என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பிரதமர் மோடி"

    • இலங்கை தமிழர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்.
    • இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதக்கூடாது.

    இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழக்க வேண்டும் என பிரதமர் மோடிக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.

    அந்த கடிதத்தில் அவர் கூறியிருப்பதாவது:-

    தமிழ்நாட்டில் சுமார் 89 ஆயிரம் இலங்கை தமிழர்கள் வசித்து வருகின்றனர்.

    40 ஆண்டுகளுக்கு மேலாக தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும்.

    நீண்ட கால விசா வழங்குதல் உள்ளிட்ட நிலையான, மனிதாபிமான அடிப்படையிலான நிரந்தர தீர்வு காண வேண்டும்.

    தமிழ்நாட்டில் வசிக்கும் இலங்கை தமிழர்களில் 40 சதவீதம் பேர் இந்திய மண்ணிலேயே பிறந்தவர்கள்.

    குடியுரிமை (அ) நீண்டகால விசா போன்ற நிலையான சட்டப்பூர்வமான தீர்வுகள் இலங்கை தமிழர்களுக்கு கிடைக்கவில்லை.

    இலங்கைத் தமிழர்களை சட்டவிரோதமாக குடியேறியவர்களாகக் கருதக்கூடாது என்று அறிவித்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

    • வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.
    • தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    சென்னை:

    தமிழகத்தில் ஏப்ரல் மாதம் சட்டமன்ற தேர்தல் நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சட்டமன்ற தேர்தல் தொடர்பான அறிவிப்பு இந்த மாத இறுதியிலோ அல்லது அடுத்த மாத தொடக்கத்திலோ வெளியாக உள்ளது.

    தமிழகத்தில் தி.மு.க. தலைமையில் ஒரு அணியும் அ.தி.மு.க. தலைமையில் இன்னொரு அணியும் செயல்பட்டு வரும் நிலையில், தமிழக வெற்றி கழக தலைவர் விஜய், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் ஆகியோர் தனித்து களமிறங்குகிறார்கள்.

    இதனால் சட்டமன்ற தேர்தலில் 4 முனை போட்டி ஏற்பட்டுள்ளது. தேர்தலில் மீண்டும் வெற்றி பெற்று ஆட்சி அமைக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் தி.மு.க. பம்பரமாக சுழன்று வருகிறது. அதே நேரத்தில் தி.மு.க.வை வீழ்த்தி ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் அ.தி.மு.க.வும் தீவிரமாக செயல்பட்டு வருகிறது. அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., அன்புமணி தலைமையிலான பா.ம.க., டி.டி.வி.தினகரனின் அ.ம.மு.க., ஜி.கே.வாசனின் த.மா.கா. ஆகிய கட்சிகள் இடம் பெற்றுள்ளன.

    மேலும் பல சிறிய கட்சிகளும் இந்த கூட்டணிக்கு ஆதரவு தெரிவித்துள்ளன.

    கடந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்றிருந்த தே.மு.தி.க. தற்போது எந்தக் கூட்டணியிலும் இல்லை என்கிற அறிவிப்பை வெளியிட்டு விட்டு யாருடன் கூட்டணி அமைப்பது என்று ரகசிய பேச்சுவார்த்தையில் ஈடுபட்டு வருகிறது.

    இது தொடர்பாக தி.மு.க. அ.தி.மு.க. ஆகிய 2 கட்சிகளுடன் தே.மு.தி.க. திரைமறைவில் பேச்சுவார்த்தை நடத்தி வருவதாக பரபரப்பான தகவல்கள் வெளியாகிக் கொண்டே இருக்கின்றன.

    இந்த முறை தி.மு.க. கூட்டணியில் இடம் பெற்று தே.மு.தி.க. தேர்தலை சந்திக்க தயாராகி விட்டதாகவும் இது தொடர்பான அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் முக்கிய திருப்பமாக தே.மு.தி.க.வை தங்களது கூட்டணியில் எப்படியாவது தக்க வைத்துக் கொள்ள வேண்டும் என்று பாரதிய ஜனதா கட்சியும் தொடர் முயற்சிகளில் ஈடுபட்டு வருகிறது.

