search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"

    • ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா துறை மேம்பாட்டு வருகிறது.
    • இந்தியா தரப்பில் 524 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.

    புதுடெல்லி:

    காஷ்மீரில் உள்ள கார்கில் பகுதியில் 1999-ம் ஆண்டு மே மாதம் 26-ந்தேதி பாகிஸ்தான் ராணுவம் ஊடுருவி ஆக்கிரமித்தது. அப்போது பிரதமராக வாஜ்பாய் இருந்தார். அவர் 'ஆபரேஷன் விஜய்' என்ற பெயரில் பாகிஸ்தான் ராணுவத்துடன் போர் நடத்தி கார்கில் பகுதியை மீட்க உத்தரவிட்டார்.

    இதையடுத்து கார்கில் பகுதியில் இந்திய ராணுவத்துக்கும், பாகிஸ்தான் ராணுவத்துக்கும் போர் நடந்தது. இந்த போரில் இந்தியா நடத்திய விமானப் படை தாக்குதலில் பாகிஸ்தான் படைகள் நிலை குலைந்து பின்வாங்கின. இந்த போரில் பாகிஸ்தான் தோற்றதுடன் தனது தோல்வியையும் ஒப்புக் கொண்டது.

    இந்த போரில் இந்தியா வென்றதையடுத்து அப்போதைய பிரதமர் வாஜ்பாய் 'கார்கில் நாயகன்' என்று அழைக்கப்பட்டார். கார்கில் போர் 1999-ம் ஆண்டு ஜூலை 26-ந்தேதி நிறைவு பெற்று கார்கில் பகுதியில் இந்திய தேசிய கொடி ஏற்றப்பட்டது.

    கார்கில் போரில் இந்தியா வெற்றி பெற்றதையடுத்து ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ந்தேதி கார்கில் வெற்றி தினம் கொண்டாடப்பட்டு வருகிறது.

    இந்த போரில் இந்தியா தரப்பில் 524 ராணுவ வீரர்கள் வீரமரணம் அடைந்தனர். 1,363 பேர் காயம் அடைந்தனர். பாகிஸ்தான் தரப்பில் பல்லாயிரக்கணக்கானோர் உயிரிழந்தனர். இதனால் பாகிஸ்தான் ராணுவத்துக்கு பலத்த அடி விழுந்தது. கார்கில் போரால் பாகிஸ்தானின் பொருளாதாரமும் சீர்குலைந்தது.


    கார்கில் பகுதியானது கடல் மட்டத்தில் இருந்து 16 ஆயிரம் அடி உயரத்தில் லடாக் பகுதியில் அமைந்துள்ளது. இந்த பகுதி பனிக் கட்டிகள் சூழ்ந்த நிலையில் எப்போதும் குளிராக காணப்படும். இதனால் இந்த பகுதி குளிர் பாலைவனம் என்று அழைக்கப்படுகிறது. அதனால் தான் அந்த பகுதியை ஆக்கிரமிக்க பாகிஸ்தான் திட்டமிட்டது.

    இன்று கார்கில் போரின் 25-வது ஆண்டு வெற்றி தினம் ஆகும். இதையடுத்து கார்கில் பகுதியில் 25-ம் ஆண்டு வெற்றி தின விழா கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் பங்கேற்க பிரதமர் மோடி இன்று கார்கில் பகுதிக்கு சென்றார். காலை 9.20 மணிக்கு தனி விமானத்தில் அவர் கார்கில் பகுதிக்கு சென்றார். அவரை ராணுவ வீரர்கள் வரவேற்று அழைத்து சென்றனர்.

    அங்கு கார்கில் போரில் வீரமரணம் அடைந்தவர்களுக்காக அமைக்கப்பட்டுள்ள நினைவு ஸ்தூபியில் பிரதர் மோடி மலர்வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.

    பின்னர் அங்கு நடை பெற்ற விழாவில் பிரதமர் மோடி பேசியதாவது:-

    கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த நமது வீரர்களுக்கு இந்த தேசம் தலை வணங்குகிறது. நாட்டிற்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நாம் ஒவ்வொருவரும் கடன் பட்டிருக்கிறோம்.

    இந்தியா மீதான தாக்குதல்களை மறைமுகமாக இன்றும் பாகிஸ்தான் தொடர்கிறது. தீய நோக்கத்துடன் இந்தியாவை அணுகினால் அடக்கி ஒடுக்கப்படுவார்கள்.


