search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Motherhood"

    • பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும்.
    • பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம்.

    முதல்முறையாக தாயான பெண்களுக்கு குழந்தைவளர்ப்பு, பராமரிப்பு பற்றி பல குழப்பங்கள் இருக்கும். குழந்தைகள் பிறந்ததும் என்னவெல்லாம் செய்ய வேண்டும் என்பது குறித்து இளம் தாய்மார்களுக்கு சந்தேகம் இருக்கவே செய்யும். குழந்தையின் அழுகை, குழந்தை பராமரிப்பு வரை எதைக்கண்டாலும் மனதில் ஒருவித அச்சம் இருக்கவே செய்யும்.

    சுகப்பிரசவமாக இருந்தாலும், அறுவை சிகிச்சையாக இருந்தாலும் குழந்தை பிறந்த பிறகு மற்றுமொரு சவால் குழந்தை வளர்ப்பு தான். பல பெண்களும் குழந்தை பிறந்தவுடன் கர்ப்பகால அவஸ்தைகள் முடிந்துவிடுவதாக நினைக்கிறார்கள். ஆனால் தாய்மையின் பயணமே அப்போது தான் தொடங்குகிறது. அதிலும் குறிப்பாக முதல் முறை தாயாகியிருக்கும் பெண்கள் அவசியம் குழந்தை வளர்ப்பு பற்றி அவசியம் தெரிந்து வைத்திருக்க வேண்டும்.

    குழந்தைக்கு தாய்ப்பாலூட்டுதல்:

    பிறந்த குழந்தைக்கு தாய்ப்பால் என்பது மிகவும் அவசியம் என்பதை மருத்துவர் குழந்தை பிறந்ததும் வலியுறுத்துவார். பிரசவித்தவுடன் குழந்தைக்கு தரக்கூடிய தாய்ப்பால் சீம்பால் என்று அழைக்கப்படுகிறது. இந்த பாலில் குழந்தைக்கு தேவையான எதிர்ப்புசக்தி கிடைக்கும் என்பதால் முதலில் வெளிவரும் மஞ்சள் நிற பாலை குழந்தைக்கு தவிர்க்காமல் கொடுக்க வேண்டும்.

    தாய்ப்பால் கொடுக்கும் நிலை

    குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலைகள் உண்டு. இளந்தாய்மார்கள் அனைவருமே செவிலியர் அல்லது மருத்துவரிடம் ஆலோசித்து குழந்தைக்கு தாய்ப்பால் கொடுக்கும் நிலையை தெரிந்துகொள்ள வேண்டும். ஏனெனில் தாய்ப்பால் கொடுக்கும் முறையை அறிந்து சரியாக பின்பற்றும் போது தாய்ப்பால் சுரப்பும் கிடைக்கும். குழந்தைக்கும் தாய்க்கும் இடையேயான பிணைப்பும் அதிகமாகும்.

    குழந்தையின் அழுகை

    குழந்தையின் அழுகை குறித்து சரியாக தெரியாது என்றாலும் ஓரளவேனும் அதன் அறிகுறிகள் குறித்து தெரிந்துகொள்ள வேண்டும். பசிக்கான அழுகை, டயப்பர் ஈர அழுகை, வயிற்றுவலிக்கான அழுகை, தூக்கத்துக்கான் அழுகை என்று எதுவாக வேண்டுமானாலும் இருக்கலாம். இதையெல்லாம் தாண்டி குழந்தையின் அழுகை காய்ச்சல் அல்லது வேறு பிரச்சனைகளால் தீவிரமாக இருக்கும் போது என்ன செய்ய வேண்டும் என்பதை மருத்துவரிடம் கேட்டு அறிந்துகொள்வது அவசியம்.

