search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "chennai sangamam"

    • சென்னை சங்கமத்தில் எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் பங்கேற்பு.
    • சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு திருவிழா.

    சென்னை தீவுத்திடலில் இன்று முதல் சென்னை சங்கமம்- நம்ம ஊரு திருவிழா நடைபெறுகிறது. இந்த விழாவை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மேளம் கொட்டி தொடங்கி வைத்தார்.

    பிறகு, கலைநிகழ்ச்சிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், எம்.பி கனிமொழி மற்றும் அமைச்சர்கள் உள்ளிட்டோர் கண்டு ரசித்தனர்.

    தமிழகத்தின் பாரம்பரியாத்தை பிரதிபலிக்கும் 40 வகையான கலைகளுடன் சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது.

    சென்னை மாநகரில் 18 இடங்களில் 4 நாட்களுக்கு சென்னை சங்கமம் திருவிழா நடைபெறுகிறது.

    • சுமார் 600 கலைஞர்கள் நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.
    • நாளை முதல் 17ம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

    சென்னை:

    சென்னை தீவுத்திடலில் கலை பண்பாட்டுத் துறை சார்பில் நடைபெறும் "சென்னை சங்கமம் - நம்ம ஊரு திருவிழாவை" முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைத்து உரையாற்றினார்.

    தமிழகத்தின் பல்வேறு இடங்களில் இருந்து வந்திருந்த சுமார் 600 கலைஞர்கள், நம்ம ஊரு திருவிழா துவக்க நிகழ்ச்சியில் பங்கேற்று தங்கள் கலைத்திறனை வெளிப்படுத்தினர்.

    நிகழ்ச்சியில் கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன்,  சேகர்பாபு, சென்னை மாநகராட்சி மேயர் பிரியா, இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

    தமிழகம் முழுவதிலும் இருந்து சென்னை வந்து சங்கமித்துள்ள கலைஞர்கள், நாளை முதல் 17ம் தேதி வரை சென்னையில் 18 இடங்களில் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நம் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன.
    • தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனிச் சிறப்பான உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம் பெறுகின்றன.

    சென்னை:

    'சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா' குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சமூக வலைதளப் பதிவில் கூறியிருப்பதாவது:-

    தனித்த அடையாளத்தோடு கலை, பண்பாடு, இலக்கியம் என வாழ்ந்திட்ட தமிழர், பின்னாளில் இனப் பகைவர்களின் சூழ்ச்சிக்கு இரையாகி தங்களது அடையாளங்களை மறந்தனர். மறத்தமிழரின் மான உணர்வை பகுத்தறிவால் மீட்டெடுத்து, இன எழுச்சி பெற வைத்தது திராவிட இயக்கம். தமிழரின் பண்பாட்டை மீட்டெடுக்கும் திராவிட சிந்தனையின் மற்றுமொரு முன்னெடுப்பு தான் 'சென்னை சங்கமம்'.

    தமிழினத் தலைவர் கலைஞர் ஏற்றி வைத்த கலை பண்பாட்டுச் சுடரை அணையாது காத்திடும் விதத்தில் தற்போது "சென்னை சங்கமம் நம்ம ஊரு திருவிழா" தமிழ்நாட்டின் தலைநகரான சென்னையின் பல்வேறு இடங்களில் வரும் ஜனவரி 13-ம் நாள் தொடங்கி 17-ம் நாள் வரையில் அரசு சார்பில் நடைபெற இருக்கிறது.

    வரும் ஜனவரி 13-ந்தேதி (வெள்ளிக்கிழமை), சென்னை, தீவுத் திடலில் 'சென்னை சங்கமம்-2023' நிகழ்வை நான் தொடங்கி வைக்கி றேன். 16 இடங்கள், 60-க்கும் மேற்பட்ட கலை நிகழ்ச்சிகள், 600-க்கும் மேற்பட்ட மண்ணின் கலைஞர்களை ஒன்றிணைத்து, மீண்டும் வருகிறது 'சென்னை சங்கமம்'.