    கடந்த கால தவறுகளில் இருந்து பாகிஸ்தான் இன்னும் பாடம் கற்கவில்லை. பயங்கரவாதிகளை பாகிஸ்தான் பின்னால் இருந்து தூண்டி விடுகிறது.

    பயங்கரவாதத்தை தூண்டி விடுபவர்களின் திட்டம் ஒரு போதும் எடுபடாது. பயங்கரவாதிகளால் இந்தியாவை ஒரு போதும் வீழ்த்த முடியாது. பயங்கரவாதத்தை இரும்புக் கரம் கொண்டு அடக்குவோம். பயங்கரவாதத்தின் ஒவ்வொரு முயற்சியையும் இந்தியா வீழ்த்தி வெற்றி கண்டுள்ளது. பயங்கரவாதத்தை நமது வீரர்கள் முழு வலிமையோடு எதிர்ப்பார்கள்.

    பல ஆண்டுகளுக்கு பிறகு காஷ்மீர் விழாக்கோலம் பூண்டுள்ளது. தியாகம் என்பது மரணமே இல்லாதது என்பதை கார்கில் வெற்றி நமக்கு உணர்த்துகிறது. உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு இந்த நாடு கடமைப்பட்டுள்ளது. நம் தேச அன்னைக்காக உயிர் தியாகம் செய்த வீரர்களுக்கு நான் தலை வணங்குகிறேன். தேசமே முதன்மை என்ற உணர்வுக்கு வணக்கம் செலுத்துகிறேன். 370-வது பிரிவை நீக்கிய பின்னர் ஜம்மு-காஷ்மீர் பகுதி நல்ல வளர்ச்சியை கண்டுள்ளது.

    லடாக்கில் இயல்பு வாழ்க்கை திரும்ப அனைத்து முயற்சிகளையும் அரசு மேற்கொண்டு வருகிறது. லடாக், காஷ்மீர் வளர்ச்சிக்கு எதிரான பிரச்சனைகள் எதுவாக இருந்தாலும் இந்தியா தோற்கடிக்கும். 370-வது சட்டப் பிரிவு நீக்கப்பட்டு 5 ஆண்டுகள் நிறைவு பெறுள்ளது. ஜம்மு காஷ்மீரின் பல்வேறு பகுதிகளில் சுற்றுலா துறை மேம்பட்டு வருகிறது.

    ஷின்குன் லா சுரங்க பாதை திட்டம் லடாக்கின் வளர்ச்சியை மேம்படுத்தும். கடந்த 5 ஆண்டுகளில் லடாக்கின் பட்ஜெட்டை ரூ. 6 ஆயிரம் கோடியாக உயர்த்தி உள்ளோம். லடாக் இளைஞர்களுக்கு தரமான உயர்கல்வி கிடைக்க சிந்து பல்கலைக்கழகம் அமைக்கப்பட்டு வருகிறது.

    இன்று பயங்கரவாதத்தின் தலைவர்கள் எனது குரலை நேரடியாக கேட்கும் இடத்தில் இருந்து நான் பேசுகிறேன். கார்கில் போரில் வெற்றி பெற்றது மட்டுமல்லாமல் உண்மை, கட்டுப்பாடு மற்றும் வலிமைக்கு ஒரு சிறந்த உதாரணத்தையும் கொடுத்தோம். பாகிஸ்தான் தவறு செய்யும் போதெல்லாம் தோல்வியையே சந்தித்து வருகிறது. கார்கில் வெற்றி தின நிகழ்ச்சிகள் தேசத்திற்காக செய்த தியாகங்கள். அவை என்றும் அழியாதவை. நமது வீரர்களின் துணிச்சலான முயற்சிகளையும், தியாகங்களையும் நாடு மதிக்கிறது.

    ராணுவம் என்றால் அரசியல்வாதிகளுக்கு 'சல்யூட்' அடிப்பது, அணிவகுப்பு நடத்துவது என்று சிலர் நினைக்கிறார்கள். ஆனால் எங்களை பொறுத்தவரை ராணுவம் என்பது 140 கோடி மக்களின் நம்பிக்கையாகும்.

