என் மலர்
தலைப்புச்செய்திகள்
- ரோகித் ஒரு வீரராக மட்டும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்குச் சற்று அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.
- சுப்மன் கில் நிச்சயமாக இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம்.
இந்திய ஒருநாள் கிரிக்கெட் அணியின் கேப்டன் பொறுப்பிலிருந்து ரோகித் சர்மா அதிரடியாக நீக்கப்பட்டு, இளம் வீரர் சுப்மன் கில் புதிய கேப்டனாக நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் சுப்மன் கில்லுக்கு இது ஒரு புதிய சவால் என்றாலும், ரோகித் வெறும் வீரராக அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டது தனக்கு அதிர்ச்சியளிப்பதாக இந்திய அணியின் முன்னாள் சுழற்பந்து வீச்சாளர் ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
ஒருநாள் அணியையும் வழிநடத்தும் கூடுதல் பொறுப்பு கில்லுக்கு வழங்கப்பட்டுள்ளது. நிச்சயமாக, இது அவருக்கு ஒரு புதிய சவாலாக இருக்கும். வெளிப்படையாகச் சொல்ல வேண்டுமென்றால், ரோகித் கேப்டனாக இல்லாமல், ஒரு வீரராக மட்டும் அணியில் தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது எனக்குச் சற்று அதிர்ச்சியளிக்கும் செய்திதான்.
ஒருவேளை அவர் ஆஸ்திரேலியாவுக்குச் சென்றால், மீண்டும் கேப்டனாகத்தான் செல்வார் என்று நான் நினைத்தேன். அவர் சமீபத்தில்தான் சாம்பியன்ஸ் டிராபி மற்றும் பிற தொடர்களையும் வென்று கொடுத்துள்ளார். வெள்ளைப் பந்து கிரிக்கெட்டைப் பொறுத்தவரை, அவர் இந்திய கிரிக்கெட்டின் தூண்களில் ஒருவர். எனவே, குறைந்தபட்சம் இந்த ஒரு தொடருக்காவது அவருக்கு அந்த மரியாதை கொடுக்கப்பட்டிருக்க வேண்டும்.
நீங்கள் 2027 உலகக்கோப்பையைப் பற்றி யோசிப்பதாக இருந்தால், அது இன்னும் வெகு தொலைவில் இருக்கிறது. சுப்மன் கில் நிச்சயமாக இன்னும் கொஞ்சம் காத்திருந்திருக்கலாம். ஒருவேளை இன்னும் 6 அல்லது 8 மாதங்கள் அல்லது ஒரு வருடம் கழித்து கூட அவர் அணியை முன்னோக்கி எடுத்துச் சென்றிருக்கலாம். அதற்கு இன்னும் நிறைய நேரம் இருக்கிறது. சுப்மன் கில்லுக்காக நான் மகிழ்ச்சியடைகிறேன், ஆனால் அதே நேரத்தில், ரோகித் சர்மா கேப்டனாக இல்லாதது எனக்கு ஏமாற்றமளிக்கிறது.
என்று ஹர்பஜன் சிங் கூறினார்.
- 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டம்.
- சுமார் ரூ.1 கோடி செலவில் பெரியவர்களுக்கான உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படுகிறது.
சென்னை மெரினா கடற்கரைக்கு பொழுது போக்க வரும் சுற்றுலா பயணிகளை கவர்வதற்காக கடற்கரை சீரமைக்கப்பட்டு அண்ணா சதுக்கம் அருகே 10 ஆயிரம் சதுர அடி பரப்பளவில் குழந்தைகள் பூங்கா அமைக்க மாநகராட்சி திட்டமிட்டு உள்ளது.
ரூ.64 லட்சம் செலவில் அமையும் இந்த பூங்காவில் குழந்தைகளுக்கான ஸ்கேட்டிங் தளம், ஊஞ்சல், சறுக்கு மேடை, மரம் சுற்றும் விளையாட்டு உள்ளிட்ட வசதிகள் அமைகிறது.
இதேபோல் சுமார் ரூ.1 கோடி செலவில் பெரியவர்களுக்கான உடற்பயிற்சி கூடமும் அமைக்கப்படுகிறது. இந்த கடற்கரை சீரமைப்பால் கடற்கரைக்கு வரும் கூட்டத்தில் ஒரு பகுதியை பொழுதுபோக்கு மற்றும் விளையாட்டு வசதிகளுக்கு திருப்ப முடியும். இதன் மூலம் சட்டவிரோத கடைகள் குறையும் என்றார் மாநகராட்சி கமிஷனர் குமரகுருபரன்.