    இது தொடர்பாக தமிழக பா.ஜனதா தலைவர்கள் மற்றும் தே.மு.தி.க. தலைவர்கள் ஆகியோர் நேரில் சந்தித்து பேச்சு நடத்தி இருப்பதாக புதிய தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

    தமிழகத்தில் ஏற்கனவே சுற்றுப்பயணம் செய்துள்ள பிரதமர் மோடி சென்னையை அடுத்த மதுராந்தகத்தில் நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டார்.

    இந்த நிலையில் வருகிற மார்ச் 1-ந்தேதி மதுரையில் பிரதமர் பங்கேற்கும் பிரமாண்ட பொதுக்கூட்டத்துக்கு பாரதிய ஜனதா ஏற்பாடு செய்து வருகிறது.

    தேசிய ஜனநாயக கூட்டணி பொதுக்கூட்டமாக நடத்தப்படும் இந்த கூட்டத்தில் அ.தி.மு.க. உள்ளிட்ட அனைத்து கூட்டணி கட்சி தலைவர்களும் பங்கேற்கிறார்கள்.

    இந்த கூட்டத்தில் தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதாவையும் ஒன்றாக மேடை ஏற்றுவதற்கான ஏற்பாடுகள் நடைபெற்று வருவதாக கூறப்படுகிறது.

    இது தொடர்பாகவே பா.ஜனதா-தே.மு.தி.க. இடையே பேச்சுவார்த்தைகளும் நடத்தப்பட்டுள்ளன. இந்த பேச்சுவார்த்தையை இன்னும் சில தினங்களில் முடித்து அ.தி.மு.க.-பா.ஜனதா கூட்டணியில் தே.மு.தி.க. இடம் பெறுவதை உறுதி செய்துவிட வேண்டும் என்று மத்திய மந்திரி அமித்ஷா தமிழக பா.ஜ.க. தலைவர்களிடம் அறிவுறுத்தி உள்ளார்.

    கடந்த முறை மதுராந்தகத்தில் நடைபெற்ற பிரதமரின் பொதுக்கூட்டத்திலேயே தே.மு.தி.க. பொதுச்செயலாளர் பிரேமலதா பங்கேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது.

    ஆனால் கூட்டணி தொடர்பான பேச்சு வார்த்தைகள் இறுதி செய்யப்படாததால் பிரேமலதா அந்த கூட்டத்தில் பங்கேற்கவில்லை.

    இதுபோன்ற சூழலில் தான் இன்னும் 2 வாரத்தில் மீண்டும் பிரதமர் தமிழகம் வர இருக்கிறார். அதற்குள் தே.மு.தி.க.வுடன் பேச்சுவார்த்தையை உறுதி செய்து தங்களது கூட்டணியில் அந்தக் கட்சி இருப்பதை எப்படியாவது உறுதி செய்து விட வேண்டும் என்று தமிழக பா.ஜ.க. தலைவர்களும் தீவிரமான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

    இதுபற்றி பா.ஜனதா நிர்வாகி ஒருவர் கூறும் போது, வருகிற சட்டமன்ற தேர்தலில் நிச்சயம் தே.மு.தி.க. ஜனநாயக கூட்டணியிலேயே இடம்பெறும் என்று நம்புவதாகவும், இது தொடர்பான பேச்சுவார்த்தைகள் விரைவில் முடிவடையும் என்றும் தெரிவித்துள்ளார்.

    • இது உலகின் 2வது சாலை-ரயில் சுரங்கப்பாதையாக இருக்கும்.
    • 6 மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைக்கும்.

    இந்தியாவின் முதல் நீருக்கடியில் அமையவுள்ள சாலை-ரெயில் சுரங்கப்பாதை திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. இது உலகின் 2வது சாலை-ரயில் சுரங்கப்பாதையாக இருக்கும். முதலாமது ஐரோப்பாவில் அமைந்துள்ளது.

    இரட்டை வழிகள் கொண்ட இந்த பாதையின் ஒரு பகுதி ரெயில் பாதையாகவும், மற்றொரு பகுதி வாகனங்கள் செல்லும் சாலையாகவும் இருக்கும்.

    அசாம் மாநிலத்தில் பிரம்மபுத்திரா ஆற்றின் அடியில் 15.79 கி.மீ தூரத்திற்கு ரூ.18,662 கோடி செலவில் இந்த சாலை-ரயில் சுரங்கப்பாதை கட்டப்பட உள்ளது.

