search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "sattur"

    • 2 ஆறுகளுக்கு இடையில் உள்ள மண் திட்டில் தான் கோவில் உள்ளது.
    • கயிறு கட்டி மாரியம்மன் சன்னதி பகுதியில் ஆதி மாரியம்மன் தோன்றிய தலம் உள்ளது.

    இருக்கன்குடி மாரியம்மன் கோவில் மிக, மிக பழமை வாய்ந்தது. இந்த கோவிலில் பிரமாண்ட கட்டிட அமபை்புகளோ, வான் உயர் கோபுரமோ இல்லை. ஒரு சிறு கருவறை மட்டுமே இதன் பழமை சிறப்பை உணர்த்துவதாக உள்ளது.

    மூர்த்தி சிறிதாக இருந்தாலும் கீர்த்தி பெரிது என்று சொல்வது போல இத்தலம் மிக சிறிய கோவிலாக இருந்தாலும், இத்தலத்தின் சிறப்பும், அம்மனின் அருளும் கோடிக்கணக்கான மக்கள் மனதில் நீங்கா இடம் பெற்றுள்ளது.

    வைப்பாறு, அர்ச்சுனா நதி ஆகிய 2 ஆறுகளுக்கு இடையில் உள்ள மண் திட்டில் தான் கோவில் உள்ளது. கோவில் நுழைவாயில் வழியாக உள்ளே நாம் சென்றதும் கருவறை நம் கண்களுக்கு தென்படுகிறது.

    அழகிய சிறு விமானத்துடன் கூடிய கர்ப்பக்கிரகத்தில் மாரியம்மன் வீற்றிருந்து அருளாட்சி செய்கிறாள். அந்த விமானத்துக்கு தங்கம் போல தக, தக என மின்னும் வகையில் வர்ணம் பூசியுள்ளனர்.

    கருவறைக்குள் அம்மன் கருணை பொங்க இருக்கிறாள். தன்னை நாடி வரும் ஒவ்வொரு பக்தனுக்கும் அருள்பாலிக்கும் வகையில் அம்மன் புன்னகை பூக்க காட்சித் தருகிறாள்.

    பொதுவாக அம்மன் ஆலயங்களில் இடது காலை மடித்து வலது காலை தொங்க விட்டபடி அம்மன் இருப்பதையே பார்த்து இருப்போம். ஆனால் இத்தலத்தில் மட்டுமே மாரியம்மன் வலது காலை மடித்து இடது காலை தொங்க விட்டபடி காட்சி தருகிறாள்.

    இந்த அண்ட சராசரத்தில் ஆக்கலும் நானே, அழித்தலும் நானே, நான் இல்லாமல் இவ்வூலகில் எந்த ஒரு அணுவும் அசையாது என்ற தத்துவத்தை அம்மனின் காட்சி உணர்த்துவதாக சொல்கிறார்கள்.

    கர்ப்பக்கிரகத்தை அடுத்து சிறிய அர்த்தமண்டபம் உள்ளது. அதையடுத்து மகா மண்டபம் கட்டப்பட்டுள்ளது.

    இத்தலம் அம்மன் தலம் என்றாலும் சிவரூப சாந்தமாக உள்ளது. இதன் காரணமாக மகா மண்டபத்தில் சிவாலயங்களில் இருப்பது போன்று நந்தீசுவரர் வைக்கப்பட்டுள்ளார். இது ஒரு வித்தியாசமான அமபை்பாக கருதப்படுகிறது.

    அதன் அருகில் கொடி மரமும், பலி பீடமும் உள்ளது.

    மிகச் சிறந்த பிரார்த்தனைத் தலமான இந்த கோவில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் என்ற இரண்டே இரண்டு பிரகாரங்களைத் தான் கொண்டுள்ளது.

    இந்த வெளிப்பிரகாரத்தில் பளிங்கு நடை கற்கள் பதிக்கப்பட்டு, உத்தரத்தில் வர்ணம் பூசி புதிய மெருகு ஏற்றப்பட்டால், கோவிலின் அழகே ஒரு படி உயர்ந்து விடும் என்று கருதப்படுகிறது.

    கோவில் உட்பிரகாரம், வெளிப்பிரகாரம் இரண்டிலும் பல சன்னதிகள் உள்ளன. உள்பிரகாரத்தில் அரச மரத்தடியில் விநாயகர் சிலை அமைக்கப்பட்டுள்ளது.

