

குமாரபாளையம்:
குமாரபாளையம் காவேரி நகர் பகுதியை சேர்ந்தவர்கள் ராஜ்குமார்(வயது 45), சேகர்(55). இவர்கள் அதே பகுதியில் போலி லாட்டரி சீட்டு விற்பதாக தகவல் கிடைத்தையடுத்து, குமாரபாளையம் போலீசார் நேரில் சென்று கையும் களவுமாக பிடித்து கைது செய்தனர்.
இதே போல் வட்டமலை பகுதியை சேர்ந்த முத்துக்குமார்(45) அதே பகுதியில் குட்கா விற்பதாக தகவல் கிடைத்தது. குமாரபாளையம் போலீசார் அவரை கைது செய்து, அவரிடமிருந்த 2½ கிலோ குட்காவை பறிமுதல் செய்தனர்.