search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "x ray"

    • பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அழைத்து சென்றும் பலனில்லை
    • அறுவை சிகிச்சை செய்த மருத்துவர்கள் அதிர்ச்சிக்குள்ளானார்கள்

    பஞ்சாப் மாநிலத்தில் உள்ளது மோகா நகரம்.

    இங்கு வசிக்கும் சுமார் 40 வயது மதிக்கத்தக்க ஒருவருக்கு பல மாதங்களாக வயிற்று வலி இருந்து வந்தது. அவரது உறவினர்கள் அவரை பல மருத்துவர்களிடம் சிகிச்சைக்காக அழைத்து சென்றும் பலன் கிடைக்கவில்லை.

    சில நாட்களுக்கு முன் அவருக்கு கடும் காய்ச்சலுடன் வயிற்று வலி அதிகரித்தது. அதனுடன் 2 நாட்களாக குமட்டல் வேறு இருந்து வந்தது. அவரால் சரியாக உறங்க முடியவில்லை.

    இதனையடுத்து, சில தினங்களுக்கு முன்பு, மோகா நகரின் பர்னாலா அம்ரித்சர் பைபாஸ் சாலையிலுள்ள மெடிசிட்டி மருத்துவமனைக்கு அவரது உறவினர்கள் அவரை கொண்டு சென்றனர். மருத்துவர்களின் முதல்நிலை சிகிச்சையில் பலன் இல்லாததால் அவரது வயிற்று பகுதியை எக்ஸ் ரே மற்றும் ஸ்கேன் பரிசோதனைகள் மூலம் ஆய்வு செய்ய முடிவு செய்து அதனை மருத்துவர்கள் பரிந்துரைத்தனர்.

    ஸ்கேன் செய்யப்பட்டதில் அவரது வயிற்றில் பல உலோக பொருட்கள் இருப்பது தெரிந்தது. அவற்றை நீக்க உடனடியாக ஒரு அறுவை சிகிச்சைக்கு ஏற்பாடு செய்தனர்.

    3 மணி நேரம் நேற்று நடைபெற்ற அந்த அறுவை சிகிச்சை வெற்றிகரமாக முடிந்தாலும் மருத்துவர்களுக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. அவரது வயிற்றில் ஒரு சிறு உலோக கிடங்கே இருந்தது.

    வெளியில் எடுக்கப்பட்ட உலோக பொருட்களில் சில, இயர்போன், வாஷர், நட்டு மற்றும் போல்ட், வயர், ராக்கி, லாக்கெட், பொத்தான், சிறு உறை, தலைமுடிக்கான க்ளிப், ஜிப், கோளி குண்டு மற்றும் ஊக்கு ஆகியவை.

    இவ்வளவு பொருட்களும் அவர் வயிற்றில் இருந்தது மருத்துவர்களுக்கும், நோயாளியின் உறவினர்களுக்கும் அதிர்ச்சியை அளித்தது. அந்த நோயாளிக்கு ஓரளவு மனநோய் இருப்பதாக தெரிவித்த அவரது உறவினர்களுக்கு கூட எப்போது எவ்வாறு அந்த நோயாளி அவற்றை உட்கொண்டார் என்பது தெரியவில்லை.

    "இது போன்ற ஒரு வழக்கை இப்போதுதான் முதல்முறையாக நாங்கள் காண்கிறோம். சுமார் 2 வருடங்களாக வயிற்று வலியால் அந்த நோயாளி அவதிப்பட்டுள்ளார். அனைத்து பொருட்களையும் நாங்கள் வெளியில் எடுத்து விட்டோம். நோயாளி இன்னமும் சிகிச்சையில் இருக்கிறார். அவரது உடல்நிலை இன்னமும் சீராகவில்லை. அத்தனை பொருட்களும் நீண்ட காலமாக அவர் வயிற்றிலேயே இருந்ததால், அவருக்கு பல்வேறு உடல் பாதிப்புகள் ஏற்பட்டுள்ளது. இன்னும் சில காலம் அவருக்கு சிகிச்சை தேவைப்படும்" என மெடிசிட்டி மருத்துவமனை இயக்குனர் டாக்டர். அஜ்மெர் கால்ரா தெரிவித்தார்.

    • சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் தொடங்கி வைத்தார்.
    • அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    சேலம்:

    சேலம் கிச்சிப்பாளையம் நகர்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில் இன்று மக்களைத்தேடி மருத்துவம் திட்டத்தின் கீழ் காசநோய் கண்டறியும் நடமாடும் இலவச டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனத்தை மேயர் ராமச்சந்திரன் தொடங்கி வைத்து வாகனத்தில் பெருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரோ கருவியை பார்வையிட்டார்.

