என் மலர்
அமெரிக்கா
- ராணுவ மந்திரி பீட் ஹெக்செத் தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார்.
- நடுவானில் சென்றபோது அந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
லண்டன்:
பெல்ஜியம் தலைநகர் பிரஸ்சல்சில் நேட்டோ கூட்டமைப்பு நாடுகளின் தலைவர்கள் சந்தித்துப் பேசினர்.
இந்தக் கூட்டத்தில் அமெரிக்கா சார்பில் ராணுவ மந்திரி பீட் ஹெக்செத்தும் கலந்துகொண்டார். அதன்பிறகு அங்கிருந்து தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டார்.
இந்நிலையில், நடுவானில் சென்றபோது அந்த விமானத்தின் கண்ணாடியில் விரிசல் ஏற்பட்டது.
இதுகுறித்து கட்டுப்பாட்டு அறை அதிகாரிகளிடம் விமானி தெரிவித்தார்.
அவர்களது அறிவுறுத்தலின் பேரில் அந்த விமானம் இங்கிலாந்து தலைநகர் லண்டன் விமான நிலையத்தில் அவசரமாக தரையிறங்கியது.
அங்கு தயாராக இருந்த மீட்பு குழுவினர் பீட் ஹெக்செத் உள்பட அனைவரையும் உடனடியாக வெளியேற்றினர். விமானியின் சாமர்த்தியத்தால் யாருக்கும் காயம் ஏற்படவில்லை.
- ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அவர் எனக்கு உறுதியளித்தார்.
- பிரதமர் மோடி டிரம்ப்-ஐ கண்டு அஞ்சுவதாக ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் நேற்று வெள்ளை மாளிகையில் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது செய்தியாளர் ஒருவர், இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதை நிறுத்துமா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு பதிலளித்த டிரம்ப், ஆமாம், நிச்சயமாக. அவர் (பிரதமர் மோடி) என்னுடைய நண்பர். எங்களுக்குள் ஒரு சிறந்த உறவு இருக்கிறது. இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெய் வாங்குவதில் நான் மகிழ்ச்சியடையவில்லை.
ரஷியாவிலிருந்து எண்ணெய் வாங்க மாட்டோம் என்று அவர் எனக்கு உறுதியளித்தார். அது ஒரு பெரிய நிறுத்தம். இப்போது நாம் சீனாவையும் அதே காரியத்தைச் செய்ய வைக்க வேண்டும்..." என்று தெரிவித்தார்.
முன்னதாக சர்வதேச தடைகள் இருந்தபோதிலும் ரஷிய எண்ணெய் வாங்கி உக்ரைன் போரை ஊக்குவிப்பதாக இந்திய பொருட்களுக்கு அமெரிக்கா 50 சதவீத வரி விதித்திருந்த நிலையில் தற்போது டிரம்ப்-இன் கருத்து வந்துள்ளது.
இதற்கிடையே இந்தியா ரஷியாவிடம் இருந்து எண்ணெயை வாங்காது என்று டிரம்ப் முடிவு செய்து அறிவிக்க அனுமதித்ததை சுட்டிக்காட்டி பிரதமர் மோடி டிரம்ப்-ஐ கண்டு அஞ்சுவதாக மக்களவை எதிர்கட்சித் தலைவர் ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
- இந்திய அதிகாரிகளுக்கு அதானி குழுமம் ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்ததாக புகார் எழுந்தது.
- இந்த புகாரை அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம் விசாரித்து வருகிறது.
மத்திய அரசின் நிறுவனத்திடம் இருந்து சூரிய ஒளி மின்சாரத்தைத் தயாரித்து வழங்குவதற்கான ஒப்பந்தத்தை பெற தமிழ்நாடு உட்பட இந்தியாவில் உள்ள பல்வேறு மாநிலங்களின் மின் வாரிய அதிகாரிகளுக்கு ரூ.2100 கோடி லஞ்சம் கொடுத்து, அமெரிக்க முதலீட்டாளர்களை அதானி குழுமம் தவறாக வழிநடத்தி சுமார் 750 மில்லியன் டாலர்கள் நிதி திரட்டியதாக அமெரிக்காவின் FCPA சட்டத்தின் கீழ் நியூயார்க் நீதிமன்றத்தில் வழக்கு நடந்து வருகிறது.
இதனிடையே கெளதம் அதானிக்கு சொந்தமான அதானி க்ரீன் நிறுவனம், டெல்லியை தலைமையிடமாக கொண்ட அஷ்யூா் பவா் நிறுவனம் மீது அமெரிக்க பங்கு பரிவா்த்தனை பாதுகாப்பு அமைப்பு இரு வழக்குகளை தொடுத்துள்ளது.
