search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 people arrested"

    • 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
    • ரகசிய தகவல் கிடைத்தது.

    கூடலூர்,

    ஓவேலி பகுதியில் கஞ்சா விற்பனை நடைபெறுவதாக போலீஸ் துணை சூப்பிரண்டு மகேஷ் குமாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து தனிப்படை போலீஸ் இன்ஸ்பெக்டர் இப்ராகிம், முத்து முருகன், அசோக் உள்ளிட்ட போலீசார் கூடலூர், ஓவேலி பகுதியில் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர். அப்போது கஞ்சா விற்றதாக கூடலூரை சேர்ந்த அலி(வயது 47), 1-ம் மைல் கோகோகாடு பகுதியை சேர்ந்த முகமது ரபிக்(45), ஓவேலி பேரூராட்சி சூண்டி மரப்பாலம் பகுதியை சேர்ந்த ரமேஷ்(24) ஆகியோரை கைது செய்தனர். தொடர்ந்து அவர்கள் வைத்திருந்த சுமார் 50 கிராம் கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

    • பைக்கில் வந்தவர்கள் தகராறில் ஈடுபட்டு பெண்ணின் கழுத்தில் இருந்த தங்கசெயினையும் பறித்துவிட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.
    • புகாரின் பேரில் போலீசார் 3 பேரை கைது செய்து மேலும் 5 பேரை தேடி வருகின்றனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் நாயுடுபுரம் பகுதிைய சேர்ந்தவர் ஆசிக்அகமது(46). இவர் உடல்நலம் சரியில்லாத தனது மனைவியை காரில் அழைத்துக்கொண்டு பெர்ன்ஹில்சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது காருக்குமுன்னால் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த வாலிபர்கள் வழி விடாமல் சென்றனர்.

    இதுகுறித்து ஆசிக்அகமது அவர்களிடம் தான் ஆஸ்பத்திரிக்கு செல்லவேண்டும் என்பதால் தனக்கு வழிவிடுமாறு கூறியுள்ளார். ஆனால் பைக்கில் வந்தவர்கள் அதனை கேட்காமல் அவருடன் தகராறு செய்தனர். அப்போது தகராறை தடுக்க வந்த ஆசிக் மனைவியின் கழுத்தில் இருந்த தங்கசெயினையும் பறித்துவிட்டு கொலைமிரட்டல் விடுத்துள்ளனர்.

    இதுகுறித்து கொடைக்கானல் போலீசில் ஆசிக்அகமது புகார் அளித்தார். அதன்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் விஜயபாண்டியன் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தி தகராறில் ஈடுபட்ட ஆனந்தகிரி 4-வது தெருவை சேர்ந்த காளி(30), பிரபு, நவீன் ஆகிய 3 பேரை கைது செய்தனர். மேலும் அவர்களுடன் தகராறில் ஈடுபட்ட மேலும் 5 பேரையும் தேடி வருகின்றனர்.

    • 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.
    • 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    அன்னூர்,

    கோவை மாவட்டம் அன்னூரை அடுத்துள்ள கணேசபுரம், தெலுங்கு பாளையம் பகுதிகளில் சட்டவிரோதமாக தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அன்னூர் இன்ஸ்பெக்டர் நித்யாவிற்கு ரகசிய தகவல் வந்தது.

    தகவலின் பேரில் எஸ்ஐக்கள் ஆனந்த குமார்,செல்வராஜ் உள்ளிட்டோர் தலைமை யிலான போலீசார் அப்பகுதிகளில் செயல்பட்டு வரும் மளிகை மற்றும் பெட்டிக்கடைகளில் தீவிர சோதனையில் ஈடுபட்டனர்.

    அப்போது,கணேசபுரம் பகுதியில் செயல்பட்டு வரும் காட்டம்பட்டியை சேர்ந்த செல்லத்துரை(41) என்பவரது மளிகை கடையில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை சட்ட விரோதமாக பதுக்கி வைத்து விற்பனையில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது.இதனையடுத்து அவரை கைது செய்த போலீசார் அவரிடமிருந்து 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    மேலும்,தெலுங்கு பாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் ஒடிசா மாநிலத்தை சேர்ந்த சுப்ரத்குமார் ஸ்வைன்(35),சத்யபிராத் ஸ்வைன்(30) உள்ளிட்டோரின் பெட்டிக்க டைகளை சோதனை மேற்கொண்டதில் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததும் கண்டுபிடிக்கப்பட்டது.இதனை யடுத்து இருவரையும் கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 5 கிலோ தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

    பின்னர், 3 பேரையும் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

    • கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்பனை அதிகரித்து வருகிறது.
    • கஞ்சா பயிரிட்டு விற்பனை செய்த 3 பேரை போலீசார் கைது செய்தனர்.

