என் மலர்tooltip icon

    தலைப்புச்செய்திகள்

    • அங்கீகரிக்கப்பட்ட கட்சி, அமைப்பின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி இல்லை.
    • அ.தி.மு.க. தங்களுடையது என யாரும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவில்லை.

    அ.தி.மு.க. உட்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்ட நிலையில் சி.வி.சண்முகம் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:

    * அ.தி.மு.க. உறுப்பினர் என்ற போர்வையில் சிலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    * தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட சூரியமூர்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

    * இல்லாத அதிகாரம் இருப்பதாகக்கூறி தேர்தல் ஆணையம் சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

    * அங்கீகரிக்கப்பட்ட கட்சி, அமைப்பின் உட்கட்சி விவகாரங்களில் தலையிட தேர்தல் ஆணையத்திற்கு அனுமதி இல்லை.

    * அங்கீகரிக்கப்பட்ட கட்சியில் பிரச்சனை இருந்தால் அதனை தேர்தல் ஆணையத்திற்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதே விதி

    * உட்கட்சியில் பிரச்சனை இருந்தால் அதில் தலையிட நீதிமன்றங்களக்கு மட்டுமே அதிகாரம் உள்ளது.

    * கட்சி விதி திருத்தங்களை பதிவு செய்வது மட்டுமே தேர்தல் ஆணையத்தின் வேலை.

    * அ.தி.மு.க. உறுப்பினர் என்ற போர்வையில் சிலர் தாக்கல் செய்த மனுக்களை விசாரித்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

    * கட்சி விதி திருத்தங்கள் குறித்து விசாரிக்க தேர்தல் ஆணையத்திற்கு அதிகாரமில்லை.

    * மூல வழக்கில் வரும் தீர்ப்பை செயல்படுத்துவோம் என ஆணையமும் கூறி உள்ளது.

    * விதிகள் திருத்தம் மாற்றங்கள் குறித்த தகவல் தெரிவிக்க மட்டுமே செய்ய வேண்டும்.

    * ஓபிஎஸ்-ஆல் கட்சியில் இருந்து நீக்கப்பட்டவர் தான் புகழேந்தி.

    * கட்சி எங்களுடையது என மனு அளித்தால் அதனை தேர்தல் ஆணையம் விசாரிக்கலாம்.

    * அ.தி.மு.க. தங்களுடையது என யாரும் தேர்தல் ஆணையத்தில் மனு அளிக்கவில்லை.

    * தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட சூரியமூர்த்தி அ.தி.மு.க. உறுப்பினர் அல்ல என நீதிமன்றத்தில் முறையிடப்பட்டது.

    * கட்சியில் இல்லாதவர்கள், துரோகிகள் தாக்கல் செய்த மனுக்களை விசாரிக்கக்கூடாது என அ.தி.மு.க. வாதிட்டது.

    * உட்கட்சி விவகாரங்களை விசாரிக்க அதிகாரமில்லை என முன்னதாக தேர்தல் ஆணையம் ஒப்புக் கொண்டுள்ளது.

    * அ.தி.மு.க.வின் கோரிக்கைகளை வாதங்களை உயர்நீதிமன்றம் ஏற்றுக்கொண்டுள்ளது.

    * அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பதை முடிவு செய்த பின்னரே தேர்தல் ஆணையம் விசாரிக்க வேண்டும் என உயர்நீதிமன்றம் கூறி உள்ளது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
    • தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீடு விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும்.

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரத்தை தேர்தல் ஆணையம் விசாரிப்பதற்கான தடையை நீக்கி சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் உத்தரவிட்டனர். மேலும் தேர்தல் ஆணைய விசாரணைக்கு தடை விதிக்க கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்து இருந்த மனுவை தள்ளுபடி செய்தனர்.

    அ.தி.மு.க. உள்கட்சி விவகாரம் தொடர்பாக விசாரணை நடத்த தேர்தல் ஆணையத்துக்கு விதிக்கப்பட்டு இருந்த தடை நீக்கப்படுகிறது. அ.தி.மு.க. உள் கட்சி விவகாரம் தொடர்பாக தேர்தல் ஆணையம் விசாரணை நடத்தலாம். தேர்தல் ஆணைய சின்ன ஒதுக்கீடு விதிகளின்படி விசாரணை நடத்தப்பட வேண்டும். விசாரணை நடத்த அதிகாரம் இருக்கிறதா? இல்லையா? என்பது குறித்து திருப்தி அடைந்த பிறகு தேர்தல் ஆணையம் விசாரணை நடத்த வேண்டும் என்று நீதிபதிகள் தீர்ப்பில் கூறினார்.

