search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Caribbean Premier League"

    இந்தியாவின் இடது கை வேகப்பந்து கிரிக்கெட் வீரரான இர்பான் பதான் கரீபியர் பிரிமீயர் லீக் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார்.
    பிசிசிஐ ஐபிஎல் டி20 கிரிக்கெட் தொடரை நடத்துவது போல், ஒவ்வொரு நாட்டின் கிரிக்கெட் வாரியமும் 20 ஓவர் லீக் தொடரை நடத்தி வருகிறது.

    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் கரீபியன் பிரிமீயர் லீக் என்ற பெயரில் நடத்தி வருகிறது. பொதுவாக இந்திய கிரிக்கெட் வாரியம் இந்த வீரர்களை வெளிநாட்டு தொடரில் விளையாட அனுமதிப்பதில்லை.

    இந்நிலையில் இடது கை வேகப்பந்து வீச்சாளரான இர்பான் பதான், கரீபியன் பிரிமீயர் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரைவு பட்டியலில் இடம்பிடித்துள்ளார். ஏதாவது ஒரு அணி இவரை ஏலத்தில் எடுத்தால், கரீபியன் லீக்கில் விளையாடும் முதல் இந்திய வீரர் என்ற பெருமையை பெறுவார்.



    கரீபியன் பிரிமீயர் லீக் தொடர் செப்டம்பர் மாதம் 4-ந்தேதியில் இருந்து அக்டோபர் 12-ந்தேதி வரை நடக்கிறது.
    கரிபியன் பிரீமியர் லீக் இறுதி போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியை வீழ்த்தி ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி சாம்பியன் பட்டத்தை வென்றது. #CPLFinal #GAWvTKR
    டிரினிடாட்:

    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதிப் போட்டி டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா விளையாட்டு மைதானத்தில் இன்று நடைபெற்றது. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி பந்து வீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து களம் கண்ட கயானா அமேசான் அணி 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுகளை இழந்து 147 ரன்கள் குவித்தது. கயானா சார்பில் லூக் ரோன்சி அதிகபட்சமாக 44 (35) ரன்களை குவித்தார். ட்ரின்பகோ சார்பில் கரி பியர் 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.



    148 ரன்கள் வெற்றி இலக்குடன் களமிறங்கிய ட்ரின்பகோ அணியின் சார்பில் தொடக்க வீரர்களாக தெனேஷ் ராம்டின், பிரண்டன் மிக்கல்லம் களமிறங்கினர். முதல் விக்கெட்டுக்கு 52 ரன்களை குவித்திருந்த நிலையில், 7-வது ஓவரை கிறிஸ் கிரீன் வீசினார். அதை எதிர்கொண்ட மெக்கல்லம் பந்தை தூக்கி அடிக்க டெல்போர்ட்டிடம் கேட்ச் கொடுத்து அவுட்டானார்.

    அடுத்ததாக களமிறங்கிய கொலின் முன்ரோ தொடக்கம் முதலே அதிரடியை வெளிப்படுத்தினார். ஆட்டத்தின் 12-வது ஓவரை ரொமாரியோ ஷெப்பர்டு வீச 24 (30) ரன்களுடன் தெனேஷ் ராம்டின் வெளியேறினார். அதிரடியாக விளையாடி கடைசி வரை ஆட்டத்தின் இறுதிவரை களத்தில் நின்ற கொலின் முன்ரோ 6 பவுண்டரிகள், 3 சிக்சர்களுடன் 68 (39) ரன்களை சேர்த்தார். டேரன் பிராவோ காயம் காரணமாக 4 ரன்களில் ஆட்டத்தின் பாதியில் வெளியேறினார்.
    கடைசியில் 17.3 வெற்றி இலக்கை எட்டிய ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று, சாம்பியன் பட்டத்தையும் வென்றது. #CPLFinal #CPL2018 #GAWvTKR 

    கரிபியன் பிரீமியர் லீக்கின் இறுதி போட்டியில் ட்ரின்பகோ அணி வெற்றி பெற 148 ரன்களை இலக்காக நிர்ணயித்துள்ளது கயானா அமேசான் அணி. #CPL #GAWvTKR
    டிரினிடாட்:

    கரிபியன் பிரீமியர் லீக் தொடரின் இறுதி போட்டி டிரினிடாடில் உள்ள பிரையன் லாரா விளையாட்டு மைதானத்தில் இன்று அதிகாலை தொடங்கியது. இதில் கயானா அமேசான் வாரியர்ஸ் அணியும், ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணியும் மோதின.

