search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    மோட்டார் சைக்கிள்கள் மோதி 3 பேர் காயம்
    X

    மோட்டார் சைக்கிள்கள் மோதி 3 பேர் காயம்

    • காடம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த தருமபுரியை சேர்ந்த 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.
    • இதில் பரத்ராஜ் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், எழிலரசன் கோவை தனியார் மருத்துவ மனை யிலும், விஜயன் பெங்களூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர்.

    தாரமங்கலம்:

    தாரமங்கலம் அருகி லுள்ள சிக்கம்பட்டி கிராமம், பெரியகாடம்பட்டி பகுதியை சேர்ந்த சக்திவேல் மகன் பரத்ராஜ் (வயது 19). இவரது நண்பர் எழிலரசன் (19). இருவரும் சம்பவத்தன்று எழிலரசனுக்கு சொந்தமான மோட்டார் சைக்கிளில் காடம்பட்டியில் இருந்து தாரமங்கலம் நோக்கி வந்தனர்.

    பரத்ராஜ் வண்டியை ஓட்ட எழிலரசன் பின்னால்

    அமர்ந்திருந்தார். காடம்பட்டி பேருந்து நிறுத்தம் அருகே சென்ற போது தாரமங்கலத்தில் இருந்து ஓமலூர் நோக்கி மோட்டார் சைக்கிளில் வந்த தருமபுரியை சேர்ந்த விஜயன் (31) என்பவர் மோதியதில் 3 பேரும் பலத்த காயம் அடைந்தனர்.

    இதில் பரத்ராஜ் சேலம் அரசு ஆஸ்பத்திரியிலும், எழிலரசன் கோவை தனியார் மருத்துவ மனை

    யிலும், விஜயன் பெங்களூர் மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டுள்ளனர், இதுபற்றி தாரமங்கலம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×