search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KapilDev"

    • லால் சலாம் படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது.
    • படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார்.

    ரஜினிகாந்த் தனது மகள் ஐஸ்வர்யா இயக்கிய 'லால் சலாம்' படத்தில் நடித்துள்ளார். மொய்தீன் பாய் என்ற கதாபாத்திரத்தில் அவர் வருகிறார். இதில் விஷ்ணு விஷால், விக்ராந்த் ஆகியோரும் நடித்துள்ளனர். ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார்.

    இந்த படம் கிரிக்கெட் விளையாட்டை மையமாக வைத்து தயாராகி உள்ளது.

    படத்தின் டிரெய்லரில் கூட கிரிக்கெட் போட்டி மத மோதலாக உருவெடுப்பதையும், அப்போது ரஜினிகாந்த் அறிமுகமாகி 'விளையாட்டுல மதத்தை கலந்துருக்கீங்க. குழந்தைகள் மனசுல கூட விஷத்தை விதைச்சிருக்கீங்க. தப்பா போகுது' என்று ஆவேசமாக பேசும் வசனம் கவனம் ஈர்த்தது.

    படத்தில் ரஜினியின் அதிரடி சண்டை காட்சிகளும் உள்ளன. இந்த படம் விரைவில் திரைக்கு வருகிறது.

    இந்த படத்தில் இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் கபில் தேவ் நடித்துள்ளார். அவரது பிறந்தநாளையொட்டி, 'லால் சலாம்' படக்குழு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    மேலும் ரஜினிகாந்துடன், கபில்தேவ் இருக்கும் போஸ்டரும் வெளியிடப்பட்டு இருக்கிறது. இது சினிமா மற்றும் கிரிக்கெட் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்துள்ளது.

    இந்த போஸ்டர் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.

    • வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் விராட் கோலி அடுத்தடுத்து சதமடித்தார்.
    • ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளூரில் அதிக சதம் அடித்த சச்சின் சாதனையை கோலி முறியடித்தார்.

    மும்பை:

    சர்வதேச கிரிக்கெட்டில் சச்சின் 100 சதங்கள் பதிவு செய்துள்ளார். சச்சினுக்கு அடுத்தபடியாக விராட் கோலி 74 சதங்களைப் பதிவு செய்துள்ளார்.

    விராட் கோலி வங்கதேசம், இலங்கை அணிகளுக்கு எதிரான தொடரில் அடுத்தடுத்து சதம் அடித்து ஒருநாள் கிரிக்கெட்டில் உள்ளூரில் அதிக சதம் அடித்த சச்சினின் சாதனையை முறியடித்தார்.

    இதற்கிடையே, சமூக வலைதளங்களில் சர்வதேச கிரிக்கெட்டில் சிறந்த வீரர் சச்சின் டெண்டுல்கரா, விராட் கோலியா என்ற சர்ச்சை தற்போது எழுந்துள்ளது. இது குறித்து பல்வேறு கிரிக்கெட் வீரர்கள் தங்களது கருத்தை தெரிவித்து வருகின்றனர்.

    இந்நிலையில், இந்திய அணியின் முன்னாள் கேப்டன் கபில்தேவ் இது குறித்து தனது கருத்தை கூறியுள்ளார்.

    இதுதொடர்பாக கருத்து தெரிவித்துள்ள இந்திய முன்னாள் வீரர் கபில்தேவ் கூறியதாவது:

    அனைத்து தலைமுறையுமே ஒன்றுக்கு ஒன்று வளர்ந்து வருகிறது. தமது காலத்தில் கவாஸ்கர் சிறந்த வீரராக விளங்கி வந்தார். அதன்பிறகு டிராவிட் ,சச்சின், ஷேவாக் போன்ற தலைமுறையினர் வந்து சாதித்தனர். தற்போது ரோகித், விராட் கோலி என சிறந்து விளங்குகின்றனர்.

    இனி வரும் காலங்களில் விராட் கோலியை விட சிறந்த பேட்ஸ்மேன்கள் சிறப்பாக ரன் குவிக்க வாய்ப்பு இருக்கிறது.

    தமக்கு சில வீரர்களிடமிருந்து சில பிடிக்கும், சில பிடிக்காது என்பதால் 11 வீரர்கள் விளையாடும் ஆட்டத்தில் ஒருவர் மற்றும் இருவரை சிறந்த வீரர் என்று தேர்வு செய்ய தாம் விரும்பவில்லை என தெரிவித்துள்ளார்.

    கவாஸ்கரை தொடர்ந்து கபில் தேவும் இம்ரான்கான் பதவியேற்பு விழாவை புறக்கணித்து உள்ளார். #KapilDev #SunilGavaskar #ImranKhan

    மும்பை:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்-இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள் மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவியேற்கிறார். இந்த பதவியேற்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும் தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார். இதேபோல இந்தி நடிகர் அமீர்கானுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டது.

    இம்ரான்கானின் அழைப்பை ஏற்று கபில்தேவும், சித்துவும் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்வதாக அறிவித்து இருந்தனர். அவர்கள் மத்திய அரசின் ஒப்புதலுக்காக காத்திருப்பதாக தெரிவிக்கப்பட்டது.