    இது அசாமில் உள்ள கோப்பூர் மற்றும் நுமாலிகரை இணைக்கும். பயண நேரத்தை சுமார் 6 மணி நேரத்திலிருந்து வெறும் 20 நிமிடங்களாக குறைக்கும்.

    முன்னதாக நேற்று அசாம் சென்ற பிரதமர் மோடி, அவசர காலங்களில் விமானங்கள் தரையிறங்கும் சாலையும், பிரம்மபுத்திரா ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள ஆறு வழிச் சாலைப் பாலத்தையும் திறந்து வைத்தது குறிப்பிடத்தக்கது.   

    • 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளது.
    • ஜனநாயக முறையிலான வங்கதேசத்தை இந்தியா என்றும் ஆதரிக்கும்.

    2024 இல் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்த பிறகு வங்கதேசத்தில் முதல்முறையாக கடந்த வியாழக்கிழமை பொதுத்தேர்தல் நடந்தது. இதில் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பி.என்.பி. கட்சி மொத்தம் உள்ள 300 இடங்களில் 209 இடங்களை கைப்பற்றியது.

    இதன்மூலம் அவர் வங்கதேச பிரதமராக வரும் செவ்வாய்க்கிழமை பதவியேற்கிறார். அன்று மதியம் நாடாளுமன்றத்தின் தெற்கு மண்டபத்தில் இந்த விழா நடைபெறவுள்ளது.

    இந்நிலையில் இந்த பதவியேற்பு விழாவில் கலந்துகொள்ள பிரதமர் மோடிக்கு அழைப்பு அழைப்பு விடுக்கப்பட்டிள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

    இந்தியாவுடன் சீனா, பாகிஸ்தான், சவுதி அரேபியா, துருக்கி, ஐக்கிய அரபு அமீரகம், கத்தார், மலேசியா, புருனே, இலங்கை, நேபாளம், மாலத்தீவு மற்றும் பூட்டான் ஆகிய 13 நாடுகளுக்கு முகமது யூனுஸ் தலைமையிலான இடைக்கால அரசு அழைப்பு விடுத்துள்ளதாக வங்கதேச வட்டாரங்கள் தெரிவித்தன.

    முன்னதாக இந்தியப் பிரதமர் மோடியையும் மரியாதை நிமித்தம் இவ்விழாவிற்கு அழைப்போம் என்று அக்கட்சியின் மூத்த தலைவர் ஏ.என்.எம். எஹ்சானுல் ஹக் மிலன் தெரிவித்தார்.

    வங்கதேச தேர்தலில் பிஎன்பி கட்சி அமோக வெற்றி பெற்றதற்கு பிரதமர் நரேந்திர மோடி அதன் தலைவர் தாரிக் ரஹ்மானுக்கு ஏற்கனவே வாழ்த்துத் தெரிவித்திருந்தார். ஜனநாயக முறையிலான வங்கதேசத்தை இந்தியா என்றும் ஆதரிக்கும் என்று அவர் குறிப்பிட்டிருந்தார். 

    • அதிபர் மேக்ரான் பிரான்சில் இருந்து 16-ம் தேதி இந்தியா வருகிறார்.
    • 19-ம் தேதி டெல்லியில் நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    புதுடெல்லி:

    பிரான்ஸ் அதிபர் இமானுவேல் மேக்ரான், அவரது மனைவி மேடம் பிரகிட் மேக்ரான் ஆகியோர் மூன்று நாள் சுற்றுப்பயணமாக வரும் திங்கட்கிழமை இந்தியா வருகின்றனர். அதிபர் மேக்ரான் இந்தியாவில் நடைபெறும் ஏ.ஐ. (AI Impact Summit) உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு போன்ற முக்கிய துறையில் இருநாட்டு உறவுகளை மேம்படுத்தும் வகையில் இந்திய பிரதமர் நரேந்திர மோடியுடன் பேச்சுவார்த்தை நடத்துகிறார்.

