என் மலர்
நீங்கள் தேடியது "திருப்பரங்குன்றம்"
- நீதிபதிகள் அரசியலமைப்பிற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், "கட்சிசார்ந்த அரசியல் அழுத்தங்கள் அல்லது கருத்தியல் மிரட்டல்களுக்கு" அல்ல
- எம்.பி.க்கள் மேற்கோள் காட்டிய காரணங்கள் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவை போதுமானவை அல்ல
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனுக்கு எதிரான பதவி நீக்க தீர்மானத்திற்கு, 50க்கும் மேற்பட்ட ஓய்வுபெற்ற நீதிபதிகள் கண்டனம் தெரிவித்துள்ளனர்.
ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதிகள் மற்றும் பல உயர் நீதிமன்றங்களின் முன்னாள் தலைமை நீதிபதிகள் உட்பட 50க்கும் மேற்பட்ட முன்னாள் நீதிபதிகள் இந்த நடவடிக்கையைக் கண்டித்து கடிதம் ஒன்றை வெளியிட்டுள்ளனர். அதில், தீர்ப்பின் பேரில் அவரை பதவி நீக்கம் செய்யும் முயற்சி "நமது ஜனநாயகத்தின் வேரையும், நீதித்துறையின் சுதந்திரத்தையும் வெட்டிவிடும்" என்று தெரிவித்துள்ளனர்.
மேலும், எம்.பி.க்கள் மேற்கோள் காட்டிய காரணங்கள் மேலோட்டமாக எடுத்துக் கொள்ளப்பட்டாலும், அவை போதுமானவை அல்ல எனவும், இது "கொள்கை ரீதியான, நியாயமான விமர்சனம் அல்ல" என்றும் தெரிவித்துள்ளனர். இம்பீச்மெண்ட் நடைமுறையின் நோக்கம் நீதித்துறை நேர்மையை நிலைநிறுத்துவதாகும். அதை பழிவாங்கும் கருவியாக பயன்படுத்தக்கூடாது. இன்று, ஒரு நீதிபதியாக இருக்கலாம்; நாளை, அது ஒட்டுமொத்த நிறுவனமாகவும் இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர்.
கட்சியின் நிலைப்பாட்டை கடந்து, நாடாளுமன்ற உறுப்பினர்கள், வழக்கறிஞர்கள், நீதித்துறை மற்றும் குடிமக்கள் அனைவரும் "இந்த நடவடிக்கையை அதன் தொடக்கத்திலேயே முளையிலேயே கிள்ளி எறிய வேண்டும்" எனவும் தெரிவித்துள்ளனர். நீதிபதிகள் அரசியலமைப்பிற்குப் பொறுப்புக்கூற வேண்டியவர்கள், "கட்சிசார்ந்த அரசியல் அழுத்தங்கள் அல்லது கருத்தியல் மிரட்டல்களுக்கு" அல்ல எனவும் தெரிவித்துள்ளனர்.

- தாக்கல் செய்த மனுக்கள் கார்த்திகை தீபம் தொடர்புடையவை அல்ல
- 3 நாட்களுக்கு முன் தனி நீதிபதி உத்தரவிட்டு, உடனே நடைமுறைப்படுத்தக் கூறினால் எப்படி?
திருப்பரங்குன்றம் கார்த்திகை தீப விவகாரத்தில், மலைமீது உள்ள தூணில்தான் விளக்கேற்ற வேண்டும் என உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். இந்த உத்தரவை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் நிர்வாகம் சார்பில் உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இதேபோன்று தனி நீதிபதி உத்தரவை எதிர்த்து மாவட்ட ஆட்சியர், மாநகரக் காவல் ஆணையர், தர்கா நிர்வாகம் உள்ளிட்டோர் தரப்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன.
இந்த மனுக்கள் நீதிபதிகள் ஜெயச்சந்திரன், ராமகிருஷ்ணன் அமர்வில் கடந்த வாரம் விசாரணைக்கு வந்தன. அப்போது நீதிபதிகள், எதிர்மனுதாரர்களுக்கு மனு தாக்கல் செய்ய கால அவகாசம் வழங்கி, மேல்முறையீட்டு வழக்கை ஒத்திவைத்தனர். இந்நிலையில் இந்த மனு இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. காலையில் விசாரணை நடைபெற்ற நிலையில், பிற்பகலும் தொடர்ந்தது.