    இந்திய ராணுவத்தை இளமையாக உருவாக்குவதும், போருக்கு தகுதியுடையதாக ராணுவத்தை தொடர்ந்து வைத்திருப்பதும் அக்னிபத் திட்டத்தின் குறிக்கோள் ஆகும். ஆனால் துரதிஷ்டவசமாக சிலர் ராணுவத்திற்கான அக்னிபத் ஆள் சேர்ப்பு திட்டத்தில் அரசியலை புகுத்துகிறார்கள். அவர்கள் வேண்டுமென்றே இளைஞர்களை தவறாக வழி நடத்துகிறார்கள். இவர்கள்தான் ராணுவத்தில் ஆயிரக்கணக்கான கோடி மோசடி செய்து நமது ராணுவத்தை பலவீனப்படுத்தினார்கள்.

    ஓய்வூதிய பணத்தை மிச்சப்படுத்தவே அக்னிபத் திட்டத்தை அரசு கொண்டு வந்திருப்பதாக சிலர் தவறான கருத்தை பரப்புகிறார்கள். அன்றைய அரசுகள் ராணுவ விஷயத்தில் எடுத்த முடிவுகளை நாங்கள் மதித்தோம். ஏனென்றால் எங்களுக்கு தேசிய பாதுகாப்புதான் முக்கியம், அரசியல் அல்ல.

    இவ்வாறு அவர் பேசினார்.

    முன்னதாக லடாக்கில் ஷின்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் மோடி காணொலி காட்சி மூலம் தொடங்கி வைத்தார். லடாக்கில் உள்ள லே நகருக்கு செல்ல அனைத்து வானிலைகளுக்கும் ஏற்ற போக்குவரத்து இணைப்பை ஏற்படுத்தும் வகையில் கடல் மட்டத்தில் இருந்து சுமார் 15,800 அடி உயரத்தில் 4.1 கி.மீ. தூரத்துக்கு இந்த சுரங்கப்பாதை அமைக்கப்பட உள்ளது. இது இரட்டை வழி சுரங்கப்பாதை ஆகும். கட்டுமான பணிகள் நிறைவடைந்த பின்னர் இது உலகின் உயரமான சுரங்கப்பாதை என்ற பெருமையை பெறும்.

    இந்த சுரங்கப்பாதை எல்லை பகுதிக்கு ராணுவ வீரர்கள் மற்றும் தளவாடங்கள் விரைந்து செல்வதை உறுதி செய்வது மட்டுமின்றி, லடாக்கின் பொருளாதார மற்றும் சமூக வளர்ச்சிக்கு உதவும் என்று பிரதமர் அலுவலகம் தெரிவித்துள்ளது.

    இந்த லிங்கை கிளிக் செய்யவும்- மரணமே இல்லாதது தியாகம் என்பதை கார்கில் வெற்றி உணர்த்துகிறது- பிரதமர் மோடி

    • கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் நாடே தலைவணங்குகிறது.
    • வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் இதுவரை பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

    கார்கில் பயணத்தின் ஒரு பகுதியாக, ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார்.

    ஷிங்குன் லா சுரங்கப்பாதை திட்டமானது 4.1 கிமீ நீளமுள்ள இரட்டைக் குழாய் சுரங்கப்பாதை திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்த பின் உரையாற்றினார். அப்போது அவர் கூறியதாவது:

    * கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரருக்கும் நாடே தலைவணங்குகிறது.

    * கார்கில் போரில் உயிர் தியாகம் செய்த ஒவ்வொரு வீரர்களுக்கும் நாம் கடமைப்பட்டிருக்கிறோம்.

    * தேசத்திற்காக செய்த தியாகங்கள் நிலையானவை என்பதை கார்கில் போர் வெற்றி தினம் நமக்கு நினைவூட்டுகிறது.

    * இந்தியாவை சீர்குலைக்கும் நோக்கில் எவர் ஒருவர் நம் நாட்டை அணுகினாலும் அடக்கி ஒடுக்கப்படுவர்.

    * வரலாற்றில் இருந்து பாகிஸ்தான் இதுவரை பாடம் கற்றுக்கொள்ளவில்லை.

    * மரணமே இல்லாதது தியாகம் என்பதை கார்கில் வெற்றி நமக்கு உணர்த்துகிறது.

    * அனைத்து விதமான பயங்கரவாத அச்சுறுத்தல்களையும் முறியடிப்போம்.

