என் மலர்
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்
நீங்கள் தேடியது "Crew survey"
- இளம்பெண் நித்யா கடந்த மார்ச் 11-ந் தேதி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடலில் 34 இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.
- சுற்று வட்டார பகுதிகளில் அடுத்தடுத்து தீவைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது.
பரமத்திவேலூர்:
நாமக்கல் மாவட்டம் பரமத்திவேலூர் தாலுகா ஜேடர்பாளையம் அருகே கரப்பாளையம் பகுதியைச் சேர்ந்த பட்டதாரி இளம்பெண் நித்யா கடந்த மார்ச் 11-ந் தேதி, பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டும், உடலில் 34 இடங்களில் கத்தியால் குத்தியும் கொலை செய்யப்பட்டார்.
இதைத் தொடர்ந்து ஜேடர்பாளையம் சுற்று வட்டார பகுதிகளில் அடுத்த டுத்து தீவைப்பு மற்றும் பெட்ரோல் குண்டு வீச்சு உள்ளிட்ட அசம்பாவித சம்பவங்கள் நடந்து வருகிறது.
இதற்கிடையே, கடந்த 13-ந் தேதி ஜேடர்பாளையம் பகுதியில் வெல்லம் தயாரிக்கும் ஆலையில் அறையில் தூங்கிக் கொண்டி ருந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 4 பேர் மீது மர்ம நபர்கள் பெட்ரோல் வீசி தீ வைத்தனர். இதில் ஒருவர் உயிரிழந்த நிலையில், மற்ற வர்கள் கரூர் அரசு மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இந்நிலையில் பா.ஜ.க மாநில தலைவர் அண்ணா மலையின் உத்தரவின் பேரில், மாவட்டத் தலைவர் ராஜேஷ்குமார் தலைமை யில் கபிலர்மலை வடக்கு ஒன்றிய தலைவர் பூபதி, மாநில வழக்கறிஞர் பிரிவு செயலாளர் காந்தி, மாவட்ட பொதுச்செயலாளர் சுபாஷ், பிரசார பிரிவு மூர்த்தி, மாவட்டத் துணைத் தலைவர்கள் பழனியப்பன், வடிவேலு, திருச்செங்கோடு தெற்கு ஒன்றிய தலைவர் சசிதேவி, பரமத்தி ஒன்றிய தலைவர் அருண், மாவட்ட செயலாளர் சவுமியா, உள்ளாட்சி மேம்பாட்டு பிரிவு சண்முகம், பிரசார பிரிவு காந்தி, இளைஞர் அணி பூபதி, ரமேஷ் ஆகியோர் கொண்ட உண்மை கண்டறியும் குழுவினர் இளம்பெண் நித்யா கொலை செய்யப்பட்ட பகுதிகளை முழுமையாக ஆய்வு செய்து, அப்பகுதி குடியிருப்பு வாசிகளிடம் விசாரணை நடத்தினர்.
அதனைத் தொடர்ந்து வட மாநில தொழிலா ளர்களை பெட்ரோல் ஊற்றி தீ வைத்த வெல்லம் தயாரிக்கும் ஆலை கொட்ட கைக்கு சென்று பார்வையிட்டு விசாரணை நடத்தினர். மேலும், கடந்த சில வாரங்களுக்கு முன்பு வெல்ல ஆலை கொட்டைக ளுக்கு தீ வைத்ததில் 3 டிராக்டர்கள் எரிந்து நாச மான பகுதிகளையும் மற்றும் பல்வேறு பகுதிகளுக்கும் சென்று ஆய்வு மேற்கொண்டனர்.
இதுகுறித்து அந்த குழுவினர் கூறும்போது, அனைத்து சம்பவங்களையும் ஆய்வு செய்து ஒரு அறிக்கை யாக தயார் செய்து, அதனை பா.ஜ.க மாநில தலைவர் அண்ணாமலையிடம் ஒப்படைக்க உள்ளோம்.
அவர் இந்த சம்பவங்கள் குறித்து விரிவான அறிக்கையை வெளியிடு வார். மேலும் பாலியல் வன்கொடுமை செய்து கொலை செய்யப்பட்ட நித்யாவின் குடும்பத்திற்கு தமிழக அரசு உடனடியாக வாழ்வாதார நிதி வழங்க வேண்டும் என்றனர்.
- சிவகங்கை மாவட்டத்தில் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
- 64 பயனாளிகளுக்கு ரூ.25.47 லட்சத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது.