    குழந்தைக்கான தடுப்பூசி

    பிறந்த குழந்தைக்கு தடுப்பூசி அட்டவணையை மருத்துவரே அளிப்பார் என்றாலும் அதை அம்மாக்களும் நினைவுபடுத்தி வாங்கி வைத்துக்கொள்ள வேண்டும். சீரான இடைவெளியில் குழந்தைக்கு தடுப்பூசி போடுவதை நினைவுபடுத்தி முன்கூட்டியே மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.

    குழந்தைக்கான மருந்துகள் பிறந்த நேரத்தில் இல்லை என்றாலும் அதிக காய்ச்சல், சளி, இருமல், தாய்ப்பால் குடிக்காத காலங்களில் அவசரத்துக்கு என்ன செய்ய வேண்டும். எப்போது சிகிச்சைக்கு மருத்துவரிடம் செல்ல வேண்டும் என்பதையும் ஆலோசித்து வைத்துகொள்வது நல்லது.

    குழந்தையை குளிக்கவைக்கும் முறை:

    பிறக்கும் குழந்தை ஆரோக்கியமாக இருந்தால் அடுத்த நாள் முதலே குளிக்க வைக்கலாம். ஆனால் அம்மாக்களால் குழந்தையை குளிப்பாட்டுவது சிரமமாக இருக்கும். வீட்டில் பெரியவர்கள் இல்லை என்றால் எப்படி குழந்தையை குளிக்க வைக்க வேண்டும் என்பதை பற்றி பெற்றோர்கள் இருவருமே தெரிந்துவைத்துக்கொள்ள வேண்டும். 

    குழந்தைக்கு மசாஜ் செய்யும் முறை, அதன் முக்கியத்துவம், தலைகுளியல், குளிக்க வைக்கும் முறை என அனைத்தையும் கற்றுக்கொள்வது நல்லது.

    தாய்மைக் காலத்தில் ஆண், தன் மனைவிக்கு இன்னொரு தாயாக வேண்டும். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு, என்பது இருவருக்கும் விருப்பம் இருக்கும் சூழலில் உறவு வைத்துக் கொள்ளலாம்.
    ஆணும் பெண்ணும் இரண்டறக் கலந்து இன்னொரு உயிர் கருவான பின் அது செல்ல மழலையாக பூமியை எட்டிப் பார்க்கும் வரை தாம்பத்திய உறவை சில கட்டுப்பாட்டுடன் தொடர வேண்டியுள்ளது.  தாய்மைக் காலத்தில் ஆண், தன் மனைவிக்கு இன்னொரு தாயாக வேண்டும். தாம்பத்திய நேரத்திலும் ஆண் அத்தகைய பரிவுடனே பெண்ணைக் கையாள வேண்டும்.

    தாய்மை காலத்தில் கணவனின் அருகாமை அவளுக்கு முன்பை விட அதிகமாகத் தேவைப்படுகிறது. ஆனால், தாம்பத்திய உறவில் அவளது விருப்பங்கள் மாறுகிறது. வேறு ஏதாவது ஒரு விஷயத்தில் டென்ஷனானால் கூட அது நெருக்கமான நேரத்தில் விருப்பமின்மையாக வெளிப்படும். கர்ப்ப காலத்தில் தாம்பத்திய உறவு, என்பது இருவருக்கும் விருப்பம் இருக்கும் சூழலில் உறவு வைத்துக் கொள்ளலாம்.

    பெண்ணின் மனநிலையைப் புரிந்துகொள்ளாமல் ஆண் வற்புறுத்தக் கூடாது. நெருக்கம் இறுக்கமான அணைப்பு, அன்பு முத்தம் என பெண் விரும்பும் விளையாட்டுக்களாக இருக்கலாம். அவளுக்குப் பிடித்ததெல்லாம் கேட்டுக் கேட்டுத் தரலாம். செக்ஸ் வைத்து கொள்ளும் பொஷிசனை பெண்ணுக்கு வசதியாக மாற்றிக் கொள்ள வேண்டும். பெண்ணைக் கஷ்டப்படுத்தாமல், அவளது வயிற்றை அழுத்தாமல், தன் ஆற்றல் முழுவதையும் வெளிப்படுத்தாமல் ஆண் மென்மையாக நடந்து கொள்ள வேண்டும்.

