என் மலர்tooltip icon

    தமிழ்நாடு செய்திகள்

    விஜய் பரப்புரையின்போது வாய்பேச முடியாத இளைஞர் சைகை மொழியில் பேசிய வீடியோ வைரல்
    X

    விஜய் பரப்புரையின்போது வாய்பேச முடியாத இளைஞர் சைகை மொழியில் பேசிய வீடியோ வைரல்

    • விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள்.
    • தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.

    கரூர் வேலுச்சாமிபுரத்தில் கடந்த 27-ந் தேதி நடைபெற்ற தமிழக வெற்றிக்கழக தலைவர் விஜய் பிரசார கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசலில் சிக்கி 41 பேர் பலியானார்கள். 50-க்கும் மேற்பட்டவர்கள் படுகாயம் அடைந்து சிகிச்சை பெற்றனர். தமிழகம் மட்டுமின்றி ஒட்டுமொத்த இந்தியாவையே இந்த சோக சம்பவம் உலுக்கியது.

    இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்த ஓய்வு பெற்ற ஐகோர்ட்டு நீதிபதி அருணா ஜெகதீசன் தலைமையில் ஒரு நபர் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டது.

    கரூரில் 41 பேர் பலியான சம்பவம் தொடர்பாக கட்சியின் பொதுச்செயலாளர் புஸ்ஸி ஆனந்த், இணைப் பொதுச்செயலாளர் நிர்மல் குமார், கரூர் மேற்கு மாவட்ட செயலாளர் மதியழகன் உள்ளிட்டோர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். இதில் மதியழகன் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.

    இந்நிலையில், விஜய் பரப்புரையின்போது வாய்பேச முடியாத இளைஞர் எடுத்த வீடியோ இணையத்தில் வைரலாகியுள்ளது.

    அந்த வீடியோவில், "விஜய் பேசிக்கொண்டிருக்கும்போதே 5 பேர் ஆபத்தான நிலைமையில் இருப்பதாக சைகை மொழியில் அந்த இளைஞர் பேசியுள்ளார்.

    Next Story
    ×