    * பயங்கரவாதிகளின் எண்ணம் ஒருபோதும் ஈடேறாது என்று பாகிஸ்தானை பிரதமர் மோடி எச்சரித்தார்.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • பிரதமர் மோடி இன்று காலை கார்கில் சென்றார்.
    • கார்கில் போரில் உயிர்நீத்த வீரர்களுக்கு பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

    ஸ்ரீநகர்:

    ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தில் உள்ள கார்கில் பகுதியை கடந்த 1999-ம் ஆண்டு ஆக்கிரமிக்க பாகிஸ்தான் முயற்சி செய்தது. இதனை நம் இந்திய ராணுவ வீரர்கள் தீரத்துடன் எதிர்கொண்டு முறியடித்தனர்.

    இந்த போர் வெற்றி தினம் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை 26-ம் தேதி கொண்டாடப்பட்டு வருகிறது. இந்த ஆண்டு கார்கில் வெற்றி தின 25-ம் ஆண்டு ஆகும். இதையொட்டி சிறப்பு நிகழ்ச்சிகள் இன்று நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடந்து வருகிறது.

    கார்கில் போர் வெற்றியின் 25-ம் ஆண்டு கொண்டாட்டங்கள் நாடு முழுக்க களைகட்டியுள்ளன. அரசியல் தலைவர்கள், ராணுவம், காவல் துறை உயர் அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் என பலதரப்பினரும் போரில் உயிர் தியாகம் செய்தவர்களுக்கு மரியாதை செலுத்தினர்.

    இந்தியா- பாகிஸ்தான் இடையிலான கார்கில் போர் 25வது நினைவு நாளையொட்டி இன்று காலை பிரதமர் மோடி கார்கில் சென்றார்.

    கார்கில் போர் நினைவிடத்தில் உயிர்நீத்த வீரர்களுக்கு அவர் அஞ்சலி செலுத்தினார்.

    • பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கார்கிலில் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம்.
    • கார்கில் போர் முடிந்து 25-வது ஆண்டு என்பதால் பிரதமர் மோடி அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார்.

    புதுடெல்லி:

    இந்தியா, பாகிஸ்தான் இடையிலான கார்கில் போரின் 25-வது நினைவு நாளை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை கார்கில் செல்கிறார். அங்கு நடக்கும் நினைவு நாளில் பங்கேற்று நினைவு ஸ்தூபியில் பிரதமர் மோடி மரியாதை செலுத்துகிறார்.

    கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு பிரதமர் நரேந்திர மோடி நாளை காலை 9.20 மணியளவில் கார்கில் போர் நினைவிடத்திற்குச் செல்கிறார். அங்கு கடமையின்போது உயிர் தியாகம் செய்த துணிச்சலான வீரர்களுக்கு அஞ்சலி செலுத்துகிறார்.

    பிரதமர் மோடி ஒவ்வொரு ஆண்டும் கார்கிலில் தீபாவளியை கொண்டாடுவது வழக்கம். கார்கில் போர் முடிந்து இந்த முறை 25-வது ஆண்டு என்பதால் பிரதமர் மோடி அங்கு செல்ல திட்டமிட்டுள்ளார். அங்கு வீரர்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடுகிறார்.

    மேலும், ஷின்குன் லா சுரங்கப்பாதைத் திட்டத்தை பிரதமர் மோடி தொடங்கி வைக்கிறார். இத்திட்டம் 4.1 கி.மீ நீளமுள்ள இரட்டை குழாய் சுரங்கப்பாதையைக் கொண்டது. இந்த சுரங்கப்பாதை கட்டி முடிக்கப்பட்டால் இது உலகின் மிக உயரமான சுரங்கப்பாதையாக இருக்கும்.

    • ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.
    • அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள்

    2024-25 நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாடாளுமன்றத்தில் நேற்று மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்ட அவர் ஆந்திரா மற்றும் பீகார் மாநிலங்களில் உள்ள திட்டங்களுக்கு அதிகப்பட்டியான நிதியை ஒதுக்கினார்.

    ஆனால், மற்ற மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டதாகவும், தமிழ்நாடு உள்பட சில மாநிலங்களின் பெயர்கள் கூட பட்ஜெட்டில் இடம் பெறவில்லை எனவும் விமர்சனம் எழுந்து வருகிறது.

