என் மலர்
தலைப்புச்செய்திகள்
- கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
- கூலி திரைப்படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார்.
நடிகர் ரஜினிகாந்த் மற்றும் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் கூட்டணியில் உருவாகி வரும் திரைப்படம் கூலி. இந்தப் படத்தின் டைட்டில் வீடியோ மற்றும் பாடல் க்ளிம்ப்ஸ் உள்ளிட்டவை ஏற்கனவே வெளியிடப்பட்டுள்ளன. இரண்டு வீடியோக்களும் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன.
படம் தொடர்பான அடுத்த அப்டேட் எப்போது வெளியாகும் என ரசிகர்கள் ஆவலோடு எதிர்பார்க்கின்றனர். இந்த நிலையில், கூலி படத்தின் டீசர் வருகிற 14-ம் தேதி வெளியிடப்படலாம் என்று தகவல்கள் வெளியாகி வருகின்றன. மார்ச் 14-ம் தேதி கூலி படத்தின் இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது பிறந்தநாளை கொண்டாடுகிறார்.
அதன்படி இயக்குநரின் பிறந்தநாளில் கூலி படத்தின் டீசர் வெளியிடப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இது குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது. கூலி திரைப்படத்தை சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
கூலி படத்திற்கு அனிருத் இசையமைக்கிறார். இந்தப் படத்தில் சத்யராஜ், நாகர்ஜுனா, சௌபின் ஷாஹிர், சுருதிஹாசன், பகத் பாசில், ரெபா மோனிகா ஜான் மற்றும் உபேந்திரா ஆகியோர் நடிக்கின்றனர். இந்தப் படத்திற்கு கிரிஷ் கங்காதரன் ஒளிப்பதிவு செய்கிறார். அன்பறிவ் சண்டைக் காட்சிகளை இயக்குகின்றனர்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- மத்திய மந்திரியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. போராட்டம் நடத்தியது.
- தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விதி 267-கீழ் நோட்டீஸ் அளித்திருந்தனர்.
புதுடெல்லி:
பாராளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடரின் 2-வது அமர்வு நேற்று தொடங்கியது. மத்திய அரசின் புதிய கல்வி கொள்கை தொடர்பாக மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானுக்கும், தி.மு.க. எம்.பி.க்களுக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது.
நாகரீகம் இல்லாதவர்கள் என்று தர்மேந்திர பிரதான் பேசியதால் தி.மு.க. எம்.பி.க்கள் எதிர்ப்பு குரல் எழுப்பி கடும் கண்டனம் தெரிவித்தனர். இதையடுத்து தர்மேந்திர பிரதான் சர்ச்சைக்குரிய அந்த கருத்தை திரும்ப பெறுவதாக அறிவித்தார்.
முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் மத்திய மந்திரிக்கு கண்டனம் தெரிவித்தார். தன்னை மன்னர் என நினைத்து ஆணவத்துடன் பேசும் அவருக்கு நாவடக்கம் வேண்டும் என்று தெரிவித்தார். மத்திய மந்திரியை கண்டித்து தமிழ்நாடு முழுவதும் தி.மு.க. போராட்டம் நடத்தியது.
இந்த நிலையில் பாராளுமன்றத்தில் இன்றும் மும்மொழிக் கொள்கை விவகாரம் எதிரொலித்தது. மத்திய மந்திரிக்கு எதிராக தி.மு.க. எம்.பி.க்கள் அமளியில் ஈடுபட்டனர்.
மக்களவை காலை 11 மணிக்கு கூடியதும் மத்திய மந்திரி தர்மேந்திர பிரதானுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு உடை அணிந்து வந்திருந்த தி.மு.க. எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினார்கள்.
மேலும் தி.மு.க கூட்டணி கட்சி எம்.பி.க்களும் கோஷங்களை எழுப்பினர். தர்மேந்திர பிரதான் மன்னிப்பு கேட்க வேண்டும் என்று வலியுறுத்தினர். இதனால் அவையில் கூச்சல்-குழப்பம் நிலவியது. தி.மு.க. கூட்டணி கட்சி எம்.பி.க்களை அமைதியாக இருக்கும்படி சபாநாயகர் ஓம்பிர்லா கேட்டுக்கொண்டார்.
