என் மலர்tooltip icon

    அமெரிக்கா

    • ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்கா அதிகப் பொருளாதாரத் தியாகங்களைச் செய்துள்ளது.
    • அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையே கையெழுத்தாகி உள்ள வர்த்தக ஒப்பந்தம் குறித்து அமெரிக்கா கடும் அதிருப்தி தெரிவித்துள்ளது.

    அமெரிக்க கருவூலச் செயலர் ஸ்காட் பெசென்ட் கூறுகையில், "இந்தியாவுடன் வர்த்தக ஒப்பந்தத்தை விரிவுபடுத்துவதன் மூலம் ஐரோப்பா மறைமுகமாக ரஷியா-உக்ரைன் போருக்கு நிதியுதவி அளிக்கிறது.

    ஐரோப்பா ரஷியாவிடமிருந்து நேரடியாக எரிசக்தி இறக்குமதியைக் குறைத்திருக்கலாம், ஆனால் ரஷியாவின் கச்சா எண்ணெயைச் சுத்திகரித்து இந்தியா தயாரிக்கும் பெட்ரோலியப் பொருட்களைத் தொடர்ந்து வாங்கி வருகிறது.

    தங்களுக்கு எதிராக நடக்கும் போருக்கு அவர்களே பணம் வழங்குகிறார்கள் என்பது இதன் மூலம் தெளிவாகிறது.

    ரஷியா-உக்ரைன் மோதலை முடிவுக்குக் கொண்டு வர ஐரோப்பிய நாடுகளை விட அமெரிக்கா அதிகப் பொருளாதாரத் தியாகங்களைச் செய்துள்ளது" என்றார்.

    இந்தியா மற்றும் ஐரோப்பிய யூனியன் இடையிலான வர்த்தக ஒப்பந்தத்தை அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களின் தாய் என ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் டெர் லேயன் வர்ணித்தது குறிப்பிடத்தக்கது.   

    • அமெரிக்காவில் கடுமையான பனிப்புயல் வீசி வருகிறது.
    • பல்வேறு மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவில் இந்த ஆண்டு ஜனவரி மாதம் தொடங்கி அங்கு பனிப்பொழிவு அதிகரித்து வருகிறது. அட்லாண்டிக் பெருங்கடல் அருகே பனிப்புயல் ஒன்று உருவானது. மேற்கு மற்றும் மத்திய மேற்கு மாகாணங்களில் தாக்கி வரும் இந்தப் புயலுக்கு பெர்ன் என பெயர் வைத்து அந்நாட்டின் வானிலை ஆராய்ச்சி மையம் கண்காணித்து வருகிறது.

    கடந்த சில நாட்களாக அமெரிக்காவின் கிழக்கு டெக்சாஸ் தொடங்கி வடக்கு கரோலினா, பென்சில்வேனியா, ஹட்சன் பள்ளத்தாக்கு உள்ளிட்ட பகுதிகளில் கடுமையான பனிப்பொழிவு ஏற்பட்டு வருகிறது. இந்த பனிப்பொழிவு காரணமாக வானிலை மையம் நியூ மெக்சிகோ தொடங்கி நியூ இங்கிலாந்து வரையில் உள்ள 14 கோடி மக்கள் வீடுகளில் இருந்து வெளியேறுவதற்கு தடை விதித்துள்ளது.

    பனிப்புயலின் கோர தாண்டவம் காரணமாக தெற்கு கரோலினா, விர்ஜீனியா, ஜியோர்ஜியா, வடக்கு கரோலினா, மாரிலாந்து, கென்டகி உள்ளிட்ட 12 மாகாணங்களுக்கு அவசர நிலை பிரகடனம் அறிவித்து அந்நாட்டின் ஜனாதிபதி டிரம்ப் உத்தரவிட்டார்.