அப்போது அரசுத்தரப்பில், "மலையில் தேவஸ்தானமே விளக்கேற்ற வேண்டும். தனி நபர் ஏற்ற அனுமதிக்கக் கூடாது என உத்தரவில் கூறப்பட்டுள்ளது. 73 ஆண்டுகளாக உச்சி பிள்ளையார் கோயில் மண்டபத்திலேயே கார்த்திகை தீபம் ஏற்றப்பட்டது. தீபமேற்றும் இடத்தை மாற்றுவது குறித்து கோயில் நிர்வாகம் முடிவெடுக்க வேண்டுமென ஏற்கெனவே உத்தரவிடப்பட்டுள்ளது. 1970, 2014ஆம் ஆண்டுகளில் தொடரப்பட்ட வழக்குகளும் தனி நீதிபதி உத்தரவை உறுதி செய்தன. மேலும் 3 நாட்களுக்கு முன் தனி நீதிபதி உத்தரவிட்டு, உடனே நடைமுறைப்படுத்தக் கூறினால் எப்படி?" என வாதம் முன்வைக்கப்பட்டது.
தொடர்ந்து கோயில் நிர்வாக தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ராம ரவிக்குமார் உள்ளிட்டோர் தாக்கல் செய்த மனுக்கள் கார்த்திகை தீபம் தொடர்புடையவை அல்ல" என தெரிவித்தார். அதற்கு நீதிபதிகள் திருப்பரங்குன்றம் மலை தொடர்புடையதுதானே என கேள்வி எழுப்பினர்.
தொடர்ந்து மனுதாரர் குறிப்பிட்டுள்ள தூண் கோயிலுக்கு சொந்தமான இடத்தில்தான் உள்ளது. திருப்பரங்குன்றம் மலைக்கு இரு உச்சிகள் உள்ளன. ஒன்றில் தர்கா, மற்றொன்றில் கோயில் அமைந்துள்ளது. அங்கு கிரானைட்டால் ஆன தூண்தான் உள்ளது. தீபத்தூண்தான் என நிரூபிக்க எந்த ஆவணமும் தாக்கல் செய்யப்படவில்லை என கோயில் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
அனைத்துதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள் வழக்கு விசாரணையை திங்கள்கிழமைக்கு (15.12.2025) ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
- திருப்பரங்குன்றம் மலையின் மீது சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது.
- இந்துத்துவ அமைப்பினர் பிரச்சனை செய்ய தொடங்கியுள்ளனர்.
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து இந்துத்துவ அமைப்பினர் பிரச்சனை செய்ய தொடங்கியுள்ளனர்.
அதிலும் சமீபத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். ஜிவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு இன்னும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. அவரை இம்பீச்மெண்ட் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதமும் வழங்கியுள்ளனர்.
இதனை தொடர்ந்து திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அது புரளி என்று தெரியவந்தது.
இந்நிலையில், மீண்டும் சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து தர்காவில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை செய்ததில் வெடிகுண்டு மிரட்டல் போலி என்று தெரிய வந்தது
- மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது.
- திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதி பள்ளிவாசலிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை
திருப்பரங்குன்றம் மலையடிவாரத்தில் முருகன் கோயிலும், மலையின் மீது காசி விஸ்வநாதர் கோயிலும், சிக்கந்தர் பாதுஷா தர்காவும் அமைந்துள்ளது. தர்காவும், கோயிலும் அருகருகே அமைந்துள்ளதை வைத்து ஒரு பெரும் அரசியலே தமிழ்நாட்டில் நிகழ்த்தப்பட்டு வருகிறது.