    கொடைக்கானல்:

    கொடைக்கானல் மலைப்பகுதியில் கஞ்சா மற்றும் போதைக்காளான் விற்பனை அதிகரித்து வருகிறது. தொடர்ந்து போலீசார் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தாலும் கஞ்சா விற்பனை அமோகமாக நடைபெற்று வருகிறது.

    சுற்றுலாப்பயணிகளை குறிவைத்து சில சமூக விரோத கும்பல்கள் அதிக அளவில் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். இந்த நிலையில் கொடைக்கானல் அருகே அக்கரைக்காடு பகுதியில் கஞ்சா விவசாயம் மேற்கொண்டு வருவதாக கிடைத்த ரகசிய தகவலின் அடிப்படையில் கொடைக்கானல் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன் தலைமையில், போலீசார் ராமராஜன், காசி, சரவணன் ஆகியோர் அங்கு விரைந்தனர்.

    அப்போது அக்கரைக்காடு பகுதியில் ராஜா, மகேந்திரன், பெனாசீர் ஆகியோரிடம் இருந்து சுமார் 10 கிலோ கஞ்சா மற்றும் கஞ்சா செடிகளும் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    கஞ்சா செடிகள் எங்கெங்கு பயிரிட்டுள்ளனர் என்பது குறித்தும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர். கஞ்சா செடி வளர்த்த இடம் வனத்துறைக்கு கட்டுப்பட்டதா அல்லது வருவாய் துறைக்கு கட்டுப்பட்டதா என்றும் அவர்களை கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

    • மோட்டார் சைக்கிளில் “வீலிங்” சாகசம் செய்த கல்லூரி மாணவர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • மதுரை மாநகரில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வீலிங் சென்று, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்யும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.

    மதுரை

    மதுரை மாநகரில் அதிவேகமாக மோட்டார் சைக்கிளில் வீலிங் சென்று, அதனை வீடியோ எடுத்து சமூக வலைதளத்தில் பதிவு செய்யும் கலாசாரம் அதிகரித்து வருகிறது.

    எனவே இதில் ஈடுபடுபவர்களை உடனடியாக கைது செய்ய மாநகர வடக்கு துணை கமிஷனர் மோகன்ராஜ் மேற்பார்வையில், தல்லாகுளம் உதவி கமிஷனர் ஜெகன்நாதன் ஆலோசனை பேரில், போலீஸ் இன்ஸ்பெக்டர் பாலமுருகன் தலைமையிலான தனிப்படை அமைக்கப்பட்டது.

    தனிப்படை போலீசார் சொக்கிகுளம், வல்லபாய் ரோட்டில் ரோந்து சென்றனர். அப்போது அங்கு 2 பேர் மோட்டார் சைக்கிள்களில் பொதுமக்களை அச்சுறுத்தும் வகையில் அதிவேகமாக வந்து, "வீலிங்" செய்து கொண்டிருந்தனர்.

    அதனை ஒருவர் வீடியோ வாக பதிவு செய்து கொண்டு இருந்தார். உடனே தனிப்படை போலீசார் மேற்கண்ட 3 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் இருந்த செல்போன், வீடியோ காமிரா, மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டன.

    இதனைத்தொடர்ந்து தனிப்படை போலீசார் விசாரித்ததில் அவர்கள் கல்லூரி மாணவர்கள் என தெரியவந்தது. 3 பேரையும் போலீசார் கைது செய்தனர்.

    மோட்டார் சைக்கிளில் வீலிங் சென்று இன்ஸ்டா கிராம் மற்றும் யூ-டியூப் சமூக வலைதள பக்கங்களில் பதிவு செய்ய வேண்டும் என்பதற்காக அவர்கள் மேற்கண்ட செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.

    மோட்டார் சைக்கிளில் வீலிங் செய்து பொது மக்களை அச்சுறுத்தும் வகையில் செயல்பட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில் குமார் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

    • வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
    • 7 பெண்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் நகரில் வாடகைக்கு வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வருவதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்ததின் பேரில் சந்தேகத்திற்குரிய இடத்தில் சோதனை நடத்தினர்.