    அர்கன்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை புயல் பரவியதால் மக்களின் இயல்பு வாழ்க்கை முடங்கி உள்ளது. லட்சக்கணக்கான மக்கள் உறைபனி குளிர், மின்தடை மற்றும் போக்குவரத்து முடக்கம் உள்ளிட்டவற்றால் அவதிப்பட்டு வருகின்றனர். பிட்ஸ்பர்க்கிற்கு வடக்கே உள்ள பகுதிகளில் 20 அங்குலம் வரை பனி பெய்துள்ளது.

    இந்நிலையில், அமெரிக்கா முழுவதும் தாக்கிய சக்திவாய்ந்த பனிப்புயலில் சிக்கி பெண்கள், குழந்தைகள் உள்பட 30 பேர் பலியாகினர் என தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூயார்க்கில் 8 பேர் உயிரிழந்தனர். மாசசூசெட்ஸ், ஓஹியோவில் தலா 2 பேர் இறந்தனர்.

    இந்த பனிப்பொழிவு காரணமாக அந்நாட்டில் சுமார் 9 லட்சம் வீடுகளுக்கு மின்சார வினியோகம் துண்டிக்கப்பட்டு இருளில் மூழ்கின. பனிப்புயல் காரணமாக வெளிநாடுகள் மற்றும் உள்ளூர்களுக்கு இயக்கப்படவிருந்த 11500 விமானங்கள் ரத்தாகின. நெடுஞ்சாலைகள் மூடப்பட்டன. பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

    • இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்தத் தகுதியும் இல்லை.
    • பாகிஸ்தான் விரும்புவது போல பயங்கரவாதத்தை ஒருபோதும் இயல்பாக்க முடியாது என்றார்.

    நியூயார்க்:

    ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு கவுன்சில் கூட்டம் நேற்று நடைபெற்றது. அப்போது நடந்த விவாதத்தில் பேசிய பாகிஸ்தான் தூதர் ஆசிம் இப்திகார் அகமது, இந்தியாவின் ஆபரேசன் சிந்தூர் நடவடிக்கை குறித்து சில கருத்துக்களை தெரிவித்தார்.

    இந்நிலையில், பாகிஸ்தான் தூதரின் கருத்துக்கு இந்தியா கண்டனம் தெரிவித்துள்ளது.

    இதுதொடர்பாக, இந்திய பிரதிநிதி பர்வதனேனி ஹரிஷ் ஐ.நா.சபையில் பேசியதாவது:

    எனது நாட்டிற்கும் எனது மக்களுக்கும் தீங்கு விளைவிப்பதை ஒரே நோக்கமாகக் கொண்ட பாகிஸ்தானின் பிரதிநிதியின் கருத்துகளுக்கு பதிலளிக்கிறேன்.

    கடந்த ஆண்டு மே மாதம் நடந்த ஆபரேஷன் சிந்தூர் குறித்து அவர் ஒரு பொய்யான மற்றும் சுயநலமான விளக்கத்தை அளித்துள்ளார்.

    மே 9-ம் தேதி வரை இந்தியாமீது மேலும் தாக்குதல்கள் நடத்த பாகிஸ்தான் அச்சுறுத்தி வந்த நிலையில், மே 10-ம் தேதி பாகிஸ்தான் ராணுவம் எங்கள் ராணுவத்தை நேரடியாகத் தொடர்புகொண்டு சண்டையை நிறுத்துமாறு கெஞ்சியது.

    இந்தியாவின் நடவடிக்கையால் பல பாகிஸ்தான் விமான தளங்களுக்கு ஏற்பட்ட சேதங்கள், அழிக்கப்பட்ட ஓடுபாதைகள் மற்றும் எரிந்துபோன விமான கட்டமைப்பு படங்கள் பொதுவெளியில் உள்ளன.

    பாகிஸ்தான் விரும்புவது போல பயங்கரவாதத்தை ஒருபோதும் இயல்பாக்க முடியாது என்பதை நான் மீண்டும் வலியுறுத்த விரும்புகிறேன். பாகிஸ்தான் பயங்கரவாதத்தை ஒரு அரச கொள்கைக் கருவியாகத் தொடர்ந்து பயன்படுத்துவதை சகித்துக்கொள்வது இயல்பானது அல்ல.

