என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "மத்திய பிரதேசம்"

    • மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.
    • இதுதான் உங்கள் நல்லாட்சியா? என அங்கு ஆளும் பாஜக அரசிடம் காங்கிரஸ் கேள்வி எழுப்பி உள்ளது.

    மத்திய பிரதேசத்தின் மைஹர் மாவட்டத்தில் பாத்திக்வான் அரசு உயர்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது.

    இங்கு குடியரசு தினவிழாவை முன்னிட்டு மாணவர்களுக்கு சிறப்பு மதிய உணவு வழங்கப்பட்டது. அந்த உணவானது நோட்டு, புத்தக பேப்பரில் வழங்கப்பட்டுள்ளது.

    மாணவர்கள் காகிதங்களில் உணவை வைத்துச் சாப்பிடும் வீடியோ சமூக வலைதளங்களில் வைரலாகி கண்டனத்தை குவித்து வருகிறது.

    மாணவர்களுக்கு தட்டுகள் வாங்க ஏற்கனவே நிதி விடுவிக்கப்பட்டதும் தெரியவந்துள்ளது.

    மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் விஷ்ணு திரிபாதி மற்றும் மதிய உணவுப் பிரிவு பொறுப்பாளருக்கு மெத்தனமாகச் செயல்பட்டதற்காக மாவட்ட ஆட்சியர் விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

    இந்தச் சம்பவம் குறித்து மோகன் யாதவ் தலைமையில் ஆளும் பாஜக அரசை விமர்சித்த அம்மாநில காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் சங்கீதா சர்மா, "இதுதான் உங்கள் நல்லாட்சியா?" என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

    கடந்த ஆண்டு மத்தியப் பிரதேசத்த்தின் ஷீயோபுர் பகுதியிலும் இதேபோல பேப்பரில் மதிய உணவு வழங்கப்பட்டது சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.

    • அவரை தொடர்ந்து முகக்கவசம் அணிந்த மற்றொரு நபர் உள்ளே செல்கிறார்.
    • அந்த நபர் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடிவிட்டார்.

    மத்திய பிரதேச போபால் எய்ம்ஸ் மருத்துவமனை லிப்ட்டில் பெண் ஊழியரின் தங்கச் சங்கிலி பறிக்கப்பட்ட சம்பவத்தின் வீடியோ வைரலாகி வருகிறது.

    ஞாயிற்றுக்கிழமை நடந்த இந்தச் சம்பவத்தின் வீடியோவில், மருத்துவமனையின் பெண் ஊழியர் ஒருவர் லிபிட்டிற்குள் செல்கிறார். அவரை தொடர்ந்து முகக்கவசம் அணிந்த மற்றொரு நபர் உள்ளே செல்கிறார். லிப்ட் மற்றொரு தளத்தை அடைந்ததும் கதவு திறந்தபோது அந்த நபர் அப்பெண்ணின் நகையை பறித்துச் சென்றார். 

    அந்தப் பெண் ஊழியர் அவரை துரத்திச் சென்றார். ஆனால் அதற்குள் அந்த நபர் படிக்கட்டுகள் வழியாகக் கீழே இறங்கி ஓடிவிட்டார். பெண் அளித்த புகாரின் அடிப்படையில் இந்த சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

    எய்ம்ஸ் வளாகத்திற்குள்ளேயே இத்தகைய துணிகரமான திருட்டு நடந்திருப்பது பேசுபொருளாகி உள்ளது.  

    • கடைகளை அடித்து நொறுக்கியும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர்.
    • அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச மாநிலம் உஜ்ஜைனி மாவட்டத்தில் உள்ள தரானா நகரில், இந்துத்துவா அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்த இளைஞர் அணித் தலைவர் ஒருவர் மர்ம நபர்களால் தாக்கப்பட்டார்.

    இந்தத் தகவல் பரவியதும் தாக்குதலுக்கு எதிர்ப்புத் தெரிவித்து விஸ்வ ஹிந்து பரிஷத் அமைப்பைச் சேர்ந்தவர்கள் நடத்திய போராட்டத்தின் போது நேற்று வன்முறை வெடித்தது.

