search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Sweating"

    • ஒருவகை வைரஸ் கிருமிகளினால் தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.
    • காற்றுவழியாகவும் வைரஸ் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும்.

    குளிர் காலத்தில் சளி பிரச்சனையை எதிர்கொள்வது அனைவருக்கும் ஏற்படக்கூடியது. ஆனால் வெயில் காலத்திலும் சளி பிடிக்கும் என்பது உங்களுக்கு தெரியுமா?. கோடை காலத்தில் அதிக அளவில் ஏசியை பயன்படுத்துவது, குளிர் பானம் மற்றும் ஐஸ்கிரீம் சாப்பிடுவது, வைரஸ் தொற்று போன்ற காரணங்களால் சளி பிடிக்கிறது. கோடை காலத்தில் ஏற்படும் சளி தொந்தரவு குளிர் காலத்தில் ஏற்படுவது போலவே தான் இருக்கும் மற்றும் தொற்று ஏற்பட்ட 5-7 நாட்களுக்குப் பிறகு படிப்படியாக குறைய ஆரம்பிக்கும்.

    சளி, ஒவ்வாமை, தும்மல், மூக்கு ஒழுகுதல், தொண்டை அரிப்பு, இருமல், வியர்வை மற்றும் காய்ச்சல் போன்றவை கோடை கால ஜலதோஷத்தின் போது ஏற்படும் பல்வேறு அறிகுறிகளாகும்.

    குளிர்காலத்தைப் போலல்லாமல் கோடைக்காலத்தில் மக்கள் அதிகமாக வெளியில் இருப்பதாலும், வறண்ட காற்று வைரசுக்கு சரியான இனப்பெருக்க தளத்தை வழங்குவதாலும் கோடைக்காலத்தில் ஜலதோஷ பிரச்சனைகள் ஏற்படலாம்.

    வெயில் காலங்களில் ஏற்படும் ஜலதோஷம், தும்மல், இருமல், சளி போன்றவை பருவகாலங்களின் தட்பவெப்ப மாற்றங்களினால் மட்டும் அதிகம் ஏற்படுவதில்லை. ஒருவகை வைரஸ் கிருமிகளினால் தான் பெரும்பாலும் ஏற்படுகிறது.

    வெயிலோ, மழையோ நீங்கள் தினமும் அதிகம் அலைய வேண்டி இருப்பதால் உடலில் இருந்து வியர்வை கூடுதலாக வெளியேற வாய்ப்பு அதிகம். இதனால் உடலில் உள்ள நீர்ச்சத்து குறைந்துவிடும். அப்போது தண்ணீர் தாகம் எடுக்கும் போது குளிர்ச்சியான பானங்களைக் குடித்துவிடுவோம். இது தான் வைரஸ் கிருமி உடலுக்குள் புகுந்து ஜலதோஷம், தும்மல், இருமல், சளியை உண்டாக்கிவிடுகிறது.

    இதுபோக, காற்றுவழியாகவும் வைரஸ் கிருமிகள் நம் உடலுக்குள் புகுந்து பாதிப்பை ஏற்படுத்தும். வெயில் காலத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தி சளியை உண்டாக்கும் வைரஸ் கிருமிகள் வேறு குளிர்காலத்தில் ஜலதோஷத்தை ஏற்படுத்தும் வைரஸ் கிருமிகள் வேறு.

    வெயிலில் அதிகம் அலைபவர்கள் காய்ச்சி வடிகட்டிய குடிநீரை கையோடு எடுத்துச் செல்லுங்கள். முடிந்தவரை வெளியில் தண்ணீர் குடிக்காமல் இருக்க முயற்சி செய்யுங்கள். மற்ற நாட்களை விட வெயில் காலங்களில் அதிகமாக தண்ணீர் குடியுங்கள். வெயிலில் அதிகம் அலையாதீர்கள், ஜலதோஷம், தும்மல், இருமல் உள்ளவர்கள் அருகில் நிற்காதள். நீங்கள் அணிந்து செல்லும் உடைகளை வீட்டுக்கு வந்தவுடன் துவைக்கப் போட்டுவிட்டு நன்றாக குளித்து விடுங்கள்.

