search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Rameswaram Agni Theertham"

    • 23-ந்தேதி சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சி நடக்கிறது.
    • 24-ந்தேதி திருக்கல்யாண நிகழ்ச்சி நடக்கிறது.

    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் இந்த ஆண்டின் ஆடித் திருக்கல்யாண திருவிழா கடந்த 13-ந் தேதி அன்று கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வருகின்றது.

    இந்த நிலையில் ஆடி திருக்கல்யாண திருவிழாவின் 3-வது நாளான நேற்று காலை 9 மணிக்கு அம்பாள் தங்க பல்லக்கில் எழுந்தருளி வீதி உலா வந்தார். இரவு 8.30 மணிக்கு அம்பாள் தங்க கேடயத்தில் எழுந்தருளி ரதவீதிகளில் வீதி உலா வந்து பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    திருவிழாவின் 4-வது நாளான இன்று காலை அம்பாள் தங்கப்பல்லக்கிலும், 8 மணிக்கு தங்க சிம்ம வாகனத்திலும் எழுந்தருளும் நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. இதனிடையே ஆடித் திருக்கல்யாண திருவிழாவில் 5-வது நாள் மற்றும் முக்கிய நிகழ்ச்சியாக ஆடி அமாவாசையான நாளை காலை 11 மணிக்கு கோவிலிலிருந்து ஸ்ரீ ராமபிரான் தங்க கருட வாகனத்தில் அக்னி தீர்த்த கடற்கரைக்கு தீர்த்தவாரி பூஜைக்கு எழுந்தருளும் நிகழ்ச்சி நடைபெறுகின்றது.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு நாளை அதிகாலை 4 மணிக்கு கோவில் நடை திறக்கப்படுகின்றது. காலை 5 மணி வரை ஸ்படிகலிங்க தரிசனம் நடைபெற்று தொடர்ந்து காலபூஜை நடைபெறும்.

    வழக்கமாக பகல் 1 மணிக்கு கோவில் நடை சாத்தப்பட்டு மீண்டும் 3 மணிக்கு திறக்கப்படும். ஆனால் நாளை ஆடி அமாவாசையாக இருப்பதால் அதிகாலை 4 மணிக்கு திறக்கப்படும் கோவில் நடையானது பகல் 1 மணிக்கு அடைக்கப்படாமல் பகல் முழுவதும் திறந்து இருக்கும். இரவு 9 மணிக்கு கோவில் நடை அடைக்கப்படும் என்று கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    திருவிழாவின் 7-வது திருநாள் நிகழ்ச்சியாக வருகின்ற 19-ந்தேதி அன்று இரவு வெள்ளி தேரோட்டமும் 9-வது திருநாள் நிகழ்ச்சியாக 21-ந் தேதி அன்று காலை 10 மணிக்கு அம்பாள் தேரோட்ட நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது. திருவிழாவில் 11-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 23-ந்தேதி அன்று தபசு மண்டகப்படியில் சுவாமி-அம்பாள் மாலை மாற்றும் நிகழ்ச்சியும் 12-வது நாள் நிகழ்ச்சியாக வருகின்ற 24-ந்தேதி அன்று இரவு 7.30 மணியிலிருந்து 8.30 மணிக்குள் ராமநாதசுவாமி பர்வதவர்த்தினி அம்பாள் திருக்கல்யாண நிகழ்ச்சியும் நடைபெறுகின்றது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது.
    • ராமநாத சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    தென் கைலாயம் என்று போற்றப்படும் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதிகளை சேர்ந்தவர்கள் வந்து சாமி தரிசனம் செய்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்தக்கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் நன்மை கிடைக்கும் என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    குறிப்பாக மாதந்தோறும் அமாவாசை நாளில் தர்ப்பணம் செய்வது சிறப்பானதாக கருதப்படுகிறது. இதன் காரணமாக அன்றைய நாளில் ராமேசுவரத்தில் வழக்கத்தை விட அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள்.