ஆனால் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து மத்திய மந்திரியை கண்டித்து கோஷமிட்டனர். இந்த அமளிக்கு இடையே அவை நடவடிக்கைகளை சபாநாயகர் தொடங்கினார்.
மேல்-சபையிலும் இன்று அமளி ஏற்பட்டது. தொகுதி மறுசீரமைப்பு தொடர்பாக விவாதம் நடத்த கோரி எதிர்க்கட்சி எம்.பி.க்கள் விதி 267-கீழ் நோட்டீஸ் அளித்திருந்தனர். இதற்கு அவைத் தலைவர் அனுமதி மறுத்தார். இதனால் தி.மு.க. எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர்.
அவையின் மையப் பகுதிக்கு சென்று தி.மு.க மற்றும் கூட்டணி எம்.பி.க்கள் கோஷங்களை எழுப்பினர். அவர்களை இருக்கைக்கு செல்லுமாறு அவையை நடத்திய துணைத் தலைவர் ஹரிவன்ஷ் கேட்டுக் கொண்டார்.
ஆனால் தி.மு.க. எம்.பி.க்கள் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டனர். இதனால் கூச்சல், குழப்பம் நிலவியது. இதையடுத்து மேல்-சபையை மதியம் 12 மணி வரை ஒத்திவைப்பதாக அவைத் தலைவர் அறிவித்தார்.
முன்னதாக பாராளுமன்ற வளாகத்தில் மத்திய கல்வி மந்திரி தர்மேந்திர பிரதானை கண்டித்து தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். கருப்பு உடை அணிந்து ஆர்ப்பாட்டம் செய்தனர். மும்மொழி கொள்கைக்கு எதிராகவும், தர்மேந்திர பிரதானுக்கு எதிராகவும் பதாகைகளை ஏந்தி முழக்கங்களை எழுப்பினார்கள். மத்திய மந்திரி மன்னிப்பு கேட்க வேண்டும் என்றும் குரல் எழுப்பினார்கள்.
கனிமொழி, வைகோ, திருமாவளவன், ஆ.ராசா, திருச்சி சிவா உள்ளிட்ட எம்.பி.க்கள் கலந்து கொண்டனர்.
போராட்டத்துக்கு பிறகு கனிமொழி எம்.பி. நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-
தமிழ்நாட்டுக்கு வழங்க வேண்டிய நிதியை மத்திய அரசு நிறுத்தி வைத்துள்ளது. அவர்கள் தமிழ்நாட்டு குழந்தைகளின் எதிர்காலத்தை சீரழிக்கின்றனர். குழந்தைகளுக்கு வர வேண்டிய நிதியை நிறுத்தி வைக்க அவர்களுக்கு எந்த உரிமையும் இல்லை. நேற்று அவர் (தர்மேந்திர பிரதான்) மிகவும் மோசமான முறையில் பதில் அளித்தார். நாங்கள் நேர்மையற்றவர்கள் என்றும், தமிழ்நாட்டு மக்கள் நாகரீகம் இல்லாதவர்கள் என்றும் கூறினார். இது முற்றிலும் ஜனநாயகத்துக்கு விரோதமானது.
தர்மேந்திர பிரதான் பேசியதை அவைக் குறிப்பில் இருந்து நீக்கினால் மட்டும் போதாது. அவர் அவையில் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். அவருக்கு எதிராக மக்களவையில் உரிமை மீறல் நோட்டீஸ் வழங்கி உள்ளோம். அதை விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அவைத் தலைவரை வலியுறுத்துவோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
திருச்சி சிவா எம்.பி. கூறும்போது, ' நாங்கள் மும்மொழி கொள்கையை எதிர்க்கிறோம். அதை யாரும் எங்கள் மீது திணிக்க முடியாது' என்றார்.
- ரூ.497 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
- 50,606 பயனாளிகளுக்கு ரூ.508 கோடியே 3 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
சென்னை:
முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மாவட்ட வாரியாக சுற்றுப்பயணம் மேற்கொண்டு அரசு நலத்திட்ட உதவிகளை வழங்கி வருகிறார்.