    டாஸ் வென்ற ட்ரின்பகோ நைட் ரைடர்ஸ் அணி முதலில் பந்து வீச்சை தேர்வு செய்தது. அதன்படி, கயானா அமேசான் வாரியர்சின் தொடக்க வீரர்களாக கேமரூன் டெல்போர்ட், லூக் ரோஞ்சி ஆகியோர் களமிறங்கினர்.

    ட்ரின்பகோ அணியின் அலி கான் முதல் பந்தை வீச, கேமரூன் டெல்போர்ட் போல்டாகி டக் அவுட்டாகி வெளியேறினார்.



    அவரை தொடர்ந்து இறங்கிய ஷிம்ரோன் ஹெட்மையர் நிதானமாக ஆடினர். இருவரும் பொறுமையாக ஆடவே இந்த ஜோடி அரை சதத்தை கடந்தது. அணியின் எண்ணிக்கை 52 ஆக இருந்தபோது ஹெட்மையர் அவுட்டாகினார். அதன்பின்னர் வந்த வீரர்கள் நிலைத்து நிற்கவில்லை.

    இறுதியில், கயானா அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 9 விக்கெட்டுக்கு 147 ரன்கள் எடுத்துள்ளது.

    ட்ரின்பகோ அணி சார்பில் காரி பியர்ரெ 3 விக்கெட்டும், டுவைன் பிராவோ 2 விக்கெட்டும் வீழ்த்தினர். இதைத்தொடர்ந்து, 148 ரன்களை இலக்காக கொண்டு ட்ரின்பகோ அணி விளையாடி வருகிறது. #CPL #GAWvTKR
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 தொடரின் இறுதிப் போட்டியில் கயானா அமேசான் வாரியர்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. #CPL2018
    கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் கடந்த மாதம் 8-ந்தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ், செயின்ட் லூசியா ஸ்டார்ஸ், பார்படோஸ் டிரிடென்ட்ஸ் ஆகிய ஆறு அணிகள் பங்கேற்றன.

    ஒவ்வொரு அணிகளும் மற்ற அணிகளும் தலா இரண்டு முறை மோதின. இதனடிப்படையில் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ், கயானா அமேசான் வாரியர்ஸ், ஜமைக்கா தல்லாவாஸ், செயினிட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் ஆகிய நான்கு அணிகள் முறையே ஒன்று முதல் நான்கு இடங்களை பிடித்து பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கு முன்னேறின.



    பிளே-ஆஃப்ஸ் சுற்றுக்கள் முடிவில் கயானா அமேசான் வாரியர்ஸ் - டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் அணிகள் இறுதிப் போட்டிக்கு முன்னேறியுள்ளன. இறுதிப் போட்டி டிரினாடாட்டில் உள்ள பிரையன் லாரா ஸ்டேடியத்தில் உள்ளூர் நேரப்படி இன்று மாலை 5 மணிக்கு தொடங்குகிறது. இந்திய நேரப்படி அதிகாலை 2.30 மணிக்கு தொடங்குகிறது.
    கரிபியன் ப்ரீமியர் லீக்கில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் கெய்ல் தலைமையிலான அணியை 46 ரன் வித்தியாசத்தில் வீழ்த்தியது. #ENGvIND
    வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரியம் நடத்தும் கரிபியன் ப்ரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. உள்ளூர் நேரப்படி நேற்றிரவு செயின்ட் கிட்ஸில் நடைபெற்ற ஆட்டத்தில் வெயின் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் - கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    டாஸ் வென்ற கெய்ல் பந்து வீச்சு தேர்வு செய்தார். அதன்படி வெயின் பிராவோ அணி முதலில் களம் இறங்கியது. கிறிஸ் லின், சுனில் நரைன் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். சுனில் நரைன் 6 ரன்னிலும், கிறிஸ் லின் 18 ரன்னி்லும் ஆட்டமிழந்தனர்.

    அதன்பின் வந்த கொலின் முன்றோ (50 பந்தில் 76 ரன்கள்- நாட்அவுட்), பிராண்டன் மெக்கல்லம் (33 பந்தில் 35), வெயின் பிராவோ (11 பந்தில் 37 ரன்கள்- நாட்அவுட்- 5 சிக்ஸ், ஒரு பவுண்டரி) சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்த பிராவோ அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் குவித்தது.

    பின்னர் 200 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் கிறிஸ் கெய்ல் அணி களம் இறங்கியது. கிறிஸ் கெய்ல், எவின் லெவிஸ் ஆகியோர் தொடக்க வீரர்களாக களம் இறங்கினார்கள். கிறிஸ் கெய்ல் 9 ரன்னில் ஆட்டமிழந்தார். எவின் லெவிஸ் 52 ரன்கள் சேர்த்தார்.


