search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "2 people died"

    • விபத்துகளில் பைக் மோதியும், தவறிவிழுந்தும் 2 பேர் பலியாகினர்.
    • ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    உத்தமபாளையம்:

    உத்தமபாளையம் அருகே காமயகவுண்டன்பட்டியை சேர்ந்தவர் முத்தையா(60). இவர் புல் அறுப்பதற்காக தனது மோட்டார் சைக்கி ளில் நாராயணத்தே வன்பட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது கம்பத்தை சேர்ந்த வசந்தகுமார்(22) என்பவர் மற்றொரு மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்து மோதினார்.

    இதில் வசந்தகுமார் சம்பவ இடத்திலேயே பலியானார். காயமடைந்த முத்தையா கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார். பின்னர் மேல்சிகிச்சைக்காக தேனி க.விலக்கு அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார்.

    உத்தமபாளையம் அருகே சுருளிபட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்தவர் பார்த்திபன்(54). இவர் சுருளிபட்டி சாலையில் சென்று கொண்டிருந்தார். கோழிப்பண்ணை அருகே வந்தபோது திடீரென நிலைதடுமாறி பைக்கில் இருந்து கீழே விழுந்தார். கம்பம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டபோது பார்த்திபன் ஏற்கனவே இறந்துவிட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர்.

    இந்த 2 சம்பவங்கள் குறித்து ராயப்பன்பட்டி போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்ற னர்.

    • விபத்தை ஏற்படுத்திய கார் கவிழ்ந்ததில் அதில் வந்த எரிக் (11) என்ற சிறுவன் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் பிலாரிப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் லண்டன் பிரசாத் (வயது 37). இவர் வேல்வார்கோட்டையில் உள்ள நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது வேளாங்கன்னியில் இருந்து கேரளா நோக்கி வந்த கார் பயங்கரமாக மோதியது. அந்த காரை கேரள மாநிலம் மறையூர் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் வின்சென்ட் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த விபத்தில் சைக்கிளில் வந்த லண்டன் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் கவிழ்ந்ததில் அதில் வந்த எரிக் (11) என்ற சிறுவன் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ரோட்டை வாலிபர் ஒருவர் கடக்க முயன்றார்.
    • எந்த ஊரை சேர்ந்தவர்?

    கோவை,

    கோவை சுந்தராபுரம் அருகே உள்ள கல்லுகுழி ரோட்டை சேர்ந்தவர் சிவசாமி (வயது 36).

    கூலித் தொழிலாளி. சம்பவத்தன்று இவர் தனது மொபட்டில் சம்பவத்தன்று சிவசாமி மது போதையில் தனது மொபட்டில் வீட்டிற்கு சென்று கொண்டு இருந்தார். மொபட் மாரியம்மன் கோவில் வீதி அருகே சென்ற போது நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

    இதில் தலையில் பலத்த காயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனளிக்காமல் சிவசாமி பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து மேற்கு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    கோவை-அவினாசி ரோட்டை 25 வயது மதிக்க தக்க வாலிபர் ஒருவர் கடக்க முயன்றார். அப்போது அந்த வழியாக சென்ற கார் வாலிபர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்து உயிருக்கு போராடிய அவரை அந்த வழியாக சென்றவர்கள் மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்தனர்.

    இது குறித்து சூலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து கார் மோதி இறந்த வாலிபர் யார் ?எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.  

    • 2 பேரின் உடல்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
    • ஆர்.டி.ஓ.தனது விசாரணையை தொடங்கினார்.

    ஊட்டி,

    சென்னையை சோ்ந்த குமரேசன் என்பவருக்கு உதகையில் மஞ்சனக்கொரை குந்தா ஹவுஸ் பகுதியில் சொந்த இடம் உள்ளது.

    இவா், அந்த இடத்தில் வீடு கட்டுவதற்கான பணிகளை தனியாா் ஒப்பந்ததாரா் அா்ஷத்திடம் அளித்திருந்தாா்.