    அதன்படி இன்று ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு அதிகாலை முதலே நூற்றுக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடற்கரையில் குவிந்தனர். அங்கு அவர்கள் புனித நீராடி தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். அதன்பின் கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் நீண்ட வரிசையில் காத்திருந்து நீராடிய பக்தர்கள் ராமநாத சுவாமியையும், பர்வதவர்த்தினி அம்பாளையும் தரிசனம் செய்தனர்.

    அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் அக்னி தீர்த்த கடற்கரை, கோவில், ரத வீதி உள்பட பல்வேறு இடங்களில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டமாக காட்சியளித்தது.

    பக்தர்களின் வருகையை முன்னிட்டு அவர்களுக்கு தேவையான வசதிகளை நகராட்சி, கோவில் நிர்வாகம் செய்திருந்தது. போலீசாரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். முன்னதாக ஆனி மாத அமாவாசையை முன்னிட்டு ராமநாத சுவாமி-அம்பாளுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தன.

    விருதுநகர் மாவட்டம் வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலை மேல் உள்ள சதுரகிரி சுந்தர-சந்தன மகாலிங்கம் கோவிலுக்கு அமாவாசையை முன்னிட்டு பக்தர்கள் செல்ல கடந்த 15-ந்தேதி முதல் 4 நாட்கள் அனுமதி அளிக்கப்பட்டி ருந்தது.

    அமாவாசையான இன்று அதிகாலையிலேயே மலையடிவாரமான தாணிப் பாறையில் பெண்கள் உள்பட ஏராளமானோர் திரண்டனர். காலை 7 மணிக்கு வனத்துறையினரின் சோதனைக்கு பின் பக்தர்கள் மலையேற அனுமதிக்கப்பட்டனர். அமாவாசையை முன்னிட்டு சந்தன, சுந்தர மகாலிங்கத்துக்கு சிறப்பு வழிபாடுகள் நடந்தன.

    • அக்னி தீர்த்த கடலில் புனித நீராட ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.
    • பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தக்கிணறுகளில் புனித நீராட குவிந்திருந்தனர்.

    தமிழகம் முழுவதும் இந்த ஆண்டு கோடைகால விடுமுறை கடந்த ஏப்ரல் மாதம் 28-ந் தேதி முதல் விடப்பட்டது. கோடைகால விடுமுறை விடப்பட்டதை தொடர்ந்து அனைத்து சுற்றுலா இடங்களிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்து வந்தது. இதேபோல் ராமேசுவரம் கோவில் மற்றும் தனுஷ்கோடி பகுதியிலும் கடந்த ஒரு மாதத்திற்கு மேலாகவே சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    இந்த நிலையில் தமிழகம் முழுவதும் கோடைகால விடுமுறை முடிந்து இன்று(திங்கட்கிழமை) முதல் 6-ம் வகுப்பு முதல் 12-ம் வகுப்பு வரையிலான பள்ளிகள் திறக்கப்படுகின்றது.

    இதனிடையே கோடைகால விடுமுறை நேற்றுடன் முடிவடைந்த நிலையில் ராமேசுவரம் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அதிகமாகவே இருந்தது. குறிப்பாக அக்னி தீர்த்த கடலில் புனித நீராட காலை முதலே ஏராளமான பக்தர்கள் குவிந்திருந்தனர்.

    அக்னி தீர்த்த கடலில் புனித நீராடிய பக்தர்கள் கோவிலில் உள்ள 22 தீர்த்தக்கிணறுகளில் புனித நீராட குவிந்திருந்தனர்.

    இவ்வாறு தீர்த்த கிணறுகளில் புனித நீராடிய பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து இலவச தரிசன பாதை மற்றும் சிறப்பு தரிசன பாதையிலும் 3-ம் பிரகாரம் வரையிலும் நீண்ட வரிசையில் நின்று தரிசனம் செய்தனர். புயலால் அழிந்து போன தனுஷ்கோடி கடற்கரையிலும் சுற்றுலா பயணிகள் கூட்டம் வழக்கத்தை விட அதிகமாகவே இருந்தது.

