search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "permanent"

    • 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூதியத்தில் நியமிக்கப்பட்டனர்.
    • 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூ தியம் பெறுகின்றனர்.

    திருப்பூர் :

    அரசுப்பள்ளிகளில் 6 முதல் 8-ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு கணினி, உடற்கல்வி, ஓவியம், இசை, தையல், தோட்டக்கலை, கட்டட க்கலை, வாழ்வியல்திறன் படிப்புகளை கற்றுத்தர 16 ஆயிரத்து 549 பகுதிநேர ஆசிரியர்கள் தொகுப்பூ தியத்தில் நியமிக்கப்ப ட்டனர். தற்போது 12 ஆயிரம் பேர் பணிபுரி கின்றனர். 10 ஆயிரம் ரூபாய் தொகுப்பூ தியம் பெறுகின்றனர். முதல்வர் மு.க. ஸ்டாலின் பணிநிரந்தரம் செய்ய வேண்டும் என பகுதிநேர ஆசிரியர்கள் எதிர்பார்த்து வருகின்றனர். இதுகுறித்து திருப்பூர் மாவட்ட பகுதிநேர ஆசிரியர்கள் கூட்டமைப்பு நிர்வாகிகள் கூறியதாவது:- முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் மீது நம்பிக்கை வைத்து ஒரு லட்சம் மனுக்களை அனுப்பி வருகிறோம்.

    பகுதிநேர ஆசிரியர்களை பணிநிரந்தரம் செய்வர் என எதிர்பார்ப்போடு காத்திருக்கின்றனர். 12 ஆண்டுகளை கடந்து பகுதிநேர ஆசிரியர்கள் பணிபுரிந்து வருகின்றோம்.பெரும்பாலானோர் 50 வயதை கடந்து விட்டார்கள். பணிநிரந்தரம் செய்தால் கூட சிலகாலம் தான் பணியாற்ற முடியும். தி.மு.க., தேர்தல் வாக்குறு தியை நிறைவேற்ற முதல்வர் உத்தரவிட வேண்டும். பட்ஜெட் கூட்டத்தொடரில் பணிநிரந்தரம் அறிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார். 

    • ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்ஏ என ஏ.ஐ.டி.யூ.சி மனு அளிக்கப்பட்டது.
    • ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்ஏ என ஏ.ஐ.டி.யூ.சி மனு அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம், மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி பொதுச் செயலாளர் தில்லைவனம் தலைமையில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் துரை .மதிவாணன், நிர்வாகிகள் சுதா , கல்யாணி, பாலமுருகன், அயூப்கான் ஆகியோர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியாளர் பணிக்கு ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர் மாநகராட்சி தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. உடன் வழங்க வேண்டும் . சுய உதவிக்குழு மூலம் சம்பளம் வழங்குவதை நேரடியாக வழங்க வேண்டும். முழு நேர பணியாளர்களை பகுதி நேர பணியாளராக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.

    மாநகராட்சி மற்றும் தஞ்சை மாவட்ட நகராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் . அவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

    ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்ஏ என ஏ.ஐ.டி.யூ.சி மனு அளிக்கப்பட்டது.தூய்மை பணிகளுக்குரிய சீருடை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ .21,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர், இறந்தவர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • எங்களுக்கு நிரந்தர பணி அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.
    • மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆண்டுகளுக்கு லேபர் ஒப்பந்தம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர்.