அதிலும் சமீபத்தில் திருப்பரங்குன்றம் கார்த்திகை தீபம் தொடர்பாக, உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். ஜிவாமிநாதன் பிறப்பித்த உத்தரவு இன்னும் பல சர்ச்சைகளுக்கு வழிவகுத்துள்ளது. அவரை இம்பீச்மெண்ட் செய்ய இந்தியா கூட்டணி தலைவர்கள் மக்களவை சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதமும் வழங்கியுள்ளனர்.
இப்படி ஒரு பெரும் சர்ச்சை தொடர்ந்து வரும் நிலையில், இதனை இன்னும் பரபரப்பாக்கும் வகையில் ஒரு செய்தி வெளியாகி உள்ளது. அதாவது திருப்பரங்குன்றம் மலையில் அமைந்துள்ள சிக்கந்தர் தர்காவுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளது. மிரட்டலை தொடர்ந்து சிக்கந்தர் தர்காவில் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தினர். மேலும் திருப்பரங்குன்றம் பெரிய ரதவீதி பள்ளிவாசலிலும் வெடிகுண்டு தடுப்பு பிரிவினர் சோதனை நடத்தி வருகின்றனர்.
- மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு இதில் என்ன பங்கு உள்ளது?
- அவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார்.
உயர் நீதிமன்ற மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் தானே முன்வந்து பதவி விலகவேண்டும் என்றும், தற்போதைய சூழலில் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக்கூடாது என்றும் விசிக தலைவர் திருமாவளவன் தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள பதிவில்,
"நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அவர்களைப் பதவி நீக்கம் செய்யவேண்டுமென ( இம்பீச்மெண்ட் ) நாடாளுமன்ற மக்களவைத் தலைவரிடம் நூற்றுக்கும் மேற்பட்ட எம்.பிக்கள் கையொப்பமிட்டு மனு ஒன்றை நேற்று அளித்துள்ளோம். இதனையடுத்து நாடாளுமன்ற நடைமுறைப்படி மக்களவைத் தலைவர், ஒரு உச்சநீதிமன்ற நீதிபதி, ஒரு உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதி, ஒரு சட்ட வல்லுநர் ஆகியோரைக் கொண்ட விசாரணைக் குழுவை உடனே அமைக்க வேண்டும். எனவே, மக்களவைத் தலைவர் விரைந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சார்பில் வலியுறுத்துகிறோம்.
நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனுக்கு எதிரான 'இம்பீச்மெண்ட் நோட்டீஸில்', அவர் ஒருதலைச் சார்போடும் ,அரசமைப்புச் சட்டத்துக்குப் புறம்பாகவும் நடந்துகொள்கிறார்; ஒரு குறிப்பிட்ட வழக்கறிஞருக்கு ஆதரவாகச் செயல்படுகிறார் ; ஒரு குறிப்பிட்ட சாதியினருக்கு ஆதரவாகத் தனது அதிகாரத்தைத் தவறாகப் பயன்படுத்துகிறார் என்பவை உள்ளிட்டக் குற்றச்சாட்டுகளைச் சுட்டிக் காட்டியுள்ளோம்.
இந்நிலையில், அவர் தொடர்ந்து வழக்குகளை விசாரித்தால் தமிழ்நாட்டில் மேலும் பல குழப்பங்களை ஏற்படுத்துவார். அதற்கு நேற்று அவர் பிறப்பித்துள்ள உத்தரவே சாட்சியாகவுள்ளது. 'நீதிமன்ற அவமதிப்பு' வழக்கின் வரம்புகளை மீறி, அதற்குத் தொடர்பில்லாத தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளர், டிஜிபி மற்றும் இந்திய ஒன்றிய அரசின் உள்துறைச் செயலாளர் ஆகியோரை இந்த வழக்கில் சேர்த்து விசாரணைக்கு அழைத்துள்ளார்.
இது சட்டத்தை மீறுவதோடு மட்டுமின்றி, மாநில-மத்திய அரசுகளை அவமதிப்பதுமாகும். குறிப்பாக, இந்திய அரசின் உள்துறை செயலாளரை இந்த நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் இணைத்திருப்பது உள்நோக்கம்கொண்டதாகவுள்ளது. இந்திய மத்திய அரசின் உள்துறை செயலாளருக்கு இதில் என்ன பங்கு உள்ளது? அவரிடம் இவர் என்ன எதிர்பார்க்கிறார்? நீதிமன்ற அவமதிப்புக்கு அவர் என்ன செய்ய வேண்டுமென இவர் விரும்புகிறார்? அதிகார வரம்பை மீறி இந்த மூவருக்கும் அழைப்பு அனுப்பியிருப்பது இவரே எடுத்த முடிவாகத் தெரியவில்லை.
