search icon
என் மலர்tooltip icon
    • சிறந்த விளையாட்டு வீரரராக விளங்குவதற்கு 7, 8–, 9, 11 – -ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6 , 7 - ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும்.
    • மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சத்தான உணவு

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உண வுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளி கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி நாமக்கல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதக மண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவி களுக்கான விளை யாட்டு விடுதி நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    தேர்வு

    மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளை யாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரரராக விளங்குவதற்கு 7, 8–, 9, 11 – -ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்க ளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்கு வதற்கு 6 , 7 - ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடை பெறும். இதற்கான மாவட்ட அளவி லான தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நாமக்கல் மாவட்ட விளையாட்ட ரங்கத்தில் நடைபெற உள்ளது.

    மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்து பந்து, கபாடி மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்கு வாஷ், மற்றும் வில்வித்தை பளுதூக்குதல் மற்றும் மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து , கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், ஹாக்கி, டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபாடி, டென்னிஸ், ஜீடோ ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ், வில்வித்தை பளுதூக்குதல் மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

    முன்னூரிமை

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். விளை யாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை 16-ந்தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடுவதற்கான கடைசி நாள் 23.05.2023 அன்று மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தவறா மல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    • அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை 11.10.2022 அன்று எம்.ஆர்.பி. வெளியிட்டது.
    • இதையடுத்து 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    சேலம்:

    தமிழகத்தில் அரசு மருத்துவமனைகளில் காலியாக உள்ள 1021 உதவி மருத்துவர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறி விப்பை 11.10.2022 அன்று எம்.ஆர்.பி. வெளியிட்டது. இதையடுத்து 25 ஆயிரம் டாக்டர்கள் தேர்வுக்கு விண்ணப்பித்தனர்.

    தமிழகம் முழுவதும் 91 மையங்களில் தேர்வு கடந்த ஏப்ரல் மாதம் 25-ந்தேதி நடைபெற்றது. ஒரு மணி நேரம் தமிழ் மொழி தகுதித் தேர்வும், 2 மணி நேரம் கணினி வழியில் கொள்குறி வகையில் சரியான விடையை தேர்ந்தெடுக்கும் தேர்வும் நடைபெற்றது. விடைத்தாள்கள் திருத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது. இன்னும் ஓரிரு வாரங்களில் தேர்வு முடிவுகளை வெளியிட எம்.ஆர்.பி. திட்டமிட்டுள்ளது.

    இதனிடையே தமிழ் மொழித் தேர்வு கடினமாக இருந்ததாகவும், எனவே தமிழ் மொழி தகுதித் தேர்வு மதிப்பெண்ணை குறைக்க வேண்டும் என்றும் டாக்டர்கள் தேர்வு வாரி யத்துக்கு கோரிக்கை வைத்துள்ளனர். தமிழ் மொழி தகுதி தேர்வில் தேர்ச்சி மதிப்பெண் 20-ல் இருந்து 15- ஆக குறைக்க வேண்டும் என கூறியுள்ளனர்.

    • கன்னங்குறிச்சி போலீஸ் நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது.
    • தார்சு சுவரில் இருந்து காரை பெயர்ந்து விழுந்தது. இதனால் போலீசார் திடுக்கிட்டனர்.

    சேலம்:

    கன்னங்குறிச்சி போலீஸ் நிலையம் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன்பு கட்டப்பட்டது. இங்கு நேற்று போலீசார் பணியில் இருந்தனர். அப்போது தார்சு சுவரில் இருந்து காரை பெயர்ந்து விழுந்தது. இதனால் போலீசார் திடுக்கிட்டனர். விழுந்த கற்கள் போலீசார் மீது விழாததினால் நிம்மதி பெருமூச்சு விட்டனர். இது குறித்து கன்னங்குறிச்சி போலீசார் கூறும் போது, இந்த போலீஸ் நிலையத்தில் ஆங்காங்கே விரிசல்கள் இருந்து வந்தது. தற்போது காரை பெயர்ந்து விழுந்தது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இங்கு பணிபுரியும் போலீசார் அல்லது பொதுமக்கள் மேல் விழுந்து இருந்தால் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருப்போம். எனவே காரை பெயர்ந்து விழுந்த இடத்தை சீரமைக்க அதிகாரிகள் உடனடியாக தீர்வு காணவேண்டும்' என்றார்கள்.