    குறிப்பாக 2 கடல் சேருமிடமான அரிச்சல் முனை கடற்கரை சாலை வளைவில் சுற்றுலா பயணிகள் கூட்டம் அதிகமாகவே இருந்தது.

    தமிழகத்தில் இன்று முதல் பள்ளிகள் திறக்கப்படுவதால் ராமேசுவரம் கோவிலில் பக்தர்களின் வருகை இனி சற்று குறைவாக இருக்கும் என்றும் கூறப்படுகின்றது.

    • கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.
    • 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் புனித நீராடினர்.

    புண்ணிய ஸ்தலமான ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நாள்தோறும் நாட்டின் பல்வேறு பகுதி களில் இருந்து ஆயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்கிறார்கள். இங்குள்ள அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது இந்துக்களின் கடமையாக கருதப்படுகிறது.

    குறிப்பாக மாதந்தோறும் வரும் அமாவாசை நாட்களில் தர்ப்பணம் கொடுக்க அதிகளவில் பக்தர்கள் திரளுவார்கள். அதன்படி வைகாசி மாத அமாவாசையான இன்று (19-ந் தேதி) அதிகாலை முதலே அக்னி தீர்த்த கடலில் நூற்றுக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். பின்னர் கடற்கரையில் தர்ப்பணம் செய்து முன்னோர்களை வழிபட்டனர்.

    தொடர்ந்து கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களிலும் புனித நீராடிய பக்தர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்பாளை தரிசனம் செய்தனர். அமாவாசை நாளான இன்று ராமேசுவரத்தில் எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலைமோதியது.

    • கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.
    • இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நடைபெற்றது.

    இந்தியாவில் உள்ள புனித ஸ்தலங்களில் ராமேசுவரமும் ஒன்று. காசி செல்லும் பக்தர்கள் கங்கை நீரை எடுத்து வந்து ராமேசுவரம் ராமநாத சுவாமிக்கு அபிஷேகம் செய்ய வேண்டும் என்பது ஐதீகம்.

    இதனால் ராமேசுவரம் கோவிலுக்கு வெளி மாநில பக்தர்கள் தினமும் ஆயிரக்கணக்கில் வருகை தருவார்கள். மேலும் ஆடி அமாவாசை, தை அமாவாசை உள்ளிட்ட நாட்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம்.

    இன்று மாசி மாத அமாவாசை தினம் என்பதால் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும் ராமநாதசுவாமி கோவில் வளாகத்தில் அமைந்துள்ள 22 தீர்த்த கிணறுகளிலும் புனித நீராடினர். இதனால் கோவிலில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி விழாவை முன்னிட்டு கடந்த 11-ந்தேதி முதல் திருவிழா நடைபெற்று வருகிறது. 10-ம் திருநாளான இன்று அக்னி தீர்த்த கடலில் தீர்த்தவாரி நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    • நாளை அக்னிதீர்த்த கடலில் புனித நீராட பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும்.

    அகில இந்திய புண்ணிய தலங்களில் ஒன்றான ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள் வந்து செல்கின்றனர். அதிலும் குறிப்பாக தை, ஆடி அமாவாசை நாட்கள், புரட்டாசி மகாளய அமாவாசை, மாதாந்திர அமாவாசை நாட்களில் பக்தர்கள் கூட்டம் அலைமோதும்.

    அமாவாசை அன்று, ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி, திதி தர்ப்பண பூஜை செய்து வழிபட்டால் முன்னோர்களின் ஆசி கிடைக்கும் என பக்தர்களால் நம்பப்படுகின்றது. இந்த நிலையில் தை அமாவாசையான நாளை (சனிக்கிழமை) ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் புனித நீராடவும், கோவிலில் சாமி தரிசனம் செய்யவும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. பக்தர்கள் கூட்ட நெரிசல் இல்லாமல் கோவிலில் தரிசனம் செய்ய வசதியாக சாமி சன்னதி பிரகாரத்தில் இருந்து 3-ம் பிரகாரம் சுற்றிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டுள்ளன.

    தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் எளிதாக புனித நீராட செல்லும் வகையில், வடக்கு கோபுர வாசலில் இருந்து ரதவீதி வரையிலும் தடுப்பு கம்புகள் அமைக்கப்பட்டு உள்ளன. தை அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரம் கோவிலில் நாளை அதிகாலை 4 மணிக்கு நடை திறக்கப்பட்டு 5 மணி முதல் 5.30 மணி வரை ஸ்படிகலிங்க பூஜை நடைபெறும்.

    தொடர்ந்து சாயரட்ச பூஜை நடைபெற்று, மற்ற கால பூஜைகள் நடக்க இருக்கின்றன.. பகல் 11 மணிக்கு மேல் ராமர் தங்க கருட வாகனத்திலும், ராமநாதசுவாமி- பர்வதவர்த்தினி அம்பாள் தங்க ரிஷப வாகனத்திலும் பஞ்சமூர்த்திகளுடன் அக்னி தீர்த்த கடற்கரைக்கு எழுந்தருளி தீர்த்தவாரி நடைபெறுகிறது. தை அமாவாசையையொட்டி நாளை காலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் நடை திறந்து இருக்கும் என கோவில் நிர்வாகத்தால் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    • அக்னிதீர்த்த கடலில் புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.
    • கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது.

    தமிழகத்தில் உள்ள முக்கிய இந்து கோவில்க ளில் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலும் ஒன்று. காசிக்கு செல்லும் பக்தர்கள் ராமேசுவரம் ராமநாதசுவாமிக்கு அபிஷேகம் செய்து வழிபட வேண்டும் என்று ஐதீகம் உள்ளதால் தினமும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய வருகை தருவார்கள்.

    முன்னோர்களுக்கு அமாவாசை தினங்களில் ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தர்ப்பணம் செய்வது வழக்கத்தில் உள்ளது. இன்று கார்த்திகை மாத அமாவாசை தினம் என்பதால் ராமேசுவரம் அக்னிதீர்த்த கடலில் ஆயிரக் கணக்கான பக்தர்கள் இன்று புனித நீராடி சாமி தரிசனம் செய்தனர்.

    மேலும் பலர் தங்களது முன்னோர்களுக்கு கடற்கரையில் தர்ப்பணம் செய்து சென்றனர். இதனால் ராமேசுவரத்தில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது. கோவிலிலும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக காணப்பட்டது. அங்குள்ள 22 தீர்த்தங்களிலும் பக்தர்கள் நீராடி சுவாமி மற்றும் அம்மன் சன்னதிகளில் தரிசனம் செய்தனர்.

    • பக்தர்கள் திலக ஹோமம் உள்பட பல்வேறு வழிபாடுகளை செய்தனர்.
    • பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது.

    ஒவ்வொரு ஆண்டும் மகாளய அமாவாசை தினத்தில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். ஆடி அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்யாதவர்கள் மகாளய அமாவாசையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தால் குடும்ப அபிவிருத்தி உண்டாகும் என்பது பொதுமக்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இந்த ஆண்டுக்கான மகாளய அமாவாசை தினம் இன்று (25-ந்தேதி) என்பதால் ராமேசுவரத்தில் நேற்று முதலே பக்தர்கள் குவிய தொடங்கி விட்டனர்.

    இன்று அதிகாலை ஆயிரக்கணக்கான பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் குவிந்ததால் ராமேசுவரம் திருவிழா கோலம் பூண்டது.

    தர்ப்பண வழிபாடு மட்டுமின்றி பல்வேறு தோஷங்கள் நீங்கவும் பக்தர்கள் திலக ஹோமம் உள்பட பல்வேறு வழிபாடுகளை செய்தனர்.