    பிப்ரவரி 17-ம் தேதி மும்பையில் இருந்து தனது சுற்றுப்பயணத்தைத் தொடங்குகிறார். பிரதமர் மோடியுடன் சேர்ந்து இந்தியா- பிரான்ஸ் Year of Innovation-ஐ தொடங்கி வைக்கிறார். அதனைத் தொடர்ந்து மும்பையில் இருவரும் பேச்சுவார்த்தையில் ஈடுபடுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

    அதன்பின், டெல்லியில் பிப்ரவரி 19-ம் தேதி நடைபெறும் ஏ.ஐ. உச்சி மாநாட்டில் கலந்து கொள்கிறார்.

    கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மோடி பிரான்ஸ் சென்றிருந்தார். இதைத்தொடர்ந்து, அதிபர் மேக்ரானின் சுற்றுப்பயணம் அமைய உள்ளது.

    • பிரதமர் மோடி வந்த சி-130 விமானம் இங்கு தரையிறங்கியது.
    • இந்தியா - சீனா எல்லைக்கு சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ளது.

    ஒருநாள் பயணமாக பிரதமர் மோடி இன்று அசாம் சென்றுள்ளார். அங்கு திப்ருகர் மாவட்டத்தில் உள்ள மோரன் புறவழிச் சாலையில் ரூ. 100 கோடி மதிப்பிலான 4.2 கி.மீ கொண்ட அவசரக்கால தரையிறங்கும் சாலையைப் பிரதமர் திறந்து வைத்தார்.

    பிரதமர் மோடி வந்த சி-130 விமானம் இந்த அவசர தரையிறங்கும் சாலையில் தரையிறங்கியது. திறப்பு விழாவின் போது போர் விமானங்களின் கண்கவர் சாகசங்கள் நிகழ்த்தப்பட்டன.

    அவசரக் காலத்தில் விமானங்கள், ஹெலிகாப்டர் உள்ளிட்டவை தரையிறங்கும் வகையில் சாலை அமைக்கப்பட்டுள்ளது.

    இந்தியா - சீனா எல்லைக்கு சுமார் 300 கிலோமீட்டர் தூரத்தில் உள்ள  இதுவே வடகிழக்கில் முதலாவது அவசர கால தரையிறங்கும் சாலை ஆகும்.

    போர் காலங்களில் அல்லது அவசர நிலைகளில் அருகில் உள்ள திப்ருகார் விமான நிலையம் அல்லது சாபுவா விமானப்படை தளம் போன்றவை பயன்படுத்த முடியாத சூழல் ஏற்பட்டால், இந்திய விமானப்படைக்கு இந்த ஓடுபாதை மாற்றாக இருக்கும்.

    மிகவும் வலிமையான கான்கிரீட் கொண்டு உருவாக்கப்பட்ட இந்த ஓடுபாதையில், 40 டன் எடை கொண்ட போர் விமானங்களும் எளிதாகத் தரையிறங்கி மீண்டும் பறக்க முடியும். 

    • திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை.
    • தன்னம்பிக்கை கொண்ட பெண்களாக மாற்றியுள்ளது.

    தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், மத்திய அரசு தடுக்க முயற்சிப்பதாக கூறி, மகளிர் உரிமைத் தொகையை முன்கூட்டியே அறிவித்து இருப்பதற்கு தமிழ்நாடு பாஜக மூத்த தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.

    இது குறித்த X தளப் பதிவில் அவர், "மத்திய அரசு மகளிர் உரிமை மானியங்களை தடுக்க இருப்பதாக கூறி, முன்கூட்டியே அறிவித்துள்ளதாக தெரிவித்து இருக்கும் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுக்கு நான் கடும் கண்டனம் தெரிவிக்கிறேன். மத்திய அரசு அதை தடுக்க முயற்சிப்பதால் தான், தனது அனைத்து தோல்விகளுக்கும் மத்திய அரசை குறை கூறும் பழக்கம் அவருக்கு உள்ளது.

    நாடாளுமன்றத் தேர்தலின் போது கூட அது தடுக்கப்படவில்லை என்பதை அவருக்கு நினைவூட்ட விரும்புகிறேன். மேலும் எந்தவொரு முடிவும் மத்திய அரசிடமிருந்து அல்ல, தேர்தல் ஆணையத்திடம் இருந்து வர வேண்டும். தேர்தல் பயம் மற்றும் காய்ச்சல் காரணமாக தமிழக முதல்வர் இதை அறிவிக்கிறார். தமிழகத்தில் நிலவும் அதிக எதிர்ப்பு காரணமாக திமுக வெற்றி பெறும் என்ற நம்பிக்கை இல்லை.