    • விஷ சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளன.
    • சேலம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் தடுப்பு நடவடிக்கைகள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது.

    சேலம்:

    விழுப்புரத்தில் விஷ சாராயம் குடித்தவர்கள் உயிரிழந்த சம்பவத்தை தொடர்ந்து தமிழகம் முழுவதும் கள்ளச்சாராய தடுப்பு நடவடிக்கைகள் தீவி ரப்படுத்தப்பட்டு உள்ளன. சேலம் மாவட்டத்தில் கள்ளச்சா ராயம் தடுப்பு நடவடிக்கை கள் குறித்த ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலு வலகத்தில் நடைபெற்றது.

    மாவட்ட கலெக்டர் கார்மேகம் தலைமை தாங்கினார். மாநகர காவல் ஆணையாளர் விஜயகுமாரி முன்னிலை வகித்தார். இதில் மாவட்ட வன அலுவலர் காஷ்யப் சஷாங்க் ரவி, மாவட்ட வருவாய் அலுவலர் மேனகா, முதுநிலை மண்டல மேலாளர் (டாஸ்மாக்) நர்மதாதேவி, போலீஸ் துணை கமிசனர்கள் கவுதம் கோயல், லாவண்யா, குணசேகரன், கூடுதல் காவல் கண்காணிப்பாளர் செல்லபாண்டியன், வருவாய் கோட்டாட்சியர்கள் மாறன், தணிகாச்சலம், சரண்யா உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

    கூட்டத்துக்கு பின்னர் கலெக்டர் கார்மேகம் கூறியதாவது:-

    கள்ளச்சாராயம் தொடர்பாக பொதுமக்கள் காவல் துறைக்கு தகவல் தெரிவிக்கும் வகையில் மாநகரப் பகுதிக்கு 94981 62794 என்ற எண்ணிலும், ஊரகப் பகுதிக்கு 94899 17188 என்ற அலைபேசி எண்ணிலும் பொதுமக்கள் தகவல் தெரிவிக்கலாம்.

    கள்ளச்சாராயம் காய்ச்சுப வர்களை அந்தத் தொழிலிலிருந்து விடுவித்து, அவர்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்தி, ஆரோக்கியமான சமுதாயத்தை உருவாக்கிட சமூக நலத்துறை, பள்ளிக்கல்வித்துறை உள்ளிட்ட துறைகள் மூலமாக தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. மேலும், கள்ளச்சாராயம் உள்ளிட்ட போதைப் பழக்கங்களில் ஈடுபடுவர்களைச் சீர்திருத்த சேலம் அரசு மருத்துவமனையில் போதை ஒழிப்பு மையங்கள் உள்ளன. இதன் மூலம் அவர்களைச் சீர்திருத்தவும் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

    இளைஞர்களின் பாதுகாப்பினைக் கருத்திற்கொண்டு, விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் பள்ளி மற்றும் கல்லூரி முதல்வர்களுக்கு போதைப்பொருள் ஒழிப்பு தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடத்தி கண்காணிப்பு அலுவலர்களை நியமித்து, தொடர் கண்காணிப்பில் ஈடுபட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. மேலும், உள்ளாட்சி அமைப்புகளோடு ஒருங்கிணைந்து மாவட்டம் முழுவதும் குழு அமைத்திட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

    கள்ளச்சாராயத்தை ஒழிப்பதற்கு காவல்துறை, வருவாய்த்துறை, வனத்துறை, வேளாண்மைத்துறை உள்ளிட்ட தொடர்புடைய துறைகள் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. போதிய விழிப்புணர்வை ஏற்படுத்தி கள்ளச்சாரயத்தை முற்றிலும் ஒழித்திடத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

    இவ்வாறு அவர் தெரிவித்தார்.