    இந்த வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள கருவிகளால் உயரம், உடல் எடை, இரத்த அழுத்தம், சளி பரிசோதனை, அதிநவீன பரிசோதனை, மார்பக எக்ஸ்ரே ஆகிய பரிசோதனைகளும் மேற்கொள்ளப்படும். சேலம் மாவட்டத்திற்கு இரண்டு நடமாடும் டிஜிட்டல் எக்ஸ்ரே வாகனம் வழங்கப்பட்டுள்ளது. அதில் ஒரு வாகனம் மாநகராட்சியில் உள்ள 60 வார்டுகளுக்கும் சென்று பரிசோதனை மேற்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.

    2 மாத காலத்திற்கு நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மாநகராட்சிப் பகுதி மக்களின் பயன்பாட்டிற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. 2025-ம் ஆண்டிற்குள் காசநோய் இல்லாத நாடாக மாற்றும் வகையில் காசநோய் ஒழிப்பில் அரசு முழு கவனம் செலுத்தி வருகிறது. அந்த அடிப்படையில் தான் நகர்ப்புற பகுதியில் மக்கள் அதிகம் வசிக்கும் இடங்களை கண்டறிந்து அதன் அடிப்படையில் வாகனத்தில் பொருத்தப்பட்டுள்ள எக்ஸ்ரே கருவி மூலம் காசநோய் கண்டறியப்பட்டு உரிய சிகிச்சை மேற்கொள்ளப்படும்.

    இந்த வாகனத்தில் 5 சமூக பணியாளர்கள் பணிபுரிவார்கள். எனவே, மாநகராட்சிப் பகுதியில் உள்ள பொதுமக்கள் காசநோய் தொடர்பான அறிகுறிகள் ஏதேனும் இருப்பின் தங்களை பரிசோதனை செய்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படு கிறார்கள்.

    காசநோய் கண்டறியப்பட்டு சிகிச்சை பெற்று வரும் 15 நபர்களுக்கு மருத்துவ பெட்டகத்தையும் மேயர் ராமச்சந்திரன் வழங்கினார். நிகழ்ச்சியில் மாநகர நல அலுவலர் யோகானந், கவுன்சிலர் மஞ்சுளா மற்றும் மருத்துவர்கள் கலந்து கொண்டனர். 

    • ஒருமணி நேரத்தில் 10 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க முடியும், எக்ஸ்ரே குறித்த தகவல்களை பொதுமக்கள் இந்த வாகனத்திலுள்ள தொலைக்காட்சி மூலமாக நேரில் பார்த்தும் அறிந்திடலாம்.
    • முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    தூத்துக்குடி:

    தமிழக அரசின் காசநோய் இல்லா தமிழ்நாடு 2025 என்ற திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்திற்கு டிஜிட்டல் எக்ஸ்ரே கருவி பொருத்திய நவீன வாகனம் வழங்கப்பட்டுள்ளது.

    இந்த வாகனமானது தூத்துக்குடி மாவட்டத்திலுள்ள நகர்புற குடிசைப்பகுதிகள், தொழிற்சாலை பகுதிகள், காசநோயின் தாக்கம் அதிகம் உள்ள பகுதிகளில் வாழ்பவர்கள் மற்றும் எச்.ஐ.வி. பாதிப்பிற்குள்ளானவர்கள், முதியோர் இல்லங்கள் போன்ற இடங்களுக்கு நேரில் சென்று அங்குள்ள மக்களுக்கு எக்ஸ்ரே பரிசோதனைகளை மேற்கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.

    இந்த நவீன வாகனத்தின் மூலமாக ஒருமணி நேரத்தில் 10 பேர்களுக்கு எக்ஸ்ரே எடுக்க முடியும், எக்ஸ்ரே குறித்த தகவல்களை பொதுமக்கள் இந்த வாகனத்திலுள்ள தொலைக்காட்சி மூலமாக நேரில் பார்த்தும் அறிந்திடலாம்.

    தூத்துக்குடி ஸ்டேட் பாங்க் காலனி நகர்புற ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு வழங்கப்பட்டுள்ள இந்த காசநோய் கண்டறியும் டிஜிட்டல் எக்ஸ்ரே பொருத்திய நடமாடும் வாகனம் சேவையை கனிமொழி எம்.பி, தமிழக சமூகநலன் மற்றும் மகளிர் உரிமைத்துறை அமைச்சர் கீதாஜீவன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.