அந்த வகையில் இன்று செங்கல்பட்டு மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டார். காலையில் வீட்டில் இருந்து புறப்பட்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திருக்கழுக்குன்றம் சென்றார்.
அங்கு அமைச்சர் தா.மோ.அன்பரசன் ஏற்பாட்டில் கட்சி நிர்வாகிகள் வரவேற்பை பெற்றுக்கொண்ட முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழி நெடுக நின்றிருந்த பொதுமக்களை சந்தித்தார்.
இந்த 'ரோடு ஷோ' நிகழ்ச்சியில் பல கிலோ மீட்டர் தூரத்துக்கு பொதுமக்கள் திரளாக நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர். பதிலுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலினும் காரை விட்டு இறங்கி நடந்து சென்று மக்களின் வரவேற்பை பெற்றுக் கொண்டார்.
இதே போல் செங்கல்பட்டு நகரின் நுழைவு பகுதியிலும் பல்லாயிரக்கணக்கானோர் திரண்டு நின்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை வரவேற்றனர்.
இதன் பிறகு செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் அலுவலக வளாக மைதானத்தில் நடைபெற்ற அரசு விழாவில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பங்கேற்றார்.
இந்த விழாவில் செங்கல்பட்டு மாவட்டத்தில் தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் சார்பில் கீரப்பாக்கத்தில் கட்டப்பட்ட அடுக்குமாடி வீடுகள், நெம்மேலி ஊராட்சியில் துஞ்சம் கிராமத்தில் கட்டப்பட்ட அங்கன்வாடி மையங்கள், ஆரம்ப சுகாதார நிலையங்கள், மேல்நிலை குடிநீர் தொட்டிகள், பள்ளிக் கட்டிடங்கள் உள்ளிட்ட 47 திட்டப் பணிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
இந்த திட்டங்களின் மொத்த மதிப்பு ரூ.280 கோடியே 38 லட்சம் ஆகும்.
இதே போல் ரூ.497 கோடியே 6 லட்சம் மதிப்பீட்டிலான 5 புதிய திட்டப் பணிகளுக்கும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.
மேலும் நகர்ப்புற பகுதிகளில் பட்டா இல்லாத குடும்பங்களுக்கு பட்டா வழங்கும் திட்டத்தையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று தொடங்கி வைத்தார்.
இந்த திட்டத்தின் மூலம் 21 ஆயிரம் பேர்கள் பயன் அடைவார்கள். மேலும் இந்த விழாவில் 50,606 பயனாளிகளுக்கு ரூ.508 கோடியே 3 லட்சம் மதிப்பிலான பல்வேறு அரசு நலத்திட்ட உதவிகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.
செங்கல்பட்டு விழாவின் மூலம் மொத்தம் ரூ.1,285 கோடி மதிப்பிலான திட் டங்கள் உதவிகள் பொது மக்களுக்காக அர்ப்பணிக்கப்பட்டு உள்ளது.
இந்த விழாவில் அமைச்சர் தா.மோ.அன்பரசன், சட்டமன்ற உறுப்பினர்கள் வரலட்சுமி மதுசூதனன், பல்லாவரம் இ.கருணாநிதி, தாம்பரம் எஸ்.ஆர்.ரவி, கலெக்டர் அருண்ராஜ், காஞ்சிபுரம் மாவட்ட ஊராட்சிக் குழு தலைவர் படப்பை ஆ.மனோகரன், தாம்பரம் மேயர் வசந்தகுமாரி, துணை மேயர் காமராஜ், மண்டலக் குழுத் தலைவர்கள் பல்லாவரம் இ.ஜோசப் அண்ணாதுரை, பம்மல் வே.கருணாநிதி, தலைமை பொதுக்குழு உறுப்பினர் பல்லாவரம் மு.ரஞ்சன், மாவட்ட இளைஞரணி அமைப்பாளர் கோல்டு டி.பிரகாஷ் உள்பட பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
- படிக்கும் வயதில் காதல் மயக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள்.
- இளம்பெண்கள் தங்கள் காதலன் தான் தங்களுக்கு எல்லாமே என்ற மாயையில் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.
காதல்...