    இந்நிலையில், அரசை பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்" என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

    இதுகுறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-

    மத்திய நிதிநிலை அறிக்கையில் ஒரு சில மாநிலங்கள் நீங்கலாகப் பல்வேறு மாநிலங்கள் புறக்கணிக்கப்பட்டிருப்பதைக் கண்டிக்கும் வகையில் இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் போராட்டம் நடத்தியுள்ளார்கள்.

    பிரதமர் நரேந்திர மோடி அவர்களே…

    "தேர்தல் முடிந்துவிட்டது, இனி நாட்டைப் பற்றியே சிந்திக்க வேண்டும்" என்று சொன்னீர்கள். ஆனால், நேற்றைய #Budget2024 உங்கள் ஆட்சியைக் காப்பாற்றுமே தவிர, இந்திய நாட்டைக் காப்பாற்றாது!

    அரசைப் பொதுவாக நடத்துங்கள். இன்னமும் தோற்கடித்தவர்களைப் பழிவாங்குவதில் குறியாக இருக்க வேண்டாம்.

    அரசியல் விருப்பு வெறுப்புகளுக்கேற்ப அரசை நடத்தினால், தனிமைப்பட்டுப் போவீர்கள் என அறிவுறுத்தக் கடமைப்பட்டுள்ளேன்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.
    • விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் பல அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தில் 2024- 25-ம் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    இந்நிலையில் 2024-25-ம் ஆண்டிற்கான பட்ஜெட் அனைத்து தரப்பு மக்களுக்கான பட்ஜெட் என பிரதமர் மோடி புகழாரம் சூட்டி உள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது:

    * ஏழைகள், நடுத்தர மக்கள் வளர்ச்சி அடைவதற்கான மத்திய பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது.

    * இளைஞர்களுக்கு புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் மத்திய பட்ஜெட் அமைந்துள்ளது.

    * திறன் மேம்பாடு, கல்வி உள்ளிட்டவற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ளது.

    * சமூகத்தில் உள்ள அனைத்து தரப்பு மக்களுக்கும் அதிகாரம் அளிக்கும் வகையிலான பட்ஜெட்.

    * வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் பயணத்திற்கு புதிய பட்ஜெட் துணை நிற்கும்.

    * 500 முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு அலவென்சுடன் வேலைவாய்ப்பு பயிற்சி தரும் திட்டம்.

    * முத்ரா திட்டம் மூலம் வழங்கப்படும் கடன் தொகை ரூ.20 லட்சமாக உயர்த்தப்பட்டுளள்தால் பெண்கள் பயனடைவர்.

    * புதிய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மூலம் சிறு, குறு தொழில் நிறுவனங்கள் வளர்ச்சி அடையும்.

    * வீட்டுக்கொரு தொழில் முனைவோரை உருவாக்கும் வகையிலான அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன.

    * கோடிக்கணக்கான வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    * புதிய பட்ஜெட் மூலம் நாட்டில் உள்ள கோடிக்கணக்கான இளைஞர்கள் பணி வாய்ப்பை பெறுவார்கள்

    * விவசாயிகளின் வருவாயை இரட்டிப்பாக்கும் பல அம்சங்கள் பட்ஜெட்டில் உள்ளன.

    * இந்தியா மிகப்பெரிய உற்பத்தி மையமாக மாற புதிய பட்ஜெட் வழிவகுக்கும் என்று கூறினார்.

    • அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை கூட்டத்தொடர் நடக்கிறது.
    • 2024- 25-ம் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார்.

    நடப்பு 2024- 25-ம் நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் இன்று தாக்கல் செய்யப்பட்டது.

    தேர்தல் முடிவடைந்து மத்தியில் 3-வது முறையாக பிரதமர் மோடி தலைமையில் ஆட்சியமைந்துள்ள நிலையில், இந்த நிதியாண்டுக்கான முழுமையான பட்ஜெட் தாக்கல் செய்வதில் அரசு மும்முரம் காட்டியது.

    இதற்காக பிரதமர் மோடி மற்றும் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் ஆகியோர் கடந்த சில வாரங்களாக பொருளாதார நிபுணர்கள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினருடன் ஆலோசித்து வந்தனர்.

    அதன்படி 2024- 25-ம் ஆண்டுக்கான பட்ஜெட் தயாரிக்கப்பட்டது.