    விழுப்புரம் தாலுகா காவல் ஆய்வாளர் ஆனந்தன் தலைமையிலான போலீசார், விழுப்புரம் சாலாமேடு என்.ஜி.ஜி.ஓ. நகரில் ரகசியமாக நோட்டமிட்டனர். அப்போது கடலூர் மாவட்டம் பண்ருட்டியை அடுத்த சொரத்தூரை சேர்ந்த வினோ(28) மற்றும் மரகதபுரம் சத்தியா(34) ஆகிய இருவரும் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து பெண்களை வைத்து விபசாரத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. அதேபோல் விழுப்புரம் மேற்கு காவல் நிலைய ஆய்வாளர் செல்வராஜ் மற்றும் போலீசார் பூந்தோட்டம் பாதை என்ற பகுதியில் விபச்சாரம் நடப்பதாக கிடைத்த தகவலின் பேரில் சோதனை நடத்தியதில் ஒரு பெண் வாடகை வீடு எடுத்து பெண்களை வைத்து விபச்சாரத்தில் ஈடுபட்டு வந்துள்ளனர். அப்போது பெண்ணுடன் விபச்சாரத்தில் ஈடுபட்ட பனையபுரம் பகுதியை சேர்ந்த அபுல்ஹசன் என்ற நபரை போலீசார் கைது செய்தனர்.

    விழுப்புரத்தில் இருவெவ்வேறு இடங்களில் வாடகை வீடு எடுத்து விபச்சாரத்தில் ஈடுபட்ட 3 நபர்களை போலீசார் வழக்கு பதிந்து கைது செய்தனர். மேலும் 7 பெண்களை மீட்டு அனுப்பி வைத்தனர்.

    • போலீசார் ரோந்து சென்றபோது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை அழைத்து விசாரித்ததில் போதைக்காளான் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.
    • 1.100 கிராம் கஞ்சா, 100 கிராம் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடைக்கானல் போலீசார் சிறையில் அடைத்தனர்.

    கொடைக்கானல்:

    திண்டுக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பாஸ்கரன் உத்தரவின் படி கொடைக்கானல் டி.எஸ்.பி சீனிவாசன் அறிவுறுத்தலின்படி கொடைக்கானல் பகுதிகளில் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனை செய்பவர்களை கைது செய்ய கொடைக்கானல் போலீஸ் இன்ஸ்பெக்டர் பாஸ்டின் தினகரன், சப்-இன்ஸ்பெக்டர்கள் கிருஷ்ணகுமார், ராமராஜ், தலைமைக் காவலர் காசிநாதன், முதல் நிலைக் காவலர் சரவணன் ஆகியோர் கொண்ட தனிப்படையை அமைத்து தேடி வந்தனர்.

    கே.ஆர்.ஆர் கலையரங்கம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது சந்தேகப்படும்படியாக நின்று கொண்டிருந்த 3 நபர்களை அழைத்து விசாரித்ததில் போதைக்காளான் கஞ்சா விற்பனை செய்பவர்கள் என தெரியவந்தது.

    மேலும் அவர்கள் கொடைக்கானல் அப்சர்வேட்டரி வி.ஜி.பி கார்டன் பகுதியை சேர்ந்த சந்தோஷ் (32), அப்சர்வேட்டரி செல்லப்புரம் பகுதியை சேர்ந்த ராஜபாண்டி (26), தாமஸ் டவுன் புதிய பெங்களூர் வடக்கு பகுதியைச் சேர்ந்த கிளிப்ட்அகஸ்டின் (27) ஆகியோர் கஞ்சா மற்றும் போதை காளான் விற்பனையில் ஈடுபட்டது தெரிய வந்தது.

    அவர்களிடமிருந்து 1.100 கிராம் கஞ்சா, 100 கிராம் போதை காளான் பறிமுதல் செய்யப்பட்டது.அவர்கள் மீது வழக்கு பதிவு செய்து கொடைக்கானல் போலீசார் சிறையில் அடைத்தனர். இவர்கள் தொடர்புடைய வேறு யாரேனும் உள்ளனரா என்பது குறித்து அவர்களிடம் தீவிர விசாரணை செய்து வருகின்றனர்.

    • கோவில் உண்டியலை உடைத்து பணம் திருடிய 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
    • பாண்டியன் தனது விவசாயத் தோட்டத்தில் மதுரை வீரன் கோவிலை கட்டியுள்ளார்.