    விஸ்வ ஹிந்து பரிஷத்தை சேர்ந்தவர்கள் கற்களை வீசியும் சாலையில் நிறுத்தப்பட்டிருந்த பல வாகனங்கள் தீயிட்டு கொளுத்தியும் வன்முறையில் ஈடுபட்டனர். கடைகளை அடித்து நொறுக்கியும் பொதுச் சொத்துக்களுக்குச் சேதம் விளைவித்தனர்.

    வன்முறையைக் கட்டுப்படுத்த போலீசார் தடியடி நடத்தினர்.வன்முறையில் ஈடுபட்டதாகப் பலரை போலீசார் கைது செய்துள்ளனர்.

    அப்பகுதியில் கூடுதல் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. நிலைமை தற்போது கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகக் காவல்துறை தெரிவித்துள்ளது. 

    • மத்திய பிரதேச அரசு பிச்சைக்காரர்கள் ஒழிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறது.
    • உடல் ஊனமுற்றவர் என்பதால் அரசு உதவியின் மூலம் ஒரு இலவச வீட்டையும் பெற்றுள்ளார்.

    மத்திய பிரதேசம் மாநிலத்தில் மங்கிலால் என்ற உடல் ஊனமுற்ற நபர் பிச்சை எடுத்து கோடீஸ்வரரான சம்பவத்தை அறிந்து அரசு அதிகாரிகளுக்கு தலையே சுற்றியுள்ளது.

    சமீபத்தில் மத்திய பிரதேச அரசு அறிமுகப்படுத்திய பிச்சைக்காரர்கள் ஒழிப்பு நடவடிக்கையால் இவரது பின்னணி உலகத்திற்கு தெரியவந்துள்ளது.

    மங்கிலால் என்பவர் பிச்சை எடுத்து மூன்று கான்கிரீட் வீடுகள், மூன்று ஆட்டோக்கள், மாருதி சுசுகி கார் என கோடிக்கணக்கில் சொத்து சேர்த்துள்ளார்.

    தன்னிடம் உள்ள வீடுகளையும் கார், ஆட்டோக்களையும் வாடகை விட்டு பணம் சம்பாதிக்கும் அவர், வட்டிக்கு பணம் கொடுத்தும் உதவுகிறாராம்.

    இவர் தினமும் கடைவீதிகளில் மக்களிடமிருந்து 400-500 ரூபாய் வரை வசூலிக்கிறாராம். உடல் ஊனமுற்றவர் என்பதால் அரசு உதவியின் மூலம் ஒரு இலவச வீட்டையும் பெற்றுள்ள அவர், தொடர்ச்சியாக பிச்சை தொழிலை விடாமல் செய்துவருகிறார்.

    • நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார்.
    • பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

    மத்தியப் பிரதேசம் இந்தூர் முதல் ஜபல்பூர் வரை செல்லும் ரெயிலில் கடந்த 2018 பயணித்த சிவில் நீதிபதி ஒருவர் மது அருந்திவிட்டு சக பயணிகளுடன் தகராறில் ஈடுபட்டார்.

    இதன்போது சகா பயணியின் இருக்கையில் நீதிபதி சிறுநீர் கழித்தார். அப்போது அந்த பெட்டியில் பெண்களும் அமர்ந்திருந்தனர்.

    மேலும் நீதிபதி, பயணிகளைத் தாக்கியதுடன், டிக்கெட் பரிசோதகரிடமும், தான் நீதிபதி என கூறி தகராறு செய்தார்.

    இது குறித்து வழக்குப்பதிவு செய்த ரெயில்வே போலீசார் அவருக்கு எதிரான ஆதாரங்களை சமர்ப்பித்தனர்.

    இதைதொடர்ந்து துறை ரீதியான விசாரணையில் அவர் குற்றவாளி எனத் தெரிந்ததையடுத்து, 2019-ல் அவரைப் பணியிலிருந்து நீக்கி அம்மாநில ஆளுநர் உத்தரவிட்டார்.