18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் அல்லது ஆண் நண்பர் இல்லாமல் இருப்பதை அவமானமாகக் கருதுவது அதிகரித்து வருகிறது. உடலில் ஏற்படும் மாற்றங்களை காதல் என்று தவறாக நினைத்து அவர்கள் வெகுதூரம் செல்கிறார்கள். குறிப்பாக ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் கடந்த சில மாதங்களாக 12 வயது முதல் 18 வயதுக்குள் இருக்கும் சிறுமிகள் காதல் என்ற பெயரில் வீட்டை விட்டு வெளியேறி திரு மணம் செய்து கொள்வது அதிகரித்து வருகிறது. இது அவர்களுக்கு ஆபத்தாக முடிந்து விடுவதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
அவர்களுக்கு குடும்பத்தில் சரியான ஆதரவு கிடைக்காதது காரணமாக உள்ளது.
படிக்கும் வயதில் காதல் மயக்கத்தில் மூழ்கிக் கொண்டிருக்கிறார்கள். இந்த தருணத்தில்தான் வீட்டை விட்டு ஓடிப்போகும் எண்ணம் வேரூன்றத் தொடங்குகிறது.
சமூக ஊடகங்கள் மற்றும் திரைப்படங்களின் தாக்கத்தால் காதல் அவர்களுக்கு எதையும் விட பெரிதாக தெரிகிறது.
அந்த நேரத்தில் இளம்பெண்கள் தங்கள் காதலன் தான் தங்களுக்கு எல்லாமே என்ற மாயையில் வீட்டை விட்டு வெளியேறி வாழ்க்கையை தொலைக்கிறார்கள்.
தாங்கள் விரும்பும் இளைஞனை பெற்றோர் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள் என்ற பயமும் தங்கள் குடும்பத்தினர் தங்களைப் பற்றி அறிந்தால் மீண்டும் அவரைச் சந்திக்க விடமாட்டார்கள் என்ற பயமும் அவர்களை மிகவும் விரக்தியடையச் செய்கிறது. ஆந்திரா, தெலுங்கானா மாநிலங்களில் காதலனுடன் ஓடிய மாணவிகள் பலர் வாழ்க்கையை இழந்துள்ளனர். இதில் ஏராளமானோர் மீண்டும் தங்களுடைய பெற்றோரை நாடி வருகிறார்கள்.
இளமைப் பருவத்தில் குழந்தைகளின் மனதின் ஆழத்தை நாம் தொடர்ந்து ஆராய வேண்டும். பெற்றோர்கள், குழந்தைகள் எல்லா விஷயங்களையும் பற்றி தங்களிடம் வெளிப்படையாகப் பேச ஊக்குவிக்க வேண்டும்.
பெற்றோரின் ஆதரவு இல்லாதபோதுதான் குழந்தைகள் அந்நியர்களுடன் நெருங்கிப் பழகுகிறார்கள் என்பதைப் புரிந்துகொள்வது அவசியம் என போலீசார் அறிவுறுத்தி உள்ளனர்.
படிப்பில் கவனம் செலுத்தி தேர்வுகளில் சிறப்பாகச் செயல்பட்டால் அவர்களுக்கு நல்ல வருமானம் மற்றும் வாழ்க்கை கிடைக்கும் என்று சொல்வதன் மூலம் அவர்கள் கடினமாக உழைத்து சாதிக்கும் மனநிலையை வளர்த்துக் கொள்ளலாம். இந்த வகையான சிந்தனையை சிறுமிகளிடம் விதைக்க வேண்டும் என்று நிபுணர்கள் கூறுகிறார்கள்.
- பெண்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
- ஆண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்.
தமிழ் மற்றும் மலையாள திரையுலகில் வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகை இனியா. கதையோடு ஒன்றி கதாபாத்திரமாக மாறி அசத்தலான நடிப்பாற்றல் மூலம் அதிக ரசிகர்களை கொண்டிருக்கும் இனியா திரையுலகம் மட்டுமின்றி பல்வேறு துறைகளில் கவனம் செலுத்தி வருகிறார்.
