search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "macron"

    • குடியரசு தினவிழா முன்னிட்டு ராணுவ அணிவகுப்புகள் நடைபெற்றன.
    • பிரான்ஸ் படைவீரர்களின் அணிவகுப்பும் நடைபெற்றது.

    இந்திய அரசு சார்பில் குடியரசு தினவிழா டெல்லியில் கோலாகலமாக கொண்டாடப்பட்டது. ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றி வைத்து மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடியும் மரியாதை செலுத்தினார். தலைமை சிறப்பு விருந்தினராக பிரான்ஸ் அதிபர் மேக்ரான் கலந்து கொண்டார்.

    ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்ற பிறகு, கண்கவர் அணிவகுப்ப நிகழ்ச்சி நடைபெற்றது.

    விழாவில் கலந்து கொள்ள புறப்பட்ட ஜனாதிபதி திரவுபதி முர்மு

    ஜனாதிபதி திரவுபதி முர்மு ராஷ்டிர பவனில் இருந்து புறப்பட்டார். அவருடன் பிரான்ஸ் அதிபர் மேக்ரான் உடனிருந்தார்.

    முதன்முறையாக 100 பெண்கள் கலந்து கொண்ட அணிவகுப்பு

    முதன்முறையாக 100 பெண்கள் கலந்து கொண்டு இந்திய இந்திய இசைக்கருவிகளை வாசித்து அணிவகுப்பு நடத்தினார்கள்.

    தேசியக்கொடியை பறக்கவிட்டபடி Mi-17IV ஹெலிகாப்டர்

    நான்கு Mi-17IV ஹெலிகாப்டர்கள் இந்திய தேசியக்கொடியை பறக்கவிட்டவாறு வானில் சென்றன.

    சக்ரா விருதுகள் வாங்கிய அதிகாரிகள் அணிவகுப்பு

    மிக உயர்ந்த வீர வீருதுகளான பரம் வீர் சக்ரா மற்றும் அசோக சக்ரா விருது வென்ற அதிகாரிகள் அணிவகுபபு நடைபெற்றது.

    குதிரைப்படை அணிவகுப்பு

    பிரான்ஸ் வீரர்கள் அணிவகுப்பு

    டி-90 பீஷ்மா டாங்கிகள் அணிவகுப்பு

    பாதுகாப்புப்படையின் அனைத்து வாகனங்களின் அணிவகுப்பு

    பீரங்கி படைப்பிரிவின் பினாகா படைப்பிரிவின் அணிவகுப்பு

    பழமையான காலாட்படையின் மெட்ராஸ் படைப்பிரிவின் அணிவகுப்பு

    முப்படையில் உள்ள வீராங்கனைகளின் அணிவகுப்பு

    ஆயுதப்படை மருத்துவக்குழுவின் அனைத்து பெண்கள் பிரிவு அணிவகுப்பு

    இந்திய விமானப்படை அணிவகுப்பு

    முதன்முறையாக இடம்பெற்ற பெண்கள் பாதுகாப்புப்படையின் இசைக்குழு

    இந்திய விமாப்படையின் சிறப்பை விளக்கும் காட்சி வீடியோ

    டெல்லி பெண் போலீசின் இசைக்குழு முதன்முறையாக பங்கேற்றது

    பெண் அதிகாரித்தை பிரதிபலிக்கும் வகையில் பெண் வீராங்கனைகளின் அணிவகுப்பு

    • 21 பீரங்கி குண்டு முழங்க கொடியேற்றினார் ஜனாதிபதி.
    • முப்படை வீரர்கள் அணிவகுப்பை ஏற்றுக் கொண்டார்.

    இந்தியாவின் 75-வது குடியரசு தினவிழா இன்று கொண்டாடப்பட்டு வருகிறது. இதனைத் தொடர்ந்து டெல்லி கடமைப்பாதையில் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். 21 பீரங்கி குண்டுகள் முழங்க கொடியேற்றிய நிலையில், அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டார்.

    முன்னதாக கொடியேற்றும் இடத்திற்கு ஜனாதிபதி திரவுபதி முர்மு, பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் வருகைத் தந்தார். அவர்களை பிரதமர் மோடி, பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் உள்ளிட்டோர் வரவேற்றனர்.

    தலைமை சிறப்பு விருந்தினராக அழைக்கப்பட்டுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரானுக்கு அதிகாரிகளை பிரதமர் மோடி அறிமுகப்படுத்தினார். பின்னர் ஜனாதிபதி திரவுபதி முர்மு கொடியேற்றினார். அதனைத் தொடர்ந்து அணிவகுப்பு நடைபெற்று வருகிறது.

    • பிரான்ஸ் அதிபர் மேக்ரான் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்கிறார்.
    • இன்று ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடையும் மேக்ரான் பல இடங்களை சுற்றி பார்க்க இருக்கிறார்.

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான் இந்திய குடியரசு தினவிழாவில் தலைமை சிறப்பு விருந்தினராக கலந்து கொள்ள இருக்கிறார். நாளை குடியரசு தினவிழா நடைபெற இருக்கும் நிலையில், இன்று இந்தியா வருகிறார்.