    கொலின் முன்றோ

    அதன்பின் வந்த பேட்ஸ்மேன்கள் சொற்ப ரன்களில் வெளியேற கிறிஸ் கெய்ல் தலைமையிலான செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணி 20 ஓவரில் 8 விக்கெட் இழப்பிற்கு 153 ரன்கள் மட்டுமே சேர்த்தது.

    இதனால் பிராவோ தலைமையிலான டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 46 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்த வெற்றியின் மூலம் டிரின்பாகோ நைட் ரைடர்ஸ் 7 போட்டியில் 5-ல் வெற்றி, 2-ல் தோல்வி மூலம் 10 புள்ளிகள் பெற்று முதல் இடம் பிடித்துள்ளது.
    டி20 கிரிக்கெட் வரலாற்றிலேயே 4 ஓவரில் ஒரு ரன் மட்டுமே விட்டுக்கொடுத்து பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் சாதனைப் படைத்துள்ளார். #CPL2018
    வெஸ்ட் இண்டீஸில் கரிபியன் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. நேற்று நடைபெற்ற ஆட்டம் ஒன்றில் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் - செயின்ட் கிட்ஸ் அண்டு நேவிஸ் பேட்ரியாட்ஸ் அணிகள் மோதின.

    முதலில் பேட்டிங் செய்த பார்படோஸ் டிரிடென்ட்ஸ் 147 ரன்கள் சேர்த்தது. பின்னர் செயின்ட் கிட்ஸ் அண்டு நெவிஸ் பேட்ரியாட்ஸ் அணி பேட்டிங் செய்தது. அப்போது முதல் ஓவரை பாகிஸ்தான் அணியின் இடது கை வேகப்பந்து வீச்சாளர் முகமது இர்பான் வீசினார். இந்த ஓவரின் முதல் பந்திலேயே கிறிஸ் கெய்லை வீழ்த்தினார்.

    அதன்பின் அபாரமான பந்து வீச்சை வெளிப்படுத்தினார். தொடர்ந்து நான்கு ஓவர்களையும் வீசினார். அவர் பந்தை செயின்ட் கிட்ஸ் அணி பேட்ஸ்மேன்களால் தொடக்கூட முடியவில்லை. 23 பந்தில் ரன்ஏதும் விட்டுக்கொடுக்கவில்லை.



    இதனால் கடைசி பந்திலும் ரன் விட்டுக்கொடுக்காமல் சாதனைப் படைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் கடைசி பந்தில் ஒரு ரன் விட்டுக்கொடுத்தார். இதன்மூலம் நான்கு ஓவரில் 3 மெய்டனுடன் ஒரேயொரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்து (4-3-1-2) 2 விக்கெட் வீழ்த்தினார்.

    இதன் மூலம் டி20 கிரிக்கெட் வரலாற்றில் நான்கு ஓவர் ஸ்பெல்லில் ஒரேயொரு ரன் மட்டும் விட்டுக்கொடுத்த முதல் வீரர் என்ற சாதனையைப் படைத்துள்ளார்.
    ஆப்கானிஸ்தானின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளரான ரஷித் கான் கவுன்ட்டி கிரிக்கெட்டிற்காக கரிபியன் பிரீமியர் லீக்கில் இருந்து விலகியுள்ளார். #RashidKhan #CPL
    ஆப்கானிஸ்தான் அணியின் தலைசிறந்த சுழற்பந்து வீச்சாளர் ரஷித் கான். டி20 கிரிக்கெட்டின் நட்சத்திர பந்து வீச்சாளரான இவர், ஒருநாள் கிரிக்கெட் போட்டியில் அதிவேகமாக 100 விக்கெட்டுக்கள் வீழ்த்திய வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

    இந்த வருடம் இறுதியில் நடைபெறும் கரிபியன் பிரீமியர் லீக் தொடரிவில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டிருந்தார். தற்போது கவுன்ட்டி கிரிக்கெட்டில் சசக்ஸ் அணிக்காக விளையாடி வருகிறார். கரிபிரியன் பிரீமியர் லீக் தொடருக்கு சென்றால் சசக்ஸ் அணிக்காக அவர் விளையாட முடியாது.