    இந்த நிலையில், தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பது இன்றைக்கு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்று ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.

    இதுதொடர்பாக, தேனி மாவட்டம் பெரியகுளத்தில் செய்தியாளர்களை சந்தித்த ஓ.பன்னீர்செல்வம், தேர்தல் ஆணையத்திற்கு விசாரிக்கின்ற உரிமை இருக்கிறது என்பதை தேர்தல் ஆணையம் மூலமாக ஏற்கனவே உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவின்படி, நீதிமன்றத்திற்கு எந்தெந்த அதிகாரங்கள் இருக்கிறதோ.. அந்த அதிகாரங்கள் தேர்தல் ஆணையத்திற்கும் இருக்கிறது என்பது அந்த மனுவில் தெளிவாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அந்த அடிப்படையில் இன்று வழங்கப்பட்டு இருக்கின்ற தீர்ப்பு தேர்தல் ஆணையம் மனுவை விசாரிக்கலாம் என்ற தீர்ப்பின் அடிப்படையில் எடப்பாடி பழனிசாமி போட்ட மனு தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது. தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும் மீண்டும் தர்மமே வெல்லும் என்பது இன்றைக்கு நிரூபணம் செய்யப்பட்டுள்ளது என்றார். 

    • சாம்பியன்ஸ் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணியில் இருந்து ஸ்டார்க் விலகல்
    • காயத்தால் அவதிப்பட்டு வரும் பேட் கம்மின்ஸ் சாம்பியன் கோப்பை அணியில் இருந்து விலகியுள்ளார்.

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் அவதிப்பட்டு வரும் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் ஆகியோர் அணியில் இருந்து விலகியுள்ளனர் . மேலும், சொந்த காரணங்களுக்காக சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் விலகியுள்ளார்.

    இந்நிலையில், சாம்பியன் கோப்பைக்கு ஸ்டீவ் ஸ்மித் தலைமையிலான 15 பேர் கொண்ட ஆஸ்திரேலிய அணி அறிவிக்கப்பட்டுள்ளது.

    ஆஸ்திரேலிய அணி வீரர்கள் விவரம்:

    ஸ்டீவ் ஸ்மித் (கேப்டன்), சீன் அபோட், அலெக்ஸ் கேரி, பென் ட்வார்ஷூயிஸ், நாதன் எல்லிஸ், ஜேக் ஃப்ரேசர்-மெக்குர்க், ஆரோன் ஹார்டி, டிராவிஸ் ஹெட், ஜோஷ் இங்கிலிஸ், ஸ்பென்சர் ஜான்சன், மார்னஸ் லபுஷேன், க்ளென் மேக்ஸ்வெல், தன்வீர் சங்கா, மாட்த்யூ ஷார்ட், ஆடம் ஜாம்பா

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • #யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை, இதுவரை பதில் இல்லை!
    • இந்த விடியா திமுக ஆட்சியாளர்களா பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்கள்? கண்டிப்பாக வாய்ப்பே இல்லை!

    சென்னை:

    எதிர்க்கட்சி தலைவரும், அ.தி.மு.க. பொதுச்செயலாளருமான எடப்பாடி பழனிசாமி எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில்,

    ஸ்டாலின் மாடல் திமுக ஆட்சியில் பெண்களுக்கு துளியும் பாதுகாப்பு இல்லை என்பது எவராலும் மறுக்க முடியாத உண்மை.

    சிறுமி முதல் மூதாட்டி வரை, பாலியல் வன்கொடுமையால் பெண்கள் பாதிக்கப்படுவதும், அரசுப்பள்ளி முதல் ஓடும் ரெயில் வரை பெண்களுக்கு எங்குமே பாதுகாப்பு இல்லை என்பதும் வேதனைக்குரியது.

    #யார்_அந்த_SIR என்ற கேள்விக்கு இன்று வரை, இதுவரை பதில் இல்லை!

    #யார்_அந்த_SIRகள் என்று கேட்டால், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதை விட, குற்றவாளிகளின் பாட்டன் வம்சத்தில் இருப்பவர்கள் யாராவது தொலைதூரத்தில் அஇஅதிமுக-வுடன் தொடர்பில் இருக்கிறார்களா? என்று புலனாய்வு மேற்கொள்வதில் மட்டுமே முனைப்பாக இருக்கிறது இந்த ஸ்டாலின் மாடல் அரசு.

    இந்த விடியா திமுக ஆட்சியாளர்களா பெண்களைப் பாதுகாக்கப் போகிறார்கள்? கண்டிப்பாக வாய்ப்பே இல்லை!