நடிகை இனியா சமூக சேவை சார்ந்த பணிகளிலும் தன்னை ஈடுபடுத்திக் கொண்டு வருகிறார். இந்த நிலையில், இனியா தனியார் தொண்டு நிறுவனம் சார்பில் நடைபெற்ற மகளிர் தின கொண்டாட்ட நிகழ்வில் கலந்து கொண்டார். நிகழ்ச்சியில் பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வரும் பெண்களை ஊக்கப்படுத்தும் வகையில் அவர்களுக்கு விருது வழங்கி கௌரவித்தார்.
இந்த நிகழ்ச்சியில் பேசிய நடிகை இனியா, "அனைத்து மகளிருக்கும் இனிய சர்வதேச மகளிர் தின நல்வாழ்த்துக்கள். பெண்களை ஊக்குவிக்கும் ஆண்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள். நான் ஜியோ இந்தியா ஃபவுன்டேஷன் உடன் நீண்ட காலமாக பணியாற்றி வருகிறேன்."
"சினிமாவைத் தொடர்ந்து நம்மால் மற்றவர்களுக்கு ஊக்கமளிக்க முடியும் என்றால் ஏன் அதை செய்யக்கூடாது என்று நினைத்தேன். இங்கு பெண்கள் மெழுகுவர்த்தி, சோப் உள்ளிட்டவைகளை தயாரிப்பதாக கூறினார்கள். இதை இன்னும் வித்தியாசமாக செய்வது எப்படி என்றும் கேட்டார்கள்."
"சமூகம் சார்ந்த பணிகள், மற்றவர்களுக்கு உதவியாக இருப்பது போன்றவற்றை நான் வெளியில் தெரியவோ அல்லது என் சுய விளம்பரத்திற்காகவோ பயன்படுத்திக் கொண்டது கிடையாது. ஆனாலும், நான் திரைத்துறையை சார்ந்திருப்பதால் நான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகள் தானாக செய்தியாகி விடுகின்றன," என்று தெரிவித்தார்.
உங்கள் அருகாமையில் உள்ள திரையரங்குகளில் ரிலீசான படங்களைப் பற்றிய தகவல்களை உடனுக்குடன் தெரிந்துக் கொள்ள இந்த லிங்க்-ஐ க்ளிக் செய்யவும்.
- தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி த.வெ.க. ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
- சேலம் கோட்டை மைதானத்தில் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
சேலம் மாவட்டம் மேட்டூர் அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களுக்கு ஆதரவாக தமிழக வெற்றிக்கழகம் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
அனல் மின் நிலையத்தில் பணியாற்றும் தற்காலிக பணியாளர்களை பணி நிரந்தரம் செய்யக்கோரி த.வெ.க.வினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
கடந்த 10 ஆண்டுகளுக்கு மேல் பணியாற்றி வரும் 1500 நபர்களை பணி நிரந்தரம் செய்ய கோரி, சேலம் கோட்டை மைதானத்தில் பணியாளர்களின் குடும்ப உறுப்பினர்களுடன் த.வெ.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
- அவரது கால்களைத் தொட்டு வணங்கியபின் அவருடன் பேச்சுக்கொடுத்தனர்
- குல்பாம் அவர்களைத் துரத்த முயன்றார். ஆனால் சில அடிகள் நடந்த பிறகு அவர் மயக்கமடைந்தார்.
உத்தரப் பிரதேச மாநிலம் சம்பல் மாவட்டத்தில் உள்ள உள்ளூர் பாஜக தலைவர் ஒருவர் வயிற்றில் விஷ ஊசி செலுத்தி கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சம்பல் மாவட்டத்தில் நன்கு அறியப்பட்ட பாஜக தலைவரான 60 வயதான குல்பாம் சிங் யாதவ், நேற்று (திங்கள்கிழமை), ஜுனாவாய் அருகே தப்தாரா கிராமத்தில் உள்ள தனது பண்ணை வீட்டில் இருந்தார். தகவலின்படி, நேற்று மதியம் ஒரு பைக்கில் மூன்று பேர் குல்ஃபாம் சிங் யாதவை சந்திக்க அடைந்தனர்.
அவரது கால்களைத் தொட்டு வணங்கியபின் அவருடன் பேச்சுக்கொடுத்தனர். அப்போது மூவரில் ஒருவன் குல்பாம் சிங் எதிர்பாராத நேரத்தில் அவரது வயிற்றில் ஊசி ஒன்றை செலுத்தியுள்ளான். அதன்பின் உடனே அவர்கள் அங்கிருந்து ஓடத் தொடங்கினார். குல்பாம் அவர்களைத் துரத்த முயன்றார். ஆனால் சில அடிகள் நடந்த பிறகு அவர் மயக்கமடைந்தார்.