    இந்நிலையில் கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் இருந்து விலகி, தொடர்ந்து சசக்ஸ் அணிக்காக விளையாட முடிவு செய்துள்ளார். இன்னும் ஏழு போட்டிகள் உள்ளன. ரஷித் கான் தொடர்ந்து விளையாட இருப்பதால் இங்கிலிஷ் கவுன்ட்டி டி20 பிளாஸ்ட் தொடரில் சசக்ஸ் நாக்அவுட் சுற்றுக்கு முன்னேற அதிக வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.
    ஆஸ்திரேலியா அணியின் முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் முதன்முறையாக கரிபியன் பிரீமியர் லீக் தொடர் விளையாட ஒப்பந்தமாகியுள்ளார். #CPL #Smith
    ஆஸ்திரேலியா அணியின் கேப்டனாகவும், உலகின் தலைசிறந்த பேட்ஸ்மேனாகவும் திகழ்ந்தவர் ஸ்டீவ் ஸ்மித். இந்த வருடம் தொடக்கத்தில் ஆஸ்திரேலியா அணி தென்ஆப்பிரிக்கா சென்று டெஸ்ட் தொடரில் விளையாடியது. அப்போது மார்ச் மாதம் கேப்படவுனில் நடைபெற்ற டெஸ்டில் ஆஸ்திரேலியா வீரர் பான்கிராப்ட் பந்தை சேதப்படுத்திய புகாரில் சிக்கினார்.

    இதுதொடர்பான விசாரணையில் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித்திற்கு ஓராண்டு தடைவிதிக்கப்பட்டது. இதனால் சர்வதேச போட்டியில் விளையாடாமல் இருந்து வருகிறார். ஒன்றிரண்டு மாதங்கள் கழித்து ஆஸ்திரேலியாவில் நடைபெறும் மிக குறைவான லெவல் தொடர்களிலும், வெளிநாட்டு லீ்க் தொடரிலும் விளையாட அனுமதி அளிக்கப்பட்டது.



    முதன்முதலாக கனடா குளோபல் டி20 லீக்கில் விளையாடினார். அதன் தற்போது கரிபியன் பிரீமியர் லீக் தொடரில் விளையாட ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளார். அவரை பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணி ஒப்பந்தம் செய்துள்ளது.

    அந்த அணியில் இடம்பிடித்திருந்தது வங்காள தேச அணியின் ஆல்ரவுண்டரான ஷாகிப் அல் ஹசன் விலகியதால் ஸ்மித்திற்கு வாய்ப்பு கிடைத்துள்ளது. ஸ்டீவ் ஸ்மித் 155 டி20 போட்டிகளில் விளையாடி 3124 ரன்கள் அடித்துள்ளார். சராசரி 30.03 ஆகும்.
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் அதிரடி மன்னனான அந்த்ரே ரஸல் ஜமைக்கா தல்லாவாஸ் அணியின் கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார். #CPL #AndreRussell
    வெஸ்ட் இண்டீஸ் அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சு ஆல்ரவுண்டர் அந்த்ரே ரஸல். இவர் உலகளவில் நடைபெறும் முன்னணி டி20 லீக்குகளான ஐபிஎல், சிபில், பிக்பாஷ், பாகிஸ்தான் சூப்பர் லீக், வங்காள தேச பிரீமியர் லீக்கில் விளையாடி வருகிறது. கடந்த ஆண்டு ஊக்கமருந்து சோதனைக்கு தன்னை உட்படுத்தாததால் ஓராண்டு தடைபெற்றார். அதன்பின் சமீபத்தில் நடைபெற்று முடிந்து ஐபிஎல் தொடரில் விளையாடினார்.

    விரைவில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் இடம்பித்துள்ள ஜமைக்கா தல்லாவாஸ் அணி அவரை கேப்டனாக நியமித்துள்ளார்.

    இதுகுறித்து அந்த்ரே ரஸல் கூறுகையில் ‘‘ஒரு வருடம் தடைக்குப்பின் மீண்டும் களத்திற்கு திரும்பிய பிறகு, கேப்டன் பதவி கிடைத்திருப்பது சிறந்த உணர்வாக உள்ளது. ஒரு வீரராக மட்டுமல்ல, ஜமைக்கா தல்லாவாஸ் கேப்டனாக தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.



    நாங்கள் சிறந்த பேலன்ஸ் கொண்ட அணியை பெற்றுள்ளோம். வெறும் பெயரை மட்டும் வைத்து அணியில்லை. எப்படி விளையாடுகிறார்கள். விரைவாக ஆட்டத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பதை பொறுத்துதான் அணி. நாங்கள் ஏராளமான ஆல்ரவுண்டர்களை பெற்றுள்ளோம் என்பதை உறுதியாக நம்புகிறேன். எங்கள் அணியில் இடம்பிடித்துள்ள 8 வீரர்களால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட முடியும்’’ என்றார்.
    ×