    தேவையான அளவு நன்றாக ஓய்வு எடுங்கள். வெளியில் சுற்றும்போது கைகளால் முகத்தைத் தொடாதீர்கள், துடைக்காதீர்கள். கிருமிகள் கையில் இருந்து முகத்துக்கு மிகச் சுலபமாக போய்விடும். உடலில் எதிர்ப்பு சக்தியை அதிகப்படுத்துங்கள். நீர்ச்சத்து அதிகமுள்ள உணவுகளை அதிகம் எடுத்துக் கொள்ளுங்கள். சளி அதிகமாக வெளிவர வில்லையென்றால் நன்றாக தினமும் ஆவி பிடியுங்கள். ஃபிரிட்ஜில் உள்ள உணவுப்பொருட்களை அதிகம் உபயோகிக்காதீர்கள்.

    • நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது.
    • ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது.

    நீரிழிவு நோய் சத்தமில்லாமல் கொல்லும் தன்மை கொண்டது. ஏனென்றால் கண்கள், சிறுநீரகம், பாதம், நரம்புகளை அது பாதிக்கும் தன்மை கொண்டது. எதிர்பாராதவிதமாக இந்த பிரச்சினைகள் அவர்களை தாக்க ஆரம்பித்தவுடன் தான் அந்த நோயை கண்டுபிடிக்கிறார்கள்.

     நீரிழிவு நோயினால் கட்டுப்படுத்தப்படாத ரத்த சர்க்கரை கண்ணின் உள்படலத்தை, அதிலும் குறிப்பாக விழித்திரையை பாதிக்கும். இந்த நிலைக்கு டயாபடிக் ரெட்டினோபதி என்று பெயர். டயாபடிக் ரெட்டினோபதியின் ஆரம்ப நிலைகளில் எந்த நோய் அறிகுறியும் தெரியாது. உங்களுக்கு நீரிழிவு நோய் இருக்கிறது என்றால், ஆண்டுக்கு ஒரு முறையாவது உங்கள் கண்களை பரிசோதித்துக் கொள்வது அவசியம்.

     நீரிழிவு நோய் கொண்டவர்களின் சிறுநீரகம் பாதிக்கப்படுவது "டயாபடிக் நெப்ரோபதி". இந்த நிலையைத் தடுக்க ரத்த சர்க்கரை, ரத்த அழுத்தத்தை கட்டுப்பாட்டில் வைத்திருக்க வேண்டும். நீரிழிவு நோய் உள்ளவர்கள், 4-6 மாதங்களுக்கு ஒரு முறை `மைக்ரோ அல்புமின்யூரியா' என்ற எளிய பரிசோதனையை செய்து கொள்ள வேண்டும். உடல் உறுப்புகளுக்கு செல்லும் நரம்புகளுக்கு நீரிழிவு நோய் பாதிப்பு ஏற்படுத்துவது `டயாபடிக் நியூரோபதி'.

     இதன் காரணமாக கை, பாதங்கள் மரத்துப் போதல் அல்லது ஜிவ்ஜிவ் என்ற உணர்வு போன்றவை ஏற்படலாம். கால்களில் இருந்து நமக்குத் தெரியாமலேயே செருப்பு நழுவிப் போதல் அல்லது ஆண்கள், பெண்களில் பாலுணர்வு படிப்படியாக குறைதல் போன்றவை இதன் பொதுவான அறிகுறிகளாகும். மோசமான நியூரோபதி, பாதங்களுக்கு ரத்த ஓட்டத்தை குறைத்து, உயிருக்கு உலை வைக்கும் கேங்ரீன் போன்ற நோய்த்தொற்றையோ, ஊனத்தையோ ஏற்படுத்தக்கூடும்.

     நீரிழிவு நோய் ரத்த தமனிகளை அடைத்துவிடும் என்பதால், மாரடைப்பு வருவதற்கான வாய்ப்பு அதிகமாக இருக்கிறது. ஆதலால் நீரிழிவு நோய் உள்ளவர்கள், வழக்கமாக இதய பரிசோதனையையும் செய்துகொள்ள வேண்டும். ஹைபோகிளைசீமியா அல்லது குறைந்த ரத்த சர்க்கரை என்பது நீரிழிவு நோயின் மோசமான சிக்கல், அதிக நீரிழிவு நோய் எதிர்ப்பு மருந்துகள் உட்கொள்வதாலேயோ அல்லது உரிய நேரத்தில் சாப்பிடாததாலேயோ இந்த பிரச்சினை ஏற்படும். வியர்த்தல், பலவீனம், தலைசுற்றல் உள்ளிட்டவை குறைந்த சர்க்கரையின் அறிகுறிகள் ஆகும்.

    ×