    90 லட்சத்திற்கும் மேற்பட்ட பெண்கள் தங்கள் கணக்குகளில் ஒரே இரவில் அதைப் பெற்றதில் அவர்கள் மிகவும் பெருமைப்படுகிறார்கள். இதற்காக ஜன்தன் கணக்குகள் மற்றும் டிஜிட்டல் இந்தியாவை தொடங்கிய நமது மாண்புமிகு பிரதமருக்கு தமிழக முதல்வர் பாராட்ட வேண்டும், நன்றி சொல்ல வேண்டும்.

    மாண்புமிகு நரேந்திர மோடியின் முத்ரா கடன்கள் தமிழ்நாட்டில் 1 கோடிக்கும் மேற்பட்ட பெண்களுக்கு பயனளித்துள்ளன, இது அவர்களை தொழில் முனைவோராகவும் தன்னம்பிக்கை கொண்ட பெண்களாகவும் மாற்றியுள்ளது.

    பெண்களுக்கான ஊக்கத்தொகையை அறிவித்து டாஸ்மாக் மீது எந்த நடவடிக்கையும் எடுக்காதது மிகவும் கண்டிக்கத்தக்கது. ஏனெனில் ஒரு கணக்கெடுப்பு குடிகாரனைக் கொண்ட ஒரு குடும்பம் மாதத்திற்கு 6000 ரூபாய்க்கு மேல் மதுபானத்திற்காக செலவிடுவதாகக் கூறுகிறது.

    தமிழ்நாடு அரசு கடன் ரூ. 4.5 லட்சம் கோடியில் இருந்து ரூ. 9.5 லட்சம் கோடியாக உயர்த்தியுள்ளது. அதாவது ஒரு தமிழரின் கடனை ரூ. 1.4 லட்சமாகவும், வட்டிக்கு 40,000 ஆகவும் உயர்த்தியுள்ளது.

    முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி ரூ. 2000 அறிவித்துள்ளார், அதை தமிழக முதல்வர் இப்போது நகலெடுத்து வருகிறார். கடந்த ஆண்டு ஒரு பத்திரிகையாளர் திமுக அமைச்சரிடம் பொங்கல் ஊக்கத்தொகை ஏன் கொடுக்கவில்லை என்று கேட்டபோது, இந்த ஆண்டு கொடுத்தால் மக்கள் மறந்துவிடுவார்கள், அடுத்த ஆண்டு வழங்குவோம் என்று பதிலளித்தார், அவர்கள் அதைச் செய்தார்கள். இவை அனைத்தும் மு.க. ஸ்டாலின் தேர்தல் பயம் மற்றும் காய்ச்சல் காரணமாக அறிவிக்கிறார்," என்று குறிப்பிட்டுள்ளார்.

    • மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான்.
    • வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு என்றும் இருக்கும்.

    வங்கதேசத்தில் கடந்த 2024 ஆகஸ்டில் மாணவர் போராட்டத்தால் ஷேக் ஹசீனா ஆட்சி கவிழ்ந்தது. தொடர்ந்து அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற முகமது யூனுஸ் தலைமையில் இடைக்கால அரசு அமைந்தது.

    இந்நிலையில் ஆட்சி கவிழ்ந்தபின் 18 மாதங்கள் கழித்து முதல்முறையாக புதிய அரசை தேர்ந்தெடுக்க நேற்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடந்தது. இது வங்கதேசத்தின் 13வது பொதுத்தேர்தல் தேர்தல் ஆகும்.

    இதில் 17 ஆண்டுகால வெளிநாட்டு வாழ்க்கைக்குப் பிறகு சமீபத்தில் நாடு திரும்பிய மறைந்த வங்கதேச பிரதமர் கலீதா ஜியாவின் மகன் தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி மற்றும் அதன் முன்னாள் கூட்டாளியான ஜமாத்-இ-இஸ்லாமி ஆகிய கட்சிகளுக்கு இடையே நேரடி போட்டி நடந்தது.