சிவகங்கை
தமிழக சட்டமன்ற பொதுக்கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை, குழு உறுப்பினர்களான சட்டமன்ற உறுப்பினர்கள் சிந்தனைச்செல்வன் (காட்டுமன்னார்கோவில்), சுதர்சனம் (மாதவரம்), ஒய்.பிரகாஷ் (ஓசூர்), மாரிமுத்து (திருத்துறைப்பூண்டி) ஆகியோருடன், கலெக்டர் மதுசூதன் ரெட்டி தலைமையில் சிவகங்கை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் துறைகள் ரீதியாக களஆய்வுகள் மேற்கொண்டனர்.
பின்னர் கலெக்டர் அலுவலகத்தில் அனைத்துத்துறை அரசு அலுவலர்களுடன் ஆலோசனை நடத்தினர். இந்த ஆய்வின்போது சட்டமன்ற பேரவை செயலாளர் சீனிவாசன்,எம்.எல்.ஏ.க்கள் மாங்குடி (காரைக்குடி), தமிழரசி (மானாமதுரை), சட்டமன்ற பேரவை இணைச் செயலாளர் தேன்மொழி,துணைச் செயலாளர் ரேவதி ஆகியோர் உடனிருந்தனர்.
காரைக்குடி வட்டத்தி ற்குட்பட்ட அழகப்பா பல்கலைக்கழகத்தின் செயல்பாடுகள் குறித்தும், காரைக்குடி ஆதிதிராவிடர் நலத்துறையின் அரசினர் மாணவிகள் விடுதியில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவின் தரம் குறித்தும், காரைக்குடி அரசு தலைமை மருத்துவ மனையில் இயற்கை மற்றும் யோகா பிரிவில் தேவையான மருத்துவ உபகரணங்கள், பணியமர்த்த வேண்டிய பிரிவின் பணியாளர்கள், மருந்துகளின் இருப்புகள் குறித்தும் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவினர் ஆய்வு செய்தனர்.
கீழடியில் 7-ம் கட்ட அகழாய்வு மையம் மற்றும் அருங்காட்சியகப் பணிகளின் நிலை குறித்தும், பையூர் ஊராட்சியில், பழமலைநகர் ஊராட்சி ஒன்றிய ஆரம்பப்பள்ளியில் குழந்தைகளுக்கு கற்பித்தல் முறை மற்றும் மேம்படுத்த வேண்டிய வசதிகள் ஆகியன குறித்தும் ஆய்வு செய்தனர்.
பின்னர் சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெ ருந்தகை நிருபர்களிடம் கூறுகையில், சிறப்பான நிர்வாகத்தை வெளிப்ப டைத் தன்மையுடன் அரசு மேற்கொள்ளும் வகையில், இந்த குழு அடிப்படை யாக திகழ்கிறது. எங்களுக்கு அளிக்கப்படும் விவரங்கள் பரிசீலனை க்கு உட்படுத்தப்பட்டு, அரசிற்கு இந்த குழு வாயிலாக அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்த நிகழ்வின்போது, பல்வேறு துறைகள் சார்பில் 64 பயனாளிகளுக்கு ரூ.25.47 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை சட்டமன்ற பொதுக் கணக்கு குழுவின் தலைவர் செல்வப்பெருந்தகை வழங்கினார்.
ஆய்வுக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் மணிவண்ணன், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் சிவராமன், கலெக்டரின் நேர்முக உதவியாளர் (பொது) கண்ணகி உள்பட பலர் கலந்து கொண்டனர்.
- உள்ளூர் செய்திகள்சென்னைஅரியலூர்செங்கல்பட்டுகோயம்புத்தூர்கடலூர்தர்மபுரிதிண்டுக்கல்ஈரோடுகாஞ்சிபுரம்கள்ளக்குறிச்சிகன்னியாகுமரிகரூர்கிருஷ்ணகிரிமதுரைமயிலாடுதுறைநாகப்பட்டினம்நாமக்கல்நீலகிரிபெரம்பலூர்புதுக்கோட்டைராமநாதபுரம்ராணிப்பேட்டைசேலம்சிவகங்கைதஞ்சாவூர்தேனிதென்காசிதிருச்சிராப்பள்ளிதிருநெல்வேலிதிருப்பத்தூர்திருவாரூர்தூத்துக்குடிதிருப்பூர்திருவள்ளூர்திருவண்ணாமலைவேலூர்விழுப்புரம்விருதுநகர்