இந்த வழக்கில் கெளதம் அதானி, அவரது உறவினர் சாகர் அதானி, வினீத் ஜெயின், ரஞ்சித் குப்தா, செளரவ் அகர்வால் உள்பட 7 பேரின் பெயர்கள் குற்றப்பத்திரிகையில் சேர்க்கப்பட்டுள்ளன.
இந்நிலையில், அமெரிக்க முதலீட்டாளர்களிடம் மோசடி செய்து அதானி குழுமம் நிதி திரட்டிய புகாரை விசாரித்து வரும் அமெரிக்க பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனைகள் ஆணையம், இந்திய அரசு இது தொடர்பாக எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என நியூயார்க் நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.
- 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
- நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவில் சமீபகாலமாக அடிக்கடி துப்பாக்கிச் சூடு சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.
கால்பந்து மைதானம் மற்றும் பள்ளி என இருவேறு வேறு இடங்களில் நேற்று நடந்த துப்பாக்கிச் சூட்டில் 6 பேர் உயிரிழந்தனர்.
அமெரிக்காவின் தெற்கு கரோலினா பகுதியின் தீவில் பார் ஒன்று உள்ளது. நெரிசலானா பாரில் நுழைந்த மர்மநபர் ஒருவர் தீடிரென துப்பாக்கிச்சூட்டில் ஈடுபட்டார்.
இதில், சம்பவ இடத்திலேயே 4 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், 20 பேர் பலத்த காயங்களுடன் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர். இதில் பலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என கூறப்படுகிறது.
- ஹண்டிங்டன் கடற்கரை அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது.
- இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
அமெரிக்காவின் கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஹண்டிங்டன் கடற்கரை அருகே ஒரு ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் 5 பேர் காயமடைந்ததாக தகவல் வெளியாகியுள்ளது.
பசிபிக் கோஸ்ட் நெடுஞ்சாலை மற்றும் கலிபோர்னியாவின் ஹண்டிங்டன் தெரு அருகே பிற்பகல் 2 மணியளவில் இந்த விபத்து நிகழ்ந்தது.
ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளான வீடியோ இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
- பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது.
- இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர்.
அமெரிக்காவின் மிசிசிப்பி மாகாணத்தில் உள்ள பள்ளியில் நடைபெற்ற கால்பந்து போட்டியில் மர்ம நபர் நடத்திய துப்பாக்கிச்சூட்டில் 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.
மிசிசிபி மாகாணத்தில் உள்ளூர் உயர்நிலைப் பள்ளியில் பள்ளிகளுக்கு இடையிலான கால்பந்து போட்டிநடைபெற்றது. இப்போட்டியை காண மாணவர்களும் பெற்றோரும் குவிந்திருந்தனர். கால்பந்து போட்டியின் முடிவில் மர்ம நபர் திடீர் துப்பாக்கிச்சூடு நடத்தினார்.
இந்த சம்பவத்தில் 4 பேர் உயிரிழந்த நிலையில் 12 பேர் காயமடைந்தனர். அதில் 4 பேரின் நிலைமை சுவலைக்கிடமாக உள்ளதால் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என போலீசார் அச்சம். மைதானத்தில் துப்பாக்கிச்சூடு நடத்திய மர்ம நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
- இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெய்டபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது
- வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின.
அமெரிக்காவின் டென்னசி மாகாணத்தில் உள்ள வெடிபொருள் உற்பத்தி ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டுள்ளது.
மலைப்பகுதியில் அமைந்துள்ள இந்த ஆலையில் இராணுவம், விண்வெளி மற்றும் வணிகத் துறைகளுக்குத் தேவையான வெடிபொருட்கள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. இந்நிலையில் அமெரிக்க நேரப்படி காலை 7.45 மணிக்கு ஆலையில் பயங்கர வெடிவிபத்து ஏற்பட்டது.
வெடிப்பின் தீவிரம் மிகவும் அதிகமாக இருந்ததால் தொழிற்சாலைக்கு அருகிலுள்ள வீடுகள் கூட கடுமையாக குலுங்கின. உள்ளூர் மக்கள் என்ன நடந்தது என்று தெரியாமல் பயந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியே ஓடினர்.
சம்பவ இடத்துக்கு விரைந்த தீயணைப்பு துறையினர் மீட்புப்பணிகளை மேற்கொண்டு வருகின்றனர்.