    ராமேசுவரம் ராமநாத சுவாமி கோவிலில் உள்ள 22 புனித தீர்த்தங்களிலும் பக்தர்கள் குளித்து சுவாமி தரிசனம் செய்தனர். ராமநாதசுவாமி-பர்வதவர்த்தினி அம்மன் மற்றும் ஜோதிர்லிங்கம் சன்னதியில் நடந்த சிறப்பு வழிபாட்டில் பக்தர்கள் கலந்து கொண்டனர்.

    ராமேசுவரத்துக்கு கார், வேன், பஸ் உள்ளிட்ட பல்வேறு வாகனங்களில் பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர். இதையொட்டி போக்குவரத்து நெரிசலை சரி செய்யும் வகையில் 500-க்கும் மேற்பட்ட போலீசார் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

    மகாளய அமாவாசையை முன்னிட்டு பக்தர்களுக்கு அடிப்படை வசதிகள் செய்யப்பட்டிருந்தது. குடிநீர் மற்றும் அவசர சிகிச்சை வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தது. குப்பைகள் உடனுக்குடன் அப்புறப்படுத்தப்பட்டு சுகாதாரத்தை பேண நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

    விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் அருகே சதுரகிரி மலை அமைந்துள்ளது. இங்கு சுந்தரமகாலிங்கம் சுவாமி கோவில் உள்ளது. மேலும் இந்த மலையில் பல சித்தர்கள் வசிப்பதாக கூறப்படுகிறது.

    சதுரகிரியிலும் ஆடி அமாவாசை, மகாளய அமாவாசை தினங்களில் பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது வழக்கம். இந்த ஆண்டுக்கான மகாளய அமாவாசையை முன்னிட்டு இன்று சதுரகிரியிலும் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர்.

    இதேபோல் மதுரை இம்மையிலும் நன்மை தருவார் கோவில் மற்றும் வைகை ஆற்றாங்கரைகளில் ஏராளமானோர் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்து சென்றனர்.

    • மழை காரணமாக பொதுமக்கள் தர்ப்பணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது.
    • 22 புனித தீர்த்தங்களில் நீராடவும் பக்தர்கள் கூட்டம் அதிகமாக இருந்தது.

    இந்தியாவில் முன்னோர்களுக்கு வழிபாடு செய்யும் முக்கிய புனித ஸ்தலங்களாக காசி, ராமேசுவரம் கருதப்படுகிறது.

    தமிழகத்தில் ஒவ்வொரு ஆண்டும் ஆடி அமாவாசை தினத்தில் பொதுமக்கள் தங்களது முன்னோர்கள் ஆத்மா சாந்தியடைய வேண்டும் என்பதற்காக புனித நீராடி வழிபாடு செய்வார்கள். இந்த ஆண்டுக்கான ஆடி அமாவாசை தினம் இன்று என்பதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலுக்கு நேற்று முதலே பக்தர்கள் வருகை அதிகமாக இருந்தது.

    தென்மாவட்டம் மற்றும் வடமாநிலங்களில் இருந்து பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் இன்று காலை ராமேசுவரம் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடி கடற்கரையில் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர். புரோகிதர்கள் ஒவ்வொரு குடும்பத்தினருக்கும் பிரார்த்தனைகள் செய்து முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். இதனால் ராமேசுவரம் கடற்கரையில் பக்தர்கள் கூட்டம் அலைமோதியது.

    இந்த நிலையில் காலை 4 மணி முதல் 7 மணி வரை திடீரென மழை பெய்தது. இந்த மழை காரணமாக பொதுமக்கள் தர்ப்பணம் செய்வதில் சிரமம் ஏற்பட்டது. இருந்த போதிலும் மழையை பொருட்படுத்தாமல் முன்னோர்களுக்கு ஏராளமானோர் தர்ப்பணம் கொடுத்தனர். தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்வது மூலம் தங்களது குடும்பம் விருத்தி அடையும் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.