    எனவே தான், #SaveOurDaughters என்று பெண்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குதல் உள்ளிட்ட முன்னெடுப்புகளை தொடர்ந்து அதிமுக மேற்கொண்டு வருகிறது.

    தமிழ்நாட்டில் பெண்களுக்கு பாதுகாப்பான சூழல் அமைய வேண்டும் என்றால், அதற்கு ஒரே வழி இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசு வீழ்ந்து, அஇஅதிமுக-வின் நல்லாட்சி அமைவது தான்!

    இதனை வலியுறுத்தும் வகையில் எனது அதிகாரப்பூர்வ X பக்கத்தில், என் பெயருடன் "SayYesToWomenSafety&AIADMK" என்ற வாசகத்தை இணைத்துள்ளேன்.

    இதுவரை நாம் நடத்தி வந்த #SayNoToDrugs_SayNoToDMK என்ற போதைப்பொருள் புழக்கத்திற்கு எதிரான போராட்டத்துடன் பெண்கள் பாதுகாப்பை உறுதிசெய்வதற்கான போராட்டமும் தொடரும்! வெற்றி பெறும்! என்று கூறியுள்ளார். 



    • அடுத்த 10 நாட்களில் 38 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தேவையற்றது.
    • இவ்வளவு குறுகிய இடைவெளியில் ஓர் அதிகாரியின் செயல்பாட்டை எவ்வாறு மதிப்பிட முடியும்?

    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

    தமிழ்நாட்டில் பல்வேறு முக்கியத் துறைகளின் செயலாளர்கள் உள்ளிட்ட 38 இ.ஆ.ப. அதிகாரிகள் இடமாற்றம் செய்யப்பட்டிருப்பது அரசு அதிகாரிகள் மத்தியில் அதிருப்தியையும், முணுமுணுப்பையும் ஏற்படுத்தியிருப்பதாக வெளியாகியுள்ள செய்திகள் அதிர்ச்சி அளிக்கின்றன. கடந்த ஜனவரி 31-ஆம் தேதி 31 அதிகாரிகள் மாற்றப்பட்ட நிலையில், அடுத்த 10 நாட்களில் 38 அதிகாரிகள் மாற்றம் செய்யப்பட்டிருப்பது தேவையற்றது.

    அரசு நிர்வாக வசதிக்காக அதிகாரிகளை இடமாற்றம் செய்வதற்கான அனைத்து அதிகாரங்களும், உரிமைகளும் அரசுக்கு உண்டு. ஆனால், அவ்வாறு செய்யப்படும் மாற்றங்கள் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்துவதாக இருக்க வேண்டும். மாறாக நிர்வாகத்தின் செயல்பாட்டை முடக்குவதாக இருக்கக் கூடாது. இப்போது செய்யப்பட்டுள்ள மாற்றங்கள் அரசு நிர்வாகத்தின் செயல்பாடுகளை மேம்படுத்த எந்த வகையிலும் உதவாது.

    எடுத்துக்காட்டாக, கடந்த ஜூலை மாதத்தில் தான் சுற்றுச்சூழல் துறை செயலாளராக இருந்த சுப்ரியா சாகு மருத்துவத்துறை செயலாளராகவும், அதற்கு சில மாதங்களுக்கு முன்பு வரை மருத்துவத்துறை செயலாளராக இருந்த செந்தில்குமார் சுற்றுச்சூழல் துறை செயலாளராகவும் மாற்றப்பட்டனர். அடுத்த 6 மாதங்களில் இருவரும் தங்களின் பழைய துறைகளுக்கே மாற்றப்பட்டுள்ளனர். அப்படியானால், என்ன காரணத்திற்காக அவர்கள் ஏற்கனவே இடமாற்றம் செய்யப்பட்டனர்? இப்போது என்ன காரணத்திற்காக அவர்கள் மீண்டும் பழைய துறைகளுக்கே திருப்பி அனுப்பப்பட்டுள்ளனர்? என்ற வினா மக்கள் மனங்களில் எழுகிறது. அவற்றுக்கு விடையளிக்க வேண்டிய கடமை அரசுக்கு உள்ளது.