    இவரது அறிவுறுத்த லின்படி வீடுகட்டும் பணியில் 10 தொழிலாளா்கள் ஈடுபட்டிருந்தனா். கடந்த ஒரு மாதமாக பணிகள் நடைபெற்று வருகிறது.வீட்டின் அருகே தடுப்புச் சுவா் கட்டுவதற்காக பள்ளம் தோண்டும் பணிகள் நடந்தது. அந்த பணியில் சேலம் மாவட்டம், ஓமலூரை அடுத்த மாரக்கவுண்டன்புதூா் பகுதியை சோ்ந்த சேட்டு(54), வேலு(28) உள்பட 4 பேர் ஈடுபட்டிருந்தனா். அப்போது, திடீரென மண் சரிவு ஏற்பட்டது.

    இதில், சேட்டு, வேலு ஆகியோா் மீது மண் விழுந்து மூடியதால், இருவரும் நிலத்திற்குள் புதைந்தனா்.

    இதுகுறித்து தகவல் அறிந்த தீயணைப்பு துறையினர் விரைந்து வந்து 2 பேரின் உடல்களை மீட்டு ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    விபத்து குறித்து அறிந்த மாவட்ட கலெக்டர் அம்ரித், சம்பவ இடத்திற்கு சென்று ஆய்வு செய்தாா். இதுகுறித்து அவா் கூறுகையில்,

    தடுப்புச் சுவருக்காக பள்ளம் தோண்டும் பணிகள் போதிய பாதுகாப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படாமல் நடைபெற்றுள்ளன.

    இதுகுறித்து விசாரிக்க ஆா்.டி.ஓ. விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. முதல் தகவல் அறிக்கை பதிவுசெய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

    அதன்படி ஆர்.டி.ஓ.தனது விசாரணையை தொடங்கினார். மேலும் போதிய பாதுகாப்பு இல்லாமல் பணிகள் நடந்ததால், நிலத்தின் உரிமையாளர், மற்றும் ஒப்பந்ததரார் ஆகிய 2 பேர் மீது ஊட்டி நகர போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

    • மதுரை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாயினர்.
    • கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    திருமங்கலம்

    மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பெட்ரோல் பங்க் அருகே நேற்று நள்ளிரவு 4 வழிச்சாலையை கடக்க முயன்ற 55 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னாரெட்டியபட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). கூலித்தொழிலாளி. நேற்று இவர் திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூர் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டி.புதுப்பட்டி அருகே சென்றபோது எதிரே கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு மீன்லோடு ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

    • கல் உடைக்கும் தொழில் செய்து வந்தனர்
    • போலீசார் விசாரணை

    வேலூர்:

    வேலூர் மாவட்டம் திருவலம் அடுத்த கோரந்தாங்கல் பகுதியைச் சேர்ந்தவர் மகேந்திரன் (வயது 34). கட்டிட தொழிலாளி. தர்மபுரி மாவட்டம் சாமி ரெட்டிபட்டி பகுதியை சேர்ந்தவர் ராஜி (42) கல் உடைக்கும் வேலை செய்து வந்தார். இவர்கள் 2 பேரும் பைக்கில் நேற்று மாலை கோரந்தாங்கள் பகுதியில் இருந்து திருவலம் நோக்கி காட்பாடி திருவலம் சாலையில் சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது செம்பராயநல்லூர் அருகே வந்தபோது அரக்கோணத்தில் இருந்து திருவலம் வழியாக காட்பாடி நோக்கி சிமெண்ட் பாரம் ஏற்றி வந்த லாரி ஒன்று எதிர்பாராத விதமாக அவர்கள் ஓட்டிச் சென்ற பைக் மீது மோதியது. இதில் பைக்கில் சென்ற மகேந்திரன், ராஜி ஆகிய இருவரும் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    இது குறித்து தகவல் அறிந்ததும் திருவலம் போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று பார்வையிட்டனர். பின்னர் 2 பேரின் உடல்களையும் மீட்டு வாலாஜா அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

    இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.
    • இந்த 2 சம்பவங்கள் குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    மேலசொக்கநாதபுரம்:

    தேனி அருகே வீரபாண்டியை சேர்ந்தவர் தாமரைக்கண்ணன் (வயது24). இவர் அர்ச்சனா என்பவருடன் மோட்டார் சைக்கிளில் போடி மெட்டு காத்தாடி பாறை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த டிப்பர் லாரி பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்ட 2 பேரும் படுகாயம் அடைந்தனர்.

    தாமரைக்கண்ணன் சம்பவ இடத்திலேயே பலியாகி விட்டார். அர்ச்சனா படுகாயங்களுடன் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.

