search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "KPY Bala"

    • இவர் இப்போது ‘மாற்றம்’ என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார்.
    • இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்றவுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார்

    நடிகர் ராகவா லாரன்ஸ், பல வருடங்களாக பல்வேறு உதவிகள் செய்து வருகிறார். இவர் இப்போது 'மாற்றம்' என்ற பெயரில் அறக்கட்டளை கடந்த மே 1 ஆம் தேதி தொடங்கியுள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யாவும் இணைந்து ராகவா லாரன்சுடன் சேவை பணியாற்றவுள்ளதாக அவரது எக்ஸ் தளத்தில் வீடியோ ஒன்றை பதிவிட்டார் அது தொடர்ந்து செஃப் வினோத், அறந்தாங்கி நிஷாவும், KPY பாலா இணைந்து செயல்பட உள்ளனர்.

    இந்தக் அறக்கட்டளை மூலம், மக்களுக்குத் தேவைப்படும் உதவிகள், தன்னார்வலர்கள் மூலம் வழங்கப்படவுள்ளன. முதற்கட்டமாக விவசாயிகளுக்குப் பயன்படும் வகையில், 10 டிராக்டர்கள், 10 ஊர்களுக்கு வழங்கப்பட்டன. இந்த அறக்கட்டளை தொடக்க விழா சென்னையில் நேற்று நடந்தது.

    இந்நிலையில் 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ள நடிகர் ராகவா லாரன்சுக்கு, நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து தெரிவித்துள்ளார். அந்த வாழ்த்துச் செய்தியில், "வணக்கம் லாரன்ஸ் மாஸ்டர்! நீங்கள் பல வருடமாக நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்து வருகிறீர்கள். இப்பொழுது இன்னும் நிறைய ஏழை மக்களுக்கு உதவி செய்வதற்காக 'மாற்றம்' என்கிற அறக்கட்டளையை ஆரம்பித்து இருக்கிறீர்கள். இதன் மூலம் நீங்கள் இன்னும் பல ஆயிரம் ஏழை மக்களுக்கு உதவி செய்யணும். அதற்கு அந்த ஆண்டவனுடைய அருள், மக்களுடைய துணை எப்போதும் இருக்கணும். வாழ்த்துக்கள்" என்று தெரிவித்துள்ளார்.

    இதனை தன்னுடைய எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள நடிகர் ராகவா லாரன்ஸ், "தலைவர், என் குரு சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்திடம் இருந்து 'மாற்றம்' அறக்கட்டளை தொடங்கியுள்ளதற்கு வாழ்த்துகளைப் பெற்றேன். உங்கள் நிலையான ஆதரவால் நான் மிகவும் மகிழ்ச்சியடைகிறேன். உங்கள் வாழ்த்துகளுக்கு மிக்க நன்றி. குருவே சரணம்" என்று தெரிவித்துள்ளார். 

    இதுகுறித்து தற்பொழுது எஸ்ஜே சூர்யா அவரது எக்ஸ் தளத்தில் ராகவா லார்ன்ஸ்-க்கு வாழ்த்து தெரிவித்டு வீடியோவை பகிர்ந்துள்ளார்.

    லாரன்ஸ் ஜிகர்தண்டா டபுள் எக்ஸ் படத்திற்கு பிறகு அடுத்தடுத்த படத்தில் ஒப்பந்தம் ஆகியுள்ளார். லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் பென்ஸ், வெங்கட் மோகன் இயக்கத்தில் ஹண்டர் மற்றும் வெற்றி மாறனின் எழுதிய கதையான அதிகாரம் படத்தில் நடிக்கவுள்ளார்.

    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • சமீபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார் பாலா.
    • வீடியோவை பார்த்த பலரும் பாலாவையும், ராகவா லாரன்சையும் பாராட்டி வருகின்றனர்.

    தனியார் தொலைக்காட்சியின் நகைச்சுவை நிகழ்ச்சியான 'கலக்கப்போவது யாரு' நிகழ்ச்சி மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் KPY பாலா. அதை தொடர்ந்து 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சி மூலம் மிகவும் பிரபலமானார். அதன் மூலம் அவருக்கு வெள்ளித்திரையில் நடிக்க வாய்ப்பு பெற்று தற்போது பல திரைப்படங்களில் நடித்து வருகிறார்.