கடற்கரை சுற்று வட்டாரத்தில் 100-க்கும் மேற்பட்ட அனுமதியில்லாத கடைகள் அகற்றப்பட இருப்பதாகவும் மாநகராட்சி சார்பில் பேட்மின்டன் கோர்ட்டு, உடற்பயிற்சிக்கான விளை யாட்டுகள் அமைக்க இருப்ப தாகவும் அவர் கூறினார்.
- புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.
- இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா ஆராய்ச்சியாளர்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள விண்வெளி ஆய்வாளர்கள், வளிமண்டலத்தில் உள்ள கோள்கள் பற்றி தொடர்ந்து ஆராய்ச்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.
அந்த வகையில் கடந்த 2008-ம் ஆண்டு புதிய கோள் ஒன்றை கண்டுபிடித்தனர். அந்த கோளுக்கு 'சா 1107 - 7626' என்று பெயர் சூட்டினார்கள். வழக்கமாக ஒரு கோள் என்பது ஏதாவது ஒரு நட்சத்திரத்தை சுற்றி வரும்.
நாம் வாழும் பூமி எனப்படும் கோளானது, சூரியன் என்ற நட்சத்திரத்தை சுற்றி வருகிறது. ஆனால் புதிதாக கண்டுபிடிக்கப்பட்ட கோளானது எந்த ஒரு நட்சத்திரத்தையும் சுற்றாமல் தனித்து உள்ளது.
மேலும், இந்த கோளானது வளி மண்டலத்தில் தூசு மற்றும் மற்ற பொருட்களின் மோதல்கள் காரணமாகவோ அல்லது அந்த பொருட்கள் ஒன்றாக இணைவதன் மூலமாகவோ உருவாகவில்லை என்பதை விஞ்ஞானிகள் ஏற்கனவே கண்டுபிடித்தனர்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக இந்த கோளானது கிடைத்த பொருட்கள் அனைத்தையும் விழுங்கி வருகிறது. இப்படி அனைத்து பொருட்களையும் விழுங்கும் வகையில் இந்த கோள் இருப்பது விஞ்ஞானிகளை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.
இந்த கோள் ஒவ்வொரு வினாடியும் தனது சுற்றுவட்ட பாதையில் உள்ள 600 கோடி டன் தூசி மற்றும் வாயு பொருட்களை விழுங்கி வருகிறது. இந்த கோள் விழுங்கும் பொருட்களின் அளவு மற்றும் வேகம் ஆகியவற்றை இதுவரை பார்த்ததில்லை என்று விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
பொதுவாக, நட்சத்திரங்களை சுற்றும் கோள்கள் மட்டுமே இதுபோன்று பொருட்களை தனக்குள் சேர்த்து வளர்ச்சி அடையும் என்று விஞ்ஞானிகள் ஏற்கனவே கருதினார்கள்.
ஆனால் விண்வெளியில் தனியாக உள்ள ஒரு கோள் இவ்வளவு வேகமாக பொருட்கள் அனைத்தையும் விழுங்கி வளர்வதை பார்ப்பது இதுதான் முதல் முறை என்று விஞ்ஞானிகள் கூறுகின்றனர்.
இந்த 'சா 1107 - 7626 ' கோளின் தீவிர வளர்ச்சியானது, நட்சத்திரங்கள் உருவாகும்போது நடப்பது போலவே அதன் காந்தபுலத்தால் தூண்டப்படுகிறது என்று விஞ்ஞானிகள் நம்புகின்றனர்.
இந்த கண்டுபிடிப்பு விண்வெளி ஆராய்ச்சியில் ஒரு பெரிய மைல்கல்லாக பார்க்கப்படுகிறது. இந்த புதிய கோளின் நடவடிக்கைகளை விஞ்ஞானிகள் தொடர்ந்து கண்காணித்து வருகின்றனர்.
- பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்.
- முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.
தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் பள்ளிகளில் காலாண்டுத் தோ்வுகள் மற்றும் முதல் பருவத் தோ்வுகள் கடந்த மாதம் 10-ந்தேதி தொடங்கி 26-ந்தேதி வரை நடைபெற்றன. தொடா்ந்து மாணவா்களுக்கு கடந்த 27-ந்தேதி முதல் காலாண்டு விடுமுறை விடப்பட்டது.
இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் மீண்டும் வருகிற 6-ந்தேதி (திங்கட்கிழமை) திறக்கப்பட உள்ளன. விடுமுறைக்கு பின்பு திறக்கப்பட உள்ளதால் பள்ளிகளில் மேற்கொள்ள வேண்டிய முன்னேற்பாடுகள் குறித்து பள்ளிக் கல்வித் துறை சாா்பில் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா்களுக்கும் அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
அதன்படி, பள்ளிகளில் வகுப்பறைகள் உள்பட வளாகம் முழுவதும் தூய்மைப் பணிகள் மேற் கொள்ள வேண்டும். பள்ளிகள் திறக்கப்பட்ட முதல் நாளிலேயே மாணவா்களுக்கு மதிப்பீடு செய்யப்பட்ட காலாண்டு தோ்வு விடைத்தாள்கள் வினியோகிக்கப்பட வேண்டும்.
மேலும், 2-ம் பருவத்துக்காக பள்ளிகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ள பாட நூல்களையும் உடனே வழங்க வேண்டும். பருவ மழையை முன்னிட்டு பள்ளிகளில் செய்ய வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தொடா்பாக ஏற்கெனவே வெளியிடப்பட்ட வழிகாட்டுதல்களைப் பின்பற்றி செயல்பட வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவுறுத்தல்களை கல்வி அலுவலர்கர்களுக்கு பள்ளிக்கல்வித்துறை வழங்கி உள்ளது.
- இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது.
- திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இயக்குனர் சுதா கொங்கராவிடம் உதவி இயக்குனராக பணியாற்றிய கீர்த்தீஸ்வரன் இயக்கத்தில் அடுத்ததாக ட்யூட் படத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ளார். இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு புகழ் மமிதா பைஜூ நடித்துள்ளார்.
மைத்ரி மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்திற்கு சாய் அபயங்கர் இசையமைத்துள்ளார். இவர்களுடன் சரத்குமார், ரோகினி, ஹ்ரிதுஹரூன்,டிராவிட் மற்றும் பலர் நடித்துள்ளனர்.
படத்தின் ஃபர்ஸ்ட் சிங்கிளான ஊரும் பிளட் மற்றும் இரண்டாம் சிங்கிளான நல்லாரு போ பாடல்கள் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது.
இப்படம் தமிழ்,தெலுங்கு, கன்னடம், மலையாளம் மற்றும் இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கிறது. திரைப்படம் வரும் தீபாவளி பண்டிகையை முன்னிட்டு அக்டோபர் 17 ஆம் தேதி வெளியாக இருக்கிறது.
இந்நிலையில், படத்தின் மூன்றாம் சிங்கிளான 'சிங்காரி' பாடலை படக்குழு இன்று வெளியிட்டுள்ளது.
- தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும்.
- இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள்.
பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
செங்கல்பட்டு மறைமலைநகர் பெரியார் திடலில் நடக்கும் சுயமரியாதை இயக்க நூற்றாண்டு நிறைவு விழா மாநாட்டில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரையாற்றினார்.
அப்போது அவர் கூறியதாவது:-
நான் மானமிகு சுயமரியாதைக்காரன் என்பதில் பெருமிதம் கொள்கிறேன். கருஞ்சட்டைக்காரர்கள் தமிழ்நாட்டின் காவலுக்கு கெட்டிக்காரர்கள்.
தமிழ் சமுதாயத்திற்காக 92 வயதிலும் இளைஞர் போல் ஓய்வின்றி ஊழைத்து வருகிறார். கி.வீரமணி. கலைஞர், பேராசிரியருக்கு பிறகு தன்னை வழிநடத்துபவர் கி.வீரமணி. இந்த வயதிலும் தினமும் எழுதுகிறார், பிரசாரம் செல்கிறார்.
பெரியாரின் சிந்தனைகள் ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகத்தில் போற்றப்படுகிறது.
ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம் போற்றுவது பெரியாரின் கொள்கை, திராவிட சிந்தனைகளுக்கு கிடைத்த வெற்றி.
திருச்சி சிறுகனூரில் பெரியார் உலகம் மிகச்சிறப்பாக உருவாக்கப்பட்டு வருகிறது.
எனது ஒரு மாத ஊதியம், 126 எம், எம்எல்ஏக்கள் ஊதியத்தை சேர்த்து ரூ.1.5 கோடியை பெரியார் உலகத்திற்கு வழங்குவதில் மகிகழ்ச்சி.