விபத்துக்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணையைத் தொடங்கியுள்ளனர். இந்த விபத்தில் தொழிற்சாலையில் இருந்த 18 பேர் மாயமாகியுள்ளதாகவும் அவர்கள் அனைவரும் உயிரிழந்திருக்கலாம் என்றும் அதிகாரிகள் அச்சம் தெரிவித்தனர்.
- ஏற்கனவே சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் உள்ளது
- சீனா - அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கி உக்ரைன் போருக்கு உதவுவதாக கூறி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பொருட்களுக்கு 50 சதவீத வரி விதித்தார்.
ரஷியாவிடம் எண்ணெய் வாங்கும் முக்கிய நாடுகளில் சீனாவும், இந்தியாவும் அடங்கும். ஆனால் சீனாவை விடுத்தது இந்தியாவை மட்டும் அமெரிக்கா குறிவைப்பது ஏன் என்ற கேள்வி பலரிடையேயும் எழுந்தது.
இந்நிலையில், நவம்பர் 1 முதல் அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் அனைத்து சீன பொருட்களுக்கும் கூடுதலாக 100% வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் அறிவித்துள்ளார்.
ஏற்கனவே சீன பொருட்கள் மீது 30% வரி அமலில் இருக்கும் பட்சத்தில், தற்போது மொத்தமாக சீனா மீது 130% வரி விதிக்கப்பட்டுள்ளது.
மேலும், அமெரிக்காவின் முக்கிய மென்பொருட்களுக்கான ஏற்றுமதியில் புதிய கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
டிரம்பின் இந்த நடவடிக்கைகளால் சீனா - அமெரிக்க வர்த்தகப் போர் தீவிரமடையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- அமைதிக்கான நோபல் பரிசு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோவுக்கு அறிவிக்கப்பட்டது
- மரியா வெனிசுலா நாட்டு எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில் 2025-ம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன. அதன்படி இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்குக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இவர் தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
முன்னதாக இந்தியா- பாகிஸ்தான் உள்ளிட்ட 7 போர்களை கடந்த 6 மாதங்களில் நிறுத்தியதாகவும் அதனால் தனக்கே அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என்றும் அமெரிக்க அதிபர் டிரம்ப், வழி மேல் விழி வைத்து காத்திருந்த நிலையில் அவரது கனவு பொய்த்துள்ளது.
அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது என வெள்ளை மாளிகை விமர்சித்துள்ளது.
இந்நிலையில் எனக்கு வழங்கிய அமைதிக்கான நோபல் பரிசை ட்ரம்புக்கும் அர்ப்பணிக்கிறேன் என நோபல் பரிசு வென்ற வெனிசுலா எதிர்கட்சித் தலைவர் மரியா கொரினா மச்சாடோ கூறினார்.
இந்நிலையில், அமைதிக்கான நோபல் பரிசு குறித்து மனம் திறந்து பேசிய டிரம்ப், "வெனிசுலா எதிர்க்கட்சி தலைவர் மரியா, எனது சார்பாக நோபல் பரிசு வாங்கிக் கொள்வதாக கூறினார். என்னிடம் போனில் பேசிய மரியாவிடம் எனக்கு நோபல் பரிசை கொடுக்கும்படி நான் கேட்கவில்லை. நெருக்கடியான காலங்களில் வெனிசுலாவுக்கு நான் உதவி உள்ளேன். வெனிசுலாவில் லட்சக்கணக்கானோரை காப்பாற்றியதை எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன்" என்று தெரிவித்துள்ளார்.
- பல நாடுகளில் போரை நிறுத்தியதால் தனக்கு நோபல் பரிசு வழங்க வேண்டும் என டிரம்ப் தெரிவித்திருந்தார்.
- வெனிசுலா நாட்டின் எதிர்க்கட்சி பெண் தலைவருக்கு வழங்கப்பட்டுள்ளது.
உலகின் உயரிய அங்கீகாரமாகக் கருதப்படும் நோபல் பரிசு மருத்துவம், இயற்பியல், வேதியியல், இலக்கியம், பொருளாதாரம் மற்றும் அமைதி ஆகியவற்றுக்காக வழங்கப்பட்டு வருகிறது. அந்த வகையில் 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் பரிசுகள் அறிவிக்கப்பட்டன.
இன்று அமைதிக்கான நோபல் பரிசு அறிவிக்கப்பட்டது. இந்த வருடத்திற்கான அமைதிக்கான நோபல் பரிசுக்கு வெனிசுலா நாட்டின் மரியா கொரினா மச்சாடோ (Maria Corina Machado) தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். தற்போது வெனிசுலா நாட்டு அரசியல்வாதியான இவர் அந்நாட்டின் எதிர்கட்சித் தலைவராக உள்ளார்.