    பிரான்ஸில் இருந்து ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூர் வந்தடைகிறார். பின்னர் பிரதமர் மோடியுடன் சேர்ந்து ரோடுஷோவில் கலந்து கொள்கிறார். இருவரும் இணைந்து சில வரலாற்று சிறப்புமிக்க பாரம்பரிய இடங்களை பார்வையிட இருக்கிறார்கள்.

    ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள அமர் கோட்டையை இமானுவேல் மேக்ரான் பார்வையிட இருக்கிறார். அங்கு நடைபெறும் கலாச்சார நிகழ்வையும் பார்த்து ரசிக்க உள்ளார்.

    டெல்லியின் ஜந்தர் மந்தரில் இருந்து ஹவா மஹால் சங்கானேரி வாசல் வரை மோடி மற்றும் மேக்ரான் ரோடுஷோ நடத்த உள்ளனர்.

    ராம்பேக் அரண்மனையில் மேக்ரானுக்கு தனிப்பட்ட இரவு விருந்துக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்தியா பல கோடி ரூபாய் மதிப்பிலான பிரான்ஸ் போர் விமானங்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல் வாங்குவது தொடர்பான ஒப்பந்தம் குறித்த பேச்சுவார்த்தை இரு நாடுகளுக்கும் இடையில் நடைபெற்று வரும் நிலையில் மேக்ரான் இந்தியா வர இருக்கிறார்.

    இந்தியாவுக்கு ஆயுதங்கள் வழங்குவதில் 2-வது பெரிய நாடாக பிரான்ஸ் இருந்து வருகிறது. இந்தியாவின் நீண்ட கால, ஐரோப்பியாவின் நெருங்கிய நட்பு நாடாக பிரான்ஸ் இருந்து வருவது குறிப்பிடத்தக்கது.

    பிரான்சில் டீசல் விலை உயர்வை எதிர்த்து நடைபெறும் போராட்டம் வன்முறையாக வெடித்த நிலையில் வன்முறைக்கு அடிபணிய மாட்டேன் என அதிபர் இமானுவேல் மேக்ரான் தெரிவித்துள்ளார். #neveracceptviolence #Macron #Parisprotests
    பாரிஸ்:

    டீசல் விலை உயர்வை எதிர்த்து பிரான்சில் கடந்த 3 வாரங்களாக பொதுமக்கள் மஞ்சள் நிறத்தில் மேலாடைகளை அணிந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

    பாதுகாப்பு கருதி தலைநகர் பாரிசில் உள்ள புகழ்பெற்ற சுற்றுலாத்தலமான சாம்ஸ் எலிசீசை போலீசார் நேற்று  மூடினர். மேலும் அங்குவந்த பொதுமக்களை சோதனை செய்தனர்.

    இதனால் போலீசாருக்கும், போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. இதை முன்கூட்டியே எதிர்பார்த்து பல கடைகள், வங்கிகள் மற்றும் ஓட்டல்கள் மூடப்பட்டன.

    இதற்கிடையே, போலீசார் மீது போராட்டக்காரர்கள் மஞ்சள் நிற பெயிண்டை வீசினர். அதனால் வன்முறை வெடித்தது. எனவே அவர்களை கலைக்க போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசினார்கள்.

    இதேபோல், பிரான்ஸ் முழுவதும் 1,600 இடங்களில் போராட்டம் வெடித்தது. அதில் 1 லட்சத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். சில இடங்களில் போராட்டக்காரர்கள் வன்முறையிலும் ஈடுப்பட்டு பொது சொத்துகளை நாசப்படுத்தினர். சில போராட்டக்காரர்கள் முகமூடிகளை அணிந்து கொண்டு போலீசாரின் தடுப்புகளை உடைத்தனர். இதனால் அங்கு பதற்றமான சூழ்நிலை நிலவுகிறது.


    இந்நிலையில், ஜி-20 உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக அர்ஜென்டினா நாட்டுக்கு சென்றுள்ள பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், வன்முறைக்கு நான் அடிபணிய மாட்டேன் என்று குறிப்பிட்டுள்ளார்.

    இதுதொடர்பாக, பியுனஸ் அய்ரஸ் நகரில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர், பேச்சுவார்த்தை மற்றும் விவாதம் மூலமாக எல்லா பிரச்சனைகளுக்கும் தீர்வுகாண அரசு தயாராக உள்ளது. வன்முறையை நான் ஒருபோதும் ஏற்றுகொள்ள மாட்டேன் என தெரிவித்தார்.

    கடமையாற்றும் அதிகாரிகள் தாக்கப்படுவதையும், பொது சொத்துகள் சேதமாவதையும், தொழில் நிறுவனங்கள் முடங்கிப் போவதையும்,பத்திரிகையாளர்கள் மிரட்டப்படுவதையும், யாரும் எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. இதற்கு காரணமானவர்கள் சட்டத்தின்முன் நிறுத்தி தண்டிக்கப்படுவார்கள் எனவும் மேக்ரான் எச்சரித்துள்ளார். #neveracceptviolence #Macron #Parisprotests
    ×