    பறையாட்டம், கரகாட்டம், மலைவாழ் மக்களின் கலைநிகழ்ச்சிகள் உள்ளிட்ட நம் பாரம்பரியக் கலை நிகழ்ச்சிகள் நடக்க இருக்கின்றன. இதோடு தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தனிச் சிறப்பான உணவு வகைகள் உணவுத் திருவிழாவில் இடம் பெறுகின்றன.

    இலக்கியத் திருவிழாவும் நடைபெற உள்ளது. நம் தமிழ் மண்ணையும், மக்களையும், மக்களின் கதைகளையும் பேசும் இந்தக் கலைகளை உங்களிடம் கொண்டு வந்து சேர்ப்பதில் திராவிட முன்னேற்றக் கழக அரசு பெருமிதம் கொள்கிறது. 'தமிழர் என்று ஓர் இனம் உண்டு, தனியே அவருக்கு ஒரு குணமுண்டு'. 'கலைகள் யாவிலும் வல்லவனாம், கற்றவர் எவர்க்கும் நல்லவனாம்'. இந்த மாபெரும் மக்கள் திருவிழாவிற்கு அனைவரும் வாருங்கள்! வாருங்கள்! நம்ம ஊரு திருவிழாவில் சந்திப்போம்.

    இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

    • சென்னையில் 16 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன.
    • மதுரை கோவை, திருச்சி, சேலம் உள்ளிட்ட இடங்களிலும் நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

    சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய தொழில் துறை அமைச்சர் தங்கம் தென்னரசு கூறியுள்ளதாவது

    இந்த ஆண்டு நாட்டுப்புற கலை நிகழ்ச்சியான சென்னை சங்கமம், புதுப்பொழிவோடு நம்ம ஊரு திருவிழாவாக சிறப்பான முறையில் நடைபெற உள்ளது. நாடாளுமன்ற உறுப்பினர் கவிஞர் கனிமொழி ஒருங்கிணைப்பில் விழாநிகழ்ச்சிகள் மிளிர இருக்கிறது. வரும் 13ஆம் தேதி துவங்கி, 17ஆம் தேதி வரை மிகச் சிறப்பாக சென்னை மாநகரில் இந்த விழா நடைபெறவிருக்கிறது. இதன் தொடக்க விழாவை, 13ந் தேதி மாலை சென்னை தீவுத்திடலில் பிரம்மாண்டமான கலை விழாவோடு முதலமைச்சர் துவங்கி வைக்கிறார்.

    தொடர்ந்து வரும் 14ந் தேதி முதல் 17ந் தேதிவரை நான்கு நாட்களுக்கு சென்னையில் 16 இடங்களில் கலை நிகழ்ச்சிகள் நடைபெறும். மதுரை கோவை, திருச்சி, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களிலும் இந்த கலை நிகழ்ச்சிகள் நடைபெறவிருக்கிறது. மேலும் பஞ்சாப், அஸ்ஸாம், மேற்கு வங்கம் போன்ற இதர மாநிலங்களிலிருந்தும், சில நிகழ்ச்சிகளை இணைந்து நம்முடைய ஒருமைப்பாட்டையும் பிரதிபலிக்கக்கூடிய வகையில் இந்த நிகழ்ச்சிகள் அமைய இருக்கிறது. இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.

    • சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
    • சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்னையில் உள்ள சில பூங்காக்களை தி.மு.க. எம்.பி. கனிமொழி, மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    சென்னை:

    தி.மு.க. ஆட்சியின் போது கடந்த 2007-ம் ஆண்டு சென்னை சங்கமம் நிகழ்ச்சி தொடங்கப்பட்டது. பொங்கல் பண்டிகையின் போது நடத்தப்பட்ட இந்த சென்னை சங்கமம் விழாவின் போது சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள் மற்றும் பல்வேறு இடங்களில் பாரம்பரிய நடனம், இசை மற்றும் கிராமிய கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    ஆண்டுதோறும் நடத்தப்பட்ட இந்த சென்னை சங்கமம் நிகழ்ச்சி கடந்த 2011-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் தி.மு.க. ஆட்சி மீண்டும் அமைந்ததை தொடர்ந்து கடந்த பொங்கல் பண்டிகையின் போது நம்ம ஊரு திருவிழா என்ற பெயரில் சென்னை தீவுத்திடலில் இந்த கலை நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன.