    சேலம் மாநகர காவல் ஆணையர் விஜயகுமாரி கூறுகையில், சேலம் மாநகர காவல்துறையின் சார்பில் கடந்த சில நாட்களாக சேலம் மாநகரப் பகுதியில் தீவிரக் கண்காணிப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். திறந்த வெளி இடங்களில் மது அருந்துதல் உள்ளிட்ட 220 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 235 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதுமட்டும் அல்லாமல் சேலம் மாநகரப் பகுதியில் மெத்தனால், எத்தனால் ஆகியவற்றை அனுமதி பெற்று இருப்பு வைத்திருக்கும் நிறுவனங்களைத் தொடர்ந்து கண்காணித்து வருகிறோம்.

    கள்ளச்சாராயம் தொடர்பான நடவடிக்கைகளில் யாரேனும் ஈடுபட்டால் உடனடியாக குண்டர் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது. சேலம் மாநகர் மற்றும் ஊரகப் பகுதிகளில் கள்ளச்சாராய நடவடிக்கைகள் முற்றிலும் இல்லாத நிலையை உறுதிபடுத்தும் வகையில் காவல்துறையால் 24 மணி நேரமும் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது என்றார்.

    • மான் தோலை வைத்து சாமி ஆடுவதாக ஊர் மக்கள் நேற்று டேனீஸ்பேட்டை வனச்சரக அலுவலர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.
    • டேனீஸ்பேட்டை மின்வாரிய அலுவலகம் அருகே சாமி குறி சொன்ன 4 நபர்களையும் பிடித்து டேனீஸ்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனச்சரக அலுவலர் தங்கராஜ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    காடையாம்பட்டி:

    சேலம் மாவட்டம் மிட்டாபுதூர் பகுதியை சேர்ந்த முத்துராமன், சரவணன் மற்றும் பண்ணப்பட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த சரவணன், தேமுட்டி காட்டுவளவு பகுதியை சேர்ந்த கணேஷ் ஆனந்தசாமி ஆகியோர் மான் தோலை வைத்து சாமி ஆடுவதாக ஊர் மக்கள் நேற்று டேனீஸ்பேட்டை வனச்சரக அலுவலர் அலுவலகத்தில் புகார் தெரிவித்தனர்.

    அதன் அடிப்படையில், டேனீஸ்பேட்டை மின்வாரிய அலுவலகம் அருகே சாமி குறி சொன்ன 4 நபர்களையும் பிடித்து டேனீஸ்பேட்டை வனச்சரக அலுவலகத்தில் வைத்து வனச்சரக அலுவலர் தங்கராஜ் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்.

    இதுகுறித்து பிடிபட்டவர்கள் கூறுகையில், எங்களுக்கு வேட்டையாட தெரியாது, ரொம்ப நாட்களுக்கு முன்பு இமயமலையில் இருந்து விலை கொடுத்து மான் தோலை வாங்கி வந்து குறி சொல்லி வருகிறோம் என்றனர்.

    இருந்தாலும் வனத்துறை அதிகாரிகள், மான் தோலை பறிமுதல் செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அவர்கள் மீது வழக்கு பதிவு செய்யலாமா? வேண்டாமா? என அதிகாரிகள் ஆலோசித்து வருகிறார்கள்.

    • சதீஷ்குமார் (வயது 31), சிவில் என்ஜினீயர். இவரது மனைவி சகிலா (27). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.
    • சதீஷ்குமாருக்கு‌ கடன் கொடுத்தவர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத் ததாக கூறப்படுகிறது.

    ராசிபுரம்:

    நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் தாலுகா நாமகிரிப்பேட்டை அருகே உள்ள ஒடுவன்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் சதீஷ்குமார் (வயது 31), சிவில் என்ஜினீயர். இவரது மனைவி சகிலா (27). இவர்களுக்கு 3 வயதில் குழந்தை உள்ளது.

