search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "midnapore"

    மேற்குவங்க மாநிலம் மிட்னாப்பூரில் பேசிய பிரதமர் மோடி, தேசிய கீதம் உருவான மாநிலத்தை ஆளும் அரசு வாக்கு வங்கிக்காக பயன்படுத்திக்கொள்வதாக குற்றம்சாட்டியுள்ளார். #Modi #WestBengal
    கொல்கத்தா:

    அடுத்த ஆண்டு நடைபெற உள்ள பாராளுமன்ற தேர்தலை கருத்தில்கொண்டு, பிரதமர் மோடி பல்வேறு பகுதிகளில் பிரசாரத்தை மேற்கொண்டுள்ளார். அதன் ஒருபகுதியாக மேற்கு வங்க மாநிலம் மிட்னாப்பூரில் இன்று நடைபெற்ற பேரணியில் பிரதமர் மோடி பொதுமக்களிடையே பிரச்சாரம் செய்தார்.

    அப்போது பேசிய மோடி, மேற்கு வங்க மாநிலத்தில், மக்களுக்கான திட்டங்களை நிறைவேற்றகூட அனுமதி பெற வேண்டி இருப்பதாகவும், கோவிலில் பூஜை செய்யக்கூட அரசு அனுமதி பெற வேண்டிய நிலை இங்கு இருப்பதாகவும் குற்றம்சாட்டினார்.

    மேலும், பல்வேறு ஆண்டுகளாக மேற்கு வங்கத்தில் கம்யூனிஸ்ட் கட்சிகளின் ஆட்சியால் மாநிலத்தில் பிரச்சனைகள் அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார். மேற்கு வங்க மாநிலமானது தேசிய கீதம் உருவான புனிதமான மண் எனவும், அதனை வாக்குவங்கிக்காக மட்டுமே ஆளும் மாநில அரசு பயன்படுத்துவதாகவும் மோடி குற்றம்சாட்டியுள்ளார்.



    இதைத்தொடர்ந்து, மேற்கு வங்க ஆளும் அரசு எதிரிகளை கொலை செய்வதையே மும்முரம் காட்டிவருவதாகவும், அதன் முகத்தை இப்போது அறிந்துகொள்ளுங்கள் எனவும் பிரதமர் மோடி பேசினார். மேலும், மக்களுக்கு அநியாயம் செய்யும் இந்த அரசு ஆட்சியில் இருப்பதையே நோக்கமாக கொண்டுள்ளதாகவும், வாக்கு வங்கியை குறிவைத்தே செயல்படுவதாகவும் குறிப்பிட்டார்.

    தொடர்ந்து பேசிய பிரதமர் நரேந்திர மோடி, மத்தியில் ஆளும் பாஜக அரசு விவசாயிகளுக்கான அரசு என்றும், 2022-ம் ஆண்டில் விவசாயிகளின் வருவாயை இருமடங்காக உயர்த்தவே உழைத்து வருவதாகவும் தெரிவித்தார். #Modi #WestBengal
    மேற்கு வங்க மாநிலத்தின் மிட்னாப்பூரில் ஜூலை 16-ம் தேதி நடைபெறவுள்ள பா.ஜ.க. பேரணியில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார். #BJP #PMModi
    புதுடெல்லி:

    பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்தியில் பா.ஜ.க. ஆட்சி நடைபெற்று வருகிறது. இவரது ஆட்சியின் கீழ் நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது.

    அடுத்த ஆண்டு பாராளுமன்ற தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளில் அனைத்து கட்சியினரும் ஈடுபட்டு வருகின்றனர்.

    அதன் ஒரு பகுதியாக, பிரதமர் மோடி மேற்கு வங்க மாநிலத்தில் நடக்க உள்ள மெகா பொதுக்கூட்டத்தில் உரையாற்றுகிறார்.

    மேற்கு வங்க மாநிலம் மிட்னாபூர் மாவட்டத்தில் பா.ஜ.க. சார்பில் பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்த மெகா பொதுக் கூட்டத்தில் பிரதமர் மோடி கலந்து கொள்கிறார்.

    அந்த பேரணியில் நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை அதிகரித்து உத்தரவிட்டது உள்பட பல்வேறு நலத்திட்டங்கள் குறித்து உரையாற்ற உள்ளார் என பா.க.ஜ.வினர் தெரிவித்துள்ளனர். #BJP #PMModi
    ×