குடும்பத்தினர் அவரை குன்னூர் சமூக சுகாதார மையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆனால் அவரது உடல்நிலை மோசமானதால், அலிகார் மருத்துவமனைக்கு அழைத்துச்செல்ல அங்கிருந்த மருத்துவர்கள் பரிந்துரைத்தனர். ஆனால் அலிகார் செல்லும் வழியிலேயே குல்பாம் சிங் யாதவ் உயிர் பிரிந்தது.
இந்த கொலை தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை தேடி வருகின்றனர். சம்பவ இடத்தில் இருந்து குல்பாமுக்கு போடப்பட்ட ஊசி கைப்பற்றப்பட்டது.

ஊசியில் இருந்தது எந்த மாதிரியான மருந்து என்பது குறித்த ஆய்வு நடந்து வருகிறது. பாஜக தலைவர் ஒருவர் கொலை செய்யப்பட்டது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்துள்ளது என்று அவரின் உறவினர்கள் குற்றம்சாட்டியுள்ளனர்.
2004 குன்னூர் இடைத்தேர்தலில் சமாஜ்வாதி தலைவரும் முன்னாள் மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சருமான முலாயம் சிங் யாதவை எதிர்த்து பாஜக சார்பில் குல்பாம் சிங் யாதவ் போட்டியிட்டார். மேலும் ஆர்.எஸ்.எஸ் மாவட்ட செயல்பாட்டாளராகவும், பாஜக மாவட்ட பொதுச் செயலாளராகவும், மேற்கு உ.பி.யின் பாஜக துணைத் தலைவராகவும் இருந்துள்ளார்.
- நீரில் இருக்கும் ராட்சத முதலை உணவுக்காக வெளியே வருகிறது.
- வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
சிங்கம், புலி போன்ற ஆக்ரோஷமான விலங்குகளையும் கூட சில நாடுகளில் அனுமதி பெற்று வீடுகளில் வளர்த்து வருகிறார்கள். என்னதான் செல்லப்பிராணி போல அவற்றை வளர்த்தாலும் திடீரென அவை ஆவேசமாகி விடும். அதுபோல முதலையின் ஆக்ரோஷமும் பயங்கரமாக இருக்கும்.
நீரிலும், நிலத்திலும் வசிக்கும் தன்மை கொண்ட முதலை திடீரென ஆவேசமாகும் காட்சிகள் இணையத்தில் வைரலாவது உண்டு. இந்நிலையில் அமெரிக்காவை சேர்ந்த வாலிபர் ஒருவர் ராட்சத முதலைக்கு தனது வெறும் கைகளால் பயமின்றி உணவு அளிக்கும் ஒரு வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அதில், நீரில் இருக்கும் ராட்சத முதலை உணவுக்காக வெளியே வருகிறது. அப்போது பயிற்சி பெற்ற நிபுணர் ஒருவர் தனது வெறும் கைகளால் அந்த ராட்சத முதலைக்கு உணவு அளிக்கிறார். அவரிடம் முதலை அடக்கமாக நடந்து கொள்கிறது. இந்த வீடியோ இணையத்தில் வைரலான நிலையில் பயனர்கள் பலரும் தங்களது கருத்துக்களை பதிவிட்டனர்.
ஒரு பயனர், முதலைக்கு நன்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளது என பதிவிட்டார். அதே நேரம் சில பயனர்கள், நன்கு பயிற்சி பெற்ற காட்டு விலங்குகளின் நடத்தையில் சில நேரங்களில் கணிக்க முடியாது என எச்சரித்தனர். மேலும் சில பயனர்கள், தங்கள் பதிவில் இதுபோன்ற சாகசங்கள் முட்டாள்தனமானது என விமர்சித்தனர்.
- சில வாரங்களுக்கு முன்பு குடும்ப வன்முறை தொடர்பாக புகார் அளிக்க கான்ஸ்டபிள் உத்தவ் கட்கர் பணி செய்து வந்த காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் வந்திருக்கிறார்.