    இந்த புனிதமான மன்றம், பாகிஸ்தான் பயங்கரவாதத்தை சட்டப்பூர்வம் ஆக்குவதற்கான ஒரு தளமாக மாறமுடியாது. இந்தியாவின் உள்விவகாரங்கள் குறித்து கருத்துத் தெரிவிக்க பாகிஸ்தானுக்கு எந்தத் தகுதியும் இல்லை. சட்டத்தின் ஆட்சி குறித்து பாகிஸ்தான் சுய பரிசோதனை செய்துகொள்வது நல்லது என தெரிவித்தார்.

    • அதிபர் டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார்.
    • குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.

    வாஷிங்டன்:

    அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் பல்வேறு நாடுகள் மீது பரஸ்பர வரிகளை விதிப்பதாக அறிவித்தார். குறிப்பாக இந்தியா தங்களுக்கு அதிக வரி விதிப்பதாக குற்றம்சாட்டினார்.

    இதனால் கடந்த ஆகஸ்ட் மாதம் 1-ம் தேதி முதல் இந்திய பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக டிரம்ப் அறிவித்தார். அதன்பின், ரஷியாவிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து இந்திய பொருட்கள் மீதான இறக்குமதி வரியை 50 சதவீதமாக உயர்த்தினார்.

    இதேபோல், பல்வேறு நாடுகள் மீது அதிபர் டிரம்ப் வரிவிதிப்பு நடவடிக்கையை மேற்கொண்டு வருகிறார்.

    இந்நிலையில், தென் கொரிய பொருட்களுக்கான இறக்குமதி வரியை 15 சதவீதத்தில் இருந்து 25 சதவீதமாக உயர்த்தி அமெரிக்க அதிபர் டிரம்ப் உத்தரவிட்டார். வர்த்தக ஒப்பந்தம் மேற்கொள்வதில் தென் கொரியா தாமதப்படுத்தி வருவதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என டிரம்ப் தெரிவித்தார்.

    வரி அதிகரிப்பு குறித்து முறையான அறிவிப்பு எதுவும் வரவில்லை என்றும், வாஷிங்டனில் உள்ள அதிகாரிகளுடம் இதுகுறித்து பேசுவோம் என தென் கொரியா தெரிவித்துள்ளது.

    • பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.
    • விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் இருந்தனர்.

    அமெரிக்காவில் பல்வேறு மாகாணங்களில் பனிப்புயலால் அவசரநிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    இந்நிலையில் அமெரிக்காவின் வடகிழக்கில் உள்ள மெய்னே மாகாணத்தில் நிலவும் கடும் பனிப்புயலுக்கு இடையே, தனியார் ஜெட் விமானம் விபத்தில் சிக்கி உள்ளது. 

    இன்று வெளியான தகவலின்படி, ஞாயிறு இரவு 7:45 மணியளவில், பேங்கர் சர்வதேச விமான நிலையத்திலிருந்து தனியார் ஜெட் விமானம் புறப்பட்டது. விமானத்தில் ஊழியர்கள் உட்பட மொத்தம் 8 பேர் இருந்தனர்.

    ஓடுபாதையிலிருந்து கிளம்பிய அடுத்த 45 வினாடிகளில், விமானம் கட்டுப்பாட்டை இழந்து தலைகீழாகக் கவிழ்ந்து விழுந்து தீப்பற்றியது.

    இந்தக் கோர விபத்தில் 7 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    விபத்து நடந்த சமயத்தில் அந்தப் பகுதியில் மிகக் கடுமையான பனிப்புயல் வீசிக்கொண்டிருந்தது என்றும் மோசமான வானிலையே விபத்துக்குக் காரணமாக இருக்கலாம் எனக் கருதப்படுகிறது.

    விபத்தினால் பேங்கர் விமான நிலையம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது.

    • பனிப்புயலால் 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.
    • பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர்.

    அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வரும் நிலையில் இன்றும், நாளையும் பனிப்புயல் தாக்கும் என்று எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

    நாட்டின் தென்மேற்கு மற்றும் மத்திய பகுதிகளைத் தாக்கும் பனிப்புயல், நியூமெக்சிகோவில் இருந்து கிழக்கு கடற்கரை வரை வீசும் என்றும் மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களை தாக்கும் என்றும் தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து 15 மாகாணங்களில் அவசரநிலை அமல்படுத்தப்பட்டுள்ளது.

    இந்தநிலையில் அமெரிக்கா முழுவதும் பனிப்புயல் தாக்க தொடங்கி உள்ளது. அங்கு பெரிய அளவில் பனிப்புயல் வீசி வருகிறது. இதனால் நாட்டின் பெரும்பாலான பகுதிகளைத் தொடர்ந்து பாதித்து வருகிறது.

    பல இடங்களில் கடும் மின்வெட்டு ஏற்பட்டுள்ளது. மரங்களில் பனி உறைந்ததால் கிளைகள் முறிந்து மின்கம்பிகள் அறுந்து விழுந்தன. இந்த மின்வெட்டு லூசியானா மற்றும் டெக்சாஸ் மாகாணங்களை கடுமையாக பாதித்துள்ளது.

    போக்குவரத்து முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது. பனிப்புயலால் சுமார் 14 கோடி மக்கள் பாதிக்கப்பட்டு உள்ளனர். நியூ மெக்சிகோ முதல் நியூ இங்கிலாந்து வரை குளிர்காலப் புயல் எச்சரிக்கையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

    பனிப்புயல் தாக்குதல் காரணமாக அமெரிக்கா முழுவதும் சுமார் 13 ஆயிரம் விமானங்கள் ரத்து செய் யப்பட்டன. ஓக்லஹோமா நகரில் உள்ள வில் ரோஜர்ஸ் சர்வதேச விமான நிலை யத்தில் அதிகளவில் விமா னங்கள் ரத்து செய்யப்பட்டு உள்ளன.

    இந்த பனிப்புயல் அமெரிக்காவை முடக்கி போட்டு உள்ளது. மக்கள் வீட்டுக்குள்ளேயே இருக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.

    • கடந்த 7-ந்தேதி நடந்த சோதனையின்போது ரெனி நிக்கோல் என்ற பெண்ணை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.
    • அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது மிளகு தெளிப்பானை அடித்து கீழே தள்ளி தாக்கினர்.

    அமெரிக்காவில் குடியேற்ற சட்ட விதிகளை அதிபர் டிரம்ப் நிர்வாகம் கடுமையாக அமல்படுத்தி வருகிறது. சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கைது செய்யப்பட்டு நாடு கடத்தப்பட்டனர். இச்சோதனையில் குடியேற்ற துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இதற்கிடையே சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து மினசோட்டா மாகாணத்தில் போராட்டங்கள் நடந்து வருகிறது. குறிப்பாக மின்னபொலிஸ் நகரில் போராட்டம் தீவிரமாக உள்ளது. அங்கு கடந்த 7-ந்தேதி நடந்த சோதனையின்போது ரெனி நிக்கோல் என்ற பெண்ணை அதிகாரிகள் சுட்டுக்கொன்றனர்.

    அவர் அதிகாரிகள் மீது காரை ஏற்ற முயன்றதால் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

    இந்தநிலையில் மின்ன பொலிஸ் நகரில் வாலிபர் ஒருவரை குடியேற்ற துறை அதிகாரிகள் சுட்டுக் கொன்றுள்ளனர். குடியேற்ற சோதனைக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடந்தபோது அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி(வயது 37) என்ற வாலிபர் தனது செல்போனில் அதிகாரிகளை வீடியோ எடுத்து கொண்டிருந்தார். அப்போது அவரை அதிகாரிகள் தடுத்து நிறுத்தினர்.

