search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "BJP rally"

    மேற்கு வங்காளத்தில் பா.ஜனதா ரத யாத்திரைக்கு கொல்கத்தா ஐகோர்ட்டு தடை விதித்துள்ளது. இந்த தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் மேல் முறையீடு செய்யப்போவதாக பா.ஜனதா தெரிவித்துள்ளது. #BJPRally
    கொல்கத்தா:

    மேற்கு வங்காளத்தில் பா.ஜனதாவினர் மீதான தாக்குதலை கண்டித்து மாநிலம் முழுவதும் பா.ஜனதா ரத யாத்திரை நடத்த திட்டமிட்டது. இதை பா.ஜனதா தலைவர் அமித்ஷா தொடங்கி வைப்பதாகவும் அறிவிக்கப்பட்டு இருந்தது.

    பா.ஜனதா யாத்திரை நடத்தினால் மத ரீதியான சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும் என்று கூறி அதற்கு மாநில அரசு தடை விதித்தது. மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள், கமி‌ஷனர்களும் அனுமதி மறுத்து விட்டனர்.

    இதை எதிர்த்து பா.ஜனதா சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. மனுவை விசாரித்த நீதிபதி பா.ஜனதா யாத்திரைக்கு அனுமதி அளித்து உத்தரவிட்டார். இது முதல்-மந்திரி மம்தா பானர்ஜி அரசுக்கு பின்னடைவாக கருதப்பட்டது.

    இந்த நிலையில் ஒரு நீதிபதி உத்தரவை எதிர்த்து மாநில அரசு சார்பில் கொல்கத்தா ஐகோர்ட்டில் டிவிஷன் பெஞ்சில் மேல்முறையீடு செய்தது. தலைமை நீதிபதி தபசிங் கர்குப்தா, நீதிபதி அரிந்தம் முகர்ஜி அடங்கிய அமர்வு மனுவை விசாரித்தனர். அவர்கள் பா.ஜனதா ரத யாத்திரைக்கு அனுமதி அளித்த நீதிபதி பிறப்பித்த உத்தரவுக்கு தடை விதித்தனர்.

    இது தொடர்பாக போலீஸ் மற்றும் உளவுத்துறை அளித்த அறிக்கைகளை நீதிபதி ஆய்வு செய்ய தவறி விட்டார். எனவே இதுபற்றி மீண்டும் ஆய்வு செய்து விசாரிக்க வேண்டும் என்று வழக்கை அதே நீதிபதிக்கே திருப்பி அனுப்புவதாக தெரிவித்தனர்.

    31 மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுகள் 5 கமி‌ஷனர்களின் அறிக்கைகளை ஆய்வு செய்து தீர்ப்பு வழங்க வேண்டும் என்று உத்தரவிட்டனர். இதையடுத்து வழக்கு விசாரணை தள்ளி வைக்கப்பட்டது.

    பா.ஜனதா இந்த மாதம் இறுதியில் ரத யாத்திரை நடத்த திட்டமிட்டது. இன்று முதல் ஜனவரி 1-ந்தேதி வரை கோர்ட்டுக்கு கிறிஸ்துமஸ் விடுமுறை என்பதால் ஜனவரி மாதத்தில்தான் ரத யாத்திரை தொடர்பான தீர்ப்பு வரும். இதனால் திட்டமிட்டப்படி ரத யாத்திரை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

    இதற்கிடையே கொல்கத்தா ஐகோர்ட்டு தீர்ப்பை எதிர்த்து சுப்ரீம் கோர்ட்டில் விடுமுறை கால பெஞ்சில் மேல் முறையீடு செய்யப்போவதாக பா.ஜனதா தெரிவித்து உள்ளது. #BJPRally

    கொல்கத்தாவில் வரும் 11-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ள பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். #AmitShah
    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறது. #BJP #AmitShah

    அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இந்நிலையில், கொல்கத்தாவில் வரும் 11-ம் தேதி பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொள்ளவுள்ள பேரணிக்கு அனுமதி அளித்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    ஏற்கனவே, மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. #BJP #AmitShah
    மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா தெரிவித்துள்ளார். #AmitShah
    புதுடெல்லி:

    அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள பாராளுமன்ற தேர்தலில் ஆட்சியை தக்கவைக்கும் வகையில் பாஜக திட்டமிட்டு தேர்தல் பிரசாரங்களை நடத்தி வருகிறது.

    அதன் ஒரு பகுதியாக, ஆகஸ்டு மாதம் 11-ம் தேதி மேற்கு வங்காளம் மாநிலத்தில் பாஜக சார்பில் மெகா பேரணி நடத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த பேரணியில் பாஜக தலைவர் அமித் ஷா கலந்து கொண்டு உரையாற்றுகிறார்.

    இதற்கிடையே,  நேற்று முன்தினம் அசாம் குடிமக்கள் பதிவேடு தொடர்பான அறிக்கை வெளியானது. இது குறித்து மேற்கு வங்காளம் முதல் மந்திரி மம்தா பானர்ஜி கூறுகையில், இந்த அறிக்கையால் உள்நாட்டு போர் வெடிக்கும் எனக்கூறி அதிர்ச்சி அளித்தார். இதுதொடர்பாக பாஜக தலைவர்களை கடுமையாக சாடினார். 

    இந்நிலையில், மேற்கு வங்காள அரசின் அனுமதி இல்லாவிட்டாலும் நான் கொல்கத்தா செல்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என பாஜக தலைவர் அமித் ஷா இன்று தெரிவித்துள்ளார்.

    இதுகுறித்து அவர் கூறுகையில், மேற்கு வங்காளம் மாநிலத்தில் வரும் 11-ம் தேதி பாஜக சார்பில் ஏற்பாடு செய்யப்ப்பட்டுள்ள பேரணியில் பங்கேற்க செல்லவுள்ளேன். மாநில அரசு அனுமதி தராவிட்டாலும் நான் கண்டிப்பாக கலந்து கொள்வேன். முடிந்தால் என்னை கைது செய்யுங்கள் என ஆவேசமாக தெரிவித்துள்ளார். #AmitShah
    மேற்கு வங்க மாநிலத்தின் மிட்னாப்பூரில் ஜூலை 16-ம் தேதி நடைபெறவுள்ள பா.ஜ.க. பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். #BJP #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியின் கீழ் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் நடக்க உள்ள மெகா பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    அந்த பேரணியில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து உத்தரவிட்டது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து உரையாற்ற உள்ளார் என பா.க.ஜ.வினர் தெரிவித்துள்ளனர். #BJP #PMModi
    ×