search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "3 PERSONS"

    கள்ளக்குறிச்சி:

    கள்ளக்குறிச்சி மாவட்டம் சங்கராபுரத்தை அடுத்து மஞ்சபுத்தூர் கிராமத்தில் கிருஷ்ணர் கோவில் கட்ட சிலர் முடிவு செய்தனர். இதற்கான பணத்தை தயார் செய்வதற்காக அதே ஊரைச் சேர்ந்த மணிகண்டன் (34) என்பவர் சிலருடன் சேர்ந்து சீட்டு நடத்தி வந்தார். இதில் அதே ஊரைச் சேர்ந்த பெரியசாமி (40) உட்பட 11 பேர் பணம் கட்டாமல் இருந்ததாக கூறப்படுகிறது. இது குறித்து மணிகண்டன் பெரியசாமி இடம் கேட்டார்.

    இதில் ஆத்திரம் அடைந்த பெரியசாமி மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஏழுமலை, சதீஷ்குமார் (24), கலியமூர்த்தி (28) ஆகியோர் மணிகண்டனை திட்டி தாக்கினர். இது குறித்த புகாரின் பேரில் சங்கராபுரம் சப்-இன்ஸ்பெக்டர் லோகேஸ்வரன் வழக்கு பதிவு செய்து ஏழுமலை, சதீஷ்குமார், கலியமூர்த்தி ஆகியோரை கைது செய்தனர். மேலும் பெரிய சாமியை தேடி வருகின்றனர்.

    • காடம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த தருமபுரியை சேர்ந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
    • இதில் பரத்ராஜ் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், எழிலரசன் கோவை தனியார் மருத்துவ மனை யிலும், விஜயன் பெங்களூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள சிக்கம்பட்டி கிராமம், பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் பரத்ராஜ் (வயது 19). இவரது நண்பர் எழிலரசன் (19). இருவரும் சம்பவத்தன்று எழிலரசனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் காடம்பட்டியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்தனர்.

    பரத்ராஜ் வண்டியை ஓட்ட எழிலரசன் பின்னால்

    அமர்ந்திருந்தார். காடம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த தருமபுரியை சேர்ந்த விஜயன் (31) என்பவர் மோதியதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதில் பரத்ராஜ் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், எழிலரசன் கோவை தனியார் மருத்துவ மனை

    யிலும், விஜயன் பெங்களூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர், இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொண்டம்பட்டி, கணக்கன்காடு பகுதியில் நாய்கடி புதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் 3 இளைஞர்கள் நின்று கொண்டு மதுபோதை யில் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.
    • அந்த 3 வாலிபர்களையும் அழைத்து இந்த பகுதியில் நிற்க கூடாது, நீங்கள் யார், எந்த ஊர், எதற்காக சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் நீ யார் எங்களை கேட்பது என்று கூறி நாங்கள் அப்படி தான் சத்தம் போடுவோம் என அவரை பேசினர்.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம், வேலகவுண்டம்பட்டி அருகே உள்ள கொண்டம்பட்டி, கணக்கன்காடு பகுதியை சேர்ந்தவர் நல்லதம்பி (வயது 60) விவசாயி. இவர் கடந்த சில தினங்களுக்கு முன்பு வேலகவுண்டம்பட்டிக்கு தனது மொபட்டில் சென்று கொண்டு இருந்தார்.

    நாய்கடி புதூர் பஸ் நிறுத்தம் அருகே சென்று கொண்டிருந்தபோது அப்பகுதியில் 3 இளைஞர்கள் நின்று கொண்டு மதுபோதை யில் சத்தம் போட்டுக் கொண்டிருந்ததை பார்த்துள்ளார்.

    அப்போது நல்லதம்பி அந்த 3 வாலிபர்களையும் அழைத்து இந்த பகுதியில் நிற்க கூடாது, நீங்கள் யார், எந்த ஊர், எதற்காக சத்தம் போடுகிறீர்கள் என்று கேட்டுள்ளார். அப்போது அவர்கள் நீ யார் எங்களை கேட்பது என்று கூறி நாங்கள் அப்படி தான் சத்தம் போடுவோம் என அவரை பேசினர்.

    மேலும் நல்லதம்பியை தாக்கி கொலைமிரட்டல் விடுத்து விட்டு அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

    இது குறித்து நல்லதம்பி வேலகவுண்டம்பட்டி போலீசில் புகார் செய்தார்.புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து நல்ல தம்பியை தாக்கிய நாமக்கல் தாலுகா, கோதூர், அண்ணா நகரை சேர்ந்த துரைசாமி மகன் விக்னேஷ் (24), பரமத்திவேலூர் தாலுகா, பரமத்தி அருகே உள்ள செருக்கலைபுதுப்பாளை யத்தைச் சேர்ந்த முத்து என்பவர் மகன் மணி கண்டன்(23), அதே பகுதியைச் சேர்ந்த பூமிநாதன் மகன் பிரபாகரன் (22) ஆகிய 3 பேர்களையும் வேலக வுண்டம்பட்டி போலீசார் கைது செய்தனர்.