    கடந்த அக்டோபர் மாதத்தின் மின்வாரியத் தலைவராக நியமிக்கப்பட்ட நந்தகுமார், உயர்கல்வித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட கோபால், கடந்த ஜூலை மாதத்தில் பொதுப்பணித்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட மங்கத்ராம் சர்மா, தகவல் தொழில்நுட்பத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட குமார் ஜெயந்த், கூட்டுறவு மற்றும் உணவுத்துறை செயலாளராக நியமிக்கப்பட்ட இராதாகிருஷ்ணன் ஆகியோர் கடந்த 3 முதல் 6 மாதங்களில் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர். இவ்வளவு குறுகிய இடைவெளியில் ஓர் அதிகாரியின் செயல்பாட்டை எவ்வாறு மதிப்பிட முடியும்?

    பள்ளிக்கல்வித்துறை செயலாளராக இருந்தவர்கள் கடந்த சில மாதங்களில் 4 முறை மாற்றப்பட்டுள்ளனர். உயர்கல்வித்துறை செயலாளராக இருந்த கோபால் கடந்த சில மாதங்களில் 4 முறை பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். இவை அனைத்துக்கும் என்ன அடிப்படை? வருவாய் நிர்வாக ஆணையராக நியமிக்கப்பட்டிருந்த இராஜேஷ் லகானி அடுத்த சில வாரங்களில் மத்திய அரசுப் பணிக்கு சென்று விட்டார். மேலும் பல இந்திய ஆட்சிப்பணி அதிகாரிகளும் மத்தியப் பணிக்கு செல்ல விண்ணப்பித்திருப்பதாகக் கூறப்படுகிறது. இதன் மூலம் அவர்கள் தமிழ்நாட்டில் பணியாற்ற விரும்பவில்லை என்று தெரிகிறது. இவை நல்ல அறிகுறிகள் அல்ல.

    ஒரு துறையில் செயலாளராக நியமிக்கப்படுபவர் அத்துறை குறித்த அனைத்து விவரங்களையும் தெரிந்து கொள்வதற்கு குறைந்தது இரு மாதங்கள் தேவை. அதன் பிறகு தான் அவர்கள் முழு வீச்சில் செயல்படத் தொடங்குவார்கள். அதற்குள்ளாகவே அவர்களை பணியிட மாற்றம் செய்து புதிய பணியில் அமர்த்தும் போது அரசு நிர்வாகத்தின் செயல்திறன் பாதிக்கப்படும். இத்தகைய அணுகுமுறையை தமிழக அரசு கைவிட வேண்டும்.

    காவல்துறை தலைமை இயக்குனர் பணியில் அமர்த்தப்படுபவர்கள் அந்தப் பதவியில் தங்களை நிலைப்படுத்திக் கொண்டு உறுதியான முடிவுகளை எடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் அந்தப் பதவியில் நியமிக்கப்படுவோருக்கு 2 ஆண்டுகள் உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் ஆணையிட்டிருக்கிறது. அரசுத் துறை செயலாளர் பதவிகளும் காவல்துறை தலைமை இயக்குனர் பணிக்கு இணையான முக்கியத்துவம் கொண்டவை தான் என்பதால் அவற்றுக்கும் 2 ஆண்டு உறுதி செய்யப்பட்ட பணிக்காலம் வழங்க தமிழக அரசு முன்வர வேண்டும் என்று கூறியுள்ளார். 



    • மத்தியிலும், புதுவையிலும் ஒரே கூட்டணியின் ஆட்சிதான் நடக்கிறது.
    • சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறுக்கிட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.61 கோடி வழங்கியுள்ளது என்றார்.

    புதுச்சேரி:

    புதுச்சேரி சட்டசபையில் இரங்கல் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு மவுன அஞ்சலி செலுத்தப்பட்டது.

    தொடர்ந்து சபையின் அடுத்த அலுவலுக்கு சபாநாயகர் ஏம்பலம் செல்வம் சென்றார். அப்போது எதிர்க்கட்சி தலைவர் சிவா குறுக்கிட்டு பேசியதாவது:-

    மத்திய அரசு தொடர்ந்து புதுவையை வஞ்சித்து வருகிறது. நிதி கமிஷனில் புதுவையை சேர்க்கவில்லை. மத்திய பட்ஜெட்டில் புதுவைக்கு கூடுதல் நிதி வழங்கவில்லை. ரெயில்வே, துறைமுக விரிவாக்க திட்டங்கள் இடம்பெறவில்லை. நாட்டிலேயே ஃபெஞ்சல் புயலால் புதுச்சேரிதான் அதிகளவில் பாதிக்கப்பட்டது.

    ஆனால் அதற்கான நிவாரண நிதியை மத்திய அரசு வழங்கவில்லை. மத்தியிலும், புதுவையிலும் ஒரே கூட்டணியின் ஆட்சிதான் நடக்கிறது.