இவருக்குப் பின்னணியில் ஒரு சதிக்கும்பல் வேலை செய்வதாகத் தெரிகிறது. திருப்பரங்குன்றம் பிரச்சினையை மேலும் சிக்கலாக்கி மதவெறி அரசியலைத் தூபமிட்டு வளர்க்கப் பார்க்கிறார் என கருத வேண்டியுள்ளது. எனவே, தற்போதைய சூழலில் அவருக்கு எந்த வழக்கையும் ஒதுக்கக்கூடாது என சென்னை உயர்நீதிமன்றத் தலைமை நீதிபதியை கேட்டுக்கொள்கிறோம்.
அவருக்கு எதிராக 'இம்பீச்மெண்ட் நோட்டீஸ்' அளிக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தன்மீதான விசாரணை தடையின்றி நடப்பதற்கு ஏதுவாக, தானே முன்வந்து பதவி வில வேண்டும் எனவும் கேட்டுக்கொள்கிறோம்." என தெரிவித்துள்ளார்.
- கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்லமுடியாது என தமிழக அரசு வாதிட்டது.
- தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன் என்றார்.
மதுரை:
திருப்பரங்குன்றம் மலையில் உள்ள தீபத்தூணிலும் தீபத்தை ஏற்ற போதிய முன்னேற்பாடு செய்யாத அலுவலர்கள் மீது நீதிமன்ற அவமதிப்பு நடவடிக்கை கோரிய வழக்கு மதுரை ஐகோர்ட்டில், தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் அமர்வில் இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது தமிழக அரசு சார்பில் வாதிடுகையில், "மேல்முறையீட்டு வழக்கு முடியும்வரை காத்திருக்க வேண்டும். அதற்குள் திரி, எண்ணெய், மலை எங்கும் போய்விடாது. நீதிபதி உத்தரவு சரியா, தவறா என்பதற்கே மேல்முறையீடு செய்யப்பட்டுள்ளது. எப்படி இடைக்கால உத்தரவு கோர முடியும். கோவில்களில் இதைச் செய்யக்கூடாது, இதைச் செய்ய வேண்டும் என யாரும் சொல்லமுடியாது. கோர்ட் கூட சொல்லமுடியாது. தேவஸ்தானமே முடிவுசெய்ய இயலும். இதுகுறித்த விரிவான உத்தரவுகள் உள்ளன. பிரச்சனை வந்தால் கோர்ட்டை காரணம் காட்ட இயலாது. அரசே பொறுப்பேற்க வேண்டும். சட்டம்-ஒழுங்கை கருத்தில் கொள்ள வேண்டும். மேல் முறையீட்டு வழக்கு விசாரணைக்கு வரவுள்ளதால் அதன்பின் இந்த வழக்கை பட்டியலிட வேண்டும் என தெரிவிக்கப்பட்டது.
இதனைத்தொடர்ந்து நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் கூறுகையில், "திருப்பரங்குன்றம் வழக்கு தீபம் ஏற்றும் உரிமை சார்ந்தது மட்டுமல்ல, சொத்து உரிமை தொடர்பானதும் கூட. தமிழ்நாடு அரசின் கோரிக்கையை ஏற்று வழக்கை ஒத்திவைக்கிறேன். ஆனால் அடுத்த முறை விசாரணைக்கு வரும்போது இடைக்கால உத்தரவு பெறப்படவில்லை எனில் அப்போதும் ஒத்திவைக்க இயலாது" என தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், தொடர்ந்து நடந்த விசாரணையின்போது திருப்பரங்குன்றம் தொடர்பான கோர்ட் அவமதிப்பு வழக்கில் வரும் 17-ம் தேதி தலைமைச் செயலாளர், மதுரை மாநகர டிஜிபி ஆகியோர் காணொலியில் ஆஜராகி விளக்கமளிக்க வேண்டும் என நோட்டீஸ் பிறப்பித்து ஐகோர்ட் மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டார்.
- சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் நோக்கில் தான் இந்தியா கூட்டணி, நீதிபதி மீது தகுதிநீக்க நோட்டீஸ் அளித்துள்ளது.
- நீதித்துறையை அச்சுறுத்தும் கருவியாக தகுதி நீக்க நோட்டீசை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பயன்டுத்துகின்றனர்.
திருப்பரங்குன்றம் விவகாரத்தில் ஐகோர்ட் மதுரைக்கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன் அளித்த உத்தரவு மத நல்லிணக்கத்தை பாதிக்கும் வகையில் அமைந்ததாக தி.மு.க. கூட்டணி கட்சிகள் தெரிவித்தன.
இந்தியா கூட்டணி தலைவர்கள் இன்று நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதனை பதவி நீக்கம் செய்ய வேண்டும் என்று சபாநாயகர் ஓம் பிர்லாவிடம் தீர்மான கடிதத்தை அளித்தனர்.
இதுதொடர்பாக பா.ஜ.க. முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள அறிக்கையில்,
திருப்பரங்குன்றம் வழக்கில் உத்தரவு பிறப்பித்த நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதனை தகுதி நீக்க நோட்டீசா?
சிறுபான்மையினரை திருப்திபடுத்தும் நோக்கில் தான் இந்தியா கூட்டணி, நீதிபதி மீது தகுதிநீக்க நோட்டீஸ் அளித்துள்ளது.
நீதித்துறையை அச்சுறுத்தும் கருவியாக தகுதி நீக்க நோட்டீசை இந்தியா கூட்டணி எம்.பி.க்கள் பயன்டுத்துகின்றனர்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
- முருகனுக்கு சொந்தமான இடத்தில் தீபத்தை ஏற்றுவதை எப்படி தடுக்க முடியும்.
- வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினை தான் இருக்கும்.
கோபி:
ஈரோடு மாவட்டம் கோபிசெட்டிபாளையத்தில் இன்று பாரதிய ஜனதா கட்சியின் தேசிய செயற்குழு உறுப்பினர் எச்.ராஜா திருமண நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். பின்னர் எச்.ராஜா நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் கார்த்திகை தீபம் ஏற்ற முடியும் என மதுரை உயர்நீதிமன்றம் கூறியிருந்தது. நீதிபதி சாமிநாதன் நேரடியாக சென்று பார்வையிட்டு வந்துள்ளார். இந்த அரசு இந்து விரோத அரசாக செயல்பட்டு வருகிறது.
முருகனுக்கு சொந்தமான இடத்தில் தீபத்தை ஏற்றுவதை எப்படி தடுக்க முடியும். கடந்த சில தினங்களுக்கு முன்பு சிவகங்கையில் இருந்து மதுரை நோக்கி நான் வந்து கொண்டிருந்தேன். அப்போது டி.எஸ்.பி செல்வராஜ் என்பவர் வாகன விதிமுறைகளை மீறி செயல்பட்டதாக கூறி என் மீது வழக்கு பதிவு செய்துள்ளார். இந்துக்களை என்ன வேண்டுமானாலும் செய்யலாமா?
வரும் சட்டமன்றத் தேர்தலில் முக்கிய சாராம்சமாக திருப்பரங்குன்றம் தீபம் பிரச்சினை தான் இருக்கும். இதன் மூலம் தி.மு.க அரசை தூக்கி அடிப்போம். தமிழகத்தில் தி.மு.க அரசை துடைத்தெறிய வேண்டும்.
வரும் 12-ம் தேதிக்குள் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றப்பட வேண்டும்.
அ.தி.மு.க-பா.ஜ.க கூட்டணிக்கு எடப்பாடி பழனிசாமி தலைவராக உள்ளார். தமிழகத்தில் நிச்சயம் மாற்றம் நிகழும். கடந்த 55 மாதத்தில் தமிழகத்தில் மட்டும் 6,700 கொலைகள் நடந்துள்ளது. வன்கொடுமைகளும் அதிகமாக நடந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறினார்.