வெனிசுலா மக்களின் ஜனநாயக உரிமைகளை மேம்படுத்துவதற்காகவும், சர்வாதிகாரத்திலிருந்து ஜனநாயகத்திற்கு நியாயமான மற்றும் அமைதியான மாற்றத்தை அடைவதற்கான அவரது போராட்டத்திற்காகவும் மரியா கொரினா மச்சாடோவுக்கு 2025 ஆம் ஆண்டுக்கான நோபல் அமைதிப் பரிசை வழங்க நார்வே நோபல் கமிட்டி முடிவு செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட வேண்டும் என வெளிப்படையாக அறிவித்தார். இந்திய- பாகிஸ்தான் உள்ளிட்ட பல போர்களை நிறுத்தி அமைதியை ஏற்படுத்தியுள்ளேன் எனத் தெரிவித்தார். அவருக்கு அமைதிக்கான நோபல் பரிவு வழங்க வேண்டும் என பாகிஸ்தான் உள்ளிட்ட சில நாடுகள் கோரிக்கை வைத்தன.
டிரம்பிற்கு நோபல் பரிவு வழங்கப்படாத நிலையில், நார்வே நோபல் கமிட்டியை வெள்ளை மாளிகை கடுமையாக விமர்சித்துள்ளது.
இது தொடர்பாக வெள்ளை மாளிகை செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் செயுங் கூறுகையில் "அமைதியை விட அரசியலுக்கு முக்கியத்துவம் என்பதை மீண்டும் ஒருமுறை நோபல் கமிட்டி நிரூபித்துள்ளது. ஆனால், டொனால்டு டிரம்ப் தொடர்ந்து அமைதி ஒப்பந்தத்தை ஏற்படுத்துவதை தொடர்ந்து செய்வார். போரை முடிவுக்கு கொண்டு வருவார். மக்கள் உயிரை காப்பாற்றுவார். அவர் மனிதாபிமான இதயத்தை கொண்டுள்ளார். டிரம்ப் தனது விருப்பத்தின் சக்தியால் மலைகளை கூட நகர்த்துவார். அவரை போன்று எவரும் இருக்க முடியாது" எனத் தெரிவித்துள்ளார்.
ஆனால், டொனால்டு டிரம்ப் இது தொடர்பாக நேரடியாக கருத்து ஏதும் தெரிவிக்கவில்லை.
- H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
- விசா ஒதுக்கீட்டு உச்சவரம்பில் இருந்து விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்யப்படும்.
அமெரிக்காவில் வேலைக்குச் செல்லும் வெளிநாட்டினர் இனிமேல் H-1B விசா பெற ஆண்டுதோறும் $1,00,000 (ரூ. 88 லட்சம்) செலுத்த வேண்டும் என டிரம்ப் அரசு அண்மையில் உத்தரவிட்டது. மேலும் H-1B விசா தொடரான பல புதிய விதிகளும் அறிவிக்கப்பட்டன.
இந்தக் கட்டண உயர்வு, அமெரிக்க நிறுவனங்கள் வெளிநாட்டு ஊழியர்களை நியமிப்பதற்குப் பதிலாக, அமெரிக்கப் பணியாளர்களை அதிக அளவில் வேலைக்கு அமர்த்த ஊக்குவிக்கும் என டிரம்ப் நிர்வாகம் நம்புகிறது.
H-1B திட்டம் இந்த நிறுவனங்களுக்கு இந்தியா, சீனா போன்ற நாடுகளில் இருந்து ஆயிரக்கணக்கான உயர் திறன்கொண்ட ஊழியர்களைப் பணியமர்த்த உதவியது. ஒவ்வொரு ஆண்டும் அனுமதிக்கப்பட்ட H-1B விண்ணப்பங்களில் 70 சதவீதத்துக்கும் அதிகமானவை இந்தியர்களுக்கே கிடைத்துள்ளன.
இந்நிலையில் டிரம்ப் அரசு கொண்டுவந்துள்ள கட்டண உயர்வு இந்தியர்களுக்கும் அவர்களை பணியமர்த்தும் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களுக்கும் பெரும் பாதிப்பாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
H-1B விசா புதிய விதிமுறைகள்:
புதிய H-1B விசா மனுக்களுக்கான கட்டணம் தற்போதுள்ள சுமார் $4,000 முதல் $6,000 என்ற நிலையிலிருந்து, $1,00,000 (ரூ. 88 லட்சம்) என உயர்த்தப்படுகிறது.எனினும், இந்தப் புதிய கட்டணம் புதிய விண்ணப்பங்களுக்கு மட்டுமே பொருந்தும். விசா புதுப்பித்தல் அல்லது ஏற்கெனவே விசா வைத்திருப்பவர்களுக்குப் பொருந்தாது என அமெரிக்க உள்நாட்டு பாதுகாப்புத் துறை தெளிவுபடுத்தியுள்ளது.
