search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "cracks"

    • சக்கரங்களுக்கு மேலே பெட்டியை தாங்கும் பகுதியான அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர்.
    • எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.

    செங்கோட்டை:

    கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து செங்கோட்டை, தென்காசி வழியாக சென்னை எழும்பூருக்கு தினசரி ரெயிலாக கொல்லம்-சென்னை ரெயில் (வண்டி எண் 16102) இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த ரெயில் வழக்கம் போல் நேற்று மதியம் 12.15 மணிக்கு கொல்லத்தில் இருந்து புறப்பட்டது. செங்கோட்டைக்கு மாலை 3 மணிக்கு வந்தது. ரெயில் நிலையத்துக்குள் நுழைவதற்கு முன்பாக தண்டவாளத்தின் இருபுறமும் ரெயில்வே ஊழியர்கள் அமர்ந்து வண்டியின் சக்கரங்கள் சரியாக ஓடுகிறதா? என்பதை நாள்தோறும் கண்காணித்து வருவது வழக்கம்.

    நேற்றும் அவர்கள் செங்கோட்டைக்கு வந்த கொல்லம் ரெயிலை கண்காணித்தனர். அப்போது அந்த ரெயிலின் எஸ்-3 என்ற 2-ம் வகுப்பு தூங்கும் வசதி கொண்ட பெட்டியில் சக்கரங்களுக்கு மேலே பெட்டியை தாங்கும் பகுதியான அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருந்ததை கண்டுபிடித்தனர். இதுகுறித்து அவர்கள் ரெயில்வே உயர் அதிகாரிகளுக்கு உடனடியாக தகவல் தெரிவித்தனர்.

    இதையடுத்து மேற்கொண்டு அந்த ரெயில் இயக்கப்படாமல் அங்கேயே நிறுத்தி வைக்கப்பட்டது. உடனடியாக அதிகாரிகள் அங்கு வந்து அடிச்சட்டத்தில் விரிசல் இருப்பதை பார்வையிட்டனர். பின்னர் அந்த ஒரு பெட்டி மட்டும் செங்கோட்டையில் கழற்றப்பட்டது.

    எஸ்-3 பெட்டியில் பயணம் செய்த பயணிகள் மற்ற பெட்டிகளுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். அவர்களுக்கு மதுரை ரெயில் நிலையத்தில் வைத்து மாற்றுப்பெட்டி இணைத்து அதில் பயணம் செய்ய ஏற்பாடு செய்வதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இதையடுத்து சுமார் 1½ மணி நேரம் தாமதமாக அந்த ரெயில் சென்னைக்கு புறப்பட்டது. இந்த ரெயில் புனலூர்-செங்கோட்டை இடையே உள்ள மேற்கு தொடர்ச்சி மலை குகைகள் பாதை வழியாக கடந்து வரும். அப்போது இந்த ரெயிலின் அடிச்சட்டத்தில் விரிசல் ஏற்பட்டிருக்கலாம் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

    எனினும் அதிர்ஷ்டவசமாக ரெயில்வே ஊழியர்கள் கண்காணித்து கண்டுபிடித்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. ஏற்கனவே ஒடிசா மாநிலத்தில் நடந்த கோர ரெயில் விபத்து அதிர்ச்சியில் இருந்து மக்கள் மீளாத நிலையில் அதற்குள் தற்போது செங்கோட்டையில் நடந்த இந்த சம்பவம் மேலும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அடிச்சட்டம் விரிசலை துரிதமாக கண்டுபிடித்த ஊழியர்களை பயணிகள் வெகுவாக பாராட்டினர்.

    • திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார்.
    • மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.

    திருப்பூர் :

    திருப்பூர் வடக்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட ஈட்டிவீரம்பாளையம் ஊராட்சி முட்டியங்கிணறு ஏடி காலனி பகுதியில் 50க்கும் மேற்பட்ட வீடுகள் உள்ளன இங்கு ஏராளனோர் வசித்து வருகின்றனர். இந்த நிலையில் ஏ.டி. காலனியில் உள்ள 30 க்கும் மேற்பட்ட வீடுகளின் சுவர்களில் திடீரென விரிசல் ஏற்பட்டது. இதனால் அந்த பகுதி பொதுமக்கள் ஒருவித அச்சத்துடன் வசித்து வருகின்றனர். எதற்காக திடீரென வீடுகளில் விரிசல் ஏற்பட்டது. அல்லது வேறு ஏதும் காரணம் உள்ளதா என அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

    இந்தநிலையில் இன்று காலை திருப்பூர் வடக்கு தொகுதி எம்.எல்.ஏ. கே.என்.விஜயகுமார் அங்கு நேரில் சென்று ஆய்வு செய்து பொதுமக்களுக்கு ஆறுதல் கூறினார். மேலும் மாவட்ட கலெக்டரிடம் போனில் தொடர்பு கொண்டு உடனடி நடவடிக்கைக்கு வலியுறுத்தினார்.