- அவர் சிறந்த மனிதர். ஆனால், அவர் ஆட்சியை அவ்வாறு கூற முடியவில்லை.
- முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் என யாராக இருந்தாலும் தீர்ப்பை அவமதித்தவர்கள், தவறு செய்தவர்களாகவே கருதப்படுவர்.
மதுரை தொண்டி சாலையில் வீரமங்கை வேலுநாச்சியார் பெயரில், ரூ.150 கோடி செலவில் கட்டப்பட்ட புதிய மேம்பாலத்தை மக்கள் பயன்பாட்டிற்காக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று திறந்துவைத்தார். தொடர்ந்து உத்தங்குடியில் நடைபெற்ற அரசு நநலத்திட்ட உதவிகள் வழங்கும் விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் ஒரு லட்சத்து 211 பயனாளிகளுக்கு 174 கோடி மதிப்பீட்டில் வீட்டுமனைப் பட்டா வழங்கினார்.
மேலும், 3 ஆயிரத்து 65 கோடி ரூபாயில் முடிவுற்ற திட்டப் பணிகளை தொடங்கிவைத்து, புதிய திட்டப் பணிகளுக்கு அடிக்கல் நாட்டினார். தொடர்ந்து திருப்பரங்குன்றம் விவகாரம் தொடர்பாக விழாவில் பேசிய அவர், அனைத்து மதத்தினரும் அங்காளி, பங்காளியாக பழகும் மண்ணில் பெரியார் ஏற்றிய சமத்துவ தீபமே ஒளிரும் என தெரிவித்தார்.
இந்நிலையில் இதுதொடர்பாக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரனிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு பதிலளித்த அவர்,
"திருப்பரங்குன்றம் விவகாரத்தில் முதலமைச்சரை நினைத்தால் வருத்தமாக உள்ளது. நான் அவரை பலகோணங்களில் பார்த்துள்ளேன். என்னை பொறுத்தவரை அவர் சிறந்த மனிதர். ஆனால், அவர் ஆட்சியை அவ்வாறு கூற முடியவில்லை. அவர்கள் வேண்டுமானால் அங்காளி, பங்காளியாக இருக்கலாம்.
நாங்கள் இஸ்லாமியர்களோடு மாமன், மச்சானாகத்தான் பழகுகிறோம். இந்த விவகாரத்தில் நீதிமன்ற தீர்ப்பையே நடைமுறைப்படுத்தியிருக்க வேண்டும். தீர்ப்புக்கு பின் 144 தடை உத்தரவு என்பது நீதிமன்றத்தை அவமதிக்கும் செயல். முதலமைச்சர், மாவட்ட ஆட்சித்தலைவர் என யாராக இருந்தாலும் தீர்ப்பை அவமதித்தவர்கள், தவறு செய்தவர்களாகவே கருதப்படுவர்.
தீபம் ஏற்றுவதால் எந்த இஸ்லாமிய பெருமக்களுக்கும் வருத்தம் இல்லை. இதற்கு எதிராக வழக்குகளும் இல்லை. தீபாவளிக்கு பிறகு பெரும்பான்மையான மக்களால் கார்த்திகை தீபம் கொண்டாடப்படுகிறது. இந்த சூழலில் மக்களை சந்தோஷப்படுத்துவதை விட்டுவிட்டு, 2026 சட்டமன்ற தேர்தலை கணக்கில்கொண்டு அங்காளி, பங்காளி என்ற வார்த்தையை வாக்குவங்கிக்காக முதலமைச்சர் பயன்படுத்துகிறார் என்பதை பகிரங்கமாக தெரிவித்துக்கொள்கிறேன்." என தெரிவித்தார்.
- அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.
- சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா?
தமிழ்நாடு அயோத்தி போல மாறுவதில் தவறில்லை என பேசிய நயினார் நாகேந்திரனுக்கு திமுக எம்பி கன
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர்," திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.
தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும். திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பினார்.