    திருத்துறைப்பூண்டி:

    திருவாரூர் மாவட்டம் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் 12 ஆண்டுகளுக்கு லேபர் ஒப்பந்தம் தொழிலாளர்கள் பணிபுரிந்து வந்தனர். அவர்கள் மாரிமுத்து எம்.எல்.ஏ.விடம் அளித்துள்ள மனுவில்,

    எங்களுக்கு நிரந்தர பணி அமைத்திட அரசிடம் கோரிக்கை வைக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    இதில் மாநிலத் உப தலைவர் செல்வராஜ், காளிமுத்து, ஓய்வு பெற்ற ஆசிரியர் ஜெயபால் ,மண்ணை கோட்ட செயலாளர் தம்பு சாமி, திட்ட அமைப்பு செயலாளர் சுப்பையன், இயேசு ராஜன் ,ஒப்பந்த தொழிலாளர் ஒருங்கிணைப்பாளர் மற்றும் மின்வாரிய ஒப்பந்த தொழிலாளர்கள் உடனிருந்தனர்.

    • இதுவரை மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து பழனி ஒட்டன்சத்திரம் வழியாக தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில்கள் இல்லை.
    • நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து மதுரை, பழனி வழியாக இந்த சிறப்பு ரெயிலை கோவைக்கு நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    தென்காசி:

    தென் மாவட்ட மக்களுக்கு மிகவும் பயனுள்ள வகையில் இயங்கும் நெல்லை- மேட்டுப் பாளையம் வாராந்திர ரெயிலை நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று திண்டுக்கல் எம்.பி., வேலுச்சாமி விதி எண் 377 ன் கீழ் பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

    இதுகுறித்து அவர் எழுப்பியுள்ள கேள்வியில், பழனி முருகன் கோவில் இந்தியாவில் மிகவும் பிரசித்தி பெற்ற முருகன் கோவில் ஆகும். ஒவ்வொரு ஆண்டும் லட்சக்கணக்கான பக்தர்கள் வெளிநாடுகளில் இருந்தும் வெளி மாநிலங்களில் இருந்தும் பழனிக்கு வருவது வழக்கம். இதில் பழனி ரெயில் நிலையம் மிக முக்கிய பங்காற்றுகிறது.

    மேலும் கொடைரோடு ரெயில் நிலையமானது கொ டைக்கானல் செல்வதற்கு மிக முக்கியமான ரெயில் நிலையமாகும். இதுவரை மேட்டுப்பாளையம், கோவையில் இருந்து பழனி ஒட்டன்சத்திரம் வழியாக தென் மாவட்டங்களை இணைக்கும் வகையில் ரெயில்கள் இல்லை.

    அந்தக் குறையைப் போக்கும் வகையில் தற்போது பழனி, திண்டுக்கல், மதுரை, தென்காசி வழியாக இயங்கி கொண்டிருக்கும் மேட்டுப்பாளையம் - நெல்லை வாராந்திர ரெயிலை பொதுமக்களின் நலன் கருதி நிரந்தர ரெயிலாக இயக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறியுள்ளார்.

    இந்த மேட்டுப்பாளையம் - நெல்லை சிறப்பு ரெயிலானது மருதமலை, பழனி, மதுரை மீனாட்சி அம்மன், திருப்பரங்குன்றம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில், சங்கரன்கோவில், தென்காசி காசி விஸ்வநாதர், தோரணமலை முருகன் கோவில், பாபநாசம் உள்ளிட்ட முக்கிய புண்ணிய தலங்கள் வழியாக செல்வதால் இந்த சிறப்பு ரெயிலை பயணிகள் அதிக அளவில் பயன்படுத்தி வருகின்றனர். எனவே நெல்லை, தென்காசி உள்ளிட்ட தென்மாவட்டங்களில் இருந்து மதுரை, பழனி வழியாக இந்த சிறப்பு ரெயிலை கோவைக்கு நிரந்தரமாக இயக்க வேண்டும் என்று பயணிகள் கோரிக்கை வைத்துள்ளனர்.

    இந்த சிறப்பு ரெயிலானது 11 வாரங்களில் ரூ.80 லட்சம் வரை வருமானம் தந்துள்ளது.

    • 100 நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் கணினி உதவியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என தீர்மானம்
    • மாவட்ட செயலாளர் சந்திரசேகர் வேலை அறிக்கை மற்றும் செலவு அறிக்கை வாசித்தார்.