    இதில் வாக்குவாதம் ஏற்பட்டதில் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது மிளகு தெளிப்பானை அடித்து கீழே தள்ளி தாக்கினர். இதில் ஏற்பட்ட தள்ளு முள்ளுவில் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி மீது அதிகாரி ஒருவர் துப்பாக்கியால் சுட்டார். இதில் அவர் உயிரிழந்தார். இதுதொடர்பான வீடியோ சமூக வலை தளங்களில் பரவி வருகிறது.

    அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டி தன்னிடம் துப்பாக்கி வைத்திருந்ததால் அவர் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதுதொடர்பாக உள்நாட்டுப் பாதுகாப்புத் துறை கூறும்போது, "மின்ன பொலிஸ் நகரில் ஒரு கைத்துப்பாக்கியுடன் வந்த ஒருவர் அதிகாரிகளை அணுகினார். அவரிடமிருந்து ஆயுதத்தைப் பறிக்க முயன்றபோது அவர் அதிகாரிகளை தாக்கினார். அப்போது அதிகாரி ஒருவர் தற்காப்புக்காகச் சுட்டார்" என்று தெரிவித்து உள்ளது.

    இதுகுறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறும்போது,குடியேற்ற துறை அதிகாரிகள் தங்களை பாதுகாத்து கொள்ள வேண்டியிருந்தது என்றும் மினசோட்டர் கவர்னர், மேயர் ஆகியோர் கிளர்ச்சியை தூண்டுகிறார்கள் என்றும் தெரிவித்தார்.

    ஆனால் அலெக்ஸ் ஜெப்ரி பிரெட்டியிடம் எந்த ஆயுதமும் இல்லை என்று அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

    வாலிபர் சுட்டுக் கொல்லப் பட்டதை யடுத்து மினசோட்டாவில் போராட் டங்கள் வெடித்தது. இதில் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் பல இடங்களில் மோதல் ஏற்பட்டது.

    • டிரம்ப், பொதுமேடையில் “கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது” என்றார்.
    • கியூபெக் திரும்பிய கார்னி வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர்.

    சீனாவுடன் உறவு வைத்துக் கொண்டால் கனடாவுக்கு 100 சதவீத வரி விதிக்கப்படும் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள்ளார்.

    அமெரிக்கா அதிபர் டிரம்ப் கனடாவை தனது நாட்டுடன் இணைக்க தொடர்ந்து அறைகூவல் விடுத்து வருகிறார். இதற்கு கனடா நாட்டு பிரதமர் மார்க் கார்னி எதிர்ப்பு தெரிவித்து வருகிறார். முன்னாள் பிரதமர் ட்ரூடோ காலத்தில், டிரம்ப் அவரை "பிரதமர்" என அல்லாமல், "கவர்னர் ட்ரூடோ" என்று அழைத்ததும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

    இதனால் கனடா-அமெரிக்கா இடையேயான உறவு கசக்க தொடங்கியது. இருப்பினும் இதனை புதுப்பிக்கும் முயற்சியில் கனடா சார்பில் தொடர்ந்து எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் தோல்வியில் முடிந்தன.

    சுவிட்சர்லாந்தில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் டிரம்ப், மார்க் கார்னி ஆகியோர் கலந்து கொண்டனர். அப்போது டிரம்ப் அறிவித்த அமைதி வாரியத்தில் இணைய கார்னிக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இதனை ஏற்று அமைதி வாரியத்தில் இணைய கார்னி ஒத்துக்கொண்டார்.

    மேலும், அமெரிக்காவுடனான உறவை புதுப்பித்து கொள்ளவும் கார்னி ஒரு வாய்ப்பாக இதனை கருதினார். இருப்பினும் டிரம்ப் அவருடைய கோரிக்கையை நிராகரித்தார். மேலும், டிரம்ப் இது "பெரிய தலைவர்களுக்கான உருவாக்கப்பட்ட மிக உயரிய குழு, இதில் கனடாவுக்கு இடமில்லை" என்று பகிரங்கமாக அறிவித்தார்.