    கர்ப்ப காலத்தில் 6 வாரம் முதல் 12 வாரம் வரை தாம்பத்தியம் வைப்பதைத் தவிர்க்க வேண்டும். முதல் மூன்று மாதங்களை தம்பதியர் கவனத்துடன் கடக்க வேண்டும். இந்தக் காலகட்டத்தில் பெண்ணுக்கு வாந்தி, மயக்கம், உடலில் சோர்வு போன்ற பிரச்னைகள் ஏற்படலாம். மேலும் பெண்ணுக்கு ஏற்படும் மூட் மாற்றங்களையும் கவனத்தில் கொண்டு அவள் அதிலிருந்து வெளியில் வர ஆண் அன்பு செய்ய வேண்டும்.

    கர்ப்ப காலத்தை மூன்று பிரிவாகப் பிரிக்கலாம். ஒவ்வொரு மூன்று மாதமும் ஒரு பிரிவாக எடுத்துக் கொள்ளலாம். இந்தக் காலகட்டத்தில் பெண்ணின் தாய்மை High risk pregnency, No risk pregnency என இரண்டு வகையாக இருக்க முடியும். லோ ரிஸ்க் பிரக்னன்சியாக இருந்தாலும் முதல் மூன்று மாதங்களில் உடலுறவில் ஆண் முரட்டுத்தனமாக நடந்து கொண்டால் கரு கலைந்திட வாய்ப்புள்ளது. ஆண் மிகவும் மென்மையாக நடந்து கொள்ள வேண்டியது அவசியம்.

    தாய்மைக் காலத்தில் பெண்ணிடத்தில் ஆண் இன்பம் தேடுவதை விட்டு அவளை மகிழ்ச்சிப்படுத்தி மகிழ்வதில் முழுமை காண வேண்டும்.

    இரண்டாவது மூன்று மாதங்களில் கட்டாயம் செக்ஸ் வைத்துக் கொள்ளலாம். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பிறப்புறுப்புப் பகுதியில் ரத்த ஓட்டம் நன்றாகவே இருக்கும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்ளும்போது பெண்ணால் அதிகளவு இன்பத்தை உணர முடிகிறது.

    பெண்ணின் வயிற்றை அழுத்தாமல் அவளுக்கு உடலுறவின் போது எந்தக் கஷ்டமும் இல்லாமல் பார்த்துக் கொள்ள வேண்டும். இந்தக் காலகட்டத்தில் உடலுறவு கொள்வதால் தாயின் மகிழ்ச்சி ஹார்மோன் அதிகமாகச் சுரந்து தாய்க்கும் சேய்க்கும் நன்மை அளிக்கும். கர்ப்ப காலத்தில் பெண்ணின் பாசிட்டிவ் எண்ணங்களை அதிகரிக்கச் செய்து டென்ஷன் குறைக்கிறது.



    தாய்மைக்கு முன் உடலுறவு கொள்ளும் போது கருத்தரித்து விடுமோ என்ற டென்ஷன் இருக்கும். அதற்காக கருத்தடை முறைகளை உபயோகிப்பார்கள். கரு உருவானதில் இருந்து குழந்தைப் பிறப்பு வரை பெண்ணுக்கு மாதவிடாய் நாட்கள் இல்லை என்பதைப் பெண் மகிழ்ச்சியாகவே உணர்கிறாள். உடலுறவின் போது பெண்ணுறுப்பிலேயே ஆண் எந்த வித சந்தேகம், தயக்கம் இன்றி விந்தைச் செலுத்தலாம்.

