search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "PAKvBAN"

    • முதலில் ஆடிய வங்காளதேசம் 193 ரன்களுக்கு ஆல்-அவுட் ஆனது.
    • பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவுப் 4 விக்கெட், நசீம் ஷா 3 விக்கெட் வீழ்த்தினர்.

    லாகூர்:

    ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று நடைபெற்ற சூப்பர்-4 சுற்றின் முதல் போட்டியில் பாகிஸ்தான், வங்காள தேசம் மோதின. டாஸ் வென்ற வங்காளதேசம் பேட்டிங் தேர்வு செய்தது.

    முதலில் ஆடிய வங்காளதேசம் 38.4 ஓவரில் 193 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. முஷ்பிகுர் ரஹிம் 64 ரன்களும், கேப்டன் ஷகிப் அல் ஹசன் 53 ரன்களும் சேர்த்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஹரிஸ் ரவுப் 4 விக்கெட்டும், நசீம் ஷா 3 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 194 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் களமிறங்கியது. தொடக்க ஆட்டக்காரர் இமாம் ஹல் உக் பொறுப்புடன் ஆடி அரை சதமடித்து 78 ரன்னில் அவுட்டானார். முகமது ரிஸ்வான் 63 ரன்கள் எடுத்து வெற்றிக்கு வழிவகுத்தார்.

    இறுதியில், பாகிஸ்தான் 39.3 ஓவரில் 194 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.

    வங்காளதேசத்துக்கு எதிரான முதல் டி20 போட்டியில் பாகிஸ்தானின் ஹைதர் அலி, ஷோயப் மாலிக் ஆகியோர் டக் அவுட்டாகினர்.
    டாக்கா:

    பாகிஸ்தான் அணி வங்காளதேசத்தில் சுற்றுப்பயணம் செய்து 2 டெஸ்ட் மற்றும் 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.

    இரு அணிகளுக்கு இடையிலான முதல் டி20 போட்டி நேற்று டாக்காவில் நடைபெற்றது. டாஸ் வென்ற வங்காளதேச அணி பேட்டிங்கை தேர்வு செய்தது.

    முதலில் பேட் செய்த வங்காளதேசம் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 7 விக்கெட் இழப்புக்கு 127 ரன்கள் எடுத்தது. ஹோசைன் 36 ரன்னும், மெஹிதி ஹசன் 30 ரன்னும் எடுத்தனர்.

    பாகிஸ்தான் சார்பில் ஹசன் அலி 3 விக்கெட்டும், முகமது வசீம் 2 விக்கெட்டும் வீழ்த்தினர்.

    இதையடுத்து, 128 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது. ஆனால் வங்காளதேசம் அணியினரின் சிறப்பாக பந்து வீசினர். இதனால் பாகிஸ்தான் 96 ரன்னுக்குள் 6 விக்கெட்டுகளை இழந்து திணறியது.  பகர் சமான், குல்தீஷ் ஷா தலா 34 ரன்கள் எடுத்து அவுட்டாகினர்.

    இறுதியில், பாகிஸ்தான் அணி 19.2 ஓவரில் 6 விக்கெட் இழப்புக்கு 132 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது. ஷபாப் கான் 21 ரன்னும், முகமது நவாஸ் 18 ரன்னும் எடுத்து ஆட்டமிழக்காமல் உள்ளனர். இதன்மூலம் டி20 தொடரில் 1-0 என பாகிஸ்தான் முன்னிலை வகிக்கிறது. ஆட்டநாயகன் விருது ஹசன் அலிக்கு வழங்கப்பட்டது.

    உலகக்கோப்பைக்கான இன்றைய இரண்டு பயிற்சி ஆட்டங்களும் மழையால் கைவிடப்பட்டன. இதனால் ரசிகர்கள் ஏமாற்றம் அடைந்தனர்.
    உலகக்கோப்பை கிரிக்கெட் தொடருக்கான பயிற்சி ஆட்டங்கள் (Warm-Up) நடைபெற்று வருகின்றன. இன்று பாகிஸ்தான் - வங்காளதேசம், தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான ஆட்டம் நடைபெறும் வகையில் அட்டவணை தயாரிக்கப்பட்டிருந்தது.

    கார்டிஃபில் பாகிஸ்தான் - வங்காளதேசம் இடையிலான போட்டி நடைபெற இருந்தது. மழையால் இந்த ஆட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் கைவிடப்பட்டது.

    பிரிஸ்டோலில் தென்ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதிய ஆட்டம் நடைபெற்றது. டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி தென்ஆப்பிரிக்கா அணியின் அம்லா, டி காக் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினர்.

    தென்ஆப்பிரிக்கா 9.3 ஓவரில் 60 ரன்கள் எடுத்திருக்கும்போது மழை பெய்தது. இதனால் நீண்ட நேரம் தடைபட்டது. பின்னர் மழை நின்றதும், ஆட்டம் 31 ஓவராக குறைக்கப்பட்டது.

    12.4 ஓவரில் தென்ஆப்பிரிக்கா விக்கெட் இழப்பின்றி 95 ரன்கள் எடுத்திருக்கும்போது மீண்டும் மழை பெய்தது. அத்துடன் ஆட்டம் கைவிடப்பட்டது. இரண்டு பயிற்சி ஆட்டங்களும் கைவிடப்பட்டதால் ரசிகர்கள் ஏமாற்றமடைந்தனர்.
    ஆசிய கோப்பை ‘சூப்பர் 4’ கடைசி போட்டியில் பாகிஸ்தானுக்கு எதிராக வங்காள தேசம் டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது. #AsiaCup2018
    ஆசிய கோப்பை தொடரின் ‘சூப்பர் 4’ சுற்றின் கடைசி ஆட்டம் அபு தாபியில் இன்று நடக்கிறது. இதில் பாகிஸ்தான் - வங்காள தேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. இதற்கான டாஸ் சுண்டப்பட்டதில் வங்காள தேச அணி கேப்டன் மோர்தசா டாஸ் வென்று பேட்டிங் தேர்வு செய்துள்ளது.



    வங்காள தேச அணியில் ஷாகிப் அல் ஹசன் இடம்பெறவில்லை. சர்கார், ருபெல், மொமினுல் ஹக்யூ ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
    ×