    அந்த சன்னதி அருகே வாழவந்தம்மன் சன்னதி இருக்கிறது. இந்த சன்னதிக்கு மேற்கே ராக்காச்சி அம்மன் சன்னதி உள்ளது.

    வடமேற்கு பகுதியில் பேச்சியம்மனும், முப்பிடாரி அம்மனும் தனித்தனி சன்னதியில் அமர்ந்து அருள் பாலிக்கிறார்கள். அதற்கு கிழக்கே காத்த வராயனும், வைர மூர்த்தியும் உள்ளார்கள்.

    தென் கிழக்கு மூலை பகுதியில் காவல் தெய்வமான கருப்பசாமி வீற்றிருக்கிறார். இந்த சன்னதிகளில் வழிபட்ட பிறகு சற்று தள்ளியுள்ள கயிறு கட்டி மாரியம்மனையும் வழிபட வேண்டும்.

    கயிறு கட்டி மாரியம்மன் சன்னதி பகுதியில் ஆதி மாரியம்மன் தோன்றிய தலம் உள்ளது. அங்கு தான் தல விருட்சம் உள்ளது. ஆதி அம்மன் தோன்றிய இடத்தில் பெரிய சூலாயுதம் வைத்துள்ளனர். அதற்கும் சிறப்பு வழிபாடுகள் நடத்தப்படுகிறது.

    கோவில் வெளிப்பிரகாரத்தில் விளக்கு ஏற்றி வழிபட வசதி செய்து கொடுத்துள்ளனர்.கோவிலை சுற்றி பக்தர்களுக்காக பல வசதிகள் செய்யப்பட்டுள்ளன. மொட்டை போடுவதற்கு, மாவிளக்கு நேர்ச்சை கடனை நிறைவேற்ற, விடலை போடுவதற்கு என்று தனித்தனி இடங்கள் உள்ளன. பக்தர்கள் பொங்கல் வைக்க கோவில் முன்பு தனி இடம் உண்டு.

    சாத்தூரில் உள்ள பட்டாசு ஆலை ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 2 தொழிலாளர்கள் உயிரிழந்தனர்.
    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் உள்ள துலுக்கன்குறிச்சியில் பட்டாசு ஆலை ஒன்று செயல்பட்டு வருகிறது.

    இந்நிலையில், இந்த பட்டாசு ஆலையில் இன்று காலை தொழிலாளர்கள் வேலை செய்து கொண்டிருந்தனர்.

    அப்போது பட்டாசு ஆலையில் திடீரென வெடி விபத்து ஏற்பட்டது. இந்த விபத்தில் 2 தொழிலாளர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். மேலும் பட்டாசு தயாரிப்பு அறை மிகவும் சேதமடைந்தது. விபத்து குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    சாத்தூர் அருகே மெக்கானிக் டிப்ளமோ பட்டதாரி படுகொலை செய்யப்பட்டார்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள சின்னக்காமன்பட்டி தெற்கு தெருவைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவரது மகன் கார்த்திகேயன் (வயது27), டிப்ளமோ மெக்கானிக்கல் படித்துள்ளார்.

    சென்னையில் வேலை பார்த்த இவர், கடந்த ஆண்டு ஊர் திரும்பினார். அதன் பிறகு எட்டூர்வட்டம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை கார்த்திகேயன் வீட்டில் இருந்து வெளியே சென்றார். அதன் பிறகு அவர் வீடு திரும்ப வில்லை. உறவினர்கள் பல இடங்களில் தேடியும் கார்த்திகேயன் பற்றிய தகவல் கிடைக்கவில்லை.

    இந்த நிலையில் இன்று காலை அங்குள்ள காட்டுப் பகுதியில் அவர் பிணமாக கிடப்பதாக தகவல் பரவியது.

    சம்பவ இடத்திற்கு சாத்தூர் போலீசாரும், உறவினர்களும் சென்று பார்த்தனர். அங்கு தலை நசுங்கிய நிலையில் கார்த்திகேயன் கொலை செய்யப்பட்டு கிடந்தார்.

    அவரது தலையில் யாரோ கல்லைப்போட்டு கொலை செய்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    அவரை கொலை செய்தது யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது.

    தனியார் பம்புசெட்டில் கருகிய நிலையில் வாலிபர் உடல் மீட்கப்பட்டது. அவர் எரித்துக் கொலை செய்யப்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    சாத்தூர்:

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ளது கத்தாளம்பட்டி பஞ்சாயத்து. இங்குள்ள ஆலம்பட்டி விலக்கு அருகே அணைக்கரை பட்டியை சேர்ந்த அழகர் என்பவருக்கு தோட்டமும், பம்புசெட்டும் உள்ளது.

    இன்று காலை அங்கு சென்றவர்கள் மோட்டார் அறையில் கருகிய நிலையில் ஆண் உடல் கிடப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அம்மாபட்டி போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டது. போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    எரிந்த நிலையில் கிடந்த வருக்கு 40 முதல் 45 வயது இருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர். மேலும் சம்பவம் நடந்து 4 நாட்களுக்கு மேலாக இருக்கும் என தெரிகிறது.

    அவர் யார்? எந்த ஊரைச் சேர்ந்தவர் என்பது தெரியவில்லை. மேலும் அவரை யாராவது கடத்தி வந்து எரித்துக்கொலை செய்தார்களா? அல்லது தீக்குளித்து தற்கொலை செய்தாரா? என தெரிய வில்லை. சம்பவ இடத்திற்கு தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்கள் சேகரிக்கப்பட்டன. மோப்ப நாய் வரவழைக்கப்பட்டும் சோதனை நடத்தப்பட்டது. தொடர்ந்து அம்மாபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே சாலை விபத்தில் சிக்கியவர்களை மீட்டு மருத்துவ மனையில் அமைச்சர் கே.டி. ராஜேந்திர பாலாஜி சேர்த்தார்.

    சாத்தூர்:

    சாத்தூர் அருகேயுள்ள ஏழாயிரம்பண்ணை பாண்டியாபுரத்தை சேர்ந்தவர் ராஜ்குமார் (25). இவரும் உறவினர் வேல்ராஜ் (21) என்பவரும் நள்ளி அருகே சிங்கமுடையார் கோவிலுக்கு சென்று விட்டு சாத்தூர்-கோவில்பட்டி 4 வழிச்சாலையில் டூவீலரில் சென்று கொண்டிருந்தனர்.

    வள்ளிமில் அருகே எதிர்திசையில் சென்று கொண்டிருந்த போது அம்பையிலிருந்து கோவை நோக்கி வந்த சொகுசு கார் டூவீலர் மீது மோதியது. இதில் சம்பவ இடத்திலேயே ராஜ்குமார் உயிரிழந்தார்.

    அப்போது கோவில்பட்டியில் கட்சி நிர்வாகி திருமண விழாவில் கலந்து கொண்டுவிட்டு அந்த வழியாக வந்த பால் வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி உடனடியாக காரைநிறுத்தி மீட்பு பணியில் ஈடுபட்டார்.

    அமைச்சருடன் பாதுகாப்பு போலீசாரும் மீட்பு பணியில் ஈடுபட்டனர். விபத்து குறித்து சாத்தூர் போலீஸ் மற்றும் ஆம்புலன்ஸ் வாகனங்களுக்கு அமைச்சர் தகவல் தெரிவித்தார்.

    காயம் அடைந்த வேல்ராஜூக்கு ஆறுதல் கூறி கோவில்பட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தார்.

    இந்த விபத்து குறித்து சாத்தூர் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    சாத்தூர் அருகே உள்ள ராமசந்திரபுரத்தில் இருக்கங்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய வேன் கவிழ்ந்த விபத்தில் ஆறு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். #Virudhunagar #Sattur #IrukkankudiMariammanTemple

    விருதுநகர்:

    சாத்தூர் அருகே உள்ள ராமசந்திரபுரத்தில் இருக்கங்குடி மாரியம்மன் கோவிலுக்கு சென்றுவிட்டு திரும்பிய வேன் கவிழ்ந்த விபத்தில் ஆறு பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர்.

    விருதுநகர் மாவட்டம் சாத்தூர் அருகே உள்ள இருக்கங்குடி மாரியம்மன் கோவிலில் சாமி தரிசணம் செய்வதற்காக ஒரு குழுவினர் வேனில் சென்றனர். கோவிலுக்கு சென்றுவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்தபோது ராமசந்திரபுரம் அருகே சென்றுகொண்டிருந்த வேன் நிலைதடுமாறி கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் வேனில் பயணம் செய்த 6 பக்தர்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த 10 பேர் சாத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். #Virudhunagar #Sattur #IrukkankudiMariammanTemple
    ×