    தற்போது சதீஷ்குமார் தனது மனைவியுடன் ஓசூரில் தங்கி இருந்து தொழில் செய்து வந்தார். இந்த நிலையில் தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற சப்-இன்ஸ்பெக்டர் சாத்தன் என்பவருக்கு ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் வீடு கட்டி தந்துள்ளதாக கூறப்படுகிறது.

    அதற்கான பணத்தில் ரூ.30 லட்சத்தை சதீஷ்குமாருக்கு, சப்-இன்ஸ்பெக்டர் கொடுத்து விட்டார். மீதி ரூ.10 லட்சத்தை திருப்பி தரவில்லை என்றும் கூறப்ப டுகிறது.

    தற்கொலை முயற்சி

    இது பற்றி சாத்தன் மீது சதீஷ்குமார் ஓசூர் போலீசில் புகார் அளித்துள்ளார். ஆனால் போலீசார் நடவடிக்கை எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது. சதீஷ்குமாருக்கு கடன் கொடுத்தவர்கள் மற்றும் கட்டுமான பொருட்கள் கொடுத்தவர்கள் பணம் கேட்டு நெருக்கடி கொடுத் ததாக கூறப்படுகிறது.

    இதனால் சதீஷ்குமார் தனது மனைவியுடன், சொந்த ஊரான ஒடுவன்குறிச்சிக்கு வந்து விட்டார். மேலும் கடன் தொல்லையால் விரக்தியில் இருந்த அவர், தனது மனைவியுடன் மண்ணெண்னை உடலில் ஊற்றி தற்கொலைக்கு முயன்றதாக கூறப்படுகிறது.

    சிகிச்சை

    இதை அறிந்த அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ராசிபுரம் அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து நாமகிரிப்பேட்டை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    • முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதை சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது.
    • 2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15.08.2023 அன்று நடைபெறும்.

    சேலம்:

    சமுதாய வளர்ச்சிக்கு சேவையாற்றும் இளைஞர்களது பணியை அங்கீகரிக்கும் பொருட்டு 2015-ம் ஆண்டு முதல் ஒவ்வொரு ஆண்டு முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருதை சுதந்திர தினத்தன்று 15 முதல் 35 வயது வரை உள்ள 3 ஆண்கள் மற்றும் 3 பெண்களுக்கு இவ்விருது வழங்கப்பட்டு வருகிறது. இந்த முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது ரூ. 1,00,000 ரொக்கம், பாராட்டுப்பத்திரம் மற்றும் பதக்கத்தினை உள்ளடக்கியதாக இருக்கும்.

    2023-ம் ஆண்டிற்கான முதல்-அமைச்சர் மாநில இளைஞர் விருது வருகிற 15.08.2023 அன்று நடைபெறும் சுதந்திர தின விழாவில் வழங்கப்படவுள்ளது. இவ்விருது தொடர்பாக 15 வயது முதல் 35 வயது வரையுள்ள தகுதிகள் உள்ள ஆண், பெண் விண்ணப்பிக்கலாம்.

    கடந்த ஏப்ரல் மாதம் 2022 அன்று (01.04.2022) 15 வயது நிரம்பியவராக இருத்தல் வேண்டும் மற்றும் 31.03.2023 அன்று 35 வயதுக்குள்ளவராக இருத்தல் வேண்டும். கடந்த நிதியாண்டில் அதாவது 01.04.2022 முதல் 31.03.2023 வரை மேற்கொள்ளப்பட்ட சேவைகள் மட்டுமே பரிசீலிக்கப்படும்.

    விருதிற்கு விண்ணப்பிக்கும் முன்பு குறைந்த பட்சம் 5 வருடங்கள் தமிழகத்தில் குடியிருந்தவராக இருத்தல் வேண்டும். (அதற்கான சான்று இணைக்கப்பப்பட வேண்டும்).

