search icon
என் மலர்tooltip icon

    தமிழ்நாடு

    ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக பிரதமர் மோடி முடக்கி வைத்துள்ளார்- அஜோய் குமார்
    X

    ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக பிரதமர் மோடி முடக்கி வைத்துள்ளார்- அஜோய் குமார்

    • 10 ஆண்டு கால மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
    • அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறார்கள்.

    சென்னை:

    தமிழக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் சென்னை சத்தியமூர்த்தி பவனில் இன்று நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    10 ஆண்டு கால மோடி ஆட்சியில் பெட்ரோல், டீசல், கியாஸ் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இதை எதையும் கட்டுப்படுத்த அரசு தயாரில்லை. அதற்கு மாறாக விசாரணை அமைப்புகளை வைத்து எதிர்கட்சிகளை நசுக்கி வருகிறது.

    அரசை எதிர்த்து கேள்வி கேட்டால் அமலாக்கத்துறையை ஏவி சோதனை நடத்துகிறார்கள்.


    சி.ஏ.ஜி.யை முடக்கி வைத்துள்ளார்கள். அதனால் தான் அரசுக்கு எதிராக எந்த அறிக்கையும் வருவதில்லை. விவசாயிகள் தற்கொலை பற்றி எந்த அறிக்கையும் தரவில்லை. ஜனநாயகத்தை ஒட்டு மொத்தமாக மோடி முடக்கி வைத்துள்ளார். இது ஜனநாயக நாட்டுக்கு மிகப்பெரிய ஆபத்தை ஏற்படுத்தும்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    பேட்டியின் போது தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை உடன் இருந்தார்.

    அதை தொடர்ந்து மாவட்ட தலைவர் கூட்டம் மாநில தலைவர் செல்வப்பெருந்தகை தலைமையில் நடந்தது.

    முன்னதாக தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை, மேலிட பொறுப்பாளர் அஜோய் குமார் மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசினார்கள்.

    Next Story
    ×