    இந்நிலையில் 300 இடங்களைக் கொண்ட நாடாளுமன்றத்தில், 200-க்கும் மேற்பட்ட இடங்களை தாரிக் ரஹ்மான் தலைமையிலான பிஎன்பி கூட்டணி கைப்பற்றி அறுதிப் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்றுள்ளது.இதைத்தொடர்ந்து தாரிக் ரஹ்மான் வங்கதேச பிரதமர் ஆவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்நிலையில் பிரதமர் மோடி தனது எக்ஸ் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், "வங்கதேச நாடாளுமன்றத் தேர்தலில் பிஎன்பி கட்சியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்ற தாரிக் ரஹ்மானுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள்.

    இந்த வெற்றி உங்கள் தலைமையின் மீது வங்கதேச மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைக் காட்டுகிறது.

    ஜனநாயக ரீதியான மற்றும் முற்போக்கான வங்கதேசத்திற்கு இந்தியாவின் ஆதரவு என்றும் இருக்கும்" என்று பதிவிட்டுள்ளார்.

    மேலும் இரு நாடுகளுக்கும் இடையிலான பன்முக உறவுகளை வலுப்படுத்த புதிய அரசுடன் இணைந்து பணியாற்ற ஆவலுடன் இருப்பதாக பிரதமர் மோடி குறிப்பிட்டுள்ளார். அமெரிக்காவும் தாரிக் ரஹ்மானுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளது.

    • பிரதமர் மோடி சபாநாயகர் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்கிறார்.
    • பிரியங்கா காந்தி, கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அங்கு இருந்தனர்

    பாராளுமன்றத்தில் பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் 28 ஆம் தேதி முதல் நடந்து வருகிறது.

    பிபர்வரி 4 ஆம் தேதி குடியரசு தலைவர் உரை மீதான தீர்மானத்தின் மீது பிரதமர் உரையாற்ற இருந்தபோது காங்கிரஸ் எம்.பிக்கள் அவரை தாக்க முயன்றனர் என்றும் பாதுகாப்பு கருதி அடுத்த நாள் அவைக்கு வரவேண்டாம் என்று பிரதமரை கேட்டுக்கொண்டதாகவும் மக்களவை சபாநாயகர் தெரிவித்திருந்தார்.

    ஆனால் இது முற்றிலும் பொய் என மறுத்த காங்கிரஸ் எம்.பி. பிரியங்கா காந்தி, பிரதமர் மோடி பெண் எம்பிக்களின் கேள்விகளுக்கு பதில் சொல்ல பயந்து சபாநாயகர் முதுகின் பின்னால் ஒளிந்துகொள்வதாக குற்றம்சாட்டினார்.

    இதற்கிடையே பிரதமர் மோடியின் இருக்கைக்கு அருகே காங்கிரஸ் எம்.பி.க்கள் முற்றுகையிடும் வீடியோவை மத்திய நாடாளுமன்ற விவகாரங்கள் துறை அமைச்சர் கிரண் ரிஜிஜு கடந்த 10 ஆம் தேதி சமூக வலைத்தளத்தில் பகிர்ந்தார்.

    இந்நிலையில் 20-க்கும் மேற்பட்ட காங்கிரஸ் எம்.பி.க்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவின் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசி மிரட்டியதாக கிரண் ரிஜிஜு இன்று குற்றம் சாட்டியுள்ளார்.

    காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் இருக்கும் வீடியோவை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்த ரிஜிஜு, "காங்கிரஸ் எம்.பி. ஒருவரால் சட்டவிரோதமாக எடுக்கப்பட்ட இந்த வீடியோவில், 20-25 காங்கிரஸ் எம்.பி.க்கள் சபாநாயகர் அறைக்குள் நுழைந்து அவரை அவதூறாகப் பேசியதும், பிரதமரை மிரட்டியதும் பதிவாகியுள்ளது" என்று குறிப்பிட்டுள்ளார்.

    இந்தச் சம்பவத்தின் போது பிரியங்கா காந்தி மற்றும் கே.சி. வேணுகோபால் உள்ளிட்ட மூத்த காங்கிரஸ் தலைவர்களும் அங்கு இருந்ததாக கூறிய ரிஜிஜு, அவர்கள் நேரடியாகச் சபாநாயகரைத் திட்டவில்லை என்றாலும், மற்ற எம்.பி.க்கள் மிரட்டுவதையும் தாக்குவதையும் அவர்கள் ஊக்குவித்ததாக குற்றம் சாட்டியுள்ளார்.