    காமெடியனாக தன்னுடைய பயணத்தை தொடங்கி ஒரு தொகுப்பாளர், நடிகர், சமூக அக்கறையாளர் என மிகவும் சிறப்பாக செயல்படும் பாலா தன்னால் முடிந்த மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். தனக்கு வரும் வருமானத்தில் இருந்து பெரும்பகுதியை ஆதரவற்றவர்களுக்கு உதவி செய்து வருகிறார்.

    குழந்தைகளை படிக்க வைப்பது, ஆதரவற்ற முதியவர்களை அரவணைப்பது, மாற்றுத்திறனாளிக்கு உதவுவது, போதிய மருத்துவ வசதி இல்லாத இடங்களுக்கு ஆம்புலன்ஸ் வாங்கி கொடுப்பது, மருத்துவ உதவி, புயலால் பாதிக்கப்பட்ட 200 குடும்பங்களுக்கு பண உதவி இப்படி பலருக்கும் பல வகையில் உதவியுள்ளார் பாலா. சமீபத்தில் பெட்ரோல் பங்கில் வேலை பார்க்கும் வாலிபர் ஒருவருக்கு இருசக்கர வாகனம் வாங்கி கொடுத்துள்ளார்.

    இந்நிலையில், பாலாவின் தன்னலமற்ற சேவையில் இணைந்துள்ளார் நடன மாஸ்டரும், நடிகருமான ராகவா லாரன்ஸ்.

    கணவனை இழந்து 3 பெண் குழந்தைகளுடன் வாழ்வாதாரத்தை நடத்த அல்லல்படுபவர் முருகம்மாள். இவர் மின்சார ரெயிலில் சமோசா விற்று குடும்பத்தை நடத்தி வந்தார். அவருக்கு சொந்தமாக ஒரு ஆட்டோ வாங்கி ஓட்ட வேண்டும் என்பது தான் பல நாள் கனவாக இருந்தது. அதை தெரிந்து கொண்டு முருகம்மாளுக்கு புதிய ஆட்டோ ஒன்றை சர்ப்ரைஸாக வாங்கி கொடுத்துள்ளனர் பாலா மற்றும் நடிகர் ராகவா லாரன்ஸ்.

    முருகம்மாளை சர்ப்ரைஸாக முகத்தை மூடிக்கொண்டு ஆட்டோவில் அழைத்து செல்கிறார் பாலா. சற்று நேரத்தில் அந்த ஆட்டோவை சுற்றி பல ஆட்டோக்கள் வட்டமிட ஒன்னும் புரியாத முருகம்மாளுக்கு பிறகு தான் தெரிகிறது, ஆட்டோவை ஓட்டிக்கொண்டு வந்தது பாலா என்று. பின்னர் பேசும் பாலா, இந்த ஆட்டோ ரூ.3 லட்சம். இதற்கு பாதி காசு நான் கொடுத்தேன். மீதி காசு கொடுத்தவரை பார்க்கிறீர்களா என கேட்க, காரில் வந்து இறங்குகிறார் நடிகர் ராகவா லாரன்ஸ். பின்பு முருகம்மாள் லாரன்ஸை கட்டிப்பிடித்துக்கொள்கிறார். இதையடுத்து ஆட்டோ சாவியை வழங்க லாரன்ஸ் காலில் விழுகிறார் முருகம்மாள். மேலும், லாரன்சும், பாலாவும் சேர்ந்து முருகம்மாளுக்கு அவர் கணவருடன் இருக்கும் புகைப்படத்தை வழங்க முருகம்மாள் கதறி அழுகிறார். இதையடுத்து பாலாவும், லாரன்சும் ஆட்டோவில் அமர முருகம்மாள் ஓட்டி செல்கிறார்.

    இது தொடர்பான வீடியோவை ராகவா லாரன்ஸ் எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோவை பார்த்த பலரும் பாலாவையும், ராகவா லாரன்சையும் பாராட்டி வருகின்றனர்.

    ×