    அதேநேரம், அவர் மீதான குற்றவியல் வழக்கில் பிறழ் சாட்சியம் காரணமாக அவர் விடுவிக்கப்பட்டார்.

    இதை அடிப்படையாகக் கொண்டு, 2025-ல் மத்தியப் பிரதேச உயர்நீதிமன்றம் அந்த நீதிபதியை மீண்டும் பணியில் சேர்க்க உத்தரவிட்டது.

    உயர்நீதிமன்றத்தின் இந்த உத்தரவை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனு நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் சந்தீப் மேத்தா அமர்வில் விசாரணைக்கு வந்தது.

    அப்போது பேசிய அவர்கள், "நீதிபதியின் இந்தச் செயல் மிகவும் அருவருப்பானது" என்று கூறி அவரை மீண்டும் பணியில் அமர்த்தியதற்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டனர்.

    அவரை மீண்டும் பணியமர்த்தும் உயர்நீதிமன்றத்தின் முடிவை விமர்சித்த நீதிபதிகள், இது குறித்து மாநில அரசு பதிலளிக்கவும் அவர்கள் உத்தரவிட்டனர்.

    • அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா, பயனற்ற கேள்வி என பொருள்தரும் 'காண்டா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார்.

    மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் அசுத்தமான குடிநீரை அருந்தி 10 பேர் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இது தொடர்பாக வெளியிடப்பட்ட அரசு அறிக்கையில் தனது சொந்த அரசியல் விமர்சனங்களைச் சேர்த்ததற்காக துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஒருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

    இந்தூரில் அசுத்தமான குடிநீரால் ஏற்பட்ட உயிரிழப்புகள் குறித்து செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அம்மாநில நகர்ப்புற வளர்ச்சித் துறை அமைச்சர் கைலாஷ் விஜயவர்கியா, பயனற்ற கேள்வி என பொருள்தரும் 'காண்டா' என்ற வார்த்தையைப் பயன்படுத்தினார். அமைச்சரின் இந்த அலட்சியமான பதில் கடும் விமர்சனத்திற்கு உள்ளானது.

    இந்நிலையில் தேவாஸ் மாவட்டத்தைச் சேர்ந்த துணைப்பிரிவு மாஜிஸ்திரேட் ஆனந்த் மாளவியா, இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியின் போராட்டம் தொடர்பாக ஒரு உத்தரவை வெளியிட்டார்.

    அந்த அரசு உத்தரவில், காங்கிரஸ் கட்சி அளித்த மனுவில் இடம்பெற்றிருந்த வாசகங்களை அப்படியே சேர்த்திருந்தார். அதில் அமைச்சரின் 'காண்டா' என்ற வார்த்தை பிரயோகம் "மனிதநேயமற்றது மற்றும் சர்வாதிகாரப் போக்கை வெளிப்படுத்துகிறது" என்ற காங்கிரஸ் கட்சியின் விமர்சனமும் இடம்பெற்றிருந்தது.

    அரசு சார்ந்த நிர்வாக உத்தரவில் இத்தகைய அரசியல் ரீதியான விமர்சனங்களை சேர்த்ததால் உஜ்ஜைனி மண்டல வருவாய் ஆணையர் ஆஷிஷ் சிங், ஆனந்த் மாளவியாவை உடனடியாகப் பணியிடை நீக்கம் செய்து உத்தரவிட்டுள்ளார்.  

    • புதிதாக போட்ட சாலை பெயர்ந்து வந்ததால் பெண் மந்திரி அதிர்ச்சி.
    • பொதுப்பணித்துறை அதிகாரிகளை கடுமையாக எச்சரித்தார்.

    மத்திய பிரதேச மாநிலம் ரைகான் தொகுதிக்கு உட்பட்ட சாட்னாவில் பகுதியில் கடந்த ஞாயிற்றுக்கிழமை அம்மாநில பெண் மந்திரியான பிரதிமா பக்ரி ஆய்வுக்கான சென்றார்.