பெரியாரின் சிந்தனைகள் உலகமயமாக வேண்டும், உலகம் பெரியார் மயமாக வேண்டும். சாதி பெயரில் உள்ள 'ன்' விகுதியை 'ர்' விகுதியாக மாற்ற பிரதமரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டை நாசப்படுத்த நினைக்கும் கூட்டத்தை வேரோடு வீழ்த்த வேண்டும். நன் இனத்தில் இருந்து ஐஏஎஸ், ஐபிஎஸ் அதிகாரிகள் உருவாவது சிலருக்கு பிடிக்கவில்லை.
இந்தியாவை ஒரு நூற்றாண்டுக்கு பின் இழுக்க பார்க்கிறார்கள். அதனை தடுத்து நிறுத்துவது திராவிட மாடல் அரசு.
இவ்வாறு அவர் கூறினார்.
- எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது மோசம், பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்கிறது.
- தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை.
பதவி வெறியில் கரூர் துயரம் குறித்து எடப்பாடி பழனிசாமி பேசி வருவதாக டிடிவி தினகரன் விமர்சனம் செய்துள்ளார்.
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:-
உணர்ச்சிவசப்பட்டு பேசும் சீமான் கூட கரூர் துயரம் குறித்து நிதானமாக பேசுகிறார், ஆனால் எடப்பாடி பழனிசாமியோ பதவி வெறியில் பேசுகிறார்.
தலைகீழாக நின்றாலும் எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வரமுடியாது, எடப்பாடி பழனிசாமி பதவிக்கு வர அமமுகவும் விடாது. கரூர் துயரத்தில் ஆளுங்கட்சியை எடப்பாடி பழனிசாமி விமர்சிப்பது மோசம், பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்கிறது.
இபிஎஸ்-க்கு இணையாக பாஜகவும் கரூர் விவகாரத்தில் அரசியல் செய்வது வருத்தம் அளிக்கிறது. தூத்துக்குடி துப்பாக்கிச்சூட்டின்போது பாஜக உண்மை கண்டறியும் குழு ஏன் வரவில்லை.
கரூர் துயர சம்பவத்தை சதி என அண்ணாமலை கூறியது வருத்தம் அளிக்கிறது. வழக்கம்போல் எடப்பாடி பழனிசாமி பேசுவது அநாகரீகமாக தான் உள்ளது. கூட்டணி குறித்து பேசும் நேரமா இது.
புரட்சி வெடிக்கும் என்ற தவெக நிர்வாகி ஆதவ் அர்ஜூனாவின் பதவி பொறுப்பற்றது. கரூர் விவகாரத்தை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதானமாக கையாளுகிறார்.
கரூர் விவகாரத்தை முதலமைச்சர், காவல்துறை சரியாக கையாண்டுள்ளனர். எந்த தலைவனும் தனது கட்சி தொண்டன் இறப்பதை விரும்ப மாட்டார் என்ற முதல்வரின் கருத்து சரியே.
இவ்வாறு அவர் கூறினார்.
- மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
- 2 தொகுதிகளில் நாளை நடைபெறவிருந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
தமிழகத்தில் 2026ல் சட்டமன்ற தேர்தல் நடைபெற இருக்கிறது. இதைமுன்னிட்டு அதிமுக சார்பில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அக்கட்சி பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார்.
இந்நிலையில், மக்களை காப்போம், தமிழகத்தை மீட்போம் சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, வரும் 5 மற்றும் 6ம் ஆகிய தேதிகளில் நாமக்கல் மாவட்டத்தில் மேற்கொள்ள இருந்த பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக, வரும் 8ம் தேதி நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு, குமாரபாளையத்தில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இதேபோல், வரும் 9ம் தேதி நாமக்கல், பரமத்திவேலூர் ஆகிய தொகுதிகளிலும், வரும் 10ம் தேதி அன்று ஈரோடு மாநகர், மொடக்குறிச்சி, ஈரோடு கிழக்கில் இபிஎஸ் பிரசாரம் மேற்கொள்கிறார்.
முன்னதாக, குமாரபாளையம், திருச்செங்கோடு சட்டமன்ற தொகுதிகளில் நாளை நடைபெறவிருந்த எடப்பாடி பழனிசாமியின் பரப்புரை ரத்து செய்யப்பட்டது.
எடப்பாடி பழனிசாமி பிரசாரத்திற்கு அதிமுகவினர் தேர்வு செய்த இடங்கள் நெடுஞ்சாலை பகுதியாக இருப்பதால் காவல்துறையினர் அனுமதி மறுத்த நிலையில் ரத்து செய்யப்பட்டது.
இதனால், அதிமுகவின் தேர்தல் பரசார சுற்றுப்பயணத்தில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
- 2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட ரோகித், கோலி முனைப்பு காட்டவில்லை.
