search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    சைக்கிள் மீது கார் மோதல் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பரிதாப சாவு
    X

    கோப்பு படம்.

    சைக்கிள் மீது கார் மோதல் பள்ளி மாணவன் உள்பட 2 பேர் பரிதாப சாவு

    • விபத்தை ஏற்படுத்திய கார் கவிழ்ந்ததில் அதில் வந்த எரிக் (11) என்ற சிறுவன் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.
    • அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    வடமதுரை:

    பீகார் மாநிலம் நாளந்தா மாவட்டம் பிலாரிப்பூர் பகுதியைச் சேர்ந்தவர் லண்டன் பிரசாத் (வயது 37). இவர் வேல்வார்கோட்டையில் உள்ள நூற்பாலையில் பணிபுரிந்து வந்தார். சம்பவத்தன்று வேலைக்கு செல்வதற்காக சைக்கிளில் சென்று கொண்டு இருந்தார்.

    அப்போது வேளாங்கன்னியில் இருந்து கேரளா நோக்கி வந்த கார் பயங்கரமாக மோதியது. அந்த காரை கேரள மாநிலம் மறையூர் பகுதியைச் சேர்ந்த ஜார்ஜ் வின்சென்ட் என்பவர் ஓட்டி வந்தார்.

    இந்த விபத்தில் சைக்கிளில் வந்த லண்டன் பிரசாத் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். விபத்தை ஏற்படுத்திய கார் கவிழ்ந்ததில் அதில் வந்த எரிக் (11) என்ற சிறுவன் படுகாயங்களுடன் திண்டுக்கல் அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டார்.

    ஆனால் அங்கு சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து வடமதுரை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

    Next Story
    ×