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் தியாகதுருகம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்கம் சார்பில் மாவட்ட செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

    கூட்டத்திற்கு தமிழ்நாடு ஊரக வளர்ச்சித்துறை அலுவலர் சங்க மாவட்ட தலைவர் கொளஞ்சிவேலு தலைமை தாங்கினார். வட்டார வளர்ச்சி அலுவலர்களின் மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள் நாராயணசாமி, குமார், மாவட்ட துணைத்.தலைவர் சரவணன், மாவட்ட மகளிர் அணி அமைப்பாளர் செல்வி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.மாவட்ட துணைத்தலைவர் மோகன்குமார் வரவேற்றார். கூட்டத்தில் கல்வராயன் மலை ஊராட்சி ஒன்றியத்திற்கு வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சி) மற்றும் அலுவலக உதவியாளர், கணக்கர், சாலை ஆய்வாளர்கள் ஆகிய புதிய பணியிடங்கள் தோற்றுவிக்க வேண்டும்.

    மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் பணிபுரியும் கணினி உதவியாளர்கள் மற்றும் வட்டார முழு சுகாதார திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் ஆகியோர் பணி நிரந்ரம் செய்ய வேண்டும். ஊராட்சி செயலர்களுக்கு கருவூலம் மூலம் ஊதியம் வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட 10 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

    முன்னதாக மாவட்ட செயலாளர் சந்திரசேகர் வேலை அறிக்கை மற்றும் செலவு அறிக்கை வாசித்தார். இதில் மாவட்ட இணை செயலாளர்கள் வீரபத்திரன், ஜெகதீசன், மாவட்ட தணிக்கையாளர் மனோகர் உள்ளிட்ட 9- வட்டாரங்களைச் சேர்ந்த நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர். முடிவில் வட்டார இணை செயலாளர் செல்வராஜ் நன்றி கூறினார்.

    ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு ரூ.7,500 சம்பளம் பெற்று பணிபுரியும் தற்காலிக ஆசிரியர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும் என்று அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்தார். #Sengottaiyan
    கோபி:

    கோபி கலை அறிவியல் கல்லூரி சார்பில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு சைக்கிள் பேரணி இன்று நடந்தது. பள்ளி கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் கொடியசைத்து தொடங்கி வைத்தார்.

    பின்னர் அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது:-

    இந்தியாவில் அனைத்து மதத்தினரும் உள்ளனர். தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கு பேணி காக்கும் வகையில் உள்ளது. மாணவர்கள் ஒழுக்கமுடையவர்களாக சிறந்து விளங்குகிறார்கள். மாணவர்கள் பொது மக்களிடம் பிளாஸ்டிக் ஒழிப்பு குறித்து விளக்க வேண்டும்.

    கோப்புப்படம்

    தனியார் பள்ளிகளில் சிறப்பு வகுப்புக்கு மாணவ-மாணவிகளை பெற்றோரே விரும்பித்தான் அனுப்புகிறார்கள். இதுபற்றி பள்ளிகளுக்கு அறிவுரை எடுத்து கூறப்படும்.

    தமிழ்நாட்டில் தற்காலிக ஆசிரியர்கள் ரூ.7500 சம்பளம் பெற்று பணிபுரிகிறார்கள். ஆசிரியர் தேர்வு முடிந்த பிறகு இவர்களை நிரந்தரமாக்க ஏற்பாடு செய்யப்படும்.

    அரசு பள்ளிகளில் ஆசிரியர் பணியிடங்கள் காலியாக இருக்கக்கூடாது என்ற நோக்கத்தில்தான் தற்காலிக ஆசிரியர்களை நியமித்து மாணவ- மாணவிகளுக்கு பாடம் கற்றுக் கொடுக்கப்படுகிறது.

    இவ்வாறு அமைச்சர் செங்கோட்டையன் கூறினார். #TNMinister #Sengottaiyan
    ×