- 3 FORMAT-களுக்கு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது.
வெஸ்ட் இண்டீஸ் தொடர் முடிந்தவுடன் இந்திய அணி, ஆஸ்திரேலியாவுக்கு எதிராக ஒருநாள் மற்றும் டி20 தொடரில் விளையாட உள்ளது. இந்த ஒருநாள் தொடருக்கான இந்திய அணியின் கேப்டனாக ரோகித் சர்மாவை நீக்கி விட்டு சுப்மன் கில் நியமிக்கப்பட்டுள்ளார்.
இந்நிலையில் ஒருநாள் இந்திய அணியின் கேப்டனாக சுப்மன் கில்லை நியமித்ததுக்கான காரணத்தை இந்திய கிரிக்கெட் தேர்வுக்குழுத் தலைவர் அஜித் அகர்கர் கூறியுள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:-
2027 ஒருநாள் உலக கோப்பையில் விளையாட ரோஹித், கோலி முனைப்பு காட்டவில்லை. 3 FORMAT-களுக்கு வெவ்வேறு கேப்டன்களை வைத்திருப்பதும் நடைமுறைக்கு சாத்தியமற்றது. ஒருநாள் போட்டிகள் குறைவாகவே விளையாடுகிறோம். இப்போதே கில்லை கேப்டனாக நியமித்தால்தான் 2027 உலகக் கோப்பைக்கு தயாராக முடியும்.
என கில் கூறினார்.
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்
- தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
இந்நிலையில், கரூர் விஜய் பிரச்சாரத்தின் போது 41 பேர் பலியான விவகாரத்தில் உண்மைக்கு மாறான தகவலை பரப்பியதாக கூறி மாரிதாஸை போலீசார் கைது செய்தனர்.
குறிப்பாக கரூர் சம்பவத்தில் நீதிமன்ற உத்தரவு குறித்து அவதூறு கருத்து தெரிவித்ததால் மாரிதாஸ் கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்நிலையில், மாரிதாஸ் எக்ஸ் பக்கத்தில் தற்போது வெளியிடப்பட்டுள்ள பதிவில், "கரூர் விவகாரத்தில் உண்மைக்கு புறம்பாக எதுவும் பேசவில்லை. அடுத்து கைது நடவடிக்கையை திமுக அரசு மேற்கொள்ள காரணம் விஜய்-க்கு நேற்று நீதிமன்றத்தில் நடந்தது அநீதி என்று இன்று நான் உண்மையை உடைத்தது தான் காரணம்.
மீண்டும் சொல்வேன் - விஜய் Tvk தரப்புக்கு எதுவும் தெரிவிக்கபடாமல் , அவர் தரப்பு வாதம் என்று எதுவும் இல்லாமல் நேற்று நடந்த நீதி விசாரனை நியாயமானது அல்ல. இதில் நான் உறுதியாக இருக்கிறேன்.
விரிவாக முந்தய டிவிடில் சொல்லியுள்ளேன். முழு விவரத்தையும் மக்கள் முன் வைக்கிறேன். சில மணி நேரத்தில்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிரபுசாலமன் இயக்கத்தில் விக்ரம் பிரபு, லட்சுமி மேனன், தம்பி ராமையா உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான படம் 'கும்கி'. விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் இந்தப் படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.
மேலும், இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்த சுகுமாருக்கும் நல்ல பெயர் கிடைத்தது. இந்தப் படத்தைத் தொடர்ந்து பல்வேறு பெரிய படங்களுக்கு ஒளிப்பதிவாளராக பணிபுரிந்து வந்தார்.
இந்த நிலையில், பிரபு சாலமன்- சுகுமார் கூட்டணி மீண்டும் இணைந்து 'கும்கி 2' படத்தை உருவாக்கி வருகின்றனர். இந்தப் படம் முழுக்க காடுகளுக்குள்ளே படமாக்கப்பட்டுள்ளது.
'கும்கி 2' படத்திற்கு நிவாஸ் கே.பிரசன்னா இசையமைத்துள்ளார். படத்தில் மதி மற்றும் அர்ஜுன் தாஸ் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
இந்நிலையில், இப்படத்தில் நடிக்கும் ஹீரோ மதியின் அறிமுக போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளனர்.
- விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
- தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.
இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.
கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது வாய்பேச முடியாத இளைஞர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.
அந்த வீடியோவில், "விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே 5 பேர் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக சைகை மொழியில் அந்த இளைஞர் பேசியுள்ளார்.