    அப்போது அவர் செல்லும் போடி- மங்காரி பகுதியில் சாலை போடப்பட்டிருந்தது. அந்த சாலையில் தரம் குறித்து ஆய்வு செய்ய முடிவு செய்தார். உடனடியாக தனது காரில் இருந்து இறங்கினார்.

    நேராக சாலையின் கரையோரம் சென்று தனது காலால் சாலையை மிதித்தார். அப்போது சாலை பெயர்ந்தது. இதனால் அவர் அதிர்ச்சி அடைந்தார். மேலும் தனது காலால் மிதிக்க மிதிக்க சாலையோரம் பெயர்ந்து கொண்டே சேதமானது. இதனால் கோபம் அடைந்து, இதுதான் புதிய சாலையின் லட்சணமா என திட்டினார். மேலும் பொதுப்பணித்துறை அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார்.

    இந்த வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

    • 12 முதல் 15 வயதுக்குள்பட்ட ஆறு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.
    • பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கும் தற்போது எச்.ஐ.விக்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    தலசீமியா என்பது ஹீமோகுளோபின் உற்பத்தியை பாதிக்கும் மரபணு ரத்தக்கோளாறு ஆகும். இதனால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்நாள் முழுவதும் ரத்தம் செலுத்தப்பட வேண்டும்.

    அந்த வகையில் மத்தியபிரதேசத்தின் சத்னா, ஜபல்பூர் மற்றும் பிற மாவட்டங்களில் தலசீமியா நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு மாவட்ட அரசு மருத்துவமனை ரத்த வங்கியின் உதவியுடன் ரத்தம் செலுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் இந்த ஆண்டு ஜனவரி முதல் மே மாதம் வரையிலான காலகட்டத்தில் தலசீமியா நோய்க்கு ரத்தம் செலுத்தி கொண்ட 12 முதல் 15 வயதுக்குள்பட்ட ஆறு குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று இருப்பதாக கண்டுபிடிக்கப்பட்டது அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

    ரத்த வங்கி மூலம் ஏற்றப்பட்ட ரத்தம் வழியேதான் குழந்தைகளுக்கு எச்.ஐ.வி. தொற்று ஏற்பட்டதாக குழந்தைகளின் பெற்றோர்கள் குற்றம்சாட்டினர்.

    இது குறித்து 6 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

    இந்த விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த மாநில சுகாதாரத்துறை கடந்த டிசம்பர் 16-ம் தேதி 6 பேர் கொண்ட குழுவை அமைத்தது

    அக்குழு தாக்கல் செய்த முதற்கட்ட அறிக்கையின் அடிப்படையில் ரத்த வங்கி பொறுப்பாளர் டாக்டர் தேவேந்திர படேல் மற்றும் ஆய்வக டெக்னீஷியன்களான ராம் பாய் திரிபாதி, நந்தலால் பாண்டே ஆகிய மூவரும் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.

    மேலும், சத்னா மாவட்ட மருத்துவமனையின் சிவில் சர்ஜன் மனோஜ் சுக்லாவுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.

    முறையான பதில் அளிக்காத பட்சத்தில் அவர் மீதும் துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

    இதற்கிடையே பாதிக்கப்பட்ட 6 குழந்தைகளுக்கும் தற்போது எச்.ஐ.விக்கான உரிய சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    முழுமையான விசாரணை அறிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகு, சம்பந்தப்பட்டவர்கள் மீது கூடுதல் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என மாநில அரசு தெரிவித்துள்ளது.  

    • அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
    • மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது.

    மத்திய வேளாண் அமைச்சரும், மத்தியப் பிரதேச முன்னாள் முதல்வருமான சிவராஜ் சிங் சவுகானுக்கு பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐ.எஸ்.ஐ. அச்சுறுத்தல் இருப்பதாக மத்திய உள்துறை அமைச்சகம் எச்சரித்துள்ளது.

