search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "deputy chairman"

    • அத்தியாவசிய பணிகளான தெரு விளக்கு பராமரிப்பு போன்ற எந்த விதமான பணிகளும் செய்ய ஒத்துழைப்பு தருவதில்லை.
    • மனுக்கள் மூலம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- நான் அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளேன். இங்கு துணைத் தலைவராக இருப்பவர் ஊராட்சியில் செய்யப்படும் அத்தியாவசிய பணிகளான தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் பராமரிப்பு, மின் கட்டணம் செலுத்துதல் போன்ற எந்த விதமான பணிகளும் செய்ய ஒத்துழைப்பு தருவதில்லை.

    இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி அலுவலர் ஆகியோரிடம் நேரிலும் மனுக்கள் மூலம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

    • புதிதாக அமைக்கப்படும் சாலை யோரங்களில் கட்டப்படும் வாறுகால், சாலையை விட உயரம் குறைவாக உள்ளது.
    • 32-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கவியரசன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பணிகள் எதுவும் தீர்மானங்களில் இல்லையென கூறி வெளிநடப்பு செய்தார்.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டி நகராட்சி சாதாரண கூட்டம் கூட்டரங்கில் நடந்தது. நகராட்சி தலைவர் கருணாநிதி தலைமை தாங்கினார். ஆணையாளர் ராஜாராம், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில் நகராட்சி பொறியாளர் ரமேஷ், சுகாதார அலுவலர் நாராயணன் மற்றும் கவுன்சி லர்கள் கலந்து கொண்டனர்.

    கூட்டம் தொடங்கியதும், துணை தலைவர் ஆர்.எஸ்.ரமேஸ் பேசுகையில், நகர்மன்ற கூட்டத்தின் தொடக்கமாக தமிழ்த்தாய் வாழ்த்துப்பாட வேண்டும் என்றார். அதற்கு பதிலளித்த தலைவர், அடுத்து வரும் கூட்டங்களில் தமிழ்த்தாய் வாழ்த்துப் பாடப்படும் என்றார்.

    பின்னர் உறுப்பினர்கள் பேசுகையில், நகராட்சிக்கு உட்பட்ட பகுதியில் பழைய வீட்டை புதுப்பித்து, அதற்கு வீட்டு தீர்வை செலுத்தி வருகின்றனர். ஆனால், தற்போது பழைய வீட்டுக்கு சேர்த்து தீர்வை வசூலிக்கப்படுகிறது. இது சரியா?. ஒரு வீட்டுக்கு இரண்டு தீர்வை வசூலிப்பதை தவிர்க்க வேண்டும். புதிதாக அமைக்கப்படும் சாலை யோரங்களில் கட்டப்படும் வாறுகால், சாலையை விட உயரம் குறைவாக உள்ளது. இதனால் மழை க்காலங்களில் மழைநீரோடு அடித்து வரப்படும் மணல் வாறுகாலில் தேக்கமடையும் சூழல் உள்ளது. எனவே, வாறுகாலின் உயரத்தை அதிகரித்து, சாலையில் ஆங்காங்கே குழாய் பதித்து, அதன் வழியாக மழைநீர் வாறுகாலில் செல்ல வழிவகை செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தினர்.

    நகர்மன்ற உறுப்பினர்கள் கோரிக்கைகள் குறித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று நகர் மன்ற தலைவர் கருணாநிதி தெரிவித்தார்.

    32-வது வார்டு அ.தி.மு.க. கவுன்சிலர் கவியரசன், தனது வார்டுக்கு உட்பட்ட பகுதிகளுக்கான பணிகள் எதுவும் தீர்மானங்களில் இல்லையென கூறி வெளிநடப்பு செய்தார்.

    தொடர்ந்து, அவையில் வைக்கப்பட்ட 100 தீர்மானங்களும் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

    பாராளுமன்ற மாநிலங்களவை துணை சபாநாயகர் பதவிக்கு வரும் 9-ம் தேதி நடைபெறும் தேர்தலில் வேட்பாளரை அறிவிக்க காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் ஆலோசனை நடத்துகின்றன. #RSdeputychairman #RSdeputychairmanelection
    புதுடெல்லி:

    பாராளுமன்ற மாநிலங்களவையின் சபாநாயகராக துணை ஜனாதிபதி பதவி வகிப்பது மரபாக உள்ளது. துணை சபாநாயகர் பதவிக்கு அவையின் எம்.பி.க்கள் பலத்துக்கேற்ப வேட்பாளர்கள் அறிவிக்கப்படுவது வழக்கம்.

    அறிவிக்கப்பட்ட நபரை எதிர்த்து மாற்று கட்சி வேட்பாளர் சில வேளைகளில் நிறுத்தப்பட்டு, அதிகமான வாக்குகளை பெறுபவர் வெற்றிபெற்று மாநிலங்களவை துணை சபாநாயகராக பதவி ஏற்பார்.

    சில வேளைகளில் அனைத்து கட்சிகளின் சார்பிலும் ஆலோசித்து, ஒருமித்த முடிவுடன் பொது வேட்பாளர் அறிவிக்கப்பட்டு துணை சபாநாயகராக பதவி ஏற்பதும் உண்டு.

    இப்படி, மாநிலங்களவையில் அதிக உறுப்பினர்களின் பலத்துடன் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள்தான் அதிக முறை துணை சபாநாயகராக பொறுப்பு வகித்து வந்துள்ளனர்.

    இந்நிலையில், துணை சபாநாயகராக இருமுறை பதவி வகித்த பி.ஜே.குரியன் பதவிக்காலம் கடந்த ஜூலை மாதம் இரண்டாம் தேதியுடன் முடிவடைந்தது. 

    இதையடுத்டு, துணை சபாநாயகர் பதவிக்கு அனைத்து கட்சிகளின் சார்பாக ஒரு பொது வேட்பாளரை அறிவிக்க வேண்டும் என டெல்லி அரசியல் வட்டாரங்கள் முயற்சித்து வருகின்றன.

    இன்றைய மாநிலங்களவ கூட்டத்தின்போது  துணை சபாநாயகர் தேர்தல் வரும் 9-ம் தேதி தேர்தல் நடைபெறும் என சபாநாயகர் வெங்கயா நாயுடு இன்று தெரிவித்துள்ளார். விருப்பமுள்ள நபர்கள் இந்த பதவிக்கு பெயர்களை முன்மொழியலாம் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

    8-ம் தேதி வேட்புமனு தாக்கலும் 9-ம் தேதி காலை 11 மணியளவில் வாக்குப்பதிவும் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

    தற்போதைய நிலவரப்படி மாநிலங்களவையில் பெரும்பான்மை இல்லாமல் இருக்கும் தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் வேட்பாளர் நிறுத்தப்படாமல் போனால், வழக்கம்போல் இந்த முறையும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்த ஒருவர் இந்த பதவிக்கு வரும் வாய்ப்புகள் அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்நிலையில், காங்கிரஸ் மற்றும் இதர எதிர்க்கட்சிகள் வேட்பாளர் தேர்வு தொடர்பாக தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றன. 

    நாளை காலை 9.30 மணியளவில் காங்கிரஸ் முன்னாள் தலைவர் சோனியா காந்தி தலைமையில் அக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர்கள் கூட்டம் நடைபெறுகிறது. இந்த கூட்டத்தில் வேட்பாளர் பெயர் அறிவிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இதற்கிடையில், பா.ஜ.க., காங்கிரஸ் அல்லாத இதர எதிர்க்கட்சி எம்.பி.க்கள் மற்றும் கட்சி தலைவர்கள் இன்று மாலை டெல்லியில் கூடி அவசர ஆலோசனை நடத்தினர்.

    இந்த கூட்டத்தில் சமாஜ்வாதி கட்சியை சேர்ந்த ராம்கோபால் யாதவ், தேசியவவாத காங்கிரஸ் கட்சியை சேர்ந்த பிரஃபுல் பட்டேல், இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் டி.ராஜா, திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் டெரெக் ஓ’ பிரியென் மற்றும் தி.மு.க. சார்பில் திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.

    தொடர்ந்து நாளையும் இந்த கட்சியினர் ஆலோசனை நடத்தவுள்ளனர். இந்த ஆலோசனையின்போது காங்கிரஸ் முன்னிறுத்தும் வேட்பாளரை ஆதரிப்பதா? அல்லது, தங்கள் சார்பில் தனியாக வேட்பாளரை முன்னிறுத்துவதா? என்று இறுதி முடிவு எட்டப்படும் என தெரிகிறது. #RSdeputychairman #RSdeputychairmanelection #oppositionleadersMeet
    ×