    இதைத்தொடர்ந்து பட்ஜெட் கூட்டத்தொடர் நேற்று தொடங்கியது. அடுத்த மாதம் (ஆகஸ்டு) 12-ம் தேதி வரை இந்த கூட்டத்தொடர் நடக்கிறது.

    இதன் முக்கிய நிகழ்வான பட்ஜெட் தாக்கல் இன்று நடைபெற்றது. நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்தார்.

    பிரதமர் மோடியின் 3-வது ஆட்சிக்காலத்தில் தாக்கல் செய்யப்பட்ட முதல் பட்ஜெட்டில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன.

    • நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும்.
    • நாட்டின் நலனுக்காக அடுத்து வரும் 5 ஆண்டுகளும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வாருங்கள்.

    புதுடெல்லி:

    பாராளுமன்றத்தின் மழைக்கால கூட்டத்தொடர் இன்று தொடங்கியது. இதையொட்டி பிரதமர் மோடி பாராளுமன்ற வளாகத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

    மிகவும் முக்கியத்துவம் வாய்ந்த பாராளுமன்ற கூட்டத்தொடர் இன்று தொடங்குகிறது. பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்க்கிறது.

    எனவே கூட்டத்தொடர் முழுவதும் ஆக்கப்பூர்வமாக இருக்க வேண்டியது அவசியம். கூட்டத்தொடர் சுமூகமாக நடைபெற எதிர்க்கட்சிகள் ஒத்துழைக்க வேண்டும்.

    2047-ல் வளர்ச்சி அடைந்த பாரதம் என்ற இலக்கை அடையும் வகையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. மக்களின் அனைத்து தேவைகளையும் கருத்தில் கொண்டு பட்ஜெட் தயாரிக்கப்பட்டுள்ளது.

    நாட்டு மக்களுக்கு அளித்த வாக்குறுதிகள் அனைத்தும் நிச்சயம் நிறைவேற்றப்படும். வளர்ச்சிக்கான பாதையில் நாடு மிக வேகமாக முன்னேறிக் கொண்டிருக்கிறது.

    கடந்த 5 ஆண்டுகளில் நாட்டின் பொருளாதாரம் 8 சதவீதம் வளர்ச்சி அடைந்துள்ளது. உலகில் பொருளாதார வளர்ச்சி அடைந்த நாடுகளை விட இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    எதிர்க்கட்சிகள் எதிர்ப்பு அரசியலை கைவிட்டு நாட்டின் வளர்ச்சிக்காக பணியாற்ற முன் வர வேண்டும்.

    கசப்பு அரசியலுக்கான நேரம் முடிந்து விட்டது. அரசியலை தேர்தல் நேரத்தில் பேசிக் கொள்ளலாம். பாராளுமன்றத்தின் பயனுள்ள நேரத்தை சிலர் வீணடிக்கிறார்கள். நம்மிடம் நாட்டு மக்கள் நிறைய எதிர்பார்க்கிறார்கள்.

    நாட்டின் நலனுக்காக அடுத்து வரும் 5 ஆண்டுகளும் அனைவரும் ஒன்றிணைந்து உழைக்க வாருங்கள்.

    இவ்வாறு பிரதமர் மோடி கூறினார்.

    • மக்களுக்கு வழங்கி உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம்.
    • உலக நாடுகளை ஒப்பிடும்போத இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    புதுடெல்லி:

    பட்ஜெட் கூட்டத்தொடர் இன்று தொடங்கும் நிலையில் பாராளுமன்ற வளாகத்தில் பிரதமர் மோடி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * பாராளுமன்றம் சிறப்பாக நடைபெற அனைத்து உறுப்பினர்களும் ஒத்துழைக்க வேண்டும்.

    * பாராளுமன்றத்தின் கவுரவத்தை காப்பாற்றும் வகையில் உறுப்பினர்கள் அனைவரும் நடந்து கொள்ள வேண்டும்.

    * பாராளுமன்ற கூட்டத்தொடர் ஆக்கப்பூர்வமாக இருக்கும் என நம்புகிறேன்.

    * பாராளுமன்ற கூட்டத்தொடர் சுமூகமாக நடத்த எதிர்க்கட்சிகள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும்.

    * பட்ஜெட் கூட்டத்தொடரை ஒட்டுமொத்த நாடும் எதிர்பார்த்து கொண்டிருக்கிறது.