    உடலுறவின் போது இருவரும் அதிகபட்ச இன்பத்தை அடையலாம். பிரசவத்துக்கு சில வாரங்கள் வரையும் கூட பாதுகாப்புடன் உடலுறவு வைத்துக் கொள்ளலாம். மூன்றாவது மூன்று மாதங்களில் பெண் வயிறு பெரிதாகியிருக்கும். உடலுறவு கொள்ளும்போது பெண்ணுக்கு சில அசௌகரியங்கள் இருக்கும். குழந்தையை சுமப்பதும் பெற்றுக் கொள்வது பெண்ணுடைய வேலை மட்டுமே என ஆண் எண்ணக் கூடாது.

    தான் தகப்பன் என்ற பொறுப்பில் இருப்பதாக ஆண் உணர வேண்டும். உணர்வு ரீதியாக அவளுக்கு எந்த நிலையிலும் நான் உறுதுணையாக இருப்பேன் என்ற நம்பிக்கையை ஆண் தன் செயலால் உண்டாக்க வேண்டும். உடலளவில் மன அழுத்தங்கள் இன்றி உடலுறவின் வழியாக மகிழ்வுறுவதால் பெண்ணின் பிரசவம் எளிதாகும்.

    தாய்மைக் காலத்தில் உறவுக்கு முன்பும் பின்பும் பிறப்புறுப்புக்களை சுத்தம் செய்து கொள்ள வேண்டும். நம் செயல்களால் குழந்தைக்கு எந்த பாதிப்பும் ஏற்படக் கூடாது என்பதிலும் கவனம் அவசியம். பிரசவத்தை நெருங்கும் போது உடலுறவு கொள்வதால் பிரச்னைகள் ஏற்படுமா என்பதை மருத்துவரிடம் ஆலோசித்துக் கொள்வது அவசியம்.

    குழந்தைப் பிறப்புக்குப் பின் சில நாட்களிலேயே ஏதாவது ஒரு வகையில் செக்ஸ் வைத்துக் கொள்ள ஆணுக்கு விருப்பம் ஏற்படும். ஆனால் பெண்ணுக்கு குழந்தைப் பிறப்பினால் ஏற்பட்ட உடல் மாற்றங்கள், சோர்வு, தூக்கமின்மை என்று பல விஷயங்களும் அவளை பலவிதமான மனக்குழப்பங்களுக்கு ஆளாக்க நேரும். சுகப்பிரசவம் என்றால் கூட பிறப்புறுப்புப் பகுதியால் சிறிதாக தையல் போட்டிருப்பார்கள்.

    அந்தக் காயம் ஆறும் வரை பெண்ணுடன் தாம்பத்தியம் வைத்துக் கொள்ள முடியாது. அறுவை சிகிச்சை மூலமாக குழந்தை பிறந்திருந்தால் சில மாதங்கள் பெண்ணுக்கு ஓய்வு தேவைப்படும். குழந்தை பிறந்த பின் பெண்ணின் மார்பில் பால் சுரப்பு இருக்கும். அடிக்கடி குழந்தை பசிக்கு அழும் போதெல்லாம் குழந்தைக்கு பால் கொடுக்க வேண்டும்.

    பெண் தனது மார்பகத்தை சுகாதாரமான முறையில் பராமரிக்க வேண்டியிருக்கும். குழந்தைப் பிறப்புக்கு முன்னும், பின்னும் வரை பெண்ணுக்கு பிறப்புறுப்பில் வெள்ளைப்படுதல் போன்ற பிரச்னைகள் ஏற்பட வாய்ப்புள்ளது. சிலருக்கு இதனால் அரிப்பு ஏற்படலாம். எனவே இது போன்ற பிரச்னைகள் இருப்பின் மகப்பேறு மருத்துவரிடம் தெரிவித்து அதற்கான சிகிச்சை எடுத்துக் கொள்ள வேண்டும்.

    தாம்பத்தியத்தால் பெண்ணுறுப்பில் நோய்த்தொற்று ஏற்படாமல் பார்த்துக் கொள்வதும் அவசியம். பனிக்குட சிசுவுக்கு பாதிப்பின்றி தாய்மைக் காலத்திலும் தாம்பத்தியம் தொடரலாம். 
    ×