    இதன் காரணமாக ஆடி அமாவாசையை முன்னிட்டு புனித நீராடி முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பதை வழக்கமாக வைத்துள்ளனர்.

    ஆடி அமாவாசையை முன்னிட்டு ராமேசுவரத்தில் இன்று பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் திரண்டனர். வடமாநிலங்களான குஜராத், மும்பை உள்ளிட்ட இடங்களில் இருந்தும் மற்றும் கேரளா, ஆந்திரா உள்ளிட்ட மாநிலங்களில் இருந்தும் பக்தர்கள் ஒரு வாரத்திற்கு முன்பே ராமேசுவரம் வந்து தங்கி இருந்தனர்.

    300-க்கும் மேற்பட்ட புரோகிதர்கள் தர்ப்பணம் கொடுத்தனர். அவர்கள் கட்டணமாக ரூ.500 முதல் ரூ. 2 ஆயிரம் வரை வசூல் செய்தனர். இதேபோல் தனுஷ்கோடியிலும் பக்தர்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுத்தனர்.

    இலங்கையில் ராவணனை வதம் செய்து விட்டு திரும்பிய ராமபிரான் தனக்கு பிரமஹத்தி தோஷம் ஏற்படாமல் இருப்பதற்காக ராமேசுவரத்தில் மணல் லிங்கம் அமைத்து பூஜை செய்தார் என்பது ஐதீகம். இதனால்தான் ராமேசுவரத்தில் தோஷ நிவர்த்தி பூஜைகள் செய்வது மற்றும் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுப்பது மிகவும் புண்ணியம் வாய்ந்தது என்று இந்து தர்மம் கூறுகிறது.

    ஆடி அமாவாசையையொட்டி 500-க்கும் மேற்பட்ட போலீசார் இன்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். ராமநாதசுவாமி கோவிலில் அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களில் நீராடவும் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தைவிட பல மடங்கு அதிகமாக இருந்தது.

    கொரோனா பரவல் காரணமாக கடந்த 2 ஆண்டு களாக ஆடி அமாவாசையின்போது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்ய தடை விதிக்கப்பட்டிருந்தது.

    • இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கங்கள் அமைந்த கோவில்களில் ராமேசுவரம் கோவில் ஒன்றாக கருதப்படுகிறது.
    • அக்னி தீர்த்த கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்கதர்கள் குவிந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலில் அமைந்துள்ள தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கங்கள் அமைந்த கோவில்களில் ராமேசுவரம் கோவில் ஒன்றாக கருதப்படுவதால் இங்குள்ள ஜோதிர்லிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

    மேலும் அக்னி தீர்த்த கடல் பகுதியில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மேலும் சுற்றுலா பயணிகளும் கடலில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து கடலில் நீண்ட நேரம் நீராடினர். மேலும் கடற்கரையில் சில சிறுவர், சிறுமியர் மணல் வீடு கட்டி விளையாடினர்.

    மேலும் கடலில் கிடைக்கும் பாசி மற்றும் சங்கு உள்ளிட்ட பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கினர். ராமேசுவரம் கோவில் பகுதி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பாம்பன் பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது கடல் அழகை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    ராமநாதசுவாமி கோவிலில் இயற்கையாக அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் பல மணி நேரம் காத்திருந்து புனித நீராடினர்
    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலுக்கு வைகாசி அமாவாசையை முன்னிட்டும், பள்ளி விடுமுறையையொட்டியும் இன்று காலை மட்டும் 20 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். தொடர்ந்து பக்தர்கள் வருகை தந்த வண்ணம் உள்ளனர்.

    அமாவாசை தினம் என்பதால் ஏராளமான பக்தர்கள் தங்களது முன்னோர்களுக்கு தர்ப்பணம் செய்தனர். மேலும் பல்வேறு தோஷங்களுக்கு பரிகார பூஜைகளும் செய்வதில் பக்தர்கள் ஆர்வம் காட்டினர். மேலும் குடும்பத்துடன் வருகை தந்த சுற்றுலா பயணிகளும் கடலில் நீராடி மகிழ்ந்தனர்.