- தற்காலிக காவல் நிலைய கட்டடம் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.
மகாராஷ்டிராவில் மகளிர் தின நிகழ்ச்சியின் பெயரில் ஒரு பெண்ணை பாலியல் வன்கொடுமை செய்ததாக மகாராஷ்டிர போலீஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த மார்ச் 8 ஆம் தேதி சனிக்கிழமை சர்வதேச மகளிர் தினம் கொண்டாடப்பட்டது. இந்நிலையில் மகாராஷ்டிராவின் பீட் மாவட்டத்தில் உள்ள பட்டோடாவில் போலீஸ் கான்ஸ்டபிள் உத்தவ் கட்கர் (35 வயது) அன்றைய தினம் காலை 11.30 மணியளவில் பாதிக்கப்பட்ட பெண்ணை மகளிர் தின நிகழ்ச்சி நடைபெறுவதாக கூறி தற்காலிக காவல் நிலைய கட்டடம் ஒன்றுக்கு அழைத்துள்ளார்.
அழைப்பை ஏற்று அங்கு வந்த பெண்ணை தனியான அறை ஒன்றுக்கு அழைத்துச் சென்று பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். சம்பவத்தின் பின் பாதிக்கப்பட்ட பெண் அளித்த புகாரின் பேரில் கான்ஸ்டபிளை அன்றைய தினம் இரவே போலீசார் கைது செய்தனர்.
நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர் மார்ச் 12 வரை போலீஸ் காவலில் வைக்கப்பட்டுள்ளார். பெண்ணின் மருத்துவ பரிசோதனையில் பாலியல் வன்கொடுமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக இன்ஸ்பெக்டர் சோம்நாத் ஜாதவ் தெரிவித்துள்ளார்.
சில வாரங்களுக்கு முன்பு குடும்ப வன்முறை தொடர்பாக புகார் அளிக்க கான்ஸ்டபிள் உத்தவ் கட்கர் பணி செய்து வந்த காவல் நிலையத்திற்கு பாதிக்கப்பட்ட பெண் வந்திருக்கிறார். அதன் மூலம் அவருக்கு அறிமுகமாகி கான்ஸ்டபிள் இந்த கொடூரத்தை நிகழ்த்தியிருக்கிறார்.
- இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் ரூ.11.50 கோடியை ஊதியமாக பெறவில்லை.
- இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன்? என்று நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
'எந்திரன்' திரைப்படம் கதை விவகாரத்தில் பிரபல இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துகளை அமலாக்கத்துறை முடக்கியது.
அசையா சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறை நடவடிக்கைக்கு எதிராக இயக்குநர் ஷங்கர் தாக்கல் செய்த மனு சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணைக்கு வந்தது.
இயக்குநர் ஷங்கர் திரைப்படத்தின் கதைக்காக மட்டும் ரூ.11.50 கோடியை ஊதியமாக பெறவில்லை. மற்ற பணிகளுக்காகவும் ஊதியம் பெற்ற நிலையில் சொத்துக்களை அமலாக்கத்துறை எப்படி முடக்க முடியும்? என்று சங்கர் தரப்பில் வாதிடப்பட்டது.
இயக்குநர் ஷங்கருக்கு எந்த பாதிப்பும் ஏற்படவில்லை, அமலாக்கத்துறையிடமே வழக்கை எதிர்கொள்ளலாம் என்று அமலாக்கத்துறை தரப்பில் வாதிடப்பட்டது.
இருதரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், இறுதி முடிவுக்காக காத்திருக்காமல் நடவடிக்கை எடுத்தது ஏன்? என்று கேள்வி எழுப்பினர்.
இயக்குநர் ஷங்கரின் ரூ.10.11 கோடி சொத்துக்களை முடக்கிய அமலாக்கத்துறையின் உத்தரவுக்கு இடைக்கால தடை விதித்தனர்.
மேலும் இயக்குநர் ஷங்கர் தாக்கல் செய்த மனு குறித்து அமலாக்கத்துறை பதிலளிக்க உத்தரவிட்ட நீதிபதிகள், விசாரணையை ஏப். 21-க்கு ஒத்திவைத்து உத்தரவிட்டனர்.
- இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும்.
- டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம்
அமெரிக்காவில் கடந்த ஜனவரியில் டொனால்டு டிரம்ப் தலைமையிலான ஆட்சி அமைந்தது. அவரது அரசில் அமெரிக்க தேசிய புலனாய்வு இயக்குநராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த துளசி கப்பார்ட் உள்ளார்.
இந்நிலையில் அவர் இந்தியாவுக்கு பயணம் மேற்கொள்ள உள்ளார். இதுகுறித்து அவர் எக்ஸ் வலைதள பக்கத்தில் கூறும்போது, நான் இந்தோ-பசிபிக் பகுதியில் உள்ள பல நாடுகளுக்கு பயணம் மேற்கொள்ள திட்டமிட்டுள்ளேன்.
இந்தோ-பசிபிக் பகுதியில், நான் குழந்தையாக இருக்கும் போது வசித்தது எனக்கு நன்றாக தெரியும். நான் ஜப்பான், தாய்லாந்து, இந்தியாவுக்குச் செல்வேன்.

அதன்பின் அமெரிக்காவுக்கு திரும்பும்போது பிரான்சுக்கு செல்ல உள்ளேன். அதிபர் டிரம்பின் அமைதி, சுதந்திரம் மற்றும் செழிப்பு உள்ளிட்ட லட்சியங்களை அடைய வலுவான உறவுகள் அவசியம் என்று தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் பிரதமர் மோடி அமெரிக்காவுக்கு பயணம் மேற்கொண்டபோது அவரை துளசி கப்பார்டை சந்தித்து பேசினார் என்பது குறிப்பிடத்தக்கது.

- சர்வதேச ஏ.ஐ. திறன் மையமாக நிலை நிறுத்திக் கொள்ளும் தனித்துவமான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது.
- அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ.ஐ. பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
2027-ம் ஆண்டுக்குள் செயற்கை நுண்ணறிவு (ஏ.ஐ.) துறையில் 23 லட்சத்துக்கும் அதிகமான வேலைவாய்ப்புகள் உருவாகும் என பெய்ன் அண்ட் கம்பெனி ஆய்வில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதுகுறித்து அந்த நிறுவனத்தின் தலைவர் சாய்கட் பானர்ஜி கூறியதாவது:-
சர்வதேச ஏ.ஐ. திறன் மையமாக நிலை நிறுத்திக் கொள்ளும் தனித்துவமான வாய்ப்பு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. அடுத்த இரண்டு ஆண்டுகளில் அதாவது 2027-க்குள் ஏ.ஐ. துறையில் வேலைவாய்ப்பு 1.5-2 மடங்கு அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதன் அடிப்படையில் ஏ.ஐ. துறையில் திறன்மிகு பணியாளர்களுக்கான தேவை 23 லட்சமாக அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதில், 10 லட்சம் பேருக்கு வளர்ந்து வரும் தொழில்நுட்பத்துக்கு ஏற்ப புதிய திறன்களை கற்றுக்கொள்வதற்கான வாய்ப்பு கிடைக்கும். ஏஐ துறையில் திறமையானவர்களுக்கு பற்றாக்குறை உள்ளது. எனினும், இது தீர்க்க முடியாத பிரச்சனை அல்ல.
சர்வதேச அளவில் கடந்த 2019-ம் ஆண்டில் இருந்து ஆண்டு தோறும் ஏ.ஐ. தொடர்பான வேலை வாய்ப்புகள் 21 சதவீதம் அதிகரித்துள்ளன. இதன் வேகத்துக்கு ஏற்ப திறன் வாய்ந்த பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரிக்காததால் இந்த துறையில் இடைவெளி அதிகரித்து வருகிறது.
அத்துடன் இது, உலகளவில் ஏ.ஐ. தொழில்நுட்பத்துக்கு மாறும் வேகத்தை குறைக்க காரணமாக மாறி உள்ளது.
அமெரிக்கா, ஜெர்மனி, பிரிட்டன், ஆஸ்திரேலியா போன்ற நாடுகளில் ஏ.ஐ. பணியாளர்களுக்கான தேவை அதிகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.






