என் மலர்
நீங்கள் தேடியது "foreign trip"
- நூற்றுக்கணக்கான கோடி ரூபாய் செலவை நாடாளுமன்றத்தில் பட்டியலிட்ட மத்திய அரசு.
- செலவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பிய நிலையில் விளக்கம்.
நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்ட சமீபத்திய தரவுகளின்படி, கடந்த 5 ஆண்டுகளில் (2021-2025) பிரதமர் நரேந்திர மோடியின் வெளிநாட்டுப் பயணங்களுக்காக மத்திய அரசு ரூ.462.58 கோடி செலவிட்டுள்ளதாக நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது.
மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் வழங்கிய தகவலின்படி, இந்தப் பயணச் செலவுகளில் விமானப் பயணம், தங்குமிடம் மற்றும் பாதுகாப்பு ஏற்பாடுகள் அடங்கும்.
அமெரிக்கப் பயணங்களுக்கு மட்டும் மொத்தத் தொகையில் சுமார் 16% செலவிடப்பட்டுள்ளது. அமெரிக்காவைத் தொடர்ந்து ஜப்பான் மற்றும் பிரான்ஸ் நாடுகளுக்கான பயணங்களுக்குத் தலா 9% நிதி செலவிடப்பட்டுள்ளது.
2025-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் பிரதமர் மேற்கொண்ட பிரான்ஸ் நாட்டுப் பயணம் மிகவும் அதிக செலவான ஒன்றாகக் கருதப்படுகிறது (சுமார் ரூ.25.5 கோடி).
இதற்கு அடுத்ததாக 2023 ஜூன் அமெரிக்கப் பயணம் (ரூ.22.8 கோடி) இடம் பெற்றுள்ளது. நாடாளுமன்றத்தில் கேட்கப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கையில், முந்தைய காலக்கட்டங்களின் செலவுகளும் ஒப்பிடப்பட்டன.
2014 - 2019 ரூ.446.52 கோடி முதலாம் ஆட்சிக்காலம்
2021 - 2025 ரூ.462.58 கோடி இரண்டாம் மற்றும் மூன்றாம் ஆட்சிக்காலப் பகுதிகள்.
2020 மற்றும் 2021-ன் முற்பகுதியில் கோவிட்-19 பெருந்தொற்று காரணமாக வெளிநாட்டுப் பயணங்கள் பெருமளவு குறைக்கப்பட்டிருந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தச் செலவுகள் குறித்து எதிர்க்கட்சிகள் கேள்வி எழுப்பியுள்ள நிலையில், மத்திய அரசு விளக்கமளித்துள்ளது.
அதில்,"இந்தப் பயணங்கள் இந்தியாவின் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்தவும், வர்த்தகம், முதலீடு மற்றும் தொழில்நுட்பப் பரிமாற்றங்களை மேம்படுத்தவும் உதவுகின்றன" என்று தெரிவித்துள்ளது.
மேலும், ஜி20 (G20), பிரிக்ஸ் (BRICS) போன்ற சர்வதேச உச்சிமாநாடுகளில் இந்தியாவின் பங்களிப்பை உறுதி செய்ய இப்பயணங்கள் அவசியம் என்றும் அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது.
- லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர்.
- சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
நான் முதல்வன் திட்டத்தின் கீழ் லண்டனில் உள்ள Durham பல்கலைக்கழகத்தில் ஒருவார பயிற்சி முடித்துவிட்டு சென்னை திரும்பிய மாணவர்கள், முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தனர்.
லண்டனில் பெற்ற அனுபவங்களை முதலமைச்சரிடம் பகிர்ந்து கொண்டனர். சர்வதேச நிறுவனங்களில் வேலை கிடைக்க வாய்ப்புள்ளதாகவும் நம்பிக்கை தெரிவித்தனர்.
இந்த சந்திப்பு தொடர்பாக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்த பதிவில் கூறப்பட்டுள்ளதாவது:-
நான் முதல்வன் திட்டம் என்னுடைய கனவுத்திட்டம் மட்டுமல்ல; நான் விரும்பும் மாணவச் செல்வங்களின் கனவுகளை நனவாக்கும் திட்டம்!
இந்தத் திட்டத்தின்கீழ் இங்கிலாந்து நாட்டுக்குச் சென்று பயிற்சி முடித்து திரும்பிய 25 மாணவர்களைச் சந்தித்தேன். அவர்கள் தங்களது அனுபவங்களைப் பகிர்ந்தபோது, அவர்களது கண்களில் வெளிப்பட்ட மகிழ்ச்சியையும் உள்ளங்களில் நிறைந்திருந்த நம்பிக்கையையும் கண்டேன். அவர்களது நம்பிக்கைதான் நாளைய நம் புகழுக்கான அச்சாணி!
நாடும் நாமும் பெருமையடையக் கற்போம்!
கல்வியைவிடச் சிறந்த செல்வம் ஏதுமில்லை எனக் கற்பிப்போம்!
கல்வியே பெருந்துணை எனத் தடைகளை உடைத்து வெற்றிநடை போடுவோம்!
இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.