    விண்ணப்பதாரர்கள் சமுதாய நலனுக்காக தன்னார்வத்துடன் தொண்டாற்றியிருக்க வேண்டும். அவ்வாறு அவர்கள் செய்த தொண்டு கண்டறியப்படக் கூடியதாகவும், அளவிடக் கூடியதாகவும் இருத்தல் வேண்டும். மத்திய, மாநில அரசுகள், பொதுத்துறை நிறுவனங்கள் பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள், பள்ளிகளில் பணியாற்றுபவர்கள் இவ்விருதிற்கு விண்ணப்பிக்க இயலாது. விண்ணப்பதாரருக்கு உள்ளூர் மக்களிடம் உள்ள செல்வாக்கு விருதிற்கான பரிசீலனையில் கணக்கில் கொள்ளப்படும்.

    இந்த விருதிற்கு விண்ணப்பிக்க www.sdat.tn.gov.in என்ற முகவரியில் விண்ணப்பங்கள் உள்ளது. ஆன்லைன் மூலம் மட்டுமே விண்ணப்பங்கள் சமர்ப்பித்தல் வேண்டும். இணையதளம் மூலம் விண்ணப்பிக்க கடைசி நாள் மற்றும் நேரம். 31.5.2023 மாலை 4 மணி ஆகும் என்று சேலம் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சிவரஞ்சன் தெரிவித்து உள்ளார்.

    • பரிவார தெய்வங்கள் கோவில் மஹா தெவ பூஜை திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது.
    • இதையொட்டி பொங்கல் பானை செய்ய மண்ணுடையாரிடம் மண் கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது.

    சேலம்:

    சேலம் மாவட்டம் மல்லூர் ஸ்ரீசின்னண்ணன், ஸ்ரீபெரியண்ணன், ஸ்ரீதங்கா, ஸ்ரீவீரசாமுகன் பரிவார தெய்வங்கள் கோவில் மஹா தெவ பூஜை திருவிழா இன்று (வியாழக்கிழமை) மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. இதையொட்டி பொங்கல் பானை செய்ய மண்ணுடை யாரிடம் மண் கொடுக்கும் நிகழ்வு நடக்கிறது.

    விழாவையொட்டி வருகிற 25-ந்தேதி சாமி இறங்கும் நிகழ்வு, 26-ந்தேதி மாரியம்மன் கோவில் திடலில் சக்தி அழைக்கும் நிகழ்வு, பின்பு சாமி அண்ணமார் கோவிலுக்கு எடுத்து செல்லும் நிகழ்வு நடக்கிறது. தொடர்ந்து மண்ணுடையார் வீட்டில் இருந்து பொங்கல் பானை எடுத்து வரும் நிகழ்வும், சாமி பதிக்கு எடுத்து செல்லுதலும் நடக்கிறது.

    பின்பு மண்ணுடையார் வீட்டிலிருந்து வீரசாமுகன் மற்றும் வேட்டைக்காரன் சாமிகளை பதிக்கு எடுத்து வரும் நிகழ்வு நடைபெறும். 26-ந்தேதி காலை 6 மணிக்கு மகா தெவம், 27-ந்தேதி மாலை வீரசாமுகனுக்கு சிறப்பு செய்யும் நிகழ்வு நடக்கிறது.

    விழா ஏற்பாடுகளை மல்லூர் டாக்டர் அம்பேத்கார் நகர் அண்ணமார் சாமி பங்காளிகள் மற்றும் விழா கமிட்டியினர் செய்துள்ளனர்.