    இதில், மேயர் ஜெகன்பெரியசாமி, கமிஷனர் சாருஸ்ரீ, துணை மேயர் ஜெனிட்டா, மாநகர செயலாளர் ஆனந்தசேகரன், வடக்கு மண்டல தலைவர் நிர்மல்ராஜ், பகுதி செயலாளர் ஜெயக்குமார், கவுன்சிலர்கள் கீதாமுருகேசன், கற்பககனி, தெய்வேந்திரன், வர்த்தக அணி கிறிஸ்டோபர் விஜயராஜ், தகவல் தொழில் நுட்ப அணி அந்தோணி கண்ணன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

    சென்னை அரசு பொது மருத்துவமனையில் ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க நோயாளிகள் நீண்ட வரிசையில் மணிக்கணக்கில் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.
    சென்னை:

    சென்னை சென்ட்ரலில் உள்ள ராஜீவ்காந்தி அரசு பொது மருத்துவமனை ஆசியாவிலேயே மிகப் பெரிய அரசு பொது மருத்துவமனை ஆகும். இங்கு 3,500 படுக்கைகள், 800 மருத்துவர்கள், 890 நர்சுகள், 750 உதவியாளர்கள் பணிபுரிகிறார்கள். தினமும் 13 ஆயிரம் நோயாளிகள் சிகிச்சைக்கு வருகிறார்கள்.

    இங்கிருக்கும் சிகிச்சை கட்டிடங்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு சிகிச்சைக்காக பிரிக்கப்பட்டுள்ளன. 2 பிரம்மாண்ட டவர் கட்டி டங்களும் உள்ளன.

    டவர்-1 பொது சிகிச்சைக்காகவும், மருந்து- சிகிச்சை, பரிசோதனைக்காகவும், டவர்-2 கட்டிடம் அறுவை சிகிச்சைக்காகவும் உள் நோயாளிகளுக்காகவும் செயல்பட்டு வருகிறது.

    பொதுமருத்துவம், சிறுநீரக நோய்கள், இதய நோய்கள், மூட்டு தசை, இணைப்பு திசு, காது, மூக்கு, தொண்டை, பிரச்சினைகள், புற்று நோய், நாளமில்லா சுரப்பிகள், எலும்பு நோய்கள், ரத்த நாளங்கள், நரம்பு நோய்கள், இரைப்பை, குடல் நோய்கள், கல்லீரல், சர்க்கரை நோய், நெஞ்சக நோய்கள் உள்பட அனைத்து நோய்களுக்கும் தனித்தனி சிகிச்சை பிரிவுகள் செயல்பட்டு வருகின்றன.

    தினமும் அனைத்து வகையான நோய்களுக்கும் ஆயிரக்கணக்கான நோயாளிகள் உள், வெளி நோயாளிகளாக வந்து சிகிச்சை பெற்று செல்கிறார்கள்.

    இந்த நிலையில் ஸ்கேன், டிஜிட்டல் எக்ஸ்ரே, டாப்ளர் ஸ்கேன், மேமோகிராம் உள்ளிட்ட ஸ்கேன் எடுக்க தினமும் நீண்ட வரிசையில் நோயாளிகள் கூட்டம் காணப்படுகிறது. மணிக்கணக்கில் நோயாளிகள் காத்திருக்கும் அவல நிலை ஏற்பட்டுள்ளது.

    அல்ட்ரா சவுண்ட், டிஜிட்டல் எக்ஸ்ரே, டாப்ளர் ஸ்கேன், மேமோகிராம் எடுக்க குறைந்தது 4-5 மணி நேரம் நோயாளிகள் காத்திருக்கிறார்கள்.

    இதனால் நோயாளிகள் மிகவும் சோர்ந்து விடுகிறார்கள். ஆங்காங்கே நோயாளிகள் கவலையுடன் அமர்ந்து இருப்பது பரிதாபமாக உள்ளது. மருத்துவமனை ஊழியர்கள், நர்சுகள் நோயாளிகளிடம் சரிவர பதில் கூறாமல் காத்திருக்க வைக்கின்றனர்.

    இதுகுறித்து சிகிச்சை பெற வந்த நோயாளிகளில் ஒருவர் கூறியதாவது:-

    எக்ஸ்ரே, ஸ்கேன் எடுக்க காலையிலேயே வந்து விட்டேன். மருத்துவமனை ஊழியர்கள் நீண்ட நேரமாக காத்திருக்க வைக்கிறார்கள். இங்கு ஸ்கேன் எடுக்க 4 மணி நேரத்துக்கு மேலாக காத்திருக்கும் அவல நிலை உள்ளது.

    நோயாளிகளுக்கு ஸ்கேன், எக்ஸ்ரே எடுக்க கூடுதல் எந்திரங்கள் அரசு அமைத்து தர வேண்டும். நோயாளிகளை மணிக்கணக்கில் காத்திருக்க வைக்க கூடாது. இதுகுறித்து ஆஸ்பத்திரி நிர்வாகமும், அரசும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    ×