அடுத்ததாக, விசா பெறுவதற்கான சிறப்புத் தொழில் (Specialty Occupation) என்ற வரையறை கடுமையாக்கப்பட்டுள்ளது.
இனி, விண்ணப்பதாரரின் பட்டப்படிப்பும், அவர்கள் செய்யும் வேலையும் கண்டிப்பாக ஒரே துறை சார்ந்ததாக இருக்க வேண்டும் என்பது கட்டாயமாக்கப்பட்டுள்ளது
புதிய விதிமுறைகளின்படி H-1B ஊழியர்களைப் பிற நிறுவனங்களில் பணிக்கு தேர்வு செய்து அனுப்பும் கன்சல்டிங் மற்றும் அவுட்சோர்சிங் நிறுவனங்கள் கடுமையான ஆய்வுக்கு உட்படுத்தப்படும்.
ஊழியர்கள் அவர்கள் பணி செய்யும் நிறுவனங்களுடன் நேரடி தொடர்பு இருக்கின்றனரா அல்லது மூன்றாவது ஏஜென்சி மூலம் காண்டிராக்ட்-இல் இருக்கிறார்களா என்பது குறித்த கூடுதல் ஆவணங்கள் சமர்ப்பிக்க வேண்டும்.
மேலும், பல்கலைக்கழகங்கள், இலாப நோக்கற்ற ஆய்வு நிறுவனங்கள் மற்றும் சுகாதார நிறுவனங்கள் போன்ற வருடாந்திர விசா ஒதுக்கீட்டு உச்சவரம்பில் இருந்து விலக்கு பெறும் நிறுவனங்களின் பட்டியலை டிரம்ப் நிர்வாகம் மறுபரிசீலனை செய்ய திட்டமிட்டுள்ளது.
மேலும், நிரந்தரக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு செயல்முறையும் கடினமாக்கப்பட்டுள்ளது. அபரிமிதமான திறன் கொண்ட வெளிநாட்டு நிபுணர்களை பணியமர்த்தும் O-1A விசா முறையில் கட்டுப்பாடுகளை விதிக்கவும் திட்டமிட்டுள்ள்ளது.
இந்த முன்மொழிவுகள் தற்போது பொதுமக்கள் கருத்துக்காக வைக்கப்பட்டுள்ளது. இவை செயல்படுத்தப்பட்டால், அமெரிக்கப் பணிக்கான விசா அமைப்பில் ஏற்பட்ட மிகப்பெரிய மறுசீரமைப்பாக இருக்கும்.
- தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
- இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தியா- பாகிஸ்தான் போர் உள்பட 7 போர்களை நிறுத்தியதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் கூறி வருகிறார். இதற்காக தனக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்க வேண்டும் என்று தெரிவித்து இருந்தார்.
அவருக்கு சில நாடுகளும் ஆதரவு தெரிவித்து பரிந்துரைத்தன. ஆனால் அவருக்கு நோபல் பரிசு கிடைக்க வாய்ப்பு இல்லை என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கிடையே டிரம்ப்பின் முயற்சியால் இஸ்ரேல்- ஹமாஸ் அமைப்பு இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் கையெழுத்தாகி உள்ளது.
இந்தநிலையில் அமைதிக்கான நோபல் பரிசு நாளை அறிவிக்க உள்ள நிலையில் அதுகுறித்து டிரம்ப்பிடம் நிருபர்கள் கேள்வி கேட்டனர்.
இதற்கு பதிலளித்த டிரம்ப்,"நாங்கள் 7 போர்களை தீர்த்து வைத்தோம். 8-வது போருக்கு நாங்கள் தீர்வு காண நெருங்கிவிட்டோம்.
வரலாற்றில் யாரும் இவ்வளவு போர்களை தீர்த்து வைத்ததாக நான் நினைக்கவில்லை. ஆனால் ஒருவேளை அவர்கள் (நோபல் குழு) அதை எனக்குக் கொடுக்காததற்கு ஒரு காரணத்தைக் கண்டுபிடிப்பார்கள்" என்றார்.
இதற்கிடையே வெள்ளை மாளிகை தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் டிரம்ப்பின் படத்தை "அமைதித் தலைவர்" என்ற தலைப்பில் பகிர்ந்து உள்ளது.