    • மத்திய நீர்வள ஆணையம் ஆண்டுதோறும் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.
    • 2022-ம் ஆண்டிற்கு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய நீர்வள ஆணையம் ஆண்டுதோறும் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டிற்கு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 322 கிராம பஞ்சாயத்துக்களில் கடந்த 2022-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நீர்வள பாதுகாப்பு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இதன் ஒரு பகுதியாக ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலை களில் பாதுகாப்பு பணிகள் மற்றும் புனர மைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாவட்டம் முழு வதும் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் 2.25 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்பு ஏற்படுத்தப்பட் டுள்ளது. 1 லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் நாமக்கல் மாவட்டம் முழு வதும் நிலத்தடி நீர்மட்டம் உயந்துள்ளது. இந்த அடிப்ப டையில் நாமக்கல் மாவட்டம் மத்திய அளவில் நீர்வள பாது காப்பு மற்றும் மேலாண்மை யில் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய அள வில் 2-ம் இடம் பிடித்துள் ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    • வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.
    • தொடர்ந்து ஜேடர்பாளையம் பகுதியில் உள்ள வெல்ல ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்ற வற்றிற்கு தீ வைப்பு, ஏரி தண்ணீரில் விஷம் கலப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் ஜேடர்பாளையம் அருகே வடகரையாத்தூர் ஊராட்சி வி.கரப்பாளையம் பகுதியில் கடந்த மார்ச் 11-ந் தேதி ஆடு மேய்க்க சென்ற பட்டதாரி இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்து கொடூரமான முறையில் கொலை செய்யப்பட்டார்.

    தொடர்ந்து ஜேடர்பாளை யம் பகுதியில் உள்ள வெல்ல ஆலை கொட்டகைகள், டிராக்டர்கள், குடிசைகள், பள்ளி பேருந்து போன்ற வற்றிற்கு தீ வைப்பு, ஏரி தண்ணீரில் விஷம் கலப்பது போன்ற சம்பவங்கள் நடைபெற்றது.

    கடந்த 13-ம் தேதி வி.புதுப்பாளையம் பகுதியைச் சேர்ந்த முத்துசாமி என்பவருக்கு சொந்தமான வெல்லம் ஆலை கொட்டகையில் தூங்கி கொண்டிருந்த வட மாநில தொழிலாளர்கள் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி தீ வைத்தனர். தொடர் அசம்பாவித சம்பவங்களால், ஜேடர்பாளையம் பகுதியில் பல்வேறு மாவட்டங்களில் இருந்து 1000-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டு இரவு, பகலாக பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

    இந்த சூழலில், நேற்று நள்ளிரவு முத்துசாமியின் மருமகன் ஜேடர்பாளையம் பகுதியைச் சேர்ந்த முருகேசனுக்கு சொந்தமான வாழை தோப்பில் புகுந்த மர்ம நபர்கள், அங்கிருந்த சுமார் 600-க்கும் மேற்பட்ட வாழை, பாக்கு மரங்களை வெட்டி சாய்த்தனர்.

    அதிகாலை தோட்டத் திற்கு தண்ணீர் பாய்ச்ச வந்த முருகேசன் மற்றும் அவரது மனைவி செல்வி ஆகியோர் மரங்கள் வெட்டப்பட்டு இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

    உடனடியாக இதுகுறித்து ஜேடர்பாளையம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அங்கு வந்த நாமக்கல் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கலைச்செல்வன் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்தை பார்வையிட்டு தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

    சவால் விடுக்கும் மர்ம கும்பல்

    ஜேடர்பாளையம் சுற்றுவட்டார பகுதி முழுவதும் 20-க்கும் மேற்பட்ட இடங்களில் இரும்பு தடுப்பு ஏற்படுத்தி வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர். இருப்பினும், எவ்வித சலனமும் இன்றி மர்ம நபர்கள் தைரியமாக அடுத்தடுத்து வன்முறை சம்பவங்களை நிகழ்த்தி போலீசாருக்கு சவால் விடுத்து வருகின்றனர்.

    பதட்டம்

    இதனிடையே அடுத்து என்ன நடக்கும் என்ற அச்சத்துடனே இப்பகுதி பொதுமக்கள் உள்ளனர். தொடர்ந்து இப்பகுதியில் பதட்டம் நிலவுவதால் 144 தடை உத்தரவு பிறப்பிக்க போலீஸ் அதிகாரிகள், வருவாய்த்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

    சமூக விரோத கும்பல்களை உடனடியாக கண்டுபிடித்து கைது செய்ய வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    • மணிகண்டன் (வயது 30). இவர் நேற்று கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல, சேலம் மத்திய சிறை வளாகத்துக்கு வந்தார்.
    • அங்குள்ள கேண்டீன் அருகே, 302 ரக துப்பாக்கியை வைத்துவிட்டு அருகில் நின்றிருந்தார்.