    போடி கீழத்தெருவை சேர்ந்தவர் கணேசன் (38). இவர் குரங்கணி பிச்சாங்கரையில் உள்ள தோட்டத்தில் காவலாளியாக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மோட்டார் சைக்கிளில் போடி-முந்தல் சாலையில் சென்று கொண்டிருந்தார். அப்போது வேகமாக வந்த ஜீப் பைக் மீது மோதியது. இதில் கணேசன் சம்பவ இடத்திலேயே பலியானார்.

    ஜீப்பில் வந்த பானுமதி, மஞ்சுளா ஆகியோர் படுகாயம் அடைந்தனர். இந்த 2 சம்பவங்கள் குறித்து குரங்கணி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • ராமநாதன், ராஜகுரு நேற்று கட்டுமாவடி-அறந்தாங்கி சாலையில் நாகுடி அருகே இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.
    • அரசு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது

    புதுக்கோட்டை :

    புதுக்கோட்டை மாவட்டம், அறந்தாங்கியை அடுத்த கம்பசேரி கிராமத்தை சேர்ந்தவர்கள் ராமநாதன் (வயது 26) தனியார் பேருந்து நடத்துனர், ராஜகுரு (23) கூலி தொழிலாளி. இவர்கள் நேற்று கட்டுமாவடி-அறந்தாங்கி சாலையில் நாகுடி அருகே தங்களது இருசக்கர வாகனத்தில் வேலை காரணமாக அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தனர்.

    அப்போது அவ்வழியாக திருச்சியில் இருந்து மணமேல்குடி நோக்கி சென்று கொண்டிருந்த சுகாதாரத்துறைக்கு சொந்தமான அரசு வாகனத்தின் முன்பக்க டயர் திடீரென வெடித்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து எதிரே வந்த இரு சக்கர வாகனத்தின் மீது பயங்கரமாக மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் சென்ற ராமு, ராஜகுரு இருவரும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தனர்.

    தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்த நாகுடி போலீசார் பலியானவர்களின் உடல்களை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அறந்தாங்கி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதற்கிடையில் இறந்தவர்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வலியுறுத்தியும், அவர்களது குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க வலியுறுத்தியும் உறவினர்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இதையடுதுது சம்பவ இடத்திற்கு விரைந்த துறை அதிகாரிகள் அவர்களோடு பேச்சுவார்த்தை நடத்தி உரிய தீர்வு எட்டப்படும் என உறுதியளித்தனர். அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து உறவினர்கள் தற்காலிகமாக கலைந்து சென்றனர்.

    • பைக் மீது கார் மோதிய விபத்தில் 2 பேர் பலி பரிதாபமாக உயிரிழந்தனர். ஒருவர் படுகாயமடைந்தார்.
    • போலீசார் கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    சிவகங்கை மாவட்டம் சிங்கம்புணரியை சேர்ந்த சந்தானம் (வயது42), ராஜா (35), பிரகாஷ் (30), இவர்கள் 3 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் திண்டுக்கல் மாவட்டம் கன்னியாபுரம் அருகே உள்ள குளத்தில் நடந்த மீன்பிடி திருவிழாவில் பங்கேற்பதற்காக வந்தனர்.

    ஒத்தக்கடை அருகில் எஸ்.கொடை பிரிவு பகுதியில் வந்தபோது சாணார்பட்டி யில் இருந்து மதுரை அழகர் கோவில் நோக்கி சென்ற கார் பயங்கரமாக மோதியது.

    இதில் 3 பேரும் தூக்கி வீசப்பட்டனர். சந்தானம் மற்றும் ராஜா ஆகியோர் சம்பவ இடத்திலேயே பலியாகினர். படுகாயம் அடைந்த பிரகாஷ் நத்தம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டு பின்னர் மேல் சிகிச்சைக்காக மதுரைக்கு அனுப்பி வைக்கப்பட்டார்.

    இந்த சம்பவம் குறித்து நத்தம் இன்ஸ்பெக்டர் தங்கமுனியாண்டி தலைமையில் சாணார்பட்டி சப்-இன்ஸ்பெக்டர் பரமசாமி மற்றும் போலீசார் கார் டிரைவரிடம் விசாரித்து வருகின்றனர். மீன்பிடி திருவிழாவுக்கு வந்தவர்கள் விபத்தில் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.

