search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "MIvRCB"

    • மும்பைக்கு எதிராக போட்டியில் டாஸ் போடுவதற்காக காயினை சுண்டி விட்டார்கள்.
    • அந்த காயின் கீழே விழுந்த பின்னர் அப்படியே அந்த காயினை திருப்பி எடுத்து கொடுத்து என்னிடம் தோற்று விட்டதாக காட்டினார்கள் என டு பிளெசிஸ் கூறினார்.

    ஐபிஎல் தொடரில் நேற்றைய போட்டியில் ஆர்சிபி- ஐதராபாத் அணிகள் மோதின. இந்த போட்டியில் ஐதராபாத் அணி 25 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

    இந்த போட்டி துவங்குவதற்கு முன்னதாக டாஸ் போடும் இடத்திற்கு வந்த டு பிளெசிஸ் கடந்த மும்பை அணிக்கு எதிரான போட்டியின் போது டாஸ் போடும் போது எவ்வாறு தான் ஏமாந்தேன் என்பது குறித்து பேட் கம்மின்ஸ்ஸிடம் கூறுவது போல சில செய்கைகளை வெளிப்படுத்தியிருந்தார். அது குறித்த வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.

    அதில், கடந்த போட்டியின் போது என்ன நடந்தது தெரியுமா? டாஸ் போடுவதற்காக காயினை சுண்டி விட்டார்கள். அப்போது அந்த காயின் கீழே விழுந்த பின்னர் அப்படியே அந்த காயினை திருப்பி எடுத்து கொடுத்து என்னிடம் தோற்று விட்டதாக காட்டினார்கள் என்பது போன்று செய்கையை செய்து காட்டி விளக்கம் கொடுத்தார். இதனை கேட்ட கம்மின்ஸ் சிரித்தவாறு அதனை கவனித்துக் கொண்டிருந்தார்.

    வான்கடே மைதானத்தில் அவர்கள் கடைசியாக விளையாடிய போட்டியின் போது ஹர்திக் பாண்ட்யா மற்றும் டு பிளெசிஸ் ஆகியோர் டாஸ் போடுவதற்காக மைதானத்திற்கு வந்தனர்.

    அப்போது டாஸ் போடும் நிகழ்வும் நடைபெற்றது. ஆனால் டாஸ் விழுந்த பின்னர் அந்த காயினை எடுத்த நடுவர் ஸ்ரீநாத் மும்பை அணிக்கு ஆதரவாக காயினை திருப்பி காண்பித்து டுபிளிசிஸ் டாசில் தோல்வி அடைந்ததாக ஏமாற்றினார். இதுகுறித்த சில வீடியோக்கள் சமூக வலைதளத்தில் வைரலானது குறிப்பிடத்தக்கது. அதோடு எப்போதுமே மும்பை அணி வான்கடே மைதானத்தில் விளையாடும் போது அவர்களுக்கே முடிவுகள் சாதகமாக இருப்பதாகவும் ரசிகர்களும் அந்த தவறுகளை சுட்டிக்காட்டி வருவது குறிப்பிடத்தக்கது.

    • மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது.
    • டெல்லி அணிக்கு எதிரான போட்டிக்கு முன்னர் பாண்ட்யா சாமி தரிசனம் செய்திருந்தார்.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரின் 25-வது லீக் ஆட்டத்தில் 5 முறை சாம்பியனான மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் மோதுகிறது. இரு அணிகளுக்கு இடையேயான போட்டி மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

    இந்நிலையில் போட்டிக்கு முன்னர் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ஹர்திக் பாண்டியா மும்பையில் உள்ள சித்திவிநாயகர் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்துள்ளார். அவருடன் இஷான் கிஷன், பியூஸ் சாவ்லா மற்றும் குர்ணால் பாண்ட்யா ஆகியோர் சாமி தரிசனம் செய்தனர். இதனால் இந்த போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணி வெற்றி பெறும் என ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

    ஏனென்றால் இந்த சீசனை மோசமாக தொடங்கிய மும்பை அணி முதல் 3 ஆட்டங்களில் (குஜராத், ஐதராபாத், ராஜஸ்தானுக்கு எதிராக) வரிசையாக தோற்றது. இந்த தோல்விக்கு பிறகு 4-வது போட்டியில் டெல்லி அணியை மும்பை சந்தித்தது. அந்த போட்டிக்கு முன்னர் ஹர்திக் பாண்டியா குஜராத்தில் உள்ள சோம்நாத் கோயிலுக்குச் சென்று சாமி தரிசனம் செய்தார். இதனையடுத்து நடந்து போட்டியில் டெல்லி கேப்பிட்டல்சை தோற்கடித்து மும்பை வெற்றிக்கணக்கை தொடங்கியது. 

    இந்த நிலையில் இப்போதும் அவர் கோவிலுக்கு சென்றுள்ளதை வைத்து ரசிகர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

    • முதலில் ஆடிய பெங்களூரு 199 ரன்கள் எடுத்தது.
    • அடுத்து ஆடிய மும்பை 200 ரன்கள் எடுத்து வென்றது.

    மும்பை:

    ஐ.பி.எல். கிரிக்கெட் தொடரில் இன்று மும்பை வான்கடே மைதானத்தில் நடைபெற்ற லீக் ஆட்டத்தில் மும்பை இந்தியன்ஸ், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணிகள் மோதின. டாஸ் வென்ற மும்பை அணி பீல்டிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் பேட் செய்த பெங்களூரு அணி 20 ஓவரில் 6 விக்கெட்டுக்கு 199 ரன்கள் குவித்தது. மேக்ஸ்வெல் 33 பந்துகளில் 68 ரன்களும், டூ பிளசிஸ் 41 பந்துகளில் 65 ரன்களும் விளாசினர். 3-வது விக்கெட்டுக்கு இந்த ஜோடி 120 ரன்கள் சேர்த்தது.

    மும்பை அணி சார்பில் ஜேசன் பெஹ்ரண்டாப் 3 விக்கெட்டுகள் வீழ்த்தினார். கேமரான் கிரீன், கிறிஸ் ஜோர்டான், குமார் கார்த்திகேயா தலா ஒரு விக்கெட் எடுத்தனர்.

    இதையடுத்து, 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் மும்பை இந்தியன்ஸ் களமிறங்கியது. கேப்டன் ரோகித் சர்மா 7 ரன்னில் அவுட்டாகி அதிர்ச்சி அளித்தார். இஷான் கிஷன் 21 பந்தில் 42 ரன்கள் சேர்த்தார்.

    3வது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த சூர்யகுமார் யாதவ், நேஹால் வதேரா ஜோடி சிக்சர், பவுனட்ரிகளாக விளாசியது. இந்த ஜோடி 140 ரன்கள் சேர்த்தது. சூர்யகுமார் யாதவ் 35 பந்தில் 6 சிக்சர், 7 பவுண்டரிகளுடன் 83 ரன்கள் குவித்தார்.

    இறுதியில், மும்பை அணி 16.3 ஓவரில் 200 ரன்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது. வதேரா 52 ரன்னுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.

    இதன்மூலம் மும்பை அணி புள்ளிப்பட்டியலில் 3ம் இடத்துக்கு முன்னேறியது.

    ×