search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை
    X

    நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டு விடுதிகளில் மாணவர் சேர்க்கை

    • சிறந்த விளையாட்டு வீரரராக விளங்குவதற்கு 7, 8–, 9, 11 – -ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்குவதற்கு 6 , 7 - ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடைபெறும்.
    • மாவட்ட அளவிலான தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நாமக்கல் மாவட்ட விளையாட்டரங்கத்தில் நடைபெற உள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட கலெக்டர் ஸ்ரேயா பி.சிங் வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

    சத்தான உணவு

    தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் கீழ் பள்ளிகளில் பயிலும் மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டுத் துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்குமிட வசதி மற்றும் சத்தான உண வுடன் கூடிய விளையாட்டு விடுதிகள் மற்றும் விளையாட்டுப் பள்ளி கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன.

    மாணவர்களுக்கான விளையாட்டு விடுதி நாமக்கல், மதுரை, திருச்சி, திருநெல்வேலி, கிருஷ்ணகிரி, கோயம்புத்தூர், கடலூர், தஞ்சாவூர், அரியலூர், தூத்துக்குடி, சிவகங்கை, தேனி, ராமநாதபுரம், உதக மண்டலம், விழுப்புரம், சென்னை, நெய்வேலி ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன. மாணவி களுக்கான விளை யாட்டு விடுதி நாமக்கல், ஈரோடு, திருவண்ணாமலை, திண்டுக்கல், நாகர்கோவில், பெரம்பலூர், தேனி, புதுக்கோட்டை, தருமபுரி, சென்னை ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

    தேர்வு

    மேற்காணும் விளையாட்டு விடுதிகளில் உள்ள விளை யாட்டுக்களில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரரராக விளங்குவதற்கு 7, 8–, 9, 11 – -ம் வகுப்பு சேர்க்கையும், முதன்மை நிலை விளையாட்டு மையங்க ளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரராக விளங்கு வதற்கு 6 , 7 - ம் வகுப்பு மற்றும் 8-ம் வகுப்பு ஆகிய வகுப்புகளில் சேர்க்கை நடை பெறும். இதற்கான மாவட்ட அளவி லான தேர்வுகள் வருகிற 24-ந்தேதி நாமக்கல் மாவட்ட விளையாட்ட ரங்கத்தில் நடைபெற உள்ளது.

    மாணவர்களுக்கு தடகளம், இறகுப்பந்து, கூடைப்பந்து, குத்துச்சண்டை, கிரிக்கெட், கால்பந்து, வாள்சண்டை, ஜிம்னாஸ்டிக்ஸ், கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், டேக்வாண்டோ, கையுந்து பந்து, கபாடி மேசைப்பந்து, டென்னிஸ், ஜீடோ, ஸ்கு வாஷ், மற்றும் வில்வித்தை பளுதூக்குதல் மற்றும் மாணவியர்களுக்கு தடகளம், இறகுப்பந்து , கூடைப்பந்து, குத்துச்சண்டை, கால்பந்து, வாள்சண்டை, கைப்பந்து, வளைகோல்பந்து, நீச்சல், ஹாக்கி, டேக்வாண்டோ, கையுந்துபந்து, கபாடி, டென்னிஸ், ஜீடோ ஜிம்னாஸ்டிக்ஸ், ஸ்குவாஷ், வில்வித்தை பளுதூக்குதல் மற்றும் மேசைப்பந்து ஆகிய விளையாட்டுகளுக்கு சேர்க்கை நடைபெற உள்ளது.

    முன்னூரிமை

    மாவட்ட, மாநில மற்றும் தேசிய அளவிலான விளை யாட்டுப் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு முன்னு ரிமை வழங்கப்படும். விளை யாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வமுள்ள மாணவ, மாணவியர்கள் விளையாட்டு விடுதி, முதன்மை நிலை விளையாட்டு மையங்களின் சேர்க்கைக்கான ஆன்லைன் விண்ணப்பப்படிவத்தினை 16-ந்தேதி முதல் www.sdat.tn.gov.in என்ற இணையதள முவரியில் ஆன்லைன் மூலம் விண்ணப்பிக்கலாம். ஆன்லைன் விண்ணப்பத்தினை பூர்த்தி செய்திடுவதற்கான கடைசி நாள் 23.05.2023 அன்று மாலை 5 மணி ஆகும். ஆன்லைன் விண்ணப்பங்கள் மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும்.

    இப்போட்டியில் நாமக்கல் மாவட்டத்தில் விளையாட்டில் ஆர்வமுள்ள விளையாட்டு வீரர், வீராங்கனைகள் தவறா மல் கலந்து கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் அதில் கூறியுள்ளார்.

    Next Story
    ×