    இந்த நிலையில் 10 ஆண்டுகளுக்கு பிறகு இந்த ஆண்டு பொங்கல் பண்டிகையையொட்டி கிராமிய கலைஞர்கள் பங்கேற்கும் சென்னை சங்கமம் நிகழ்ச்சியை கோலாகலமாக நடத்த ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது.

    வருகிற 14-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை இந்த நிகழ்ச்சிகள் நடத்தப்படுகிறது. சென்னையில் உள்ள பூங்காக்கள், மைதானங்கள், கடற்கரைகள் என 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது.

    சென்னை சங்கமம் நிகழ்ச்சியை முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார். இந்த நிலையில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக சென்னையில் உள்ள சில பூங்காக்களை தி.மு.க. எம்.பி. கனிமொழி, மேயர் பிரியா ஆகியோர் ஆய்வு செய்தனர்.

    இதையடுத்து சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடத்துவதற்காக 16 இடங்கள் தேர்வு செய்யப்பட்டன.

    கொளத்தூரில் உள்ள மாநகராட்சி மைதானம், ராயபுரத்தில் உள்ள ராபின்சன் விளையாட்டு மைதானம், மைலாப்பூர் நாகேஸ்வரராவ் பூங்கா, செம்மொழி பூங்கா, நுங்கம்பாக்கம் டென்னிஸ் மைதானம், அண்ணாநகர் டவர் பூங்கா, பெசன்ட் நகர் எலியட்ஸ் கடற்கரை, திருவான்மியூர் கடற்கரை சாலை, தி.நகர் நடேசன் பூங்கா, வளசரவாக்கம் ராம கிருஷ்ணன் நகர் மைதானம் உள்ளிட்ட 16 இடங்களில் சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இந்த நிகழ்ச்சியில் கரகாட்டம், குயிலாட்டம், மயிலாட்டம், தெருக்கூத்து உள்ளிட்ட பல்வேறு பாரம்பரிய நிகழ்ச்சிகள் இடம் பெறுகிறது. 4 நாட்களும் மாலை 6 முதல் இரவு 9 மணிவரை 30 நிமிட இடைவெளியில் நடனம், இசை நிகழ்ச்சி உள்ளிட்ட நாட்டுப்புற மற்றும் பாரம்பரிய கலைகள், பிற மாநில நடனங்கள் ஆகியவற்றின் கலவையாக நடத்தப்படுகிறது.

    சென்னை சங்கமம் நிகழ்ச்சி நடைபெறும் இடங்களில் உணவு திருவிழாவும் நடக்கிறது. கருப்பட்டி, இருட்டுக்கடை அல்வா, கடாய் அல்வா, தலப்பாகட்டி உள்ளிட்ட பாரம்பரிய உணவுகளும், உணவு பொருள் கடைகளும் இந்த உணவு திருவிழாவில் அமைக்கப்படுகின்றன.

    மேலும் இந்த இடங்களில் நிகழ்ச்சி நடத்துவதற்கு ஏதுவாக மேடைகள் அமைக்கப்படுகின்றன. தரமான குடிநீர் வழங்குவதற்கும், நடமாடும் கழிப்பறைகளை அமைப்பதற்கும் ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. இந்த நிகழ்ச்சியை சிறப்பாக நடத்துவதற்காக கனிமொழி எம்.பி., அமைச்சர்கள் தங்கம் தென்னரசு, ராமச்சந்திரன் ஆகியோர் அடங்கிய வழிகாட்டுதல் குழு அமைக்கப்படுகிறது.

    ×