    சேலம்:

    சேலம் ஆயுதப்படையில் போலீஸ்காரராக பணிபுரி பவர் மணிகண்டன் (வயது 30). இவர் நேற்று கைதி ஒருவரை நீதிமன்றத்திற்கு அழைத்து செல்ல, சேலம் மத்திய சிறை வளாகத்துக்கு வந்தார்.

    குண்டு பாய்ந்தது

    அங்குள்ள கேண்டீன் அருகே, 302 ரக துப்பாக்கியை வைத்துவிட்டு அருகில் நின்றிருந்தார். அப்போது அவர் வைத்திருந்த துப்பாக்கியில் இருந்து திடீரென குண்டு சீறி பாய்ந்தது.

    இந்த குண்டு வானத்தின் மேல் நோக்கி சென்றதால் யாருக்கும் பாதிப்பு இல்லை. அதே நேரத்தில் துப்பாக்கி சத்தம் கேட்டு அங்கிருந்த பார்வையாளர்கள் மற்றும் போலீசார் அலறி அடித்து ஓடினர். அத்துடன் சிறையில் இருந்த கைதிகளும் பயத்தில் கூச்சலிட்டனர்.

    விசாரணை

    இது தொடர்பாக மணி கண்டனிடம் ஆயுதப்படை கூடுதல் துணை கமிஷனர் ரவிச்சந்திரன் நேற்று விசாரணை நடத்தினார். 2-வது நாளாக இன்றும் விசாரணை நடத்தப்படு கிறது. விசாரணை முடிவில், அவர் மீது கவனக்குறைவாக செயல்பட்டதாக நடவ டிக்கை எடுக்க வாய்ப்புள்ள தாக அதிகாரிகள் தெரி வித்தனர்.

    • இளம்பெண் நித்யா கடந்த மார்ச் 11-ந் தேதி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடலில் 34 இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.
    • சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து தீவைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது.

    பரமத்திவேலூர்:

    நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நித்யா கடந்த மார்ச் 11-ந் தேதி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடலில் 34 இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.

    இதைத் தொடர்ந்து ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்த டுத்து தீவைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது.

    இதற்கிடையே, கடந்த 13-ந் தேதி ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் அறையில் தூங்கிக் கொண்டி ருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் வீசி தீ வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற வர்கள் கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

    இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணா மலையின் உத்தரவின் பேரில், மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை யில் கபிலர்மலை வடக்கு ஒன்றிய தலைவர் பூபதி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ், பிரசார பிரிவு மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர்கள் பழனியப்பன், வடிவேலு, திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய தலைவர் சசிதேவி, பரமத்தி ஒன்றிய தலைவர் அருண், மாவட்ட செயலாளர் சவுமியா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சண்முகம், பிரசார பிரிவு காந்தி, இளைஞர் அணி பூபதி, ரமேஷ் ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர் இளம்பெண் நித்யா கொலை செய்யப்பட்ட பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து, அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தினர்.

    அதனைத் தொடர்ந்து வட மாநில தொழிலா ளர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்ட கைக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெல்ல ஆலை கொட்டைக ளுக்கு தீ வைத்ததில் 3 டிராக்டர்கள் எரிந்து நாச மான பகுதிகளையும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.

    இதுகுறித்து அந்த குழுவினர் கூறும்போது, அனைத்து சம்பவங்களையும் ஆய்வு செய்து ஒரு அறிக்கை யாக தயார் செய்து, அதனை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் ஒப்படைக்க உள்ளோம்.

    அவர் இந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடு வார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நித்யாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக வாழ்வாதார நிதி வழங்க வேண்டும் என்றனர்.

    ×