    * மக்களுக்கு வழங்கி உள்ள வாக்குறுதிகளை நிறைவேற்ற உறுதி பூண்டுள்ளோம்.

    * எனது அரசியல் பயணத்தில் இன்று முக்கியத்துவம் வாய்ந்த நாள்.

    * 2047-ல் வளர்ந்த பாரதம் என்ற நோக்கத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது.

    * நாளை தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட் அடுத்த 5 ஆண்டுகளுக்கு இந்தியாவிற்கான வழிகாட்டி.

    * வளர்ச்சி அடைந்த பாரதத்திற்கான எங்களது உழைப்பு தொடரும்.

    * வளர்ச்சி அடைந்த பாரதத்தை உருவாக்குவதே எங்கள் கனவு.

    * உலக நாடுகளை ஒப்பிடும்போத இந்திய பொருளாதாரம் வேகமாக வளர்ந்து வருகிறது.

    * நாளை தாக்கல் செய்யப்படும் பட்ஜெட் "அமுத காலத்தில் தாக்கல் செய்யப்படும் உன்னத பட்ஜெட்".

    * 3-வது முறையாக நாட்டின் பட்ஜெட்டை தாக்கல் செய்யும் வாய்ப்பு கிடைத்துள்ளதை நினைத்து பெருமைப்படுகிறேன்.

    * பொருளாதாரத்தில் முன்னேறிய நாடுகளின் பொருளாதாரத்தை விட இந்திய பொருளாதாரம் வேகமாக முன்னேறி வருகிறது.

    * கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பொருளாதாரம் 8 சதவீதம் உயர்ந்துள்ளது என்று கூறினார்.

    • மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
    • அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே இன்று தனது 82 ஆவது பிறந்தநாளை கொண்டாடுகிறார். அவருக்கு பல்வேறு அரசியல் தலைவர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

    பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் கார்கேவுக்கு வாழ்த்து தெரிவித்தார். அவரின் எக்ஸ் பதிவில், "காங்கிரஸ் தலைவரும், ராஜ்யசபா எதிர்க்கட்சி தலைவருமான மல்லிகார்ஜுன் கார்கே அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்களது நீண்ட ஆயுளுக்கும் ஆரோக்கியத்திற்கும் பிரார்த்திக்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தியும் தனது கட்சி தலைவருக்கு பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளார். அவரின் எக்ஸ் பதிவில், "கார்கே அவர்களுக்கு மிகவும் பிறந்தநாள் வாழ்த்துக்கள். உங்கள் அயராத சேவையும், மக்கள் நலனுக்கான அர்ப்பணிப்பும் எங்களுக்கு உத்வேகம் அளிக்கிறது. நீண்ட ஆரோக்கியத்துடன் நீங்கள் இருக்க வேண்டுமென்று அன்புடன் வாழ்த்துகிறேன்" என்று பதிவிட்டுள்ளார்.

    • ஏன் யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?
    • இந்த ஆண்டு திரைத்துறைக்கு மிக மோசமான ஆண்டாக மாறி வருகிறது.

    முன்னாள் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடுவின் 75 ஆவது பிறந்தநாள் விழா நேற்று நடைபெற்றது. அதில் நடிகர் விஷால் கலந்து கொண்டார். நிகழ்ச்சி முடிந்து செய்தியாளர்களை சந்தித்த விஷால், பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்.

    இது குறித்து பேசிய நடிகர் விஷால், "தமிழ்நாட்டில் உள்ள ஜிஎஸ்டி வரி விவகாரத்தை கவனிக்குமாறு பிரதமரை வேண்டுகிறேன். தமிழகத்தில் மட்டும்தான் இரண்டு வரி வசூலிக்கும் முறை பின்பற்றப்படுகிறது. "ஒரே வரி ஒரே நாடு" என்று நீங்கள் கூறிய போது உங்களை நம்பினேன், எனினும் ஏன் தமிழகத்தில் மட்டும் இப்படி நடக்கிறது? ஏன் யாரும் இந்த விஷயத்தை பெரிதாக எடுத்துக் கொள்வதில்லை?"

    "உண்மையில் இது திரைத்துறையை பெரிதும் பாதிக்கிறது. 8 சதவீதம் உள்ளாட்சி வரி செலுத்துவது அனைத்து தயாரிப்பாளர்களுக்கும் பெரிய சுமையாக உள்ளது. திரைத்துறை மிக மோசமாக பாதிக்கப்படுகிறது. இந்த ஆண்டு திரைத்துறைக்கு மிக மோசமான ஆண்டாக மாறி வருகிறது."

