search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Ajoy Kumar"

    • தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார்
    • தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார்

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக பொருளாதார நிபுணர் ஆனந்த் சீனிவாசன் நியமிக்கப்பட்டுள்ளார் என தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் அறிவித்துள்ளார்.

    தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டியின் ஊடகம் மற்றும் தகவல் தொடர்பு துறை தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து X தளத்தில் தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி பதிவிட்டுள்ளது.

    தமிழ்நாடு காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகையும் ஆனந்த் ஸ்ரீனிவாசன் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்து தனது X தளத்தில் பதிவிட்டுள்ளார்.

    • 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    10 ஆண்டு கால மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை எதையும் கட்டுப்படுத்த அரசு தயாரில்லை. அதற்கு மாறாக விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்கட்சிகளை நசுக்கி வருகிறது.

    அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறார்கள்.


    சி.ஏ.ஜி.யை முடக்கி வைத்துள்ளார்கள். அதனால் தான் அரசுக்கு எதிராக எந்த அறிக்கையும் வருவதில்லை. விவசாயிகள் தற்கொலை பற்றி எந்த அறிக்கையும் தரவில்லை. ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக மோடி முடக்கி வைத்துள்ளார். இது ஜனநாயக நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உடன் இருந்தார்.

    அதை தொடர்ந்து மாவட்ட தலைவர் கூட்டம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது.

    முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

    • தொகுதி பங்கீடு, காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.
    • தமிழகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை முடிவுகளை டெல்லி மேலிடத்தில் தெரிவிப்பார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளராக நியமிக்கப்பட்டுள்ள அஜய் குமார் கடந்த 2 நாட்களாக காங்கிரஸ் நிர்வாகிகளுடன் பாராளுமன்ற தேர்தலை சந்திப்பது தொடர்பாக ஆலோசனை நடத்தினார்.

    மாவட்ட தலைவர்கள், எம்.எல்.ஏ.க்களை தனியாகவும் தேர்தல் பொறுப்பாளர்களை தனியாகவும் சந்தித்து பேசினார். அப்போது தொகுதி பங்கீடு, காங்கிரஸ் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் பற்றி அவர்களது கருத்துக்களை கேட்டறிந்தார்.

    அதைத் தொடர்ந்து அஜய் குமார் நிருபர்களிடம் கூறும்போது, "தி.மு.க.வுடன் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை வருகிற 28-ந்தேதி நடைபெறும்" என்றார்.

    ஏற்கனவே இரு கட்சிகளிலும் தொகுதி பங்கீட்டு பேச்சுவார்த்தை நடத்துவதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

    தமிழகத்தில் நடைபெறும் பேச்சுவார்த்தை முடிவுகளை டெல்லி மேலிடத்தில் தெரிவிப்பார்கள். பின்னர் மேலிடம் தொகுதிகளை உறுதி செய்யும்.

    ×