    மேலும், அவர் பொதுமேடையில் "கனடா அமெரிக்காவால்தான் உயிர் வாழ்கிறது" என்றார். இதனால் சுவிட்சர்லாந்தில் இருந்து பெரும் ஏமாற்றத்துடன் கார்னி திரும்பினார்.

    பின்னர் கியூபெக் திரும்பிய அவர் வீடியோ ஒன்றை வெளியிட்டு டிரம்பை கடுமையாக விமர்சித்துள்ளர். அதில் அவர் "கனடா அமெரிக்காவால் உயிர் வாழ்வதில்லை. நாங்கள் கனடியர்கள் என்பதால்தான் கனடா செழிக்கிறது." என்றார்.

    பின்னர் அமெரிக்கா-கனடா இடையிலான நீண்டகால உறவைப் பாராட்டிய கார்னி, அதே நேரத்தில், எங்கள் வீட்டின் உரிமையாளர்கள் நாங்களே. இது எங்கள் நாடு; எங்கள் எதிர்காலம்; முடிவு எங்களிடமே உள்ளது. மேலும், நடுத்தர சக்தி நாடுகள் தங்களைத் தாங்களே பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்றும், பெரும் சக்திகள் பொருளாதார ஒருங்கிணைப்பை ஆயுதமாகவும், சுங்க வரிகளை அழுத்தம் செலுத்தும் கருவியாகவும், நிதி கட்டமைப்புகளை கட்டாயப்படுத்தும் சாதனமாகவும், விநியோகச் சங்கிலிகளைப் பயன்படுத்திக் கொள்ளும் பலவீனங்களாகவும் மாற்றத் தொடங்கியுள்ளன, என்று குற்றம் சாட்டினார்.

    இதற்கு டிரம்ப் கடும் பதிலடி கொடுத்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், "என்ன நினைத்துக்கொண்டுள்ளார் என தெரியவில்லை. எங்கள் தயவு இல்லாமல் சீனாவை சார்ந்து இருக்க விரும்புகிறாரா கவர்னர் கார்னி.

    சீனப்பொருட்களை கனடாவில் இறக்குமதி செய்தால் அவர்கள் போகிற போக்கில் உங்களை விழுங்கிவிடுவார்கள். அதனை மீறி நீங்கள் சீனா உடன் உறவு வைத்துக்கொள்ள விருப்பப்பட்டால் உங்கள் மீது 100 சதவீதம் வரிவிதிக்கப்படும்" என்றார்.

    முன்னதாக அமெரிக்காவின் அடுத்தக்கட்ட பாதுகாப்பு அம்சமான தங்க கவசத்தில் இணைய கனடா மறுப்பதாகவும் குற்றச்சாட்டை முன்வைத்தார்.

    • அமேசான் தனது ஊழியர்களில் 10 சதவீதமான 30,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.
    • அதன்படி, கடந்த அக்டோபரில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர்.

    வாஷிங்டன்:

    அமெரிக்காவின் சியாட்டில் நகரில் இயங்கி வரும் மிகப்பெரிய ஆன்லைன் வர்த்தக நிறுவனம் அமேசான். இந்த நிறுவனத்தில் உலக அளவில் 3 லட்சத்துக்கு மேற்பட்டோர் பணிபுரிந்து வருகின்றனர்.

    கடந்த ஆண்டு அக்டோபரில் அமேசான் நிறுவனம் தனது ஊழியர்களில் 10 சதவீதமான 30,000 பேரை பணிநீக்கம் செய்வதாக அறிவித்தது.

    அதன்படி, கடந்த அக்டோபரில் 14,000 ஊழியர்கள் பணிநீக்கம் செய்யப்பட்டனர். இது மற்ற நிறுவன ஊழியர்களிடம் அச்சத்தை ஏற்படுத்தியது.

    இந்நிலையில், அமேசான் நிறுவனம் மீண்டும் ஒரு பணிநீக்க நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    மீதமுள்ள 16,000 ஊழியர்களை வரும் 27-ம் தேதி முதல் பணிநீக்கம் செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதற்காக ஏற்கனவே அமெரிக்காவில் பணிபுரியும் 2,000 பேருக்கு இ-மெயில் அனுப்பப்பட்டதாகக் கூறப்படுகிறது.