    "யாரும் இழப்பை பற்றி வெளியில் பேசுவதில்லை. அனைவரும் வலியை மனதிற்குள் வைத்துக் கொள்கின்றனர். நாங்கள் ஆடம்பர வாழ்க்கையை கேட்கவில்லை, அனைவரும் சாதாரண வாழ்க்கையை வாழ்வதற்கு வாய்ப்பு கொடுங்கள் என்று கேட்டுக் கொள்கிறேன்," என்றார்.

    • கமலா பூஜாரி ஜி மறைவு வேதனை அளிக்கிறது.
    • பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தார்.

    பத்மஸ்ரீ விருது பெற்றவரும் புகழ்பெற்ற இயற்கை விவசாயியுமான கமலா பூஜாரி. அவருக்கு வயது 74, அவருக்கு இரண்டு மகன்கள் மற்றும் இரண்டு மகள்கள் உள்ளனர். சிறுநீரகம் தொடர்பான நோயால் இரண்டு நாட்களுக்கு முன்பு கட்டாக்கில் உள்ள எஸ்சிபி மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிறுநீரகம் தொடர்பான நோயால் பாதிக்கப்பட்டிருந்த கமலா பூஜாரி சிகிச்சை பலனின்றி இன்று காலை காலமானார்.

    கோராபுட் மாவட்டத்தில் உள்ள பைபரிகுடா தொகுதியின் பத்ராபுட் கிராமத்தில் பிறந்த பூஜாரி, இயற்கை விவசாயத்தை ஊக்குவிப்பவராகவும், 100 வகையான அரிசிகளை அறுவடை செய்தவராகவும் இருந்தார். அவர் எம்.எஸ்.சுவாமிநாதன் ஆராய்ச்சி அறக்கட்டளையுடன் தொடர்புடையவர்.

    அவருக்கு 2019 ஆம் ஆண்டு அப்போதைய குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்தால் பத்மஸ்ரீ விருது வழங்கப்பட்டது. அவர் 2018 ஆம் ஆண்டில் மாநில திட்டமிடல் குழுவில் உறுப்பினராக இருந்தார் மற்றும் 2004 ஆம் ஆண்டில் ஒடிசா அரசாங்கத்தால் சிறந்த விவசாயி விருதைப் பெற்றார்.

    2002 இல் தென்னாப்பிரிக்காவின் ஜோகன்னஸ்பர்க்கில் 'ஈக்வேட்டர் இனிஷியேட்டிவ் விருதை' வென்றார்.

    அவரது மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ள முதல்வர் மோகன் சரண் மாஜி, அவரது இறுதிச் சடங்கு முழு அரசு மரியாதையுடன் நடைபெறும் என்று அறிவித்தார். பூஜாரியின் மகன் தங்கதர் பூஜாரியிடமும் மாஜி தொலைபேசியில் பேசினார்.

    "விவசாயத் துறையில் அவரது பங்களிப்பு என்றென்றும் நினைவுகூரப்படும்" என்று ஒடிசா சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவரும் முன்னாள் முதல்வருமான நவீன் பட்நாயக் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

    இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் இரங்கல் பதிவை வெளியிட்டுள்ளார் அதில்,

    கமலா பூஜாரி ஜி மறைவு வேதனை அளிக்கிறது. அவர் விவசாயத்திற்கு ஒரு மகத்தான பங்களிப்பைச் செய்தார், குறிப்பாக இயற்கை விவசாய நடைமுறைகளை மேம்படுத்துதல் மற்றும் உள்நாட்டு விதைகளைப் பாதுகாத்தல். நிலைத்தன்மையை மேம்படுத்துவதிலும் பல்லுயிர் பெருக்கத்தைப் பாதுகாப்பதிலும் அவர் ஆற்றிய பணி பல ஆண்டுகளாக நினைவுகூரப்படும். பழங்குடி சமூகங்களை மேம்படுத்துவதில் அவர் ஒரு கலங்கரை விளக்கமாகவும் இருந்தார். அவரது குடும்பத்தினருக்கும் அபிமானிகளுக்கும் இரங்கல்கள். ஓம் சாந்தி என்று கூறியுள்ளார்.

    ×