search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் - ஏ.ஐ.டி.யூ.சி மனு
    X

    ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும் - ஏ.ஐ.டி.யூ.சி மனு

    • ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்ஏ என ஏ.ஐ.டி.யூ.சி மனு அளிக்கப்பட்டது.
    • ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்ஏ என ஏ.ஐ.டி.யூ.சி மனு அளிக்கப்பட்டது.

    தஞ்சாவூர்:

    தஞ்சாவூர் மாநகராட்சி ஆணையர் சரவணகுமாரிடம், மாவட்ட ஏ.ஐ.டி.யூ.சி பொதுச் செயலாளர் தில்லைவனம் தலைமையில் தேசிய நிர்வாக குழு உறுப்பினர் சந்திரகுமார், மாவட்ட தலைவர் சேவையா, மாவட்ட செயலாளர் துரை .மதிவாணன், நிர்வாகிகள் சுதா , கல்யாணி, பாலமுருகன், அயூப்கான் ஆகியோர் அளித்துள்ள கோரிக்கை மனுவில் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் மாநகராட்சி, நகராட்சி, ஊராட்சிகளில் தூய்மை பணியாளர் பணிக்கு ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்.

    தஞ்சாவூர் மாநகராட்சி தினக்கூலி துப்புரவு பணியாளர்களுக்கு இரண்டு மாதங்களாக சம்பளம் வழங்கப்படவில்லை. உடன் வழங்க வேண்டும் . சுய உதவிக்குழு மூலம் சம்பளம் வழங்குவதை நேரடியாக வழங்க வேண்டும். முழு நேர பணியாளர்களை பகுதி நேர பணியாளராக மாற்றும் முயற்சியை கைவிட வேண்டும்.

    மாநகராட்சி மற்றும் தஞ்சை மாவட்ட நகராட்சி, ஊராட்சிகளில் பணிபுரியும் தூய்மை பணியாளர்களை பணி நிரந்தரம் செய்ய வேண்டும் . அவர்களுக்கு கால முறை ஊதியம் வழங்க வேண்டும்.

    ஒப்பந்த முறையில் ஆள் எடுக்கும் அரசாணைகளை ரத்து செய்ய வேண்டும்ஏ என ஏ.ஐ.டி.யூ.சி மனு அளிக்கப்பட்டது.தூய்மை பணிகளுக்குரிய சீருடை உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கப்பட வேண்டும். தூய்மை பணியாளர்களுக்கு குறைந்தபட்ச மாத ஊதியம் ரூ .21,000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். ஓய்வு பெற்றவர், இறந்தவர் காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்பப்பட வேண்டும்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    Next Story
    ×