    தமிழகத்தை போல மாற்று ஆட்சி இருந்தாலும், வஞ்சிப்பதில் அர்த்தம் இருக்கும். இதனால் மத்திய அரசு புதுவையை வஞ்சிப்பதை கண்டித்து சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்கிறோம் என்றார்.

    சபாநாயகர் ஏம்பலம் செல்வம் குறுக்கிட்டு, ஃபெஞ்சல் புயல் நிவாரணமாக மத்திய அரசு ரூ.61 கோடி வழங்கியுள்ளது என்றார்.

    அமைச்சர் நமச்சிவாயம்:- மத்திய அரசு புதுவைக்கு தேவையான நிதியை தொடர்ந்து வழங்கி வருகிறது. மத்திய அரசின் ஒத்துழைப்போடுதான் புதுச்சேரியில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது என்றார்.

    அவருக்கு ஆதரவாக அமைச்சர் சாய் ஜெ சரவணன்குமார், பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் கல்யாணசுந்தரம், ஜான்குமார், ரிச்சர்டு, அசோக்பாபு, வி.பி. ராமலிங்கம், வெங்கடேசன், சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் சிவசங்கர், சீனிவாச அசோக் ஆகியோர் பேசினர். இதற்கு எதிராக தி.மு.க.-காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் பேசினர்

    இதனால் சபையில் கடும் கூச்சல், குழப்பம் ஏற்பட்டது. பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள், ஜான்குமார், கல்யாணசுந்தரம் ஆகியோர், மத்திய அரசு பற்றி எதிர்க்கட்சியினர் பேசிய பேச்சை அவைக்குறிப்பிலிருந்து நீக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

    இதற்கு தி.மு.க. எம்.எல்.ஏ. நாஜிம், இன்று உங்கள் நாடகம் என்ன? வெளியில் ஒன்று செய்வீர்கள், உள்ளே ஒன்று செய்வீர்கள், முதலில் மண்ணை நேசியுங்கள், பின்னர் கட்சியை நேசியுங்கள் என்றார்.

    அப்போது முதலமைச்சர் ரங்கசாமி பேசியதாவது:-

    எதிர்க்கட்சிகள் மத்திய அரசு நிதி தரவில்லை என குற்றம்சாட்டி பேசுகின்றனர். கடந்த ஆட்சியில் ஒரே ஒரு செங்கலைக்கூட எடுத்து வைக்க முடியவில்லை என கூறினர். 5 ரூபாய்கூட மத்திய அரசிடம் இருந்து பெற முடியவில்லை என உள்துறை அமைச்சராக இருந்தவரே கூறியுள்ளார்.

    தற்போது எத்தனை கோடியில் பணிகள் நடக்கிறது? காலாப்பட்டில் கடந்த 3 நாட்களில் ரூ.30 கோடிக்கு பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. எந்த திட்டத்தை அரசு செயல்படுத்தவில்லை? கொண்டு வரவில்லை? என சுட்டிக்காட்டுங்கள்.

    இலவச அரிசி வேண்டும் என மக்கள் கேட்டனர். ரேஷன் கடைகளை திறந்து அரிசி வழங்கியுள்ளோம். புயல் நிவாரணமாக அனைத்து ரேஷன் கார்டுக்கும் ரூ.5 ஆயிரம், விவசாயிகளுக்கு ஹெக்டேருக்கு ரூ.30 ஆயிரம் வழங்கியுள்ளோம். மத்திய அரசு தேவையான நிதியை வழங்கி வருகிறது. மேலும் பல்வேறு வகைகளில் கூடுதல் நிதி பெறவும் நடவடிக்கை எடுத்து வருகிறோம்.

    இவ்வாறு அவர் கூறினார்.

    இருப்பினும் இந்த விளக்கத்தை ஏற்காமல் எதிர்க்கட்சித்தலைவர் சிவா தலைமையில் தி.மு.க. மற்றும் காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் நாஜிம், கென்னடி, சம்பத், செந்தில் குமார், நாக.தியாகராஜன், ரமேஷ்பரம்பத், வைத்தியநாதன் ஆகியோர் சட்டசபையிலிருந்து வெளிநடப்பு செய்தனர்.

    • ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
    • சாம்பியன் கோப்பைக்கான ஆஸ்திரேலிய அணி இன்று அறிவிக்கப்படும்

    சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐ.சி.சி.) நடத்தும் சாம்பியன்ஸ் கோப்பை 2025 கிரிக்கெட் தொடரின் முதல் போட்டி பிப்ரவரி 19-ம் தேதி தொடங்குகிறது. இந்த தொடரில் மொத்தம் எட்டு அணிகள் மோதுகின்றன. பாகிஸ்தான் மற்றும் துபாயில் நடைபெறும் இந்த தொடருக்காக ஒவ்வொரு அணியும் தீவிர பயிற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

    இந்த நிலையில், சாம்பியன்ஸ் கோப்பை 2025 தொடருக்கான ஆஸ்திரேலிய அணியில் காயத்தால் அவதிப்பட்டு வரும் கேப்டன் பேட் கம்மின்ஸ் மற்றும் வேகப்பந்து வீச்சாளர் ஜோஷ் ஹேசில்வுட் இடம்பெறுவது சந்தேகம் தான் என்று ஆஸ்திரேலிய அணி தலைமை பயிற்சியாளர் ஆண்ட்ரூ மெக்டொனால்டு தெரிவித்திருந்தார்.

    இந்நிலையில், சொந்த காரணங்களுக்காக சாம்பியன்ஸ் கோப்பை அணியில் இருந்து விலகுவதாக மிட்செல் ஸ்டார்க் அறிவித்துள்ளது ஆஸ்திரேலிய அணிக்கு பின்னடைவை ஏற்படுத்தியுள்ளது.

    ஆஸ்திரேலிய அணியின் முன்னணி வேகப்பந்து வீச்சாளர்கள் விலகியுள்ளதால் அனுபவம் இல்லாத பந்துவீச்சாளர்களுடன் சாம்பியன்ஸ் கோப்பையில் களமிறங்க வேண்டிய கட்டாயம் ஆஸ்திரேலிய அணிக்கு ஏற்பட்டுள்ளது.

    குறிப்பாக பேட் கம்மின்ஸ் விலகியுள்ளதால் ஆஸ்திரேலிய அணியை ஸ்டீவ் ஸ்மித் வழிநடத்துவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்றைக்குள் இதற்கான அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த விமர்சனத்தை ஆடியோ வடிவில் கேட்க "Play" பட்டனை கிளிக் செய்யவும்
    • 'வெண்ணிலா கபடிகுழு' படத்தில் பரோட்டா சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார்.
    • 'ஏழு கடல் ஏழு மலை', 'மாமன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    தமிழ் சினிமாவில் நடிக்க ஆசைப்பட்டு சொந்த ஊரில் இருந்து வந்து பல பேர் இன்று உச்சத்தில் உள்ளனர். ஆனால் அவர்கள் சினிமாத்துறையில் கால்பதிப்பதற்குள் சந்தித்த கடும் துன்பங்கள் ஏராளம். அதையும் தாண்டி சாதித்து இன்று ஒவ்வொரு இளைருக்கும் ரோல் மாடலாக உள்ளனர்.

    அப்படி ஒருவர் தான் நடிகர் சூரி. தனக்கு கிடைத்த சிறுசிறு கதாபாத்திரங்களில் நடித்த இவர் 2009-ல் வெளிவந்த 'வெண்ணிலா கபடிகுழு' படத்தில் பரோட்டா சூரி என்ற கதாபாத்திரத்தில் நடித்து பிரபலமானார். அதன்பின், நகைச்சுவை நடிகராக இருந்து தற்போது கதாநாயகனாக உயர்ந்துள்ளார். தற்போது இவர் 'ஏழு கடல் ஏழு மலை', 'மாமன்' உள்ளிட்ட படங்களில் நடித்து வருகிறார்.

    இந்த நிலையில், நடிகர் சூரி சமூக வலைத்தளமான இன்ஸ்டாகிராமில், 'சுவர்களில் நிறங்களை பதித்தேன் – இன்று திரையில் உணர்வுகளை பதிக்கிறேன்!' என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள வீடியோ வைரலாகி வருகிறது.

    சூரி ஒரு ஹோட்டலில் தங்கியிருக்கிறார். அந்த ஹோட்டல் எதிரே புதியதாக கட்டப்பட்டிருக்கும் கட்டிடம் ஒன்றிற்கு பெயிண்டர் ஒருவர் பெயிண்ட் அடித்து கொண்டிருக்கிறார். அதனை வீடியோவாக பதிவு செய்த சூரி, தான் சினிமாவுக்கு வருவதற்கு முன்பு இதே வேலை பார்த்து வந்ததை நினைவுகூர்ந்துள்ளார்.


    உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.

    • ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு.
    • இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது.

    லக்னோ:

    ராகுல் காந்தி கடந்த 2022-ம் ஆண்டு கன்னியாகுமரி முதல் காஷ்மீர் வரை பாரத் ஜோடோ யாத்திரை மேற்கொண்டார்.