    பதவியேற்பு விழாவில் பங்கேற்க கவாஸ்கர் மறுத்துவிட்டார். தனக்கு வர்ணனை செய்யும் பணி இருப்பதால் கலந்து கொள்ள இயலாது என்று அவர் தெரிவித்தார்.

     


     

    இந்த நிலையில் கவாஸ்கரை தொடர்ந்து கபில் தேவும் இம்ரான்கான் பதவி யேற்பு விழாவை புறக்கணித்து உள்ளார்.

    தனிப்பட்ட காரணங்களுக்காக தன்னால் இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இயலாது என்று தெரிவித்ததாக தகவல் வெளியாகி உள்ளது. பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக கபில்தேவ் பதவியேற்பு விழாவை புறக்கணித்தாக கூறப்படுகிறது.

    முன்னாள் கிரிக்கெட் வீரர்களில் சித்து மட்டுமே இம்ரான்கான் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்கிறார். இதற்காக அவர் விசா கேட்டு விண்ணப்பித்து உள்ளார். பாலிவுட் பிரபலமான அமீர்கான் பதவியேற்பு விழாவில் கலந்துகொள்கிறாரா? என்பது உறுதியாக தெரியவில்லை.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார். இந்த பதவி ஏற்பு விழாவில் சித்து, கபில்தேவ் கலந்து கொள்கிறார்கள். #ImranKhan #pakistanpm

    சண்டிகார்:

    பாகிஸ்தான் தேர்தலில் முன்னாள் கிரிக்கெட் வீரர் இம்ரான்கானின் தெக்ரீக்- இ- இன்ஷாப் கட்சி அதிக இடங்களில் வெற்றி பெற்றது. சிறிய கட்சிகள், மற்றும் சுயேட்சைகள் ஆதரவுடன் அந்த கட்சி ஆட்சி அமைக்கிறது.

    பாகிஸ்தான் பிரதமராக இம்ரான்கான் வருகிற 18-ந்தேதி பதவி ஏற்கிறார்.

    இந்த பதவி ஏற்பு விழாவில் இந்திய அணியின் முன்னாள் வீரர்களும், தனது நெருங்கிய நண்பர்களுமான கபில்தேவ், கவாஸ்கர், நவ்ஜோத்சிங் சித்து ஆகியோருக்கு அவர் அழைப்பு விடுத்துள்ளார்.

    இம்ரான்கானின் அழைப்பை ஏற்று கபில்தேவும், சித்துவும் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள சம்மதம் தெரிவித்துள்ளனர். மத்திய அரசின் ஒப்புதலுக்காக அவர்கள் காத்திருக்கின்றனர்.

    இது தொடர்பாக பஞ்சாப் கேபினட் மந்திரியான நவ்ஜோத் சிங் சித்து கூறிதாவது:-


    இம்ரான்கானின் பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க எனக்கு அழைப்பு வந்துள்ளது. அவரது கட்சியின் அலுவலகத்தில் இருந்து இந்த அழைப்பிதழ் வந்துள்ளது. இது தவிர இம்ரான்கான் தனிப்பட்ட முறையில் எனக்கு போன் செய்து அழைப்பு விடுத்தார். இதற்காக நான் அவருக்கு நன்றி தெரிவித்தேன்.

    இம்ரான்கான் பதவி ஏற்பு விழாவில் நான் பங்கேற்கிறேன். இதுகுறித்து மத்திய உள்துறை அமைச்சகத்திடமும், பஞ்சாப் முதல்- மந்திரி அம்ரீந்தர்சிங் அலுவலகத்திடம் தகவல் தெரிவித்து விட்டேன்.

    கபில்தேவிடமும் பேசினேன். அவருக்கு அழைப்பு வந்ததாக தெரிவித்தார். அவரும் விழாவில் பங்கேற்கிறார்.

    இவ்வாறு சித்து கூறியுள்ளார்.

    ஆனால் மற்றொரு முன்னாள் வீரரான கவாஸ்கர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ளவில்லை. இது தொடர்பாக அவர் கூறியதாவது:-

    பதவி ஏற்பு விழாவில் பங்கேற்க முடியாததை இம்ரானிடம் போனில் தெரிவித்து விட்டேன். இந்தியா- இங்கிலாந்து டெஸ்ட் போட்டியில் வர்ணனை செய்ய ஒப்பந்தமாகி இருக்கிறேன். இதனால் இம்ரானின் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொள்ள முடியாது. அவருக்கு என் வாழ்த்துக்களை தெரிவித்து விட்டேன்.

    இம்ரான்கான் எனக்கு பல ஆண்டு நண்பர் ஆவார். அவர் ஒரு நாட்டின் பிரதமராக பதவி ஏற்க உள்ளது மிகப் பெருமையான வி‌ஷயம். பல முறை இந்தியா வந்துள்ள அவர் எளிமையாக அனைவருடனும் பழகக் கூடியவர். இதனால் இந்தியா உடனான அவரது உறவு நன்றாக இருக்கும் என நம்புகிறேன்.

    இவ்வாறு கவாஸ்கர் கூறினார். #ImranKhan #pakistanpm

    ×