும் போட்டியை எதிர்கொள்ள முடியாத சூழலில் பயனர்கள் மற்றும் லாபம் உள்ளிட்டவற்றை இழந்து வருகின்றன.

    வோடபோன் மற்றும் ஐடியா நிறுவனங்கள் இணைந்து வருவாய் சந்தையில் 37.5% பங்குகளையும், வாடிக்கையாளர்கள் சந்தையில் 39% பங்குகளுடன் டெலிகாம் சந்தையில் தனிப்பெரும் நிறுவனமாக உருவெடுக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. 
    ×