    இந்த நடை பயணத்தின் போது 2022-ம் ஆண்டு டிசம்பர் 9-ந்தேதி நிருபர்களை சந்தித்த ராகுல் காந்தி, எல்லையில் 2,000 சதுர கிலோ மீட்டர் நிலப்பரப்பை சீனா ஆக்கிரமித்துவிட்டது, அருணாச்சல பிரதேச எல்லைக்குள் ஊடுருவி சீனா தாக்குதல் நடத்துகிறது என்பது உள்ளிட்ட கருத்துகளை தெரிவித்து இருந்தார். அவரது இந்த கருத்துக்கு அப்போதே ராணுவம் தரப்பில் விளக்கம் அளிக்கப்பட்டது.

    இந்த நிலையில் உத்தரப்பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள எம்.பி.- எம்.எல்.ஏ.க்களுக்கான சிறப்பு கோர்ட்டில் ராகுல்காந்திக்கு எதிராக வழக்கு தொடரப்பட்டது.

    எல்லை சாலைகள் அமைப்பின் முன்னாள் இயக்குனர் சங்கர் ஸ்ரீவத்சவா இந்த வழக்கை தொடர்ந்து இருந்தார். அதில், ராகுல் காந்தியின் விமர்சனம் இந்திய ராணுவத்தை இழிவுபடுத்துவதாக உள்ளது என்று சுட்டிக்காட்டி இருந்தார்.

    இந்த வழக்கை விசாரித்த லக்னோ கோர்ட்டு மார்ச் 24-ந் தேதி ராகுல் காந்தி நேரில் ஆஜராக வேண்டும் என சம்மன் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.

    • பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!
    • ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு வந்துள்ளது.

    மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில்பாலாஜி வெளியிட்டுள்ள எக்ஸ் தள பதிவில்,

    நடந்து முடிந்த ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தல், மக்கள் நலனுக்காக அனுதினமும் உழைத்து வரும் மாண்புமிகு முதலமைச்சரின் உழைப்பிற்கும், திராவிட மாடல் அரசுக்கும், பெரியாரை இகழ்ந்து அரசியல் செய்ய நினைத்த அற்ப பதர்களை ஓடவிட்ட தமிழ்நாட்டு மக்களுக்கும் கிடைத்த மாபெரும் வெற்றி!

    குரங்கு கையில் சிக்கிய பூமாலையாய் தன் கைக்கு கிடைத்த கட்சியை சீரழித்து சின்னாபின்னமாக்கி தோல்வி மேல் தோல்வி கண்டு தோல்விசாமி அவர்கள் இல்லாத பொய்களை வீசுவதே அன்றாட அலுவலாக வைத்திருக்கிறார். அதனால்தான் மக்களை சந்திக்க முடியாமலும் திமுகழகத்தை எதிர்க்க துணிவில்லாமல் தேர்தலை சந்திக்காமல் ஓடி ஒளிந்துக் கொண்டார்.

    வாக்களித்த மக்களுக்கு மட்டுமல்லாமல் வாக்களிக்காத மக்களின் நலனுக்காகவும் இந்த அரசு பாடுபடும் என அறிவித்து செயல்பட்டார் முதலமைச்சர். அதன் காரணமாக ஈரோடு கிழக்கில் அதிமுக வாக்குகள் அனைத்தும் திமுகவிற்கு வந்துள்ளது.

    தமிழ்நாடு முழுக்க திமுகவிற்கு ஆதரவான சூழலே நிலவுகிறது; "Pro Incumbency" தான் எங்கும் எதிரொலிக்கிறது. முதலமைச்சர் ஸ்டாலின் அலைதான் தமிழ்நாடு முழுக்க அடித்துக்கொண்டிருகிறது. இது 2026 தேர்தலிலும் எதிரொலிக்கும்! என்று தெரிவித்துள்ளார்.

    • அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது.
    • விஜயுடன் கூட்டணி குறித்து 20 வருடம் கட்சியாக உள்ள தே.மு.தி.க.விடம் கேட்கக்கூடாது.

    சென்னை:

    தே.மு.தி.க. கொடி அறிமுகப்படுத்தப்பட்ட 25-ம் ஆண்டு வெள்ளிவிழா இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி சென்னை கோயம்பேட்டில் உள்ள தே.மு.தி.க. தலைமை அலுவலகத்தில் பொதுச்செயலாளர் பிரேமலதா விஜயகாந்த் கட்சி கொடி ஏற்றி நலத்திட்ட உதவிகள் வழங்கி, கட்சி தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகளுக்கு இனிப்புகளை வழங்கினார்.