    உளவுத்துறை வட்டாரங்களிலிருந்து கிடைத்த தகவலைத் தொடர்ந்து, அவருக்கு வழங்கப்பட்ட இசட் பிளஸ் பாதுகாப்பு மேலும் பலப்படுத்தப்பட்டுள்ளது.

    மத்தியப் பிரதேச டி.ஜி.பி.க்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் அனுப்பியுள்ளது. சிவராஜ் சிங் சவுகான் ஐ.எஸ்.ஐ.யால் குறிவைக்கப்பட்டுள்ளதாகவும், அவர் குறித்த தகவல்கள் சேகரிக்கப்பட்டுள்ளதாகவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இந்த எச்சரிக்கைகளால் போபாலில் உள்ள அவரது வீட்டில் பாதுகாப்பை பலப்படுத்தியுள்ளனர். தற்போதுள்ள பாதுகாப்புக்கு கூடுதலாக மேலும் சில வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர்.

    இருப்பினும், இந்த எச்சரிக்கைகள் இருந்தபோதிலும், இன்று, போபாலில் உள்ள ஸ்மார்ட் சிட்டி பூங்காவில் மரக்கன்றுகள் நடும் நிகழ்ச்சியில் பங்கேற்றார்.

    இசட் பிளஸ் பாதுகாப்பின் கீழ், 10க்கும் மேற்பட்ட என்.எஸ்.ஜி. கமாண்டோக்களுடன், தற்காப்பு உள்ளிட்டவற்றில் பயிற்சி பெற்ற மொத்தம் 55 பயிற்சி பெற்ற பாதுகாவலர்கள் பாதுகாப்புப் பணியில் ஈடுபவர் என்பது குறிப்பிடத்தக்கது. 

    • டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.
    • முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது.

    புனே:

    சையத் முஷ்டாக் அலி கோப்பையின் நடப்பு சீசன் இந்தியாவின் பல்வேறு நகரங்களில் ந்டந்து வருகிறது.

    இந்நிலையில், புனேவில் உள்ள டி.ஒய்.பாட்டில் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று நடந்த லீக் ஆட்டத்தில் ஆந்திர பிரதேசம், மத்திய பிரதேச அணிகள் மோதின. டாஸ் வென்ற மத்திய பிரதேச அணி பவுலிங் தேர்வு செய்தது.

    அதன்படி, முதலில் ஆடிய ஆந்திர பிரதேச அணி 19.1 ஓவரில் 112 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. ஸ்ரீகர் பரத் 39 ரன்னும், நிதிஷ் ரெட்டி 25 ரன்னும் எடுத்தனர்.

    மத்திய பிரதேச அணி சார்பில் ஷிவம் ஷுக்லா 4 விக்கெட்டும், திரிபுரேஷ் சிங் 3 விக்கெட்டும் கைப்பற்றினர்.

    எளிய இலக்கை துரத்திய மத்திய பிரதேச அணிக்கு தொடக்கத்தில் அதிர்ச்சி காத்திருந்தது. நிதிஷ்குமார் ஒரே ஓவரில் ஹாட்ரிக் விக்கெட் வீழ்த்தி அதிர்ச்சி அளித்தார். இதன்மூலம் நடப்பு தொடரில் ஹாட்ரிக் வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை நிதிஷ் ரெட்டி பெற்றுள்ளார்.

    அடுத்து இணைந்த ரிஷப் சௌகான்-ராகுல் ஜோடி பொறுப்புடன் ஆடியது. ரிஷப் சௌகான் 47 ரன்களில் ஆட்டமிழந்தார். ராகுல் 35 ரன்களைச் சேர்த்து அணிக்கு வெற்றியைத் தேடிக்கொடுத்தார்.

    இறுதியில், மத்திய பிரதேச அணி 17.3 ஓவரில் வெற்றி இலக்கை எட்டியது. இதன்மூலம் 4 விக்கெட் வித்தியாசத்தில் மத்திய பிரதேச அணி வெற்றியைப் பதிவுசெய்தது.

    • ரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் SIR நடந்து வருகிறது.
    • வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்கள் போராட்டம் நடத்த உள்ளனர்.

    தமிழ்நாடு, கேரளா, மேற்கு வங்கம், குஜராத்,மத்தியப் பிரதேசம் உள்ளிட்ட 12 மாநிலங்களில் நடந்து வரும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணிக்கு காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்கட்சிகள் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

    அந்த வகையில் ஆளும் பாஜக தலைமையிலான அரசும், இந்திய தேர்தல் ஆணையமும் பின்தங்கிய சமூகத்தைச் சேர்ந்தவர்களின் வாக்குகளை வேண்டுமென்றே நீக்குவதாக கூறி SIRக்கு எதிர்ப்புத் தெரிவித்து, மத்தியப் பிரதேசம் மாநிலம் போபாலில் காங்கிரஸ் இளைஞரணியினர் இன்று போராட்டத்தில் ஈடுபட்டனர்.

    இந்த ஆர்ப்பாட்டம் விரைவில் வன்முறையாக மாறியது. போராட்டக்காரர்கள் தடுப்புகளில் ஏறியதையடுத்து, கூட்டத்தைக் கலைக்க காவல்துறை தண்ணீரை பீய்ச்சி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பான சூழல் நிலவியது.

    இதேபோன்ற ஒரு போராட்டம் உத்தரப் பிரதேசத்தின் தலைநகரான லக்னோவிலும் ஏற்பாடு செய்யப்பட்டது. அங்கேயும் போராட்டக்காரர்கள் தடுப்புகளை மீறிச் செல்ல முயன்றதால் குழப்பமான சூழல் நிலவியது.

    SIR-க்கு எதிராக காங்கிரஸ் வாக்கு திருடனே, நாற்காலியை விட்டு வெளியேறு என்ற தலைப்பில் நாடு தழுவிய அளவில் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளது.

    வரும் 14 ஆம் தேதி டெல்லி ராம்லீலா மைதானத்தில் காங்கிரஸ் முக்கிய தலைவர்களாக ராகுல் காந்தி, கார்கே உள்ளிட்டோர் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக SIR நடைபெற்ற பீகாரின் சட்டமன்றத் தேர்தலில் காங்கிரஸ் படுதோல்வி அடைந்தது குறிப்பிடத்தக்கது. 

    • போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.
    • பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

    மத்தியப் பிரதேசத்தின் பட்டியல் சாதி மற்றும் பட்டியல் பழங்குடி ஊழியர்கள் சங்கத்தின் மாகாணத் தலைவரும் மூத்த ஐஏஎஸ் அதிகாரியுமான சந்தோஷ் வர்மா கடந்த ஞாயிற்றுக்கிழமை போபாலில் உள்ள அம்பேத்கர் மைதானத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் கலந்துகொண்டார்.

    அங்கு அவர் பேசியதாவது,"ஒரு பிராமணர் தனது மகளை என் மகனுக்குக் கொடுக்கும் வரை அல்லது அவருடன் உறவை வளர்த்துக் கொள்ளும் வரை இடஒதுக்கீடு தொடர வேண்டும்" என்று கூறியிருந்தார்.

    இந்த காணொளி சமூக ஊடகங்களில் வைரலானதால், வர்மாவின் பேச்சை பிராமண அமைப்புகள் கடுமையாகக் கண்டித்துள்ளன. சந்தோஷ் வர்மாவின் கூற்று ஆபாசமானது, சாதிய ரீதியானது மற்றும் பிராமணப் பெண்களை அவமதிக்கிறது என அவ்வமைப்புகள் தெரிவித்துள்ளன.

    விரைவில் அவர் மீது கிரிமினல் வழக்கு பதிவு செய்யப்பட வேண்டும். இல்லையெனில், பிராமண சங்கம் மாநிலம் முழுவதும் போராட்டம் நடத்தும் என அகில இந்திய பிராமண சங்கத்தின் மாநிலத் தலைவர் புஷ்பேந்திர மிஸ்ரா எச்சரித்துள்ளார்.

    ×