    கடந்த வாரம் மக்களவையில், 2020 இந்தியா-சீனா எல்லை மோதல் தொடர்பாக முன்னாள் ராணுவ தளபதி ஜெனரல் எம்.எம். நரவணே எழுதிய வெளியிடப்படாத சுயசரிதையின் சில பகுதிகளை மேற்கோள் காட்ட ராகுல் காந்திக்கு அனுமதி மறுக்கப்பட்டது. இதனால் ஏற்பட்ட அமளியைத் தொடர்ந்தே இந்தச் சம்பவம் நடந்துள்ளது என்று தெரிகிறது.

    இதற்கிடையில், சபாநாயகர் ஓம் பிர்லா ஒருதலைப்பட்சமாக செயல்படுவதாகக் கூறி, அவரைப் பதவியில் இருந்து நீக்கக் கோரி எதிர்க்கட்சிகள் நோட்டீஸ் அளித்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.   

    • நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவை நாடாளுமன்றத்தில் பட்டியலிட்ட மத்திய அரசு.
    • செலவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் விளக்கம்.

    நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ரூ.462.58 கோடி செலவிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.

    மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கிய தகவலின்படி, இந்தப் பயணச் செலவுகளில் விமானப் பயணம், தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அடங்கும்.

    அமெரிக்கப் பயணங்களுக்கு மட்டும் மொத்தத் தொகையில் சுமார் 16% செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான பயணங்களுக்குத் தலா 9% நிதி செலவிடப்பட்டுள்ளது.

    2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டுப் பயணம் மிகவும் அதிக செலவான ஒன்றாகக் கருதப்படுகிறது (சுமார் ரூ.25.5 கோடி).

    இதற்கு அடுத்ததாக 2023 ஜூன் அமெரிக்கப் பயணம் (ரூ.22.8 கோடி) இடம் பெற்றுள்ளது.  நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், முந்தைய காலக்கட்டங்களின் செலவுகளும் ஒப்பிடப்பட்டன.

    2014 - 2019 ரூ.446.52 கோடி முதலாம் ஆட்சிக்காலம்

    2021 - 2025 ரூ.462.58 கோடி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆட்சிக்காலப் பகுதிகள்.

    2020 மற்றும் 2021-ன் முற்பகுதியில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டுப் பயணங்கள் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.

    இந்தச் செலவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.

    அதில்,"இந்தப் பயணங்கள் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேம்படுத்தவும் உதவுகின்றன" என்று தெரிவித்துள்ளது.

    மேலும், ஜி20 (G20), பிரிக்ஸ் (BRICS) போன்ற சர்வதேச உச்சிமாநாடுகளில் இந்தியாவின் பங்களிப்பை உறுதி செய்ய இப்பயணங்கள் அவசியம் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.

    • போராட்டத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் முழு ஆதரவு.
    • தொழிலாளர்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன் - ராகுல் காந்தி

    பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இன்று தொழிற்சங்கங்கள் மற்றும் விவசாய அமைப்புகள் நாடு தழுவிய வேலை நிறுத்தம் மற்றும் போராட்டம் நடத்தி வருகிறது.

    29 பழைய தொழிலாளர் சட்டங்களை நீக்கிவிட்டு நவம்பர் 2025-இல் அறிவிக்கப்பட்ட நான்கு புதிய தொழிலாளர் சட்டத் தொகுப்புகளை ரத்து செய்ய வேண்டும், அணுசக்தி துறையை தனியாருக்கு திறந்து விடும் SHANTI சட்டம், மின்சாரத் திருத்த சட்டம், விவசாயிகளை பாதிக்கும் வரைவு விதை மசோதா ஆகியவற்றை திரும்பப் பெற வேண்டும், வி.பி.ஜி ராம் ஜி சட்டத்தை ரத்து செய்து, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டத்தை மீண்டும் பழையபடி அமல்படுத்த வேண்டும்.

    அமெரிக்காவுடனான இடைக்கால வர்த்தக ஒப்பந்தத்தை கைவிட வேண்டும் மற்றும் விவசாய விளை பொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை உறுதி செய்ய வேண்டும், விக்சித் பாரத் - கிராமின் மிஷன் 2025 சட்டத்தை ரத்து செய்து, இளைஞர்களுக்கு முறையான வேலைவாய்ப்புகளை உருவாக்க வேண்டும், பொதுத்துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதை நிறுத்த வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த வேலைநிறுத்தம் நடைபெறுகிறது.