    இதன்பின் செய்தியாளர்களை சந்தித்த பிரேமலதா விஜயகாந்த் கூறியதாவது:-

    த.வெ.க. உடன் கூட்டணி அமைப்போமா என்பதை விஜயிடம் தான் கேட்க வேண்டும். விஜயுடன் கூட்டணி குறித்து 20 வருடம் கட்சியாக உள்ள தே.மு.தி.க.விடம் கேட்கக்கூடாது.

    அ.தி.மு.க.வின் உட்கட்சி பிரச்சனை தொடர்பாக கருத்துக்களை கூற நான் விரும்பவில்லை. ஜெயக்குமார் ஒரு கருத்து கூறுகிறார், செங்கோட்டையன் ஒரு கருத்து கூறுகிறார். எது உண்மையென அ.தி.மு.க.விடம் கேட்க வேண்டும்.

    2026 சட்டசபை தேர்தலில் தே.மு.தி.க. இருக்கும் கூட்டணி மகத்தான வெற்றி பெற்று கேப்டன் கனவை வென்றெடுப்போம் என்றார்.

    இதனிடையே, நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. கூட்டணியில் அங்கம் வகித்த தே.மு.தி.க. விருதுநகர் தொகுதியில் போட்டியிட்டது. அப்போது தேர்தலில் வென்றால் விஜய பிரபாகரன் மக்களவை எம்.பி.யாகவும், தே.மு.திக. துணை பொதுச்செயலாளர் சுதீஷ் மாநிலங்களவை எம்.பி.யாகவும் ஆவார்கள் என்று கூறப்பட்டது. ஆனால் தேர்தலில் விஜய பிரபாகரன் தோல்வி அடைந்ததால் ராஜ்யசபா எம்.பியாக. இருவரில் யார் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்ற கேள்வியும் எழுந்தது.

    இந்த நிலையில், தேர்தல் அறிவிக்கப்பட்ட பின் தே.மு.தி.க.வின் ராஜ்யசபா வேட்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிப்படும் என்று பிரேமலதா கூறினார். மேலும் அவர் கூறியதாவது:- அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தபோதே தே.மு.தி.க.வுக்கு ராஜ்யசபா சீட் என கையெழுத்தானது. தேர்வு செய்யும் நாளில் தே.மு.தி.க. சார்பாக யார் ராஜ்யசபா செல்வர் என்பதை அதிகாரப்பூர்வமாக அறிவிப்போம். அ.தி.மு.க. உடனான கூட்டணியில் தே.மு.தி.க தொடர்கிறது என்றார். 

    • டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை பட்டாணி இறக்குமதி செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் உதவியதாக குற்றம்சாட்டினார்.
    • துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி 4 கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    சென்னை துறைமுகம் வழியாக ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணியை இறக்குமதி செய்யப்பட்டுள்ளது. கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சை பட்டாணியை இறக்குமதி செய்ய அனுமதியளிக்கப்பட்டுள்ள நிலையில் மசூர் பருப்பு என கூறி முறைகேடாக பச்சை பட்டாணியை இறக்குமதி செய்தது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

    டெல்லியை சேர்ந்த பெண் ஒருவர் பச்சை பட்டாணி இறக்குமதி செய்ய சுங்கத்துறை அதிகாரிகள் உதவியதாக குற்றம்சாட்டினார்.

    இதையடுத்து பச்சை பட்டாணி இறக்குமதி செய்த விவகாரத்தில் சுங்கத்துறை அதிகாரிகள் 3 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

    சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்புடைய இடங்களில் வருவாய் புலனாய்வுத்துறை நடத்திய சோதனையில் ரூ.60 லட்சம் பணம் மற்றும் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது.

    துபாயில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட ரூ.2 கோடி மதிப்புள்ள பச்சை பட்டாணி 4 கண்டெய்னர்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

    வெளிநாட்டு வர்த்தக இயக்குநரகத்தின் (DGFT) தற்போதைய கொள்கையின்படி, கொல்கத்தா துறைமுகம் வழியாக மட்டுமே பச்சைப் பட்டாணியை இறக்குமதி செய்ய முடியும், குறைந்தபட்ச இறக்குமதி விலை கிலோவுக்கு ரூ.200 (MIP) ஆகும். மஞ்சள் பயறு வகைகளுக்கு விலக்கு அளிக்கப்பட்டுள்ளதால், அதிகாரிகள் அதை மசூர் பருப்பாக தவறாக அறிவித்ததாக சுங்கத்துறை வட்டாரங்கள் தெரிவித்தன.

    ×