    அமேசான் வெப் சர்வீசஸ், ரீடைல், பிரைம் வீடியோ மற்றும் மனிதவள மேம்பாட்டுத்துறை ஆகிய பிரிவுகளில் பணியாற்றும் உயர் அதிகாரிகள், சாப்ட்வேர் இன்ஜினியர் உள்ளிட்டோரும் பாதிக்கப்படுவார்கள் என தெரிகிறது.

    பொருளாதார நெருக்கடி, செயற்கை நுண்ணறிவு தாக்கம் காரணமாக பல்வேறு நிறுவனங்களும் ஆட்குறைப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.

    • விஜய் குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகள் பயந்துபோய் ஒரு அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர்.
    • அவர்களில் ஒருவர் 911 அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் அங்கு விரைந்தனர்.

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணம், லாரன்ஸ்வில் பகுதியில் நடந்த குடும்பத் தகராறில், இந்திய வம்சாவளி நபர் ஒருவர் தனது மனைவி மற்றும் மூன்று உறவினர்களைச் சுட்டுக்கொன்றுள்ளார்.

    அமெரிக்காவின் ஜார்ஜியா மாகாணத்தின் அட்லாண்டாவில் தனது மனைவி மீமூ டோக்ரா (43) மற்றும் 12 வயது மகனுடன் வசித்து வந்தவர் 51 வயதான விஜய் குமார்.

    கணவன்- மனைவி இடையே தகராறு ஏற்பட்ட நிலையில் மூவரும் அதே மாகாணத்தில் லாரன்ஸ்வில் நகரில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுள்ளனர். 

    அங்கு வைத்தும் இருவரிடையேயும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த விஜய் குமார், அமெரிக்க நேரப்படி நேற்று அதிகாலை 2.30 மணிக்கு மனைவி மீமூ டோக்ரா, உறவினர்களான கௌரவ் குமார் (33), நிதி சந்தர் (37), ஹரிஷ் சந்தர் (38) ஆகியோரை தான் வைத்திருந்த துப்பாக்கியால் சுட்டுக் கொன்றார்.

    துப்பாக்கிச் சூடு நடந்த சமயத்தில் வீட்டில் விஜய் குமாரின் மகன் உட்பட 3 குழந்தைகள் இருந்துள்ளனர். அவர்கள் பயந்துபோய் ஒரு அலமாரிக்குள் ஒளிந்து கொண்டனர்.

    அவர்களில் ஒரு குழந்தை 911 அவசர எண்ணிற்கு அழைத்துத் தகவல் கொடுத்த நிலையில் போலீசார் அங்கு விரைந்து விஜய் குமாரை கைது செய்தனர். குழந்தைகள் மூவரும் காயமின்றி தப்பினர்.

    அட்லாண்டாவில் உள்ள இந்தியத் தூதரகம் இந்தச் சம்பவத்திற்கு ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளதுடன், பாதிக்கப்பட்ட குடும்பத்தினருக்குத் தேவையான உதவிகளைச் செய்வதாக தெரிவித்துள்ளது. 

    • அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும்.
    • உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும்.

    அமெரிக்காவில் கடும் பனிப்பொழிவு நிலவி வருகிறது. அந்நாட்டின் பல்வேறு பகுதிகளில் கடுமையான பனிப்புயல் தாக்கி வருகிறது.

    வடமேற்கு டெக்சாஸ் மற்றும் ஓக்லஹோமா நகரில் கடும் பனிப்பொழிவு தொடங்கி உள்ளது. இதற்கிடையே ஓக்லஹோமாவில் இருந்து வடகிழக்கு வரை கடும் பனிப்பொழிவு இருக் கும் என்றும் திங்கட்கிழமை வரை சில இடங்களில் ஒரு அடிக்கு மேல் பனிப்பொழிவு ஏற்பட வாய்ப்புள்ளது என்றும் தெரிவிக்கப் பட்டுள்ளது.

