என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
உள்ளூர் செய்திகள்
வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலி
- மதுரை அருகே வெவ்வேறு விபத்துகளில் 2 பேர் பலியாயினர்.
- கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
திருமங்கலம்
மதுரை மாவட்டம் கள்ளிக்குடி பெட்ரோல் பங்க் அருகே நேற்று நள்ளிரவு 4 வழிச்சாலையை கடக்க முயன்ற 55 வயது மதிக்கத்தக்க நபர் மீது அடையாளம் தெரியாத வாகனம் மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட அவர் படுகாயமடைந்தார். கள்ளிக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று காயமடைந்தவரை 108 ஆம்புலன்ஸ் மூலம் திருமங்கலம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். வழியிலேயே அவர் உயிரிழந்தார். அவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
மதுரை மாவட்டம் பேரையூர் அருகே உள்ள சின்னாரெட்டியபட்டியை சேர்ந்தவர் ராஜேஷ் (23). கூலித்தொழிலாளி. நேற்று இவர் திருமங்கலம் அருகே உள்ள மேலஉரப்பனூர் உறவினர் இல்ல நிகழ்ச்சிக்கு வந்து விட்டு மீண்டும் ஊருக்கு மோட்டார் சைக்கிளில் திரும்பி கொண்டிருந்தார். திருமங்கலம்-ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் டி.புதுப்பட்டி அருகே சென்றபோது எதிரே கேரள மாநிலம் கொல்லத்தில் இருந்து திண்டுக்கல்லுக்கு மீன்லோடு ஏற்றி வந்த லாரி மோதியது. இதில் தூக்கிவீசப்பட்ட ராஜேஷ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்