search icon
என் மலர்tooltip icon

    உள்ளூர் செய்திகள்

    நீர்வள மேலாண்மையில் நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் 2-ம் இடம்
    X

    நீர்வள மேலாண்மையில் நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் 2-ம் இடம்

    • மத்திய நீர்வள ஆணையம் ஆண்டுதோறும் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது.
    • 2022-ம் ஆண்டிற்கு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது.

    நாமக்கல்:

    நாமக்கல் மாவட்ட நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்ப தாவது:-

    மத்திய நீர்வள ஆணையம் ஆண்டுதோறும் நீர்வள பாதுகாப்பு மற்றும் மேலாண்மையில் சிறந்து விளங்கும் மாவட்டங்களுக்கு விருதுகள் வழங்கி வருகிறது. அதன்படி, 2022-ம் ஆண்டிற்கு விருதுக்கு தேர்வு செய்யப்பட்ட மாவட்டங்களில் நாமக்கல் மாவட்டம் தேசிய அளவில் 2-ம் இடம் பிடித்துள்ளது.

    நாமக்கல் மாவட்டத்தில் உள்ள 5 நகராட்சிகள், 19 பேரூராட்சிகள், 322 கிராம பஞ்சாயத்துக்களில் கடந்த 2022-ம் ஆண்டு மாவட்ட நிர்வாகத்தின் மூலம் பல்வேறு நீர்வள பாதுகாப்பு நடவ டிக்கைகள் மேற்கொள்ளப் பட்டன. இதன் ஒரு பகுதியாக ஏரிகள் உள்ளிட்ட நீர் நிலை களில் பாதுகாப்பு பணிகள் மற்றும் புனர மைப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டது. மேலும் மாவட்டம் முழு வதும் மழைநீர் சேகரிப்பு தொடர்பாக பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டது. இதன் மூலம் மாவட்டம் முழுவதும் 2.25 லட்சம் கட்டிடங்களில் மழைநீர் சேகரிப்பு கட்ட மைப்பு ஏற்படுத்தப்பட் டுள்ளது. 1 லட்சம் மழைநீர் சேகரிப்பு தொட்டிகள் அமைக்கப்பட்டுள்ளது.

    இதுபோன்ற பல்வேறு நடவடிக்கைகளால் நாமக்கல் மாவட்டம் முழு வதும் நிலத்தடி நீர்மட்டம் உயந்துள்ளது. இந்த அடிப்ப டையில் நாமக்கல் மாவட்டம் மத்திய அளவில் நீர்வள பாது காப்பு மற்றும் மேலாண்மை யில் சிறந்த மாவட்டமாக தேர்வு செய்யப்பட்டு தேசிய அள வில் 2-ம் இடம் பிடித்துள் ளது. இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    Next Story
    ×