
விரைவில் கரீபியன் பிரீமியர் லீக் தொடர் நடைபெற இருக்கிறது. அதில் இடம்பித்துள்ள ஜமைக்கா தல்லாவாஸ் அணி அவரை கேப்டனாக நியமித்துள்ளார்.
இதுகுறித்து அந்த்ரே ரஸல் கூறுகையில் ‘‘ஒரு வருடம் தடைக்குப்பின் மீண்டும் களத்திற்கு திரும்பிய பிறகு, கேப்டன் பதவி கிடைத்திருப்பது சிறந்த உணர்வாக உள்ளது. ஒரு வீரராக மட்டுமல்ல, ஜமைக்கா தல்லாவாஸ் கேப்டனாக தொடரை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்.

நாங்கள் சிறந்த பேலன்ஸ் கொண்ட அணியை பெற்றுள்ளோம். வெறும் பெயரை மட்டும் வைத்து அணியில்லை. எப்படி விளையாடுகிறார்கள். விரைவாக ஆட்டத்தை எப்படி மாற்றுகிறார்கள் என்பதை பொறுத்துதான் அணி. நாங்கள் ஏராளமான ஆல்ரவுண்டர்களை பெற்றுள்ளோம் என்பதை உறுதியாக நம்புகிறேன். எங்கள் அணியில் இடம்பிடித்துள்ள 8 வீரர்களால் பேட்டிங் மற்றும் பந்து வீச்சில் சிறப்பாக செயல்பட முடியும்’’ என்றார்.