    திருச்சி,

    திருச்சி புத்தாநத்தம் கள்ளக்கம்பட்டி பகுதியைச் சேர்ந்தவர் பாண்டியன் (வயது 35). இவர் தனது விவசாயத் தோட்டத்தில் மதுரை வீரன் கோவிலை கட்டியுள்ளார். இதில் அவரது குடும்பத்தினர் சாமி கும்பிட்டு வந்தனர்.

    இந்த நிலையில் வழக்கம்போல் மாலையில் மதுரை வீரனுக்கு பூஜை செய்துவிட்டு பாண்டியன் வீடு திரும்பினார். பின்னர் மறுநாள் காலையில் சென்று பார்த்தபோது கோவில் உண்டியல் உடைக்கப்பட்டு கிடந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் பாண்டியன் புத்தாநத்தம் போலீசில் புகார் செய்தார்.

    போலீசார் வழக்கு பதிவு செய்து மருங்காபுரி கஞ்சநாயக்கன்பட்டி செட்டிபட்டி பகுதியைச் சேர்ந்த கோபாலகிருஷ்ணன் (20) மோகன்ராஜ்( 21) வேலன் (பெயர் மாற்றப்பட்டுள்ளது) (15) ஆகிய மூன்று பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.565 பறிமுதல் செய்தனர்.

    • சந்தோஷ்குமாருக்கும் (வயது 24), அசோக்கிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
    • இதனை அசோக்கின் உறவினரான பெயிண்டர் கார்த்திக் (35) தட்டிக்கேட்டார்.

    கரூர் :

    கரூர் வெங்கமேடு பகுதியை சேர்ந்தவர் அசோக். இவர் வெங்கமேடு பகுதியில் உள்ள ஒரு திரையரங்கம் அருகே நின்று கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அதே பகுதியை சேர்ந்த சந்தோஷ்குமாருக்கும் (வயது 24), அசோக்கிற்கும் இடையே திடீரென வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து அசோக் அங்கிருந்து தனது வீட்டிற்கு சென்று விட்டார்.

    இதனையடுத்து சந்தோஷ்குமார், நம்பிராஜ் (25), சதீஷ்குமார் (25) ஆகிய 3 பேரும் அசோக் வீட்டிற்கு சென்று வாக்குவாதம் தொடர்பாக பிரச்சினை செய்து அவரை தகாதவார்த்தையால் திட்டியுள்ளனர். இதனை அசோக்கின் உறவினரான பெயிண்டர் கார்த்திக் (35) தட்டிக்கேட்டார். இதனால் அவர்களுக்கு இடையே வாய்த்தகராறு ஏற்பட்டது.

    இதில் ஆத்திரமடைந்த சந்தோஷ்குமார், நம்பிராஜ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரும் சேர்ந்து கார்த்திக்கை தாக்கி தகாதவார்த்தையால் திட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    அங்கு அவர் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் குறித்து கார்த்திக் கொடுத்த புகாரின்பேரில், வெங்கமேடு போலீசார் சந்தோஷ்குமார், நம்பிராஜ், சதீஷ்குமார் ஆகிய 3 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • லோயர்கேம்ப் சப்-இன்ஸ்பெக்டர் தலைமையிலான போலீசார் குமுளி பஸ்நிறுத்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர்.
    • லாட்டரி கடத்தி வந்த 3 பேரை கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 800 மதிப்பிலான 2244 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    கூடலூர்:

    தமிழகத்தில் லாட்டரி சீட்டு விற்பனைக்கு தடைவிதிக்கப்பட்ட போதும் அண்டை மாநிலங்களில் இருந்து கடத்தி வந்து விற்கப்படுகிறது. குறிப்பாக தேனி மாவட்டம் கேரள எல்லைப்பகுதியில் அமைந்துள்ளதால் அங்கிருந்து அதிகளவில் லாட்டரி சீட்டுகள் தமிழக பகுதிக்கு கொண்டுவரப்பட்டு கூலித்தொழிலாளர்களை குறிவைத்து விற்பனை செய்யப்படுகிறது.

    லோயர்கேம்ப் சப்-இன்ஸ்பெக்டர் கணேசன் தலைமையிலான போலீசார் குமுளி பஸ்நிறுத்த பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது சந்தேகத்திற்கிடமாக சுற்றித்திரிந்த 3 பேரை பிடித்து விசாரித்தனர்.

