search icon
என் மலர்tooltip icon

    வழிபாடு

    ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்
    X

    ராமேசுவரம் கடலில் இன்று நீராட குவிந்த பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள்.

    ராமேசுவரத்தில் குவிந்த பக்தர்கள் அக்னி தீர்த்த கடலில் புனித நீராடினர்

    • இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கங்கள் அமைந்த கோவில்களில் ராமேசுவரம் கோவில் ஒன்றாக கருதப்படுகிறது.
    • அக்னி தீர்த்த கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர்.

    ராமநாதபுரம் மாவட்டம் ராமேசுவரத்தில் ராமநாதசுவாமி கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலுக்கு தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தினமும் ஏராளமான பக்தர்கள் மற்றும் சுற்றுலா பயணிகள் வருகை தருவார்கள்.

    நேற்று ஞாயிறு விடுமுறை தினம் என்பதால் ராமேசுவரம் ராமநாதசுவாமி கோவிலில் சாமி தரிசனம் செய்ய அதிகாலை முதலே பக்கதர்கள் குவிந்தனர்.

    அவர்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து கோவிலில் அமைந்துள்ள தீர்த்தங்களில் நீராடி சாமி தரிசனம் செய்தனர். இந்தியாவில் 12 ஜோதிர்லிங்கங்கள் அமைந்த கோவில்களில் ராமேசுவரம் கோவில் ஒன்றாக கருதப்படுவதால் இங்குள்ள ஜோதிர்லிங்கத்தை தரிசனம் செய்ய பக்தர்கள் மிகுந்த ஆர்வம் காட்டினர்.

    மேலும் அக்னி தீர்த்த கடல் பகுதியில் நேற்று ஆயிரக்கணக்கான பக்தர்கள் புனித நீராடினர். மேலும் சுற்றுலா பயணிகளும் கடலில் ஆனந்தமாக குளித்து மகிழ்ந்தனர். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை குடும்பத்துடன் வந்து கடலில் நீண்ட நேரம் நீராடினர். மேலும் கடற்கரையில் சில சிறுவர், சிறுமியர் மணல் வீடு கட்டி விளையாடினர்.

    மேலும் கடலில் கிடைக்கும் பாசி மற்றும் சங்கு உள்ளிட்ட பொருட்களை சுற்றுலா பயணிகள் ஆர்வமுடன் வாங்கினர். ராமேசுவரம் கோவில் பகுதி மட்டுமின்றி அனைத்து பகுதிகளிலும் மக்கள் கூட்டம் அலைமோதியது. பாம்பன் பாலத்தில் வாகனங்கள் செல்லும் போது கடல் அழகை சுற்றுலா பயணிகள் பார்த்து ரசித்தனர்.

    Next Story
    ×