நயினார் நாகேந்திரனின் இந்த கருத்துக்கு திமுக எம்பி கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார்.
இதுகுறித்து கனிமொழி தனது எக்ஸ் தள பக்கத்தில் கூறியிருப்பதாவது:-
எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும்?
கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ் - பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா?
கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருகிறது.
இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
- தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும்.
- திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
பா.ஜ.க. மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:
* திருப்பரங்குன்றம் அயோத்தியாக மாறுவதில் தவறில்லை. அயோத்தி இந்தியாவில் தானே இருக்கிறது.
* தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி ராமனின் ஆட்சியாக இருக்கும்.
* திருப்பரங்குன்றத்தில் தீபம் ஏற்ற எந்த இஸ்லாமியரும் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
* சனாதன தர்மத்தை அழிப்பதற்கான ஆரம்ப கட்ட பணிகளில் ஈடுபடுகிறார்களா? என்று அவர் கேள்வி எழுப்பி உள்ளார்.
- எந்த மத விழாவையும் ஒரு வாரம் தாமதமாகக் கொண்டாட முடியுமா?
- பக்தர்கள் தங்கள் கோயில்களையும் மத விவகாரங்களையும் நிர்வகிக்க 'சனாதன தர்ம ரக்ஷா வாரியம்' நமக்குத் தேவை.
திருப்பரங்குன்றம் விவகாரம் குறித்து ஆந்திர துணை முதல்வர் பவன் கல்யாண் வெளியிட்ட எக்ஸ் பதிவில்,
கார்த்திகை மாதத்தில் மலையில் விளக்கு ஏற்றுவது ஒரு பண்டைய இந்து பாரம்பரியம். இன்று இந்தியாவில் உள்ள இந்துக்கள் தங்கள் நம்பிக்கை மற்றும் மரபுகளைப் பின்பற்ற நீதிமன்றங்களை நாட வேண்டியிருப்பது துரதிர்ஷ்டவசமானது.
ஒரு தீர்க்கமான சட்டப் போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகும், பக்தர்கள் தங்கள் சொந்த சொத்தில் ஒரு சிறிய, அமைதியான சடங்கைக் கூட செய்ய முடியாவிட்டால், இந்த நாட்டில் அவர்களுக்கு அரசியலமைப்பு நீதி எங்கே கிடைக்கும்?
உங்களை நீங்களே கேட்டுக்கொள்ளுங்கள். எந்த மத விழாவையும் ஒரு வாரம் தாமதமாகக் கொண்டாட முடியுமா? ஒரு புனித நாளைக் கொண்டாடுவதை வேறொரு நேரத்திற்கு மாற்ற முடியுமா?
ஆனாலும், அந்த புனிதமான கார்த்திகை தீப தருணம் திருடப்பட்டுள்ளது.
பக்தர்கள் தங்கள் கோயில்களையும் மத விவகாரங்களையும் நிர்வகிக்க 'சனாதன தர்ம ரக்ஷா வாரியம்' நமக்குத் தேவை.
இந்து மரபுகள் மற்றும் பழக்கவழக்கங்களை கேலி செய்வது சில குழுக்களுக்கு வழக்கமாகிவிட்டது. மற்ற மத நிகழ்வுகளின் விஷயத்திலும் அவர்களால் இதைச் செய்யத் துணிய முடியுமா?
இந்துக்கள் சாதி, பிராந்தியம் மற்றும் மொழித் தடைகளால் பிரிக்கப்பட்டிருக்கும் வரை, இந்து மதமும் அதன் நடைமுறைகளும் தொடர்ந்து கேலி செய்யப்பட்டு அவமதிக்கப்பட்டுக் கொண்டே இருக்கும்.
காஷ்மீர் முதல் கன்னியாகுமரி வரை, காமாக்யா முதல் துவாரகா வரை ஒவ்வொரு இந்துவும் தங்கள் சொந்த மண்ணில் இந்துக்கள் எதிர்கொள்ளும் அவமானங்களைப் பற்றி விழித்துக் கொள்ளும் நாள் வரும் என்று நம்புகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.