    இந்நிகழ்வில் ஒன்றிய பேரவை செயலாளர் எஸ் எம் பழனிச்சாமி, ஒன்றிய கழக பொருளாளர் சிவசாமி, யூனியன் கவுன்சிலர் ஐஸ்வர்ய மகராஜ், வார்டு உறுப்பினர்கள் தனலட்சுமி அன்பழகன், ராசப்பன் நிர்வாகிகள் காளிமுத்து, யுவராஜ், ராமசாமி, ராம்குமார், சையது, சாமிநாதன், நல்லசாமி, மூர்த்தி, கொண்டான் உள்ளிட்டோரும் பொதுமக்களும் இருந்தனர்.

    ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியின் சுற்றுச்சுவரில் திடீரென்று விரிசல் ஏற்பட்டு உள்ளதால் நோயாளிகள் பீதி அடைந்து உள்ளனர்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டம் ஊட்டியில் நகராட்சி அலுவலகம் அருகே அரசு தலைமை ஆஸ்பத்திரி உள்ளது. இந்த ஆஸ்பத்திரி ஆங்கிலேயர் ஆட்சிகாலத்தில் இருந்து செயல்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இங்கு விபத்து மற்றும் அவசர சிகிச்சை, பொது சுகாதாரம், அறுவை சிகிச்சை மற்றும் பிரசவம், கண் மருத்துவம், காது, மூக்கு தொண்டை, எலும்பு முறிவு உள்பட மொத்தம் 15 வார்டுகள் உள்ளன. ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, மஞ்சூர் உள்பட மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து தினமும் 500-க்கும் மேற்பட்டோர் ஆஸ்பத்திரிக்கு வந்து சிகிச்சை பெற்று செல்கின்றனர்.

    ஆஸ்பத்திரியில் ஆங்கிலேயர் காலத்தில் கட்டப்பட்ட பழைய கட்டிடங்கள் தற்போதும் பொலிவுடனும், வலிமையுடனும் காட்சி அளிக்கிறது. இந்த நிலையில் ஆஸ்பத்திரியில் புறநோயாளிகள் பிரிவுக்கு செல்லும் நுழைவுவாயில் பகுதியில் உள்ள சுற்றுச்சுவரில் திடீரென விரிசல் ஏற்பட்டு உள்ளது. கடந்த சில நாட்களுக்கு முன்பு பெய்த தொடர் மழை காரணமாக விரிசல் ஏற்பட்டதாக தெரிகிறது. இதுகுறித்து தகவல் அறிந்த சம்மந்தப்பட்ட அதிகாரிகள் விரிசல் ஏற்பட்ட பகுதியை தற்காலிகமாக சிமெண்டு பூசி சரிசெய்ய நடவடிக்கை எடுத்தனர். ஆனால், மீண்டும் அந்த சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு உள்ளது.

    இதனால் தினமும் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் பொதுமக்கள் விரிசல் ஏற்பட்ட பகுதியை பார்த்துக்கொண்டே செல்கிறார்கள். அந்த பகுதியை விரைவில் கடந்து செல்ல வேண்டும் என்று வேகமாக செல்வதை காண முடிகிறது. எப்போது வேண்டுமானாலும் விழலாம் என்ற நிலையில் அந்த சுவர் வாயை பிளந்து இருக்கிறது. இதனால் பொதுமக்கள் மற்றும் ஆஸ்பத்திரிக்கு வந்து செல்லும் நோயாளிகள் பீதி அடைந்து உள்ளனர். இதுகுறித்து ஊட்டி நகர பொதுமக்கள் கூறியதாவது:-

    ஊட்டியில் தென்மேற்கு பருவமழை தொடர்ந்து பெய்து வருவதால், ஆங்காங்கே சாலையோரங்களில் மரங்கள் முறிந்து விழுந்து வருகின்றன. இந்த நிலையில் பொதுமக்கள் அதிகமாக வந்து செல்லும் ஊட்டி அரசு தலைமை ஆஸ்பத்திரியின் சுற்றுச்சுவரில் விரிசல் ஏற்பட்டு இருப்பது மக்கள் இடையே அச்சத்தை ஏற்படுத்தி உள்ளது. மழை தீவிரம் அடையும் முன்பு விரிசல் ஏற்பட்ட சுற்றுச்சுவரை சரிசெய்ய சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும் அரசு பள்ளி சுற்றுச்சுவர்கள் மற்றும் நடைபாதை ஓரங்களில் உள்ள விரிசல் ஏற்பட்ட சுவர்களை முன் எச்சரிக்கையாக பாதுகாக்க அதிகாரிகள் முன்வர வேண்டும். இவ்வாறு அவர்கள் கூறினர்.
    ×