    விசாரணையில் அவர்கள் கூடலூரை சேர்ந்த சவுடையன்(56), திண்டுக்கல் ராம்நகரை சேர்ந்த சூசைஆரோக்கியம்(66), மதுரை பேரையூரை சேர்ந்த நாராயணன்(74) என்பதும், கேரளாவில் இருந்து தமிழகத்திற்கு லாட்டரி கடத்தி வந்ததும் தெரியவந்தது. போலீசார் 3 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்து ரூ.1லட்சத்து 800 மதிப்பிலான 2244 லாட்டரி சீட்டுகளை பறிமுதல் செய்தனர்.

    • கடலூர் துறைமுகம் போலீசார் சாராயம் வழக்கு சம்மந்தமாக சோதனை மேற்கொண்டனர்.
    • போலீசார் சாராயத்தை கைப்பற்றினர். பின்னர் கடலூர் துறைமுகம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர்.

    கடலூர்:

    கடலூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கரிகால் பாரிசங்கர் உத்தரவின்பேரில், தனிப்படை சப் இன்ஸ்பெக்டர் தவச்செல்வம் மற்றும் கடலூர் துறைமுகம் போலீசார் சாராயம் வழக்கு சம்மந்தமாக சோதனை மேற்கொண்டனர். அப்போது துறைமுகம்ஆ ற்றங்கரை வீதியை சேர்ந்த பிரியன் (வயது 30) என்பவர் சுமார் 120 லிட்டர் சாராயம் பாக்கெட்டுகள் வைத்திருந்தார்.

    பச்சையாங்குப்பம் முத்தாலம்மன் கோவில் தெருவை சேர்ந்ததெய்வானை ( 55) என்பவர் சுமார் 70 லிட்டர் சாராயம், தியாகவல்லி அம்பேத்கார் நகரை சேர்ந்த தர்மமூர்த்தி (வயது 31)என்பவர் சுமார் 145 லிட்டர் சாராயம் வைத்திருந்தனர். இவர்களிடம் போலீசார் சாராயத்தை கைப்பற்றினர். பின்னர் கடலூர் துறைமுகம் போலீசார் 3 பேரையும் கைது செய்தனர். 

    • விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ் என்பவரை 2020-ம் ஆண்டு எதிர்த்தரப்பினர் கொலை செய்தனர்.
    • சுபாஷ் தரப்பை சேர்ந்த அமிர்தலிங்கத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    கடலூர்:

    கடலூர் அருகே நெல்லிக்குப்பம் கீழ் அருங்குணம்பகுதியை சேர்ந்தவர் கவியரசு(வயது 23).இவரது தந்தை தங்கவேலுவை கடந்த 2019-ம் ஆண்டு அதே பகுதியை சேர்ந்த நபர்கள் முன்விரோதம் காரணமாக கொலை செய்தனர். இதனை தொடர்ந்து பழிக்கு பழி வாங்கும் சம்பவமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி ஒன்றிய செயலாளர் சுபாஷ் என்பவரை 2020-ம் ஆண்டு எதிர்த்தரப்பினர் கொலை செய்தனர். இதன் காரணமாக2 தரப்பினருக்கும் முன்விரோதம் இருந்து வந்தது. இந்த நிலையில் கவியரசு, அவரது உறவினர் ராஜதுரை ஆகியோர் குச்சிபாளையம் பகுதியில் நின்று கொண்டிருந்தனர். அப்போது அதே பகுதியை சேர்ந்த 5 பேர் கொண்ட கும்பல் முன்விரோதம் காரணமாக 2 பேரையும் தாக்கி கொலை மிரட்டல் விடுத்ததனர். மேலும் சுபாஷ் தரப்பை சேர்ந்த அமிர்தலிங்கத்தையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

    இந்த மோதலில் ராஜதுரை மற்றும் அமிர்தலிங்கம் ஆகியவருக்கு காயம் ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர். இது குறித்து நெல்லிக்குப்பம் போலீஸ் நிலையத்தில் கவியரசு கொடுத்த புகாரின் பேரில் கீழ் அருங்குணம் சேர்ந்தவர்கள் சேதுபதி, கண்ணதாசன், ஆகாஷ், ஸ்ரீதர், பாஸ்கர் ஆகியோர் மீதும் அமிர்தலிங்கம் கொடுத்த புகாரின் பேரில் கவியரசன், ராஜதுரை என 7 பேர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர். இதில் சேதுபதி, கண்ணதாசன், கவியரசன் ஆகியோரை போலீசார் கைது செய்தனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பாக காணப்பட்டு வருகின்றது. மேலும் அசம்பாவிதம் நடைபெறாமல் இருக்க போலீசாரும் குவிக்கப்பட்டு உள்ளனர்.

    ×