    மேலும் இந்த பனிப்புயல் பல நாட்களுக்கு நீடிக்கும் என்றும், அதிக மக்கள் தொகை கொண்ட மத்திய அட்லாண்டிக் மற்றும் வடகிழக்கு மாகாணங்களுக்கு நகர்ந்து நாடு முழுவதும் ஒரு உறைபனியை ஏற்படுத்தும் என்றும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

    இந்தப் பனிப்புயலால் ஏற்படும் பனி மற்றும் உறைபனி டெக்சாஸ் முதல் நியூ இங்கிலாந்து வரை 3200 கிலோ மீட்டர் தூரத்துக்கு மேல் பரவியிருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

    இதையடுத்து 18 மாகாணங்களில் அவசரநிலை பிரகடனப்படுத்தப்பட்டு உள்ளது. பனிப்புயல் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது.

    பனிப்புயல் எச்சரிக்கையை அடுத்து மக்கள் உணவு, பால், முட்டை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்களை வாங்கி குவித்தனர். இதனால் பல கடைகளில் பொருட்கள் விற்று தீர்ந்து அலமாரிகள் காலியாக இருந்தன. 

    பனிப்புயலால் நீண்ட நேர மின்வெட்டு, மரங்க ளுக்குப் பரவலான சேதம் மற்றும் மிகவும் ஆபத்தான அல்லது பயணிக்க முடியாத சாலைப் போக்குவரத்து நிலைமைகள் ஏற்பட வாய்ப்புள்ளது என்று மக்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது.

    அமெரிக்கா முழுவதும் பனிப்பொழிவால் விமான சேவை கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. 1800-க்கும் மேற்பட்ட விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

    • காசா போரை முடிவுக்கு கொண்டுவர அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.
    • இதில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    வாஷிங்டன்:

    இஸ்ரேல்-பாலஸ்தீன போரை முடிவுக்கு கொண்டு வந்து அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைதி வாரியம் ஒன்றை ஏற்படுத்தி உள்ளார்.

    இந்த வாரியத்தில் சேர ரஷிய அதிபர் புதின், இந்திய பிரதமர் மோடி உள்ளிட்ட உலகத் தலைவர்களுக்கு அழைப்பு விடுத்தார்.

    அமெரிக்க அதிபர் டிரம்ப் அமைத்துள்ள காசா அமைதிக் குழுவில் சவுதி அரேபியா, கத்தார், எகிப்து, ஐக்கிய அரபு அமீரகம், துருக்கி, ஜோர்டான், இந்தோனேசியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய 8 இஸ்லாமிய நாடுகள் இணைந்துள்ளன.

    காசாவில் நிரந்தர போர்நிறுத்தத்தை அமல்படுத்துதல், தாக்குதலால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மறுசீரமைப்பு செய்தல் ஆகியவை இந்த குழுவின் நோக்கம். காசாவின் நிர்வாக விவகாரங்களை இந்தக் குழு மேற்பார்வையிடும் என்று கூறப்படுகிறது. டிரம்ப் அமைத்த காசா அமைதி வாரியத்தை இந்தியா புறக்கணித்தது.

    இதற்கிடையே சுவிட்சர்லாந்தின் டாவோஸ் நகரில் நடந்த உலக பொருளாதார மன்றத்தில் பங்கேற்ற கனடா பிரதமர் மார்க் கார்னி பேசுகையில், அமெரிக்காவின் தயவால் கனடா வாழவில்லை. டிரம்பின் காசா அமைதி வாரியத்தில் சேர பணம் செலுத்தப் போவதில்லை என தெரிவித்தார்.

    இந்நிலையில் காசா அமைதி வாரியத்தில் சேர கனடாவுக்கு விடுத்த அழைப்பை டிரம்ப் திரும்ப பெறுவதாக அறிவித்தார்.

    ×