    தொடர்ந்து விசாரணை நடத்தி 3 பேரையும் நாமக்கல் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு நாமக்கல் சிறையில் அடைக்கப்பட்டனர்.

    • போலி லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் கிடைத்தையடுத்து, குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
    • போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த 2½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    குமாரபாளையம்:

    குமாரபாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார்(வயது 45), சேகர்(55). இவர்கள் அதே பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் கிடைத்தையடுத்து, குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.

    இதே போல் வட்டமலை பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(45) அதே பகுதியில் குட்கா விற்பதாக தகவல் கிடைத்தது. குமாரபாளையம் போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த 2½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.

    • பாதை தகராறில் 3 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
    • கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது.

    அரியலூர்:

    அரியலூர் மாவட்டம், உடையார்பாளையம் அருகே வாத்திக்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சேப்பெருமாள். விவசாயி. இவரது மகன்கள் முருகேசன், செல்வராசு. இவர்கள் இருவருக்கும் பாதை பிரச்சினை சம்மந்தமாக முன் விரோதம் இருந்து வந்தது. இந்நிலையில் நேற்று இருவருக்கும் தகராறு ஏற்பட்டது. இதில் முருகேசனை செல்வராசு, அவரது மகன் ரஜினி மற்றும் உறவினர் சங்கர் ஆகிய 3 பேரும் சேர்ந்து தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டல் விடுத்தாக கூறப்படுகிறது. இதுகுறித்து உடையார்பாளையம் போலீஸ் நிலையத்தில் முருகேசன் புகார் அளித்தார். புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • திருப்பத்தூர் அருகே குடோனில் பதுக்கி வைத்திருந்த ரேசன் அரிசி, உளுந்து பறிமுதல் செய்யப்பட்டது.
    • போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    சிவகங்கை

    தமிழக அரசின் சார்பில் பொதுமக்களின் அத்தியாவசியத் தேவையான உணவு தேவைக்கு இலவசமாக அரிசி வழங்கப்பட்டு வருகிறது.

    இதனை பிற இடங்களில் கூடுதலாக விற்பனை செய்வதற்காக அல்லது தேவைக்காக கடத்தலில் ஈடுபடுவோர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க அரசு உத்தரவிட்டுள்ளது.

    அதன் அடிப்படையில் பல்வேறு நிலைகளில் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட கீழச்செவல்பட்டி கிராமத்தில் உள்ள தனியார் கிட்டங்கியில் அரசின் குடிமைப் பொருட்களான அரிசி 50 கிலோ சிப்பமாக 73 மூட்டைகளும், 40 கிலோ சிப்பமாக 6 மூட்டை உளுந்து என 3 ஆயிரத்து 890 கிலோ அரிசி பதுக்கி வைக்கப்பட்டு இருப்பதாக குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வு பிரிவு போலீசுக்கு தகவல் வந்தது. இதையடுத்து அவர்கள் அந்த தனியார் குடோனில் திடீர் சோதனை நடத்தினர்.

    அப்போது, மேற்கண்ட குடிமைப் பொருட்கள் பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டறியப்பட்டது. குேடானில் பணியாற்றிய சுப்பிரமணியன், சுரேஷ்குமார், கிட்டங்கி உரிமையாளார் மாரிமுத்து ஆகியோர் மீது குடிமைப் பொருள் வழங்கல் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    • வரதட்சணை புகாரில் கணவர் உட்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்துள்ளனர்.
    • நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார்

    திருச்சி :

    திருச்சி மாவட்டம், மட்டப்பாறைபட்டி பகுதியை சேர்ந்தவர் மீனா குமாரி (வயது25). இவர் திருச்சி மாநகரம் கேகே நகர் சுப்ரமணியன் நகர் பகுதியை சேர்ந்த சதீஷ் குமார் என்பவரை கடந்த 2009ம் ஆண்டு மார்ச் மாதம் திருமணம் செய்து கொண்டார்.

    இந்தநிலையில் மீனாகுமாரி இடம் கணவர், மாமனார், மாமியார் ஆகியோர் வரதட்சணை கேட்டு துன்புறுத்தி வந்ததாக கூறப்பட்டது. இதையடுத்து அவர் திருச்சி கூடுதல் நீதிமன்றத்தில் புகார் மனு ஒன்றை கொடுத்துள்ளார். அதன் அடிப்படையில் நீதிமன்ற வழிகாட்டுதலின்படி கணவர் சதீஷ்குமார், மாமனார் சின்னசாமி, மாமியார் மணிமொழி ஆகிய 3 பேர் மீது கன்டோன்மென்ட் காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

    ×