    • திண்டுக்கல் அருகே இருவேறு விபத்துகளில் 2 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
    • போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    குள்ளனம்பட்டி:

    திண்டுக்கல் அருகில் உள்ள மாலப்பட்டி காமாட்சிநகரை சேர்ந்தவர் சுப்பையா(74). இவர் ரெயில்வே பாதுகாப்பு படையில் பணிபுரிந்து ஓய்வுபெற்றவர்.

    சம்பவத்தன்று தனது மோட்டார் சைக்கிளில் மாலப்பட்டி ரோட்டில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார். அப்போது எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்து படுகா யமடைந்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சையில் இருந்த அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் விஜய் வழக்குபதிவுசெய்து விசாரணை நடத்தி வருகிறார்.

    திண்டுக்கல் மாவட்டம் சுள்ளெறும்பு நால்ரோடு கிராமத்தை சேர்ந்தவர் பெருமாள்(60). இவர் சம்பவத்தன்று மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தபோது தடுமாறி கீழே விழுந்து பலத்த காயமடைந்தார்.

    மதுரை அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டு உயிரிழந்தார். இதுகுறித்து வேடசந்தூர் போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

    • அடையாளம் தெரியவில்லை
    • போலீசார் விசாரணை

    ஜோலார்பேட்டை:

    குடியாத்தம் ரெயில் நிலையம் அருகே சுமார் 25 வயது தக்க வாலிபர் தண்டவாளத்தை கடக்க முயன்றார்.

    ரெயில் மோதியது

    அப்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிப்பட்டு வாலிபர் சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

    இதுகுறித்து தகவலறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலிஷ் சப் இன்ஸ்பெக்டர் ஜெயக்குமார் மற்றும் போலிசார் சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

    மேலும் இது குறித்து ஜோலார்பேட்டை ரெயில்வே போலிசார் வழக்கு பதிவு செய்து இறந்தவர் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என குறித்து விசாரணை செய்து வருகின்றனர் மேலும் இறந்தவர் மா நிறம் உடையவர் நீல கலர் ஜீன்ஸ் பேண்ட் லைட் பச்சை கலர் ஷர்ட் அணிந்துள்ளார்.

    2 பேர் பலி

    மேலும் அதேபோல வளத்தூர் ரெயில் நிலையம் அருகே சுமார் 45 வயது தக்கவர் ஒருவர் தண்டவாளத்தை கடக்க முயன்றார். அப்போது அவ்வழியாக சென்ற ஏதோ ஒரு ரெயிலில் அடிபட்டு சம்பவம் இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து தகவல் அறிந்ததும் ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் வழக்கு பதிவு செய்து சம்பவம் இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக வேலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்தவர் யார் யார் எந்த ஊரை சேர்ந்தவர் என போலிசார் விசாரணை செய்து வருகின்றனர்.

    இறந்தவர் மாநிறம் உடையவர் இவர் நீல கலர் லுங்கி அணிந்துள்ளார். அவர்கள் யார் எந்த ஊரைச் சேர்ந்தவர் என ஜோலார்பேட்டை ரெயில்வே போலீசார் தனித்தனியாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    • வெவ்வேறு சம்பவங்களில் 2 பேர் தற்கொலை செய்து கொண்டனர்.
    • இது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    பெரியகுளம்:

    போடி எடமுத்துநாயக்கர் தெருவை சேர்ந்தவர் கண்ணன் (வயது40). இவர் சற்று மனநலம் பாதிக்கப்ப–ட்டதால் பெரியகுளம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

    அங்கு கழிவறை ஜன்னலில் தூக்கு போட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து தென்கரை போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    சின்னமனூர் அருகே ஓடைப்பட்டியை சேர்ந்தவர் கருணாநிதி (23). டிரைவராக வேலை பார்த்து வந்தார்.கடந்த சில நாட்களாக வேலைக்கு செல்லாமல் மது குடித்து சுற்றி திரிந்ததால் அவரது தாயார் கண்டித்தார்.

    இதனால் மனமுடைந்த கருணாநிதி வீட்டில் தூக்கு போட்டு தற்கொலை செய்தார். இது குறித்து ஓடைப்பட்டி போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    ×