    போராட்டத்திற்கு கேரள அரசுப் பேருந்து ஓட்டுனர்கள் முழு ஆதரவு அளித்துள்ளதால் அங்கு போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.   

    இந்நிலையில் போராட்டத்திற்க்கு மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி ஆதரவு தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் பதிவில், "இன்று, நாடு முழுவதும் லட்சக்கணக்கான தொழிலாளர்களும் விவசாயிகளும் தங்கள் உரிமைகளுக்காகக் குரல் கொடுக்க வீதிகளில் இறங்கி போராடி வருகின்றனர்.

    புதிய நான்கு தொழிலாளர் சட்டத் தொகுப்புகளும் தங்கள் உரிமைகளைப் பலவீனப்படுத்தும் என்று தொழிலாளர்கள் அஞ்சுகின்றனர்.

    வர்த்தக ஒப்பந்தம் தங்கள் வாழ்வாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும் என்று விவசாயிகள் அஞ்சுகின்றனர்.

    மேலும் MNREGA-வை பலவீனப்படுத்துவது அல்லது நீக்குவது கிராமங்களுக்கான கடைசி ஆதரவையும் பறித்துவிடும்.

    அவர்களின் எதிர்காலம் குறித்த முடிவுகள் எடுக்கப்பட்டபோது, அவர்களின் குரல்கள் புறக்கணிக்கப்பட்டன.

    மோடிஜி இப்போது கேட்பாரா? அல்லது அவர் மீதான பிடி இன்னும் அதிகமாக உள்ளதா? தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் பிரச்சினைகள் மற்றும் போராட்டங்களுடன் நான் உறுதியாக நிற்கிறேன்" என்று தெரிவித்துள்ளார்.   

    • பிரதமர் தொடங்கி வைக்க வேண்டிய பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.
    • வில்லியனூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை எப்போது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர்.

    புதுச்சேரி:

    புதுச்சேரியில் சட்டசபை தேர்தல் விரைவில் நடக்க உள்ள நிலையில் தற்போதைய என்.ஆர். காங்.,-பா.ஜ.க. கூட்டணி தொடர்வது உறுதியாகி உள்ளது. அதையொட்டி தேர்தல் அறிவிப்புக்கு முன்பாக பிரதமர் மோடியை வரவழைத்து, அரசு விழா நடத்தி மத்திய, மாநில அரசுகள் சார்பில் மெகா திட்டங்களை அறிவிக்க பா.ஜ.க.வினர் ஏற்பாடு செய்தனர்.

    அதன்படி இன்று 12-ந்தேதி பிரதமர் மோடி புதுச்சேரிக்கு வர இருப்பதாக அறிவிக்கப்பட்டது. பின்னர் 14, 16 மற்றும் 21-ந் தேதிகள் அறிவிக்கப்பட்டது. பிரதமர் புதுச்சேரிக்கு வரும் தேதி உறுதி செய்யாத நிலையிலும், பிரதமர் தொடங்கி வைக்க வேண்டிய பணிகள் வேகப்படுத்தப்பட்டு வருகிறது.

    இந்நிலையில் வில்லியனூரில் நடந்த அரசு விழாவில் பங்கேற்ற முதல்-அமைச்சர் ரங்கசாமியிடம், பிரதமர் மோடியின் புதுச்சேரி வருகை எப்போது என நிருபர்கள் கேள்வி எழுப்பினர். அப்போது அவர் மார்ச் 1-ந்தேதி பிரதமர் மோடி புதுச்சேரி வருவார் என தெரிவித்தார்.

    பிரதமர் மோடி புதுச்சேரி வருகை உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து, அவரது வருகைக்கு முன்பாக கூட்டணியில் தொகுதி பங்கீடு பேசி முடிவு செய்து பிரதமர் பங்கேற்கும் விழா மேடையில் கூட்டணி கட்சி தலைவர்களை பங்கேற்க வைப்பதற்கான பணிகளை பா.ஜ.க. மற்றும் என்.ஆர்.காங்கிரஸ் கட்சியினர் துரிதப்படுத்தி வருகின்றனர்.

    ×