    ராமநாதசுவாமி கோவிலில் இயற்கையாக அமைந்துள்ள 22 புனித தீர்த்தங்களிலும் பக்தர்கள் கூட்டம் அலை மோதியதால் பல மணி நேரம் காத்திருந்து புனித நீராடினர். அதன்பின்னர் ராமநாத சுவாமி மற்றும் பர்வதவர்த்தினி அம்மன் சன்னதி உள்பட கோவிலில் அமைந்துள்ள முக்கிய சாமி சன்னதிகளில் நடைபெற்ற சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் உள்ளிட்ட வழிபாடுகளில் பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    ராமேசுவரம் கோவிலில் திருவிழா கூட்டம் போல் பக்தர்கள் அலைமோதியதால் சாமி தரிசனம் செய்ய நீண்ட நேரமானது. ராமேசுவரம் நகர் முழுவதும் வாகனங்கள் அதிகமாக வந்ததால் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது.

    மேலும் அமாவாசை நாளையொட்டி கோவில் நிர்வாகம் பக்தர்களுக்கு குடிநீர் வசதிகள், மருத்துவ வசதிகள் உள்பட அனைத்து அடிப்படை வசதிகளை செய்திருந்தது. ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

    இதையும் படிக்கலாம்....இன்று வைகாசி மாத அமாவாசை... விரதம் இருந்தால் தீரும் பிரச்சனைகள்...
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.
    ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள 22 தீர்த்தங்களில் பக்தர்கள் புனித நீராட விதிக்கப்பட்ட தடை காரணமாக கடந்த 6 மாதத்திற்கு மேல் தீர்த்த கிணறுகள் திறக்கப்படாமல் மூடப்பட்டன. தீர்த்த கிணறுகளில் பக்தர்கள் புனித நீராட தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில் பக்தர்கள் வழக்கம்போல் கோவிலில் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.

    6 மாதத்திற்கு மேலாக தீர்த்த கிணறுகள் மூடப்பட்டு கிடப்பதால் தீர்த்த கிணறுகளை நம்பி வாழும் 400-க்கும் அதிகமான யாத்திரை பணியாளர்கள் வருமானமின்றி, வாழ்வாதாரம் இழந்து தவித்து வருகின்றனர். தீர்த்த கிணறை விரைந்து திறக்க வேண்டும் என்று தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுத்து வந்தனர்.

    இந்தநிலையில் ராமேசுவரம் ராமநாதசாமி கோவிலில் உள்ள தீர்த்த கிணறுகள் இன்று (திங்கட்கிழமை) முதல் திறக்கப்பட்டு பக்தர்கள் புனித நீராட அனுமதிக்கப்படுவார்கள் என்று அரசு அறிவித்தது.

    அதன்பேரில் 190 நாட்களுக்குப் பின்பு இன்று (1-ந்தேதி) அதிகாலை 6 மணிமுதல் ராமேசுவரம் கோவிலுக்கு வருகை தந்த பக்தர்கள் 22 புனித தீர்த்தங்களில் புனித நீராடினர்.

    இதனால் இந்த புனித தீர்த்தங்களில் புனித நீர் இறைத்து ஊற்றும் தனியார் பணியாளர்கள் 424 பேர் மீண்டும் பணிக்கு திரும்பினர்.

    இனிவரும் காலங்களில் கொரோனா குறைந்து பக்தர்களின் வருகை அதிகம் வரும் நிலை இருப்பதால் ராமேசுவரம் பகுதியில் கோவிலை சுற்றி சாலையோர வியாபாரிகள் மற்றும் தங்கும் விடுதிகள் மற்றும் உணவு விடுதிகள் மற்றும் ஆட்டோ வாகனங்கள் உள்பட அனைத்து தொழிலாளிகளும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

    ×