search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    உப்பிலிபாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது புகார்
    X

    கோப்புபடம்.

    உப்பிலிபாளையம் ஊராட்சி மன்ற துணைத்தலைவர் மீது புகார்

    • அத்தியாவசிய பணிகளான தெரு விளக்கு பராமரிப்பு போன்ற எந்த விதமான பணிகளும் செய்ய ஒத்துழைப்பு தருவதில்லை.
    • மனுக்கள் மூலம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை.

    அவினாசி :

    அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி மன்ற தலைவர் மகேஸ்வரி மாவட்ட கலெக்டருக்கு அனுப்பியுள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது :- நான் அவினாசி ஒன்றியம் உப்பிலிபாளையம் ஊராட்சி மன்றத் தலைவராக உள்ளேன். இங்கு துணைத் தலைவராக இருப்பவர் ஊராட்சியில் செய்யப்படும் அத்தியாவசிய பணிகளான தெரு விளக்கு பராமரிப்பு, குடிநீர் பராமரிப்பு, மின் கட்டணம் செலுத்துதல் போன்ற எந்த விதமான பணிகளும் செய்ய ஒத்துழைப்பு தருவதில்லை.

    இது குறித்து வட்டார வளர்ச்சி அலுவலர், கிராம ஊராட்சி அலுவலர் ஆகியோரிடம் நேரிலும் மனுக்கள் மூலம் பலமுறை புகார் தெரிவித்தும் எந்த பிரயோஜனமும் இல்லை. எனவே அவர் மீது உரிய நடவடிக்கை எடுத்து ஊராட்சியின் வளர்ச்சிக்கு ஒத்துழைப்பு தர உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் .இவ்வாறு அந்த